search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். #LoksabhaElections2019 #EdappadiPalaniswami

    திண்டுக்கல்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பி துரையை ஆதரித்து வேடசந்தூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பதவியில் இருக்கும் போது விவசாயிகளைப் பற்றி நினைத்தது கிடையாது. காவிரி நதி நீர் பங்கீட்டிலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழக உரிமையை நிலை நாட்டினார்.

    தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் சிதம்பரம் பதவியில் இருந்தபோது நமது மாநிலத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தே வந்தார்.

    தேர்தல் சமயங்களில் மட்டும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஓட்டு கேட்க வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் நின்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் ஒவ்வொரு தேர்தலுக்கும் வேறு வேறு தொகுதியில் நிற்கின்றனர்.


     

    பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வினருக்கு அருகதை கிடையாது. இவர்களாலேயே பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்குகின்றனர். ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் பிரியாணி உள்பட அனைத்து கடைகளுக்குள்ளும் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளர்களை தாக்குகின்றனர்.

    மறுநாள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு நீர் மேலாண்மை திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் குரலாக கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். அதன் பின்னர் வறட்சி மாவட்டங்கள், ஏரி-குளங்கள் நிரப்பப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் தி.மு.க. இந்த ரூபாயை கொடுப்பதற்கு தடை செய்ய கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோதும் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை கேட்டுப் பெறவில்லை.

    ஆனால் தம்பிதுரை அனுபவம் வாய்ந்தவர். மீண்டும் உங்களிடம் குறைகளை கேட்க வந்துள்ளார். குஜிலியம்பாறை தனி தாலுகாவாக மாற்றப்பட்டது. அங்கு தீயணைப்பு நிலையம் செயல்பட உள்ளது. வேடசந்தூர், வடமதுரையில் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LoksabhaElections2019 #edappadipalanisamy

    எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார். #Premalatha #hraja #dmdk






    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார். அப்போது அவர் பெரியகடை வீதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிற்கு ஆதரவு கேட்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும். அதுபோல் பதவி வரும் போது, பணிவும் வேண்டும், துணிவும் வேண்டும். எச்.ராஜா, கேப்டன் விஜயகாந்தை போல் தைரியமானவர். அவர் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். தைரியமாக பேசுபவர்களிடம் உண்மை இருக்கும்.

    இந்தக் கூட்டணியில் எந்த குறையும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது, மேலும் சவாலை எதிர்க்கக் கூடிய வல்லமையும் இந்த கூட்டணிக்கு உள்ளது. பதவியோடும், பணிவோடும், தொகுதியையும், அதன் மக்களையும் காப்பாற்ற கூடிய நல்ல வல்லமையானவருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். இந்த தொகுதியில் எச்.ராஜாவை சரித்திர வெற்றியாளராக ஆக்க வேண்டும்.

    உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த முறை பிரேமலதா கூட்டத்தினரை பார்த்து, எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிப்பீர்களா, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா, சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தினர் ஆதரவாக பதில் கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். ஒன்றிய செயலாளர் வாசு, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், தே.மு.தி.க. தனசேகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Premalatha #hraja #dmdk
    குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசுகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். நெசவாளர் காலனி, ஆசாரிப்பள்ளம், மேலராமன் புதூர், சைமன்நகர், மூவேந் தர்நகர், பொன்னப்ப நாடார் காலனி, டி.வி.டி. காலனி, பார்வதிபுரம், கட்டையன் விளை, காமராஜர்புரம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நான் கடந்த முறை 7 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறி உள்ளார். பாராளு மன்றத்தின் ஆவணங்களை பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும்.


    துறைமுகம் கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்றார். இப்போது துறை முகத்திற்கு எதிரானவன் அல்ல என்று பிரசாரம் செய்து வருகிறார். யாரை ஏமாற்ற நினைக்கிறார் அவர். மீனவர் சமுதாய மக்களை மட்டும்மல்லாமல் 20 லட்சம் மக்களையும் ஏமாற்றுகிறார்.

    மூடிக்கிடக்கும் ரப்பர் தொழிற்சாலை திறக்கப்படும் என்கிறார். இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டதாக பேசுகிறார். இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான விளக்கம் அவருக்கு தெரியுமா? தூத்துக்குடியில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு, நமது மாவட்டத்தில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு. திட்டங்களை பற்றி தெரியாமல் காங்கிரஸ் வேட்பாளர் பேசி வருகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசி வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி பயத்தில் பேசி வருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்து உள்ளோம். நாகர்கோவில் நகரில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் நிறைவேற்றி உள்ள வளர்ச்சித்திட்டங்கள் மக்களுக்கு தெரியும். நான் செயல்படுத்தி உள்ள வளர்ச்சித்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் போது அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், த.மா.கா. மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கால்டுவின் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp #parliamentelection

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். #tamilisai #bjp #kanimozhi

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறவர்களுக்குத்தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மாறாக கடைக்காரர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், பொருளாதாரத்தில் நலிவடைந்து முதுமையில் வாடினர். இவர்களின் துயரங்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

    தமிழகத்திலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். ஏழை-எளிய மக்களின் நலனில் அக்கறை கொள்கிற மத்திய-மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு படிக்காமலே பல டாக்டர் பட்டங்களை பெறுவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் கருதலாம். ஆனால் நான் அவ்வாறு இல்லை. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் சென்று படித்தேன். எனது மருத்துவமனையில் இரவு 2 மணி வரையிலும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலே சரி செய்யக்கூடிய படிப்பு படித்து உள்ளேன். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து காத்திருந்து சிகிச்சை பெற்றனர். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரிந்தேன். நான் நினைத்து இருந்தால் சுயநலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நான் எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றியது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவது உறுதி. நாடு முழுவதும் தொழில்வளம் பெருக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இங்கு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முறைகேட்டால் திகார் ஜெயிலில் இருந்தவர். ஆனால் நான் என்றும் மக்களுக்கு சேவையாற்றுவதையே கடமையாக கொண்டுள்ளேன். நான் என்றும் இந்த மண்ணின் சொந்தக்காரிதான். என்றும் உங்களின் சகோதரிதான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #bjp #kanimozhi

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிடும் ஹேமமாலினி சொகுசு காரில் தேர்தல் பிரசாரம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. #LokSabhaElections2019 #HemaMalini
    மதுரா:

    பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் பிரபல இந்தி நடிகையும் தற்போதைய எம்.பி.யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஹேமமாலினி மிகவும் பந்தாவாக அந்த தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார்.

    சுமார் 75 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை தான் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.

    காரில் இருந்து தலை மட்டும் வெளியில் தெரியுமாறு அந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஹேமமாலினி முன்பாகவும் கார் கதவிற்குப் பின்புறம் இருந்தும் அவர் வெயில் படாத வகையில், பணியாட்கள் குடைபிடிக்கிறார்கள். இத்தனை வசதிகள் செய்யப்பட்டும் வெயிலை பொறுக்க முடியாமல் கூலிங் கிளாசுடன் தொகுதியில் வலம் வருகிறார்.


    அவருடைய ஆடம்பர பிரசாரம் பற்றி தான் மதுரா மக்கள் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர். இந்த படங்கள் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

    இதற்கிடையே கோவர்தன் என்ற இடத்தில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்வதுபோல போஸ் கொடுத்த ஹேமமாலினியை கிண்டல் செய்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

    இதனால் ஹேமமாலினியின் பிரசார முறை மேலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹேமமாலினி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் ஜெயந்தி சவுத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றார். #LokSabhaElections2019 #HemaMalini
    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விவேக் ஓபராய் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்வார் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJP #VivekOberoi
    ஆமதாபாத்:

    ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.

    அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலில் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் ஹேமமாலினி, ஸ்மிருதி இரானி ஆகியோரது பெயர் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள் எந்தெந்த மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார்கள் என்ற தகவல்களும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹேமமாலினி, ஸ்மிருதிஇராணி இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கும் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


    உத்தரபிரதேசத்தில் சற்று பலவீனமாக இருக்கும் தொகுதிகளுக்கும் ஹேமமாலினியை அழைத்து செல்ல பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அது போல நடிகர் விவேக் ஓபராய் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்வார் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் 25 பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை நடத்திர பேச்சாளராக பா.ஜ.க. மேலிடம் அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #BJP #VivekOberoi
    சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க. - பா.ஜனதாவும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #bjp #admk

    சிதம்பரம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் பாராளு மன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பா.ஜனதா வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

    அதற்கு காரணம் நான் பா.ஜனதா, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்.

    திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டு மென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.

    அவர் அந்த பணத்தை தொழிலுக்காக எடுத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார்.

    விடுதலைச் சிறுத்தை கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா?

    அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கின்றனர் என வருவாய்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? எத்தனை களங்கத்தை சுமத்த நினைத்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.  #thirumavalavan #bjp #admk

    பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
    சென்னை:

    பாஜகவின் 39வது ஆண்டு நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி தொண்டர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அவ்வகையில், பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது கொள்கைகளிலிருந்து வழுவாமல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாக, 11 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை பா.ஜ.க கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிற்கே வழிகாட்டியாக மீண்டும் உருவெடுக்க உறுதி ஏற்போம் என பா.ஜ.க தொண்டர்களை தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் பாஜக உருவானது என்றும், தற்போது அனைவரும் விரும்பும் கட்சியாக உருவெடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    மோடியின் தலைமையில் புதிய இந்தியாவை உருவாக்க உழைக்கும்படி கட்சியினருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
    நானும் காவலாளி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு நாட்டின் 500 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகள் வழியாக மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். #PMModi #Chowkidar #MainBhiChowkidar #MainBhiChowkidarprogra
    புதுடெல்லி:

    டுவிட்டர் மூலம் பிரபலமான ‘மைபி சவுக்கிதார்’ (நானும் ஒரு காவலாளி) என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், முதல்கட்டமாக  நாடு முழுவதும் உள்ள 500 பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் என பா.ஜ.க. தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் டெல்லியில் உள்ள டல்லகோட்டா அரங்கத்தில் பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். இந்த அரங்கத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு மோடி உரையாற்றுவதை கவனித்து வருகின்றனர். இதேபோல் நாட்டின் 500 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகள் மூலமாக பல லட்சம் மக்கள் அவர் பேசுவதை பார்க்கின்றனர்.

    இன்றைய நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘என்னைப் பொருத்தவரை சவுக்கிதார் (காவலாளி) என்ற வார்த்தையை மகாத்மா காந்தியின் நம்பிக்கை என்ற வார்த்தையின் அடையாளமாக பார்க்கிறேன்.

    இந்த நாட்டுக்கு இனி ராஜாக்களும், மகாராஜாக்களும் தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில்
    சவுக்கிதார் என்னும் சொல் மிகப்பெரிய அளவில் எட்டப்பட்டிருப்பதை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    நமது நாட்டின் படைகள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் ஆற்றலை நான் மிகவும் நம்புகிறேன். 

    கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தீமைகளால் நாம் அவதிப்பட்டு வந்தோம். இதற்கு யார் காரணம் என்று நாம் தெரிந்து வைத்திருந்தோம். இது இப்படியே நீடிக்கத்தான் வேண்டுமா? என்று நான் யோசித்தேன். இந்த பயங்கரவாத விளையாட்டு எங்கிருந்து இயக்கப்படுகிறதோ, அங்கேயே (பாகிஸ்தான் எல்லைப்பகுதி) போய் நாம் விளையாட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

    இதனால் பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது. எல்லைப்பகுதிக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நாம் நடத்திய தாக்குதலால், ஆமாம் அந்த பகுதியில் பயங்கரவாத முகாம்கள் இயங்கி வந்தன என்று அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால், அதற்கு முன்னர் எல்லைப்பகுதியில் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது. பயங்கரவாதிகள் வேறெங்கும் பதுங்க முடியாதவாறு நமது தாக்குதல் அமைந்திருந்தது. தாக்குதல் நடந்த பகுதிக்குள் கடந்த ஒன்றரை மாதமாக பாகிஸ்தான் அரசு யாரையும் இதுவரை நுழைய விடவில்லை.

    நாம் நடத்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு தங்கள் நாட்டின் வான் எல்லையை மூடிவிட்ட பாகிஸ்தான், இப்போது மோடி தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருக்கிறது என்று நினைத்து வான் எல்லையை திறந்து விட்டுள்ளது. எனக்கு பிரசாரத்தைவிட நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்’ என பேசிய மோடி, மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றி வருகிறார். #PMModi #Chowkidar #MainBhiChowkidar #MainBhiChowkidarprogram
    பா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆறுமுகநேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார். #Kanimozhi #bjp #admk

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களிடையே தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த நாட்டின் பாதுகாவலன் என்று மோடி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அவரால் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஆவணங்களை கூட பாதுகாத்துக் கொள்ள இயல வில்லை.

    இவரது ஆட்சிக் காலத்தில் தான் நமது நாட்டின் 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை எதிர் நாட்டின் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் கொன்றுள்ளனர். இது தான் மோடி பாதுகாவலனாக இருப்பதின் லட்சணம். இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதால் அந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பாதுகாவலான இருக்கலாம்.

    மக்களை பிளவுபடுத்தி ஆட்சி நடத்தி வரும் மத்திய பா.ஜ.க ஆட்சியையும், அதன் பினாமியாக நடந்து வரும் தமிழகத்தின் அ.தி.மு.க ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாசரேத் கே.வி.கே சாமி சிலை, சந்தி பஜார் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நிச்சயமாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். கருணாநிதி ஆட்சியின் போது விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. இப்போது விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

    10-வகுப்பு படித்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை, 50 லட்சம் மக்களுக்கு மக்கள் நலபணியாளர் வேலை வழங்கப்படும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ. 50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தி.மு.க. சொன்னதை செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #bjp #admk

    பா.ஜனதா தலைவர் அமித் ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுநாள் (2-ந்தேதி) வருகிறார். #AmitShah #LokSabhaElections2019

    சென்னை:

    பா.ஜனதா தலைவர் அமித் ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுநாள் (2-ந்தேதி) வருகிறார்.

    பா.ஜனதா போட்டியிடும் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய 3 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

    2-ந்தேதி காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து எட்டயபுரம் ரோட்டில் தூத்துக்குடி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையை ஆதரித்து நடை பெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார்.

    நண்பகல் 12.30 மணிக்கு எச்.ராஜாவுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை புறப்பட்டு செல்கிறார். கோவை சிவானந்தா கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு கோவை பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த பிரசார கூட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு பேசுகிறார்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அமித் ஷா கோவையில் இருந்து தனிவிமானத்தில் பெங்களூர் புறப்பட்டு செல்கிறார். #AmitShah #LokSabhaElections2019

    அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இக்கூட்டணியை கண்டு மு.க.ஸ்டாலினும், மற்ற கட்சிகளும் பயந்துவிட்டன.

    இக்கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. பெண்களின் நலன் காக்க இக்கூட்டணி பாடுபடும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு இந்த கூட்டணி தடுக்கும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவிடாமல் எங்களை தடுக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயன்று தோற்றுப்போய் விட்டன. துரோகிகளின் புகலிடம் தி.மு.க.

    தமிழக அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த வெற்றிக்கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுபோல தேர்தல் முடிவு நமது வெற்றியை நிரூபிக்கும்.


    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி பதவியேற்றவுடன் முதல் வேலையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாடுபடுவோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன்காக்க, ஏழை தொழிலாளர்களின் நலன்காக்க அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவோம். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். துளசியின் வாசம்கூட மாறலாம். ஆனால் தவசியின் வாக்கு மாறாது.

    விலைவாசியை குறைப்போம். தேர்தல் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.2ஆயிரம் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் தேடிவரும். எங்கள் வெற்றிக்கூட்டணிக்கு எதிரே உள்ளவர்கள் 2ஜி ஊழல் போன்றவற்றை செய்தவர்கள். 2011-ல் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தேவையற்ற பிரிவினையை உண்டாக்கியவர்கள் தி.மு.க.வினர்தான் என இங்கு முதன்முதலாக குற்றம் சாட்டுகிறேன். அதன் பிறகு இறைவனாக பார்த்து இப்போது எங்களை இணைத்து வைத்துள்ளார். இந்த கூட்டணி இனி தொடரும்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    ×