search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    கோவா மாநிலத்தில் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மகாராஷ்டிர கோமந்தக் கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில், அதில் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட ஒரு அணி பாஜகவில் இணைந்தது. #GoaBJPGovt #MGPMLAs
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதையடுத்து, சட்டசபையில் ஆளும் பாஜக கூட்டணியின் பலம் குறைந்தது. எனவே, தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் பாஜக கூட்டணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்த நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பிரமோத் சாவந்துக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) இரண்டாக உடைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களில் மனோகர் அஜாங்கர், தீபக் பவாஸ்கர் ஆகியோர் கட்சியில் இருந்து பிரிந்து புதிய அணியை உருவாக்கினர். பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இந்த இணைப்பு தொடர்பாக நள்ளிரவில் இருவரும் சபாநாயகர் மைக்கேல் லோபோவிடம் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவும் துணை முதல்வருமான சுதின் தவாலிகர் கையெழுத்திடவில்லை.

    கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனி அணியாகப் பிரிந்து, மற்றொரு கட்சியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

    தற்போது 2 எம்எல்ஏக்கள் வருகையால் கோவா சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

    கட்சியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாகவும், அதனால் சாவந்த் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும் எம்ஜிபி கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர் நேற்று மிரட்டல் விடுத்திருந்தார். இன்று (புதன்கிழமை) நடக்கும் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில், 2 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    2012ல் இருந்து பாஜகவுடன் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இன்று நடக்கும் கூட்டத்தில் பாஜக அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் சுதின் தவாலிகர், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    கூட்டணி கட்சிகளை பாஜக மிரட்டுவது இதன்மூலம் நிரூபணமாகியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் காவ்தாங்கர் விமர்சித்துள்ளார்.  #GoaBJPGovt #MGPMLAs

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாஜகவினர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, பூரி ஜெகநாதர் சிலையை பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். #CongressFiledComplaint #BJP #Sambitpatra
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பாஜக செய்தி தொடர்பாளரும், ஒடிசா மாநிலம் பூரி தொகுதியின் வேட்பாளருமான சம்பீத் பத்ரா சமீபத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பூரி ஜெகநாதர் சிலையை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

    இதையடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையரிடம் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நிஷிகாண்ட் மிஷ்ரா கூறியதாவது:



    வாகன பிரசாரத்தின்போது, கடவுள் சிலையை எடுத்து செல்வது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான செயலாகும். ரத யாத்திரை விழாவில், கடவுள் சிலை தேரிலே வீதி உலா வருவது தான் வழக்கம். இந்நிலையில் பிரசார பொதுக்கூட்டத்தில், ஜெகநாதர் சிலையை கையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது கோவிலில் பணிபுரிபவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் எந்தவொரு செயலும் மதம், சாதி, கலாச்சாரம், பாரம்பரியத்தினை பாதிக்கும் வகையில்  இருக்கக் கூடாது எனும் விதி உள்ளது. சம்பீத் பத்ராவின் இந்த செயல், தேர்தல் விதி மீறல். எனவே தேர்தல் ஆணையரிடம் அவர் மீது புகார் கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து சம்பீத் பத்ரா கூறுகையில், ‘பூரி ஜெகநாதர் கடவுளின் சிலையை ஒருவர் எனக்கு பரிசாக அளித்தார். எனவே அதனை மரியாதையுடன் பெற்றுக் கொண்டேன். நான் கடவுளை அவமரியாதை செய்யவில்லை. மேலும் இதனை தேர்தலுக்காகவும் பயன்படுத்தவில்லை. இந்த செயல் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய கவலை எனக்கில்லை’ என தெரிவித்துள்ளார். #CongressFiledComplaint #BJP #Sambitpatra
    உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள ஜெயப்பிரதா, மேனகா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    புதுடெல்லி:

    பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார்.

    இதற்கிடையே, இன்று காலை ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள 39 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளும், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். #LokSabhaElections2019 #BJP #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களில் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாகவும், தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு, ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

    வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #DMK

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு ரூ.417 கோடி என்றும், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7 கோடி என்றும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 சொத்து உள்ளது.

    அசையும் சொத்தாக ரூ.50 லட்சத்து 56 ஆயிரத்து 298, அசையா சொத்தாக ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 உள்ளது என்றும் அவர், தனது வேட்பு மனுவில் கூறி உள்ளார். மேலும் கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு மொத்தம் ரூ.417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 சொத்து உள்ளது.

    அசையும் சொத்துக்களாக அவரது பெயரில் ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302-ம், அசையா சொத்துக்களாக ரூ.181 கோடி 95 லட்சம் மதிப்பில் சொத்துக்களும், பரம்பரை சொத்தாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    வசந்தகுமாரின் மனைவி பெயரில் அசையும் சொத்தாக ரூ.28 லட்சத்து 35 ஆயிரத்து 142-ம், அசையா சொத்தாக ரூ.4 கோடி 75 லட்சமும் உள்ளது.

    மேலும் தனது பெயரில் வங்கி கடனாக ரூ.154 கோடியே 75 லட்சத்து 11 ஆயிரத்து 439 இருப்பதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்து 689 இருப்பதாகவும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.



    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் ரூ.2 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.  #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
    பிரபல நடிகை ஜெயப்பிரதா ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இன்று இணைந்தார். #JayaPrada #BJP
    புதுடெல்லி:

    பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

    சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.

    அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார்.



    ஆனால் அவருக்கும் அவருக்கு நெருக்கமான அமர்சிங்குக்கும் பெரிய அளவில் அந்த கட்சியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஜெயப்பிரதா நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

    அசம்கானும், ஜெயப்பிரதாவும் அரசியல் ரீதியாக பரம எதிரிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #JayaPrada #BJP
    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் ருசிகரமாக பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக்கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண் தலைவர்கள் மோதும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.



    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழியும் எதிர் எதிர் முகாமில் இருந்து களம் காண்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் யாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க போகிறார்கள் என்பது மே 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் தான் தெரியவரும் என்றாலும், இப்போதே அவர்கள் இருவரையும் ஆதரித்து, இரு கட்சிகளின் சார்பிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனிடம், ‘தூத்துக்குடி தொகுதியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்தும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்தும் பிரசாரம் செய்வீர்களா? என்றும், கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறீர்களா? என்று நிருபர்கள் எடக்குமடக்காக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இருப்பினும் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல, இந்த ஆட்சி 100 ஆண்டுகள் வரை தொடரும் என்று எச்.ராஜா பேசினார். #hraja #admk
    மானாமதுரை:

    மானாமதுரை அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய, நகர கழகம் சார்பில் தனி தனியாக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பாராளுமன்ற வேட்பாளர் எச்.ராஜா, சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர் கீழநெட்டூர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எச்.ராஜா பேசியதாவது:– 

    தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்சி 2 அல்லது 3 மாதங்கள் தான் நடக்கும் என்று கூறினர்.

    ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்னாள் முதல்–அமைச்சர் எனக்கு பிறகும் இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும் என்று சொன்னார். அவர் கூறியது போல, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்த ஆட்சி 100 ஆண்டுகள் செயல்படும் என்றார்.

    தொடர்ந்து செந்தில்நாதன் எம்.பி. பேசியதாவது, பா.ஜ.க.வில் உள்ள முக்கிய சக்தி வாய்ந்த நபர்களில், எச்.ராஜாவும் ஒருவர். அவர் வெற்றி பெற்றால் சிவகங்கை தொகுதிக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார். இதேபோல சட்டமன்ற இடைதேர்தலில் நிற்கும் நாகராஜன் மிக எளிமையானவர். எனவே அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதில் ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் விஜிபோஸ், யூனியன் சேர்மன் மாரிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் விளத்தூர் நாடராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் அன்னாவாசல் கனேசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #hraja #admk
    ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்துகொண்டு பாஜகவுக்கு வாக்களித்து மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என பிரசாரம் செய்த கல்யான் சிங்கை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressdemands #KalyanSingh #Governorpost
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநில முதல் மந்திரியாக 1991-92 காலகட்டத்தில் பதவி வகித்தவர் கல்யாண் சிங். பாஜகவை சேர்ந்த இவர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த 23-ம் தேதி அலிகர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கல்யாண் சிங், ‘நாம் அனைவருமே பாஜக தொண்டர்கள்தான். இந்த தேர்தலில் பாஜக மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வர வேண்டும். இது நாட்டுக்கு மிகவும் முக்கியம்’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி இன்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘மதிப்புக்குரிய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் ஒரு அரசியல்வாதியைப்போல் பாஜகவுக்கு வாக்கு கேட்பது அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து மரபுகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கவர்னர் அலுவலகத்தின் தரத்தையே அவர் குறைத்து விட்டார்.

    நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்மீது சிறிதளவிலாவது மரியாதை இருந்தால் ஒருகனம் கூட தாமதிக்காமல் கவர்னர் பதவியில் இருந்து கல்யாண் சிங் விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Congressdemands #KalyanSingh #Governorpost
    ஏழைகளின் வங்கி கணக்குகளில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் போடப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தெரிவித்துள்ளது. #Congressrecord #antipoor #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த பலனைப்பெற அதிகபட்ச குடும்ப வருமானத்துக்கான உச்சவரம்பு மாதம் 12 ஆயிரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி அளித்துள்ள இந்த வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அரசியல் ஆதாயத்துக்காக வறுமையை மையக்கருவாக காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தி வந்துள்ளது. இந்தியாவில் இருந்து வறுமையை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் 1971-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை. 

    உற்பத்தியை பெருக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோட்பாட்டில் அவருக்கும் நம்பிக்கை இல்லை. வறுமையை மீண்டும் பகிர்ந்தளிப்பதை மட்டுமே அவர் நம்பி இருந்தார். 

    இப்படி கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் வழிநடத்தியது. வறுமையை விரட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து 50 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் 20 சதவீதம் மக்கள் 12 ஆயிரம் ரூபாய் வருமானம்கூட கிடைக்காமல் வாழ்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு இந்த நாட்டின் ஏழை மக்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான பழியையும், பொறுப்பையும் காங்கிரஸ் கட்சிதான் ஏற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ’கடந்த 55 ஆண்டுகளாகவே காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு விரோதமான ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. 1971-ம் ஆண்டு வறுமையை விரட்டுவோம் என்று இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தபோது நாட்டில் இனி வறுமையே இருக்காது என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம். ஆனால், என்ன நடந்தது. வறுமை ஒழிந்து விட்டதா?

    நான் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால் விவசாயிகள் கையில் 15 பைசாதான் போய் சேருகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதுபோல் தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறியதில்லை. இனிமேல் நிறைவேறப் போவதுமில்லை’என்று குறிப்பிட்டார். #Congressrecord #antipoor #RaviShankarPrasad
    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #DeveGowda #TumkurLSpolls
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. 

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    முன்னர், ஹஸ்ஸன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தேவேகவுடா அந்த தொகுதியை தனது பேரன் பிரஜ்வால் ரேவன்னா போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுத்தார். 

    தொகுதி பங்கீட்டின்படி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் கட்சியால் முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதிக்கு பதிலாக அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் பேசி தும்கூர் தொகுதியை தேவேகவுடாவுக்கு ஒதுக்குமாறு துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மூலம் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஏற்பாடு செய்தார்.

    இதனால், தேவேகவுடாவுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட முட்டாஹனுமேகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அவர் எனக்கு இந்த தொகுதியில்தான் செல்வாக்கு அதிகம் என்று கூறி வீம்பாக தும்கூரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலையில் தும்கூரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் பசவராஜ் போட்டியிடுகிறார். #DeveGowda #TumkurLSpolls
    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். #LSPolls #ADMK #DMK #congress
    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனுதாக்கல் செய்தார். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் கலெக்டர் ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் திருச்சி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மனுதாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    தென்காசி தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் மனுதாக்கல் செய்தார். திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் கலெக்டர் சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார்.

    சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுதாக்கல் செய்தார்.

    ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன் மனுதாக்கல் செய்தார்.

    பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் மனுதாக்கல் செய்தார்.

    திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.திமு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். #LSPolls #ADMK #DMK #congress #BJP
    ×