என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் பிரதமர் மோடி தான் அந்த சரியான நிரந்தர பிரதமர் என நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டப்பணிகளை செய்வது குறித்து தவறான வசைப்பாடும் கும்பலாக காங்கிரஸ் கட்சியினர் மாறி விட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகளை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இந்த செயல்களை கண்டு மனசோர்வடைந்த காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிரான மோசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #MukhtarAbbasNaqvi #Congress
இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும், மத வெறுப்புகளை தூண்டும் விதமாக கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார் என்றும் அவர் மீது பாஜக தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.
மேலும் அந்த பதிவில் இருந்த சின்னம் இந்துக்களின் வழிபாட்டு சின்னங்களில் ஒன்றான சுவஸ்திக் சின்னத்தினைபோல் இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
இது குறித்து கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் பகிர்ந்த பதிவிற்கு பாஜகவினர் தவறான விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். அந்த பதிவு ஹிட்லரின் சர்வாதிகாரத்தினை குறிக்கும் விதமாகவே உள்ளது. பாஜகவினர் முதலில் நாஜி சின்னத்திற்கும், இந்து சின்னத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை புரிந்து கொள்ள வேண்டும். இது முட்டாள் தனமான செயலாகும். நாஜி சின்னத்தை தங்கள் சின்னமாக கூறுவது பாஜகவின் அறியாமையை குறிக்கிறது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார். #AAP #AravindKejriwal #BJP
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2004 முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
அவர் 2004-ல் போட்டியிடும் போது தனது வருமானம் ரூ.56 லட்சம் என்று கூறி இருந்தார். 2009 தேர்தலில் வருமானம் ரூ.2 கோடி என்றும், 2014 தேர்தலில் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது 10 ஆண்டுகளில் அவரது வருமானம் ரூ.8½ கோடி அதிகரித்து உள்ளது.
இது சம்பந்தமாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியதாவது:-
ராகுல்காந்தி எம்.பி.ஆக இருப்பதால் அதற்கான சம்பளத்தை பெற்று வருகிறார். இது தவிர அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் அவரது வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக ஒவ்வொரு தேர்தல் வேட்பு மனுவிலும் குறிப்பிட்டு உள்ளார்.
அவருக்கு வருமானம் எந்த வகையில் வந்தது. எப்படி இவ்வளவு தொகை அதிகரித்தது என்பதற்கு கணக்கு சொல்ல வேண்டும்.
ராகுலும், பிரியங்கா காந்தியும் 4.69 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை 6 மாதம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றுக்கு அந்த பண்ணை வீடு சொந்தமானது.
அந்த நிறுவனம் மீது வழக்கு விசாரணை இருந்து வருகிறது. ராகுல்காந்திக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. குத்தகைக்கு விட்ட பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசில் அந்த நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படவில்லை.
2-ஜி செல்போன் தொடர்புடைய யுனிடெக் நிறுவன சொத்தை ராகுல்காந்தி குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். இதிலும் ஏதோ தவறு நடந்து இருக்கிறது.
ராகுல்-சோனியாவுக்கு ரூ.100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #LSPolls #BJP
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி அவர் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முதல் - மந்திரி குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார்.
சுமலதாவுக்கு காங்கிரசாரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சச்சி தானந்தா, மாண்டியா மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சசிகுமார், இளைஞர் காங்கிரசை சேர்ந்த அரவிந்தகுமார், விஜய் குமார், மஞ்சுநாத், சந்துரு, கிருஷ்ணகவுடா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாக மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
கட்சியினர் யாரும் சுமலதாவுடன் இணைந்து எந்த மேடையிலும் பங்கேற்க கூடாது என்றும், ஆதரவு தெரிவிக்க கூடாது என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டூராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பா.ஜனதா ஆதரவு குறித்து சுமலதா கூறியதாவது:-
மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எனக்கு பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது. இந்த ஆதரவு எனக்கு யானை பலம் கிடைத்தது போல உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன்.
பாராளுமன்ற தேர்தலில் எனது போராட்டத்தை தொடர்வேன். எனது போராட்டத்துக்கு மாண்டியா மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் உள்ளது.
இவர்களுடன் மறைந்த எனது கணவர் அம்பரீஷின் ரசிகர்கள் ஆதரவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். #ActressSumalatha #BJP #Congress
விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் கருணாநிதி எப்போதும் சொல்லுவார், எனது குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்க முடியாது. என் குடும்பம் என்பது எல்லா தமிழர்களையும் அடக்கியது. தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இருந்தாலும் சரி, நமது கூட்டணி கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் சரி நாடும் நமதே 40-ம் நமதே என்ற உணர்வோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி மக்களை படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் கூலிப்படை போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. மோடியின் பெயரை சொன்னாலே மக்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று நன்கு தெரிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விளாத்தி குளம்எட்டயபுரம் ரோட்டில் தேர்தல் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். #kanimozhi
வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா, ஜே.டி.எஸ். வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
அவரை ஆதரித்து அந்த கட்சியின் அரிசிக்கெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்க கவுடா ஹாசனில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரத்தின்போது சிவலிங்க கவுடா பேசிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேமாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திரமோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பரபரப்பாக பேசி இருக்கிறார். நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்பேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி, அவர்களை காப்பாற்றுவேன் என்று சரமாரியாக வாக்குறுதிகளை அளித்தார். அதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வங்கிகளில் வாசலில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பா.ஜனதாவினர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பிக் கொண்டு வலம் வருகின்றனர்.
மோடிக்கு வாங்கு கேட்டு வரும் பா.ஜனதாவினரின் கன்னத்தில் நாலு அறைவிட்டு, மோடி வங்கியில் போடுவதாக சொன்ன 15 லட்ச ரூபாய் எங்கே? என்று தைரியமாக கேளுங்கள்.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இந்த தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேளுங்கள். மக்கள் அமைதியாக இருப்பதால் தான் அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. ஆவேசமாக பேசி உள்ளார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவரை கடுமையாக விமர்சித்து பா.ஜனதாவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சிவலிங்க கவுடாவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி வாக்கு கேட்டு வந்தால் கல்லெறியுங்கள் என்று மக்களை தூண்டிவிடும் வகையில் பேசினார். தற்போது கன்னத்தில் அறையுங்கள் என்று பேசி வருகிறார்.
முதல் மந்திரி குமாரசாமியின் ஆட்சியில் எம்.எல்.ஏக்கள் குண்டர்களை போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவினருக்கும், மோடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசியுள்ள சிவலிங்க கவுடா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார். #Yeddyurappa #ShivalingeGowda
அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.
‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ உருவாக்கும் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல் காற்றோடு போய்விட்டதோ? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #BJP
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா பலமான கட்சியாக உள்ளது. குறிப்பாக மும்பை-கர்நாடக பகுதியில் பா.ஜனதா நல்ல பலத்துடன் உள்ளது. ஐதராபாத்-கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி செல்வாக்குடன் திகழ்கிறது.
கர்நாடகத்தில் 20 முதல் 22 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மோதல் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி கவிழும். நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மோடி அலை, கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்த முறை கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு புதிய பலம் கிடைக்கும். கடந்த முறை அந்த தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி மிக குறைவாக இருந்தது. இதன் மூலம் பாஜக பாராளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் எங்கள் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். கேரளாவிலும் எங்கள் கட்சி வெற்றி கணக்கை தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது.
ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே நல்ல வெற்றி கிடைக்கும். பா.ஜனதாவின் நிலை கர்நாடகத்தில் நன்றாகவே உள்ளது. துமகூரு, மைசூரு ஆகிய தொகுதிகளில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஹாசனில் கடும் போட்டியை கொடுப்போம். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. காங்கிரசில் இருந்து மாலிகையா குத்தேதார், பாபுராவ் சின்சனசூர், மாலகரெட்டி ஆகியோரின் வருகையால், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவார். மத்திய கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
கர்நாடகத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பிரசாரம் மூலம், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுமாறு மோடியிடம் கூறி இருக்கிறோம். இடம், தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.
அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி வெற்றி பெறுவது கடினம். அதனால் அவரை கர்நாடகத்தில் போட்டியிடுமாறு இங்குள்ள தலைவர்கள் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம். இந்த அபாயமான முடிவை அவர் எடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.
சிவமொக்கா தொகுதியில் எனது மகன் பி.ஒய்.ராகவேந்திரா, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த 6 மாதமாக அவர் ஓய்வே எடுக்காமல் அந்த தொகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் நான் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
நாகர்கோவில்:
மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. இன்று மேலும் 3 சட்டசபை தொகுதிகளுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் ஒட்டு மொத்த பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் இலகுவான வெற்றியை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளான தே.மு.தி.க., த.மா.கா. அனைத்துக்கும் உள்ளது.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக பொய் கூறி கடந்த முறை வெற்றி பெற்றுவிட்டதாக கூறுவது தவறு. இதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு கூட அதன் அங்கம் தான். அரசியல் லாபத்திற்காக மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம்.
இந்த மண்ணின் மைந்தர்களான மார்சல் நேசமணி, பொன்னப்ப நாடார், சுவாமி தாஸ் என்று எண்ணற்ற தலைவர்கள் இந்த மண்ணில் வெற்றிபெற்றாலும், பெறா விட்டாலும் இதன் உயர்வுக்கும், வளத்திற்கும் உழைத்து உள்ளார்கள். அனைத்து திட்டங்களும் மக்கள் நலன் சார்ந்துதான் உள்ளது.
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளதால் அங்கு வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அய்யாக்கண்ணு விவசாயிகள் பிரச்சினைக்காக போராடியபோது அவருக்கு துணை நின்றவன் நான். போராட்ட வழிமுறை மாறியபோது அது ஏற்புடையது இல்லாமல் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற செயலை கைவிட வேண்டும்.
வடமாநிலங்களில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று தெரியவந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி தென் மாநிலத்தை குறி வைக்கிறார். அதனால் தான் அவரது கட்சிக்காரர்கள் ராகுல் தென் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும், பிறகு மாற்றிக் கொள்வதும் இயல்பு. அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டதாக மு.க. ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல. அடகு என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துவது தவறானது.
குமரி மாவட்டம் மட்டுமல்ல எல்லா ரப்பர் விவசாயிகளுக்காகவும் வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி பிரச்சினைப் பற்றி பேசி உள்ளோம். இங்குள்ள 6 எம்.எல்.ஏ.க்களும் எங்கு சென்று உள்ளனர். ரப்பர் பிரச்சினைக்காக அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரப்பர் பிரச்சினைக்காக சட்டசபையில் என்ன பேசி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #rahulgandhi
குன்னம்:
பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். தெரு, தெருவாக ரோட்டில் பணத்தை போட் டுக்கொண்டே போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.
கலெக்டர் இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்கள் இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.
பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது அ.ம.மு.க. மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோஜியோ அமைப்பினர் போராடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியும் ஏன்? அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.
எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.
புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல்.
இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா? 100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். குக்கர் சின்னம் கிடைக்கா விட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் டி.டி.வி. அலை வீசுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்