என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பரியா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வானவர் சுரேந்திரசிங். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் பல்லியா என்ற ஊரில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-
மாயாவதி தன்னை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார். தினமும் அவர் தலைக்கு டை அடிக்கிறார்.
அது மட்டுமல்ல தன்னை பிரகாசமாக காட்டிக் கொள்வதற்காக முகத்தில் அதிகளவு பவுடர் பூசுகிறார். அழகாக உடை உடுத்தலாம் தவறு இல்லை. ஆனால் 60 வயதுக்கு பிறகு இளமையாக தோன்றுவதற்காக இப்படியா பவுடர் பூசுவது?
அவர் அடிக்கும் டை தலைமுடியை கறுப்பாக காட்ட வேண்டும். ஆனால் அந்த டை கலர் கிரேயாக மாறி விடுகிறது. இதனால் அவரது தோற்றம் எடுபடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் இந்த கருத்துக்கு உத்தரபிர தேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கை கண்டித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவாகி வருகின்றன. #mayawati #bjp
சேலம்:
சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
ஒரு மெகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திரும்பி பார்க்கின்ற பலமான கூட்டணியாக அமைந்திருக்கின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற 40 பாராளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்றம் சேலம் பாராளுமன்றம் என்ற முத்திரையை பதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிற்பகல் அவர் தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார். அங்கு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் அவர் தொகுதி முழுவதும் நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவில் சேலம் திரும்புகிறார்.சேலம் மாவட்டத்தில் நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் வருகிறது. எனவே அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் வந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami
கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.
பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.
மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.
இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த அரியானா மாநில மந்திரி அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாத சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என தெரிவித்துள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த் இன்று காலை தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.
முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்காக அரசின் சார்பில் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் நிலையில் எனக்கு வாழ்த்து கூறவும், மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கவும் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #GoanewCM #Goafloortest #PramodSawan
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, பாஜகவின் ஆட்சி குறித்து யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பாஜகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித கலவரங்களும் ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம் பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது. மேலும் 63 ஆண்டுகளுக்கு பின்னர் உத்தரபிரதேச உதய தினம் கடந்த 2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BJP #YogiAdithyanath
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும்.
காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. எங்கள் பிரச்சாரம் மக்களை நேரில் சந்திக்கும் பிரசாரமாக இருக்கும்.
சவுகிதார் என்றால் மக்களின் காவலன் என்று அர்த்தம் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக இந்த பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே பிரதமர் மோடி மக்களின் காவலன், மக்களுக்கு சேவை செய்பவர்.
தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள்.கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கமல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்கள் பற்றி பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் தென் சென்னையிலோ ராமநாதபுரத்திலோ களம் இறங்கலாம் என்றும் கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.
மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. வேட்பாளர் தேர்வு பற்றி தலைமை நிர்வாகிகள் கூறும்போது:-
வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பா.ஜனதாவுக்கு கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பது. இதற்காக அந்த கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.
பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனவே இந்த 5 தொகுதிகளிலும் கட்சியில் உள்ள பிரபலங்களை களம் இறக்க இருக்கிறோம்.
கமல் கட்சியில் இணையாத அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எனவே நாளை மறுநாள் வெளியாகும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் பா,ஜனதாவை இங்கே நோட்டாவுக்கு அடுத்த இடத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்.
பா.ஜனதா மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கமல் கட்சி தொடங்கியதே அ.தி.மு.க அமைச்சர்களை எதிர்த்து தான். ஆனால் சமீப காலமாக பா.ஜனதா தலைவர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். பதிலுக்கு கமலும் நோட்டாவால் தொலைந்து போன பா.ஜனதாவை டார்ச் லைட் வைத்து தேடப்போகிறேன் என்றார்.
இது தொடர்பாக எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பா.ஜனதாவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்“ என பதிவிட்டார். இதுபோன்ற மோதல்களால் கமல் பா.ஜனதாவை வீழ்த்தியே தீருவேன் என்று தீவிரம் காட்டுகிறார்’.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் கமல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-
எப்போதுமே தமிழ் நாட்டின் தண்ணியில்லாக்காடு என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம்தான். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை. கட்சி ஆரம்பிக்கும்போதே, ‘உங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன, ஒரு பட்டியல் கொடுங்கள், அதை சரி செய்ய முயலுங்கள்” என்று கமல் சொன்னார். அதன்படி நாங்கள் இந்த 6 மாதமாக இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறோம்.
பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம்.
இந்த 6 மாதத்தில் மாவட்டம் முழுவதும் இந்த பணி விரிவடைந்துள்ளது. இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். கமல் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHassan #Election2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்