search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.
    சென்னை:

    மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் டெல்லியில் மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    முறைப்படி மத்திய மந்திரி சபை பதவி ஏற்றுள்ளது. இது முழுமையான மந்திரி சபை அல்ல. மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மோடி பதவியேற்கும் நேரத்தில் வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சி 2 நாட்களாக சமூகவலைதளங்களில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

    மோடி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அவரது எதிர்ப்பாளர்களான தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக மோடி ஆதரவாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.

    பா.ஜனதாவில் சில காலம் இருந்துவிட்டு தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காயத்ரி ரகுராம் இதை கண்டித்து பதிவிட்டு இருந்தார். காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம்.



    அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என கோபமாக பகிர்ந்து இருந்தார்.

    அதற்கு கமெண்டில் குவிந்த மோடி எதிர்ப்பாளர்கள் ‘மோடியை டிரெண்ட் பண்ணாததால் கோபம் வருகிறதா?’ என்பது போல் கேட்டிருந்தனர்.

    இதுபோல் தொடர்ந்து மோடியை ஒப்பிட்டு கமெண்ட் வரவும் அதற்கு இன்னொரு டுவிட்டைப் பகிர்ந்திருந்தார் காயத்ரி ரகுராம். அதில், ‘மோடிஜிக்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது.

    இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என கூறி இருக்கிறார்.
    மேற்கு வங்காளத்தில் மக்களை பிரித்து ஆள பா.ஜனதா முயற்சி செய்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் நேற்று அந்த கட்சியின் சார்பில் நைஹட்டியில் ஏற்பாடு செய்து இருந்த பேரணியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பா.ஜனதா போன்ற கட்சியை நான் ஆதரிக்கப் போவதில்லை. அவர்கள் மாநிலத்தில் உள்ள மக்களை மொழி அடிப்படையில் பிரித்து ஆள முயற்சி செய்கிறார்கள்.



    சில போலீஸ் அதிகாரிகளும் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.
    மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

    எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது. 

    ஆனால், இன்று மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்றபோது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம்பெறவில்லை. 

    இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படவில்லை. 
    மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். அவர்கள் பெயர் வருமாறு:-

    கேபினட் மந்திரிகள்

    நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.

    இணை மந்திரிகள்

    அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் தாதாராவ், தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ், பகன் சிங் குலாஸ்தே, ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு), கிஷன் ரெட்டி, கைலாஷ் சவுத்ரி, கிரிஷன் பால், நித்யானந்த் ராய், பர்ஷோத்தம் ரூபாலா, பிரதாப் சந்திர சாரங்கி, ரத்தன் லால் கட்டாரியா, ராம்தாஸ் அத்வாலே, ராமேஸ்வர் தேலி, ரேணுகா சிங் சருதா, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் குமார் பால்யன், சோம் பர்காஷ், முரளீதரன், தேவஸ்ரீ சவுத்ரி,

    இணை மந்திரிகள் (தனி பொறுப்பு)

    டாக்டர் ஜிதேந்திர சிங், கிரன் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் எல்.மாண்டவியா, பிரகலாத் சிங் பட்டேல், ராஜ் குமார் சிங், ராவ் இந்தர்ஜித் சிங், சந்தோஷ் குமார் கேங்வார், ஸ்ரீபாத் யெஸ்சோ நாயக். 

    இன்று பதவியேற்றுள்ள மந்திரிகளுக்கான இலாகா விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 
    முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரியாக இன்று பதவியேற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். மோடியைத் தொடர்ந்து அவரது மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    மோடி மந்திரிசபையில் முன்னாள் வெளியறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கரும் இடம் பெற்றுள்ளார். அவரும் இன்று பதவியேற்றார். 

    மோடி அரசில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஜனவரி மாதம் வரை வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றியவர் ஜெய்சங்கர். 2017ல் டோக்லாம் எல்லையில் இந்திய படைகளும், சீன படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியபோது, போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றினார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றி உள்ளார். ஓய்வுக்குப் பிறகு டாடா குழுமத்தின் உலகளாவிய பெருநிறுவன விவகாரங்கள் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். 

    அரசுப் பணியில் அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மோடி அரசு அவருக்கு கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். 

    இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டுகளித்தார். தன் மகன் மீண்டும் பிரதமராக பதவியேற்றதை பார்த்து, உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. 
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். 

    இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    முதலில் ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்றார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமித் ஷாவுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவைத் தொடர்ந்து, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பிற மந்திரிகளும் பதவியேற்றனர்.
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். 30-ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.

    பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

    வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது. மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

    பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது. 
    கேரளாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி. இவர், கடந்த 1999 முதல் 2004 வரை கண்ணூர் தொகுதி எம்.பி. யாக இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்துல்லா குட்டி, பாரதீய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடி யையும் அடிக்கடி பாராட்டி வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே காரணம்.

    காந்திய கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டமும் மக்களின் பாராட்டை பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா யாரும் எதிர் பார்க்காத வெற்றியை பெற்றது. இதனை எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியில் உள்ளவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியை பாராட்டியதும், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதும் கேரள காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


    இது தொடர்பாக அவர்கள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து கட்சி மேலிடம் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மோடியை புகழ்ந்ததால் இப்போது சிக்கலில் சிக்கி உள்ள அப்துல்லா குட்டி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை பாராட்டி பேசினார்.

    இதற்காக கடந்த 2009-ம் ஆண்டே அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது இங்கும் அதே சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

    முறையான அழைப்பு வராததால், பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இன்று இரவு பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தலைவர்கள், மாநில முதல்வர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.



    மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விழாவுக்கு செல்வதாக பேட்டியில் கூறிவிட்டார்.

    இந்த தேர்தலில் முதன் முறையாக அரசியல்வாதியாக களம் இறங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனையும் அழைத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இந்து தீவிரவாதம்’ குறித்து பேசியதற்காக பா.ஜனதாவினர் கமல்ஹாசனை மிக கடுமையாக விமர்சித்திருந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரதமர் பதவியேற்புக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி வெளியானது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் சம்பிரதாய அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டிருக்கிறது.

    இதுவரை முறையான அழைப்பு வராததால், பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
    ×