search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #admk #pmmodi

    மேலூர்:

    மேலூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில்நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பேசினர்.

    மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரல் வழியில் வந்த அ.தி.மு.க. இயக்கத்தை ஓ,பி.எஸ்., இ.பி.எஸ். வழி நடத்துகின்றனர். இயக்கத்தை அசைத்து விடலாம், குந்தகம் விளைவிக்கலாம் என சிலர் நினைத்து வருகின்றனர்.

    தற்போது வலுவான கூட்டணி அ.தி.மு.க. அமைத்து வருகிறது. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்பது போல கேட்காமல் கொடுத்து வரும் அரசு. அ.தி.மு.க. அரசு. ஸ்டாலின் என்றைக்கும் தி.மு.க.விற்கு தளபதியாக மட்டுமே தான் இருப்பார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைபெற்று வருகிறது.

    வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-2 முடித்த அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்து 2 அரை ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க இன்று கூட்டணி அமைத்திருக்கின்றனர். பா.ம.கவும் கூட்டணிக்கு வந்துள்ளனர்.

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல.

    வடமாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றிபெற்றவுடனே, கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

    ஆனால் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் அரசியல் ஆண்மை இருந்தால் அங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை.

    இரட்டை வேடம் ஸ்டாலின் போடுகின்றார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலை போய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார்.

    தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க. என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதா இருந்த போது பா.ம.க 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்த போது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர்.

    ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதா தான். சாக்கடை வசதி, மின்விளக்கு எரியாதது போன்றவை உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம் என ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே இதற்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், விரகனூர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிசெழியன், நகர் செயலாளர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி,பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஜபார், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், பேருர் செயலாளர் மணிகண்டன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், முன்னால் கவுன்சிலர் சரவணக்குமார், அமைப்பு சாரா செயலாளர் அன்புச்செல்வம், பாசறை சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் தான் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நான் தெரிவித்து இருந்தேன். அந்த அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்தியில் வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதியை பெறமுடியவில்லை. வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பதால் ரூ.20 கோடி என்ன, ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டுப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் அவரிடம் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று விமர்சித்து உள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, புரோகிதர்தான் கட்டாய திருமணமா? இல்லையா? என்பதை சொல்லவேண்டும், திருநாவுக்கரசர் தற்போது பதவி இல்லாமல் அம்போ என நிற்கிறார். அவர் சொல்வதை யாரும் கேட்க வேண்டாம் என்றார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #BJP #Jayakumar #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார்.

    அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-



    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அ.தி.மு.க.வில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் மு.க.ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.

    அ.தி.மு.க. கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலக் கூட்டணி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Jayakumar #MKStalin
    8 முதல் 10 தொகுதிகளை கேட்ட பாஜகவிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக எடுத்து வைத்த வார்த்தைகள் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அசர வைத்தது. #ADMK #Edappadipalaniswami #OPS #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய தேசிய கட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமான பா.ஜனதா தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளுக்கு சம்மதித்ததை மற்ற கட்சியினர் அவமானமாக கருதி விமர்சிக்கிறார்கள்.

    அரசியல் பார்வையாளர்களும் பா.ஜனதா எப்படி 5 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டது என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் வெறும் 5 தொகுதிகளுடன் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்து கொண்டதின் பின்னணியில் சுவாரசிய தகவல்கள் உள்ளன.

    டெல்லி பா.ஜனதா தலைவர்களும், தமிழக பா.ஜனதா தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களுடன் பல நாட்களாக கூட்டணி தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இறுதியில் 8 முதல் 10 தொகுதிகளுக்கு குறையாமல் பெற்று கூட்டணியை இறுதி செய்ய தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருந்தார். தமிழக பா.ஜனதா தலைவர்களும் 8 முதல் 10 வரையிலான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

    கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சு வார்த்தை நடந்தது.

    பா.ம.க.வுடன் உடன்பாடு எட்டிய மகிழ்ச்சியில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது. பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் மற்றும் தமிழக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., முனுசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    பா.ம.க.வுடன் கூட்டணி உறுதி ஆனதால் நமது கூட்டணி இனி வெற்றிக் கூட்டணியாக மாறும் என்று கூறியபடியே அ.தி.மு.க.வினரும், பா.ஜனதாவினரும் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். பா.ஜனதா தரப்பில் 8 முதல் 10 தொகுதிகள் கேட்கப்பட்டது.

    அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக எடுத்து வைத்த வார்த்தைகள் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அசர வைத்தது. தமிழக பா.ஜனதாவை பொறுத்த வரை அடிமட்டம் வரை சென்று தங்களின் செல்வாக்கு எப்படி? தொண்டர்களின் செயல்பாடு ஆகியவற்றை கணக்கெடுத்து கம்ப்யூட்டரில் பதிவேற்றி வைத்துள்ளனர்.

    ஆனால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு வட்டாரம் வாரியாக, பகுதி பகுதியாக பா.ஜனதா கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? எந்தெந்த வகைகளில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விலா வாரியாக பட்டியல் போட்டு பா.ஜனதா தலைவர்களின் முன்பு வைத்தார். இந்த நிலையிலும் நீங்கள் 8 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்கள்.

    நாம் கூட்டணி அமைப்பது வெற்றி பெறுவதற்குத்தான். பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி ஆட்சி தொடர வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு உதவியாக இருக்கிறோம். எனவே உங்களின் பலம்- பலவீனத்தை தெரிந்து கொண்டு நீங்கள்தான் இறங்கி வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்தினார்.

    எடப்பாடி பழனிசாமி பட்டியல் போட்டு சொன்ன தகவல்களை கேட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் அசந்து போனார்கள். உடனே பியூஸ் கோயல், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் போனில் பேசினார். எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவலை விலாவாரியாக கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிடிவாதம் இல்லாமல் இறங்கி வந்து பேசி தமிழகத்தில் நமது கட்சியின் நிலையை சொல்லி இருக்கிறார்கள். நாம் 8 முதல் 10 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் எப்படி? என்றார்.

    அதற்கு அமித்ஷா நாம் அவர்களை எப்படியோ எடை போட்டோம். ஆனால் அவர்கள் இந்த அளவு தெள்ளத் தெளிவாக பேசி இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார்.

    தொகுதி எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. தமிழகத்தில் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷாவிடம் பியூஸ் கோயல் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதன்பிறகே அமித்ஷா நமது வெற்றிதான் முக்கியம். 5 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்தே பா.ஜனதா 5 தொகுதிகளை பெற்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்துள்ளது. #ADMK #Edappadipalaniswami #OPS #BJP
    அதிமுக - பாஜக கூட்டணி தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. இந்த பயத்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு இவர்கள் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம் வகுத்துள்ளார்கள்.

    இதற்காக போலீஸ் வாகனங்கள் மூலமும், ஆம்புலன்ஸ் மூலமும் பணத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிர்கட்சியினரும், வியாபாரிகளும் ரூ.50 ஆயிரம் கொண்டு சென்றால் கூட அதை பார்த்துக்கொள்வார்கள்.

    பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியினர் நினைக்கிறார்கள். ஆனால் பணபலத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கூட்டணிக்கு வெற்றி தருவார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க. தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.

    காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளது. காவிரி டெல்டா பகுதியை மீத்தேன் எடுக்கும் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது. கஜா புயலின் போது பலியானவர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இழப்பீடு வழங்க மிக மிக குறைவாக பணம் ஒதுக்கி உள்ளது. இன்னும் ஏராளமான வஞ்சகம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4½ கோடி வாக்காளர்களும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

    இதனால் அ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி. தி.மு.க. கூட்டணி வெல்வது உறுதி. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போது தான் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாட்டு நலனை விரும்புபவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தலைவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் என்ற செய்தி வெளி வந்ததும் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இன்னும் எத்தனை கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது அ.தி.மு.க.விடம் தான் உள்ளது. பல கட்சிகள் இணையும், அதற்கான பணிகளை அ.தி.மு.க. மேற் கொண்டு வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அவர் பேசுவது அநாகரீகமான வார்த்தைகள். சாக்கடை எங்கு ஓடுகிறது என சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள்.

    பிரதமர் மோடி அரசாங்கம் மீண்டும் ஏற்படுவது நாட்டிற்கு தேவை. 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் அடித்தள மக்களுக்கானது. உலக அளவில் இந்தியா முதல் நாடாக மாறும். இதனை அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி தீர்மானிக்கும்.

    ஜாதி, மதம், இனம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தலை நிமிர்ந்து கைகோர்க்கும் சூழ்நிலை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படும். அப்படிப்பட்ட நிகழ்விற்கு ஒவ்வொரு இந்தியர்களும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.

    தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு வரை கூட இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பா.ஜ.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுவது என்றில்லை. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் எங்களுடையது தான். திருச்சியில் நிற்பது யாராக இருந்தாலும் அவர் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தான்.

    புல்வாமா தாக்குதல் பாதுகாப்பு, ராணுவம் தொடர்புடையது. பிரதம் நரேந்திர மோடி மீது 130 கோடி இந்திய மக்களும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் அரசியல் பாகுபாடுகளின் தேசம் என்ற ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும். பி.ஜே.பி., காங்கிரஸ், கம்யூனிஸ்டு என்று பிரித்து பார்க்க கூடாது.

    தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகளின் போது நானும் உடன் இருந்துள்ளேன். மத்திய மந்திரி பியூஸ் கோயல் பா.ம.க. கூட்டணியை அறிவித்து செல்லவில்லை. பா.ஜ.க.வின் கூட்டணியை அறிவித்துள்ளார். நாட்டு நலனை விரும்புபவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan

    அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #LSPolls
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடும், பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனான கூட்டணியில் இழுபரி ஏற்பட்டுள்ளது.



    இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக-பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். 
    மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். #LSpoll #PiyushGoyal #DMDK
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன். .ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாஜகவை சேர்ந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர். 

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே நடைபெற்றது; கூட்டணி குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளார். #LSpoll #PiyushGoyal #DMDK
    வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 



    இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் பாஜக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance  
    மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது எத்தனை திட்டங்களை கொண்டு வந்தது என்பது குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார். #PonRadhakrishnan #MKStalin
    விழுப்புரம்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை விழுப்புரத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு எத்தனை ஆயிரம் கோடிக்கு திட்டங்களை செய்தது என்பதை பட்டியலிட நாங்கள் தயாராக உள்ளோம்.

    தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது. மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது கடைசி 10 ஆண்டுகளில் எத்தனை திட்டங்களை கொண்டுவந்தீர்கள்? எத்தனை திட்டங்களை நடைமுறைபடுத்தினீர்கள்? என்ன சாதனை செய்தீர்கள் என்பது குறித்து ஒரு பட்டியலை நாளைக்குள் வெளியிட்டால் சரியாக இருக்கும்.

    மேலும் இதுகுறித்து பொதுமேடையில் மு.க.ஸ்டாலின் விவாதம் நடத்த தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #MKStalin
    கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ சென்ற கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். #BJPMLA #CarAccident
    பெங்களூரு:

    கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான சி.டி.ரவி, இன்று அதிகாலை சிக்கமங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இரு சக்கர வாகனத்துடன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காரில் பயணம் செய்த எம்எல்ஏ ரவி சிறிய காயங்களுடன் தப்பினார்.

    காரில் பயணம் செய்தபோது தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஏர் பேக் திறந்த பின்னரே ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்ததாகவும் எம்எல்ஏ தெரிவித்தார்.

    ஆம்புலன்சை வரவழைத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தானும் அதே மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்ததாகவும் தெரிவித்தார். #BJPMLA #CarAccident

    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

    இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
    ×