என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புல்வாமாவில் மத்திய படை மீது கடந்த 14-ந்தேதி தாக்குதல் நடந்திருக்கிறது.
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் அதை முறையாக தடுக்காமல் இருந்துள்ளனர். ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அதுவும் பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் தாக்குதல் நடந்திருக்கிறது. நான் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில் 2005 வீரர்களை 78 வாகனங்களில் ஏற்றி ஒட்டுமொத்தமாக முகாம் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏன் இவ்வாறு ஒட்டுமொத்த மாற்றம் செய்யப்பட்டது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அதற்கான வாய்ப்பு ஏன் அளிக்கப்பட்டது.
இந்த தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நாம் அமைதியாக இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தினமும் இதைப்பற்றி வித்தியாசமாக பேசுகிறார்கள். அவர்களுடைய பேச்சை வைத்து பார்க்கும்போது அவர்கள் மட்டுமே தேசப்பற்று கொண்டவர்கள் போலவும், நாங்கள் எல்லாம் வெளிநாட்டினர் போலவும் உள்ளது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #PulwamaAttack
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #DMK
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வர திட்டமிட்டிருந்தார். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் அமித் ஷா வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்றைய பேச்சுவார்த்தையின்போது கூட்டணி அறிவிப்பை அமித் ஷா வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அவர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எனவே, கூட்டணி அறிவிப்பு வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்றபிறகு, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அதன்பின்னர் சென்னை வரலாம் என தெரிகிறது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவித்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார். மேலும் ஓய்வூதியம், இலவச அரிசி, காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஆளுநர் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதன் மூலம் 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநில உரிமைக்காக நடைபெற்ற 2வது மிகப்பெரிய போராட்டம் இது என கூறினார். போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.#PuducherryCMDharna #KiranBedi #Narayanasamy #GovernorKiranbedi
ஸ்ரீவில்லிபுத்தூர்:
திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா மூழ்கும் கப்பல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் எந்த பாதிப்பும் இல்லை. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் கலைத்துறையில் மட்டுமே உள்ளார்.
திராவிடர் கழக சமூக நீதி மாநாடு, வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இட ஒதுக்கீடு, சமூக நீதி குறித்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தலில் மக்களின் கடமைகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kveeramani #parliamentelection
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே இது போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துச் சென்றாலும், தமிழகத்தில் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.
இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதனாலேயே உள்ளாட்சிகளில் தி.மு.க.வை பலப்படுத்துவதற்காக ஊராட்சி சபைக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
தற்போதைய நிலையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk #parliamentelection
பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.
'எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.
பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகதான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து வருவது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்து வருவது போல் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
தீவிரவாத தாக்குதலால் ராணுவ வீரர்களின் இன்னுயிரை இழந்த சோகத்தில் நாடே தவித்து கொண்டிருக்கிறது. அதற்கான பின் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
ஆனால் இங்கோ மு.க.ஸ்டாலின் பாண்டிச்சேரி முதல்வரின் தர்ணாவை முடித்து வைப்பதில் தீவிர கவனமாக இருக்கிறார். அந்த தர்ணாவை முடித்து வைக்க மோடி அக்கறை காட்டவில்லை என்கிறார்.
கிராம பஞ்சாயத்து டூர் நடுவே கேள்வி கேட்கிறது அறிவாலயம். மோடி வெளிநாடுகள் டூர் சென்று வந்ததால்தானே உலக நாடுகளே நமக்காக குரல் கொடுக்கின்றன. கேலி பேசிய ஊழல் விஞ்ஞானிகளுக்கு இப்போதாவது புரிந்ததா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் எங்கள் கூட்டணி, நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளிவரும்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே போராட்டம் நடத்துவது ஒன்றையே கலாச்சாரமாக மாற்றி வருகிறார்கள்.
தமிழகம் அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் பாண்டிச்சேரியில் தொடரும் போராட்டம் இங்கேயும் வரும் என்கிறார். அதாவது தமிழகத்தையும் போராட்ட களமாக்க பார்க்கிறார். மக்கள் இதை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்