என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் செய்யப்பட்டு வருகிறது.
விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் என தி.மு.க. வுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர்.
இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. விளங்குகிறது. ஆனாலும் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காதது தி.மு.க. தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும் தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க. செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரத்தின்போது மோடியை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். என்றாலும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது என தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, மு.க.ஸ்டாலினின் மோடிக்கு எதிரான பிரசாரத்தால் எங்கள் மேலிடம் வருத்தம் அடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எங்கள் கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
எங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறோம். மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு முதல் எதிரி என்றனர்.
அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகஸ் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் அமைதியாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் சிறப்பாக நடைபெறுகிறது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மோடிக்கும், அவரது பா.ஜனதா கட்சிக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெளியுறவு மந்திரி மைக் பால்பியோ உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகம் வாழ்த்து செய்தி அனுப்பியது.
இந்தியா அமெரிக்காவின் மிகப்பெரிய நட்புநாடு. எனவே அமெரிக்கா பிரதமர் மோடியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். முக்கிய பிரச்சனைகள் குறித்து வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ மிகவும் அதிதீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுவரை 50 எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக இந்தியா தொடர்கிறது. தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள். தங்கள் நட்பு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என அமெரிக்காவாழ் இந்தியரும் அரசியல்வாதியுமான நிக்கிஹாலே டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.
அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.
இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.
தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி) 2-வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார்.
இந்த விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நோபளம், பூடான், கிர்கிஸ்தான், மொரீசியஸ் உள்ளிட்ட 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது எதிர்பாராதது. இத்தகைய பிரச்சனையில் இருந்து இந்தியா விரைவில் விடுபடும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர நட்புறவுடன் திகழ வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் விரும்புகிறார். எனவே தான் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இப்பிராந்தியம் வளர்ச்சி பெற காஷ்மீர், சியாசின் மற்றும் சர்கிரீக் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பூர்:
சென்னையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்து கணிப்பை வைத்து தமிழகத்தை பொறுத்தவரை தப்பித்து கொள்வோம்.
ஆனால் வெளியில் பொறுத்தவரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி கொண்டு அலைய போவதாக பாரதீய ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகரக்கு காவி வேட்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த காவி வேட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து பதிவு தபால் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது-
ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டது பாரதநாடு. இனி வரும் நாட்களில் நாட்டில் காவியே பிரதானமாக இருக்கும்.
டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் காவியை குறிப்பிட்டு பேசியதாலும், பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் வெற்றி பெற்றதாலும் அவருக்கு காவி வேட்டியை அனுப்பி உள்ளோம்.
மாதந்தோறும் தொடர்ந்து அவருக்கு காவி வேட்டி எங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
புதுவை கவர்னராக கிரண்பேடி 2016 மே 29-ந்தேதி பதவியேற்றார்.
கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. பதவியேற்றது முதல் கவர்னர் கிரண்பேடிக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.
கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கவர்னர் தனது செயல்பாடுகளை குறைத்து அமைதியாக இருந்து வந்தார். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அகில இந்திய அளவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் 30-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடிக்கு அழைப்பு வந்துள்ளது. விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பாக புதுவை மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார். இதில் தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடி விடைபெறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவர்னர் கிரண்பேடி மாநில கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
டெல்லி புறப்பட்டு செல்லும் முன்னர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி ஊழியர்களிடம் கிரண்பேடி கூறி இருக்கிறார். எனவே, அவர் மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
கிரண்பேடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் புருஷோத்தமன் புதுவை கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.
பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.
டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.
இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி தான் கிடைத்துள்ளது. நாங்கள் சாதாரண குடிமக்களாக பிறந்து உண்மையான அரசியலை கொண்டு வந்து புரட்சிகரமான அரசியலை செய்து வருகிறோம்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கடைகளில் இருந்து 150 வாக்கு எந்திரங்களை எடுத்து வருகிறார்கள்.
ஆட்டோவில் வாக்குப் பெட்டியை கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்கு எந்திரத்தை தூக்கிச் செல்கிறான். விடுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நேர்மையாக இருப்பதால் என்ன பயன்?
அதே குஜராத்தில் மாடியில் தீ விபத்து ஏற்படும் போது அதனை ஏணி வைத்து தண்ணீரை பீய்ச்சி அணைக்க நம்மிடம் வசதி இல்லை. இதனால் 28 மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது? என்ற அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத நாடாக இந்தியா உள்ளது.
3 ஆயிரம் கோடி செலவு செய்து சிலை அமைத்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா?
தேர்தலில் கமல்ஹாசன் எங்கள் வாக்கை பிரித்து இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. 50 ஆண்டுகளாக நடித்த நடிகர் புதுசா வருகிறார். அவருக்கு ஓட்டு போட்டு பார்ப்போம் என மக்கள் நினைத்திருக்கலாம்.
இங்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால் பா.ஜ.க. வரக்கூடாது என்ற கருத்தை நாங்களே அதிகமாக எடுத்து வைத்தோம். அதை தி.மு.க. அறுவடை செய்துள்ளது.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்