search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று வைகோ கூறியுள்ளார். #vaiko #mkstalin #parliamentelection #pmmodi

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பேசிய வைகோ கூறியதாவது:-

    தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தேர்தல் பணிக்குழு நியமனம் நடைபெற்று வருகிறது. 70 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. தி.மு.க., அ.தி.மு.க. வை அடுத்து ராணுவ கட்டுப் பாட்டுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாராளுமன்றத்திற்கு முதல் கட்டமாக நடைபெறும் தேர்தலிலேயே தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.

    கூட்டாட்சி தத்துவத்தை மோடி மதிப்பதில்லை. பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விதி விலக்காக கூட்டாட்சி தத்துவத்தையும், மதசார்பற்ற தன்மையும் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவர் வாஜ்பாய். மோடி அப்படி செயல்படவில்லை. அவர் தமிழர்களுக்கு ஏராளமான கெடுதல் செய்துள்ளார். பதவி ஏற்ற போதே ராஜபக்சையை அழைத்து முதுகில் குத்தினார்.

    காவிரி பிரச்சினையில் மேகதாது அணை கட்ட மறைமுக ஆதரவு அளித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தஞ்சை பகுதி விவசாய நிலங்களை பாலை வனமாக்க முயன்றார்.

    கஜா புயலின் போது நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியார் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை பூங்கா ஆகிய வற்றின் மூலம் தமிழர்களுக்கு கெடுதல்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே தான் மோடி வரும் போது கருப்புக் கொடி காட்டுகிறோம்.

    என்னை அடிப்பதோ, கொல்வதோ கஷ்டமல்ல. இந்த ஆட்சியில் எத்தனையோ கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே அரசு நிகழ்ச்சிக்கு வரும் போது மட்டுமே மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். இப்போது நாங்கள் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோம். கலைஞர் நினைவோடு இருக்கும் போதே அவரிடம் வாக்கு கொடுத்து விட்டேன்.

    அதன்படி மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன். ஸ்டெர்லைட் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இது மக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வர வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் கூலிப்படையாக இந்த அரசு செயல்படுகிறது.

    மத்திய அரசின் கைப் பாவையாக செயல்பட்டு மக்கள் நலனை புறம் தள்ளும் அ.தி.மு.க. தோற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும்.

    இந்த ஜனநாயக விரோத குற்றத்தை தேர்தல் ஆணையம் செய்யாது என கருதுகிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசு பணம் கொடுத்து விட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் அ.தி.மு.க., பா.ஜனதாவை தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். 2004-ல் நடந்தது போன்று 2019-ல் நடைபெறும்.


    காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா வந்திருப்பதன் மூலம் வட மாநிலங்களில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுகிறது. எனவே வட மாநிலங்களிலும் பா.ஜனதா படுதோல்வி அடையும். நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு 125 இடங்களுக்கு மேல் கிடைக்காது. காங்கிரஸ் கட்சி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்.

    புதுவையில் கவர்னருக்கு எதிரான முதல்-அமைச்சர் நாராயணசாமி போராட்டம் நியாயமானது. கவர்னர் பதவி என்பது ஒழிக்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #vaiko #mkstalin #parliamentelection #pmmodi

    தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதை அடுத்து சரத்பவார் வீட்டில் ராகுல் -மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தினார்கள். #modi #rahulgandhi #mamata #parliamentelection

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர் கட்சிகள் ஓரணியில் திரள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக சந்திரபாபு நாயுடு, டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார்.

    இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார். இதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

    இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. எதிர்க்கட்சிகள் நடத்திய 3-வது பிரமாண்ட பேரணி இதுவாகும்.

    இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் “பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசிய கடைசி நாள். இத்துடன் அவரது அரசின் ஆயுட்காலம் முடிந்து விட்டது” என்று தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் வீட்டில் ஆலோசனை செய்தனர்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


    சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை பலப்படுத்துவது, 15 நாட்களுக்கு ஒருமுறை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வியூகம் அமைப்பது, மாநிலங்கள் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

    இந்த கூட்டத்துக்கு பின்பு ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, “இந்திய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது என்ற பிரதான இலக்குடன் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

    குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்க உள்ளோம். இனிவரும் நாட்களில் நாங்கள் ஒன்று பட்டு செயல்படுவோம்.

    மாநிலத்தில் பிரச்சினை இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்போம். நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்து விட்டேன். அதற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மாநிலத்தில் அந்த கட்சியை எதிர்த்துதான் ஆட்சி செய்கிறது. தேசிய அளவில் மோடிக்கு எதிராக ஒன்று சேர்வது தொடர்பாக அவர்கள் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணியில் 15 கட்சிகள் இணைந்து செயல்பட இருக்கின்றன. #modi #rahulgandhi #mamata #parliamentelection

    பாராளுமன்ற தேர்தல் களைகட்டி உள்ள நிலையில் ஈரோடு உள்பட 4 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். #AmitShah #bjp #parliamentelection

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தல் களைகட்டி உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொங்க மண்டலத்தை மையப்படுத்தி பாரதிய ஜனதா காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    இதை தொடர்ந்து பா. ஜனதாவின் தலைவர் அமித்ஷா கொங்கு மண்டலம் வரதிட்டமிட்டார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமித்ஷா சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டுக்கு புறப்பட்டார். ஈரோடு சித்தோடு அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.

    அங்கு அமித்ஷா கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நெசவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது நெசவாளர்களின் பிரச்சினை அவர்களின் முக்கிய கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    அமித்ஷாவிடம் நெசவாளர் பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை கேட்டு கொண்ட அமித்ஷா பரிசீலிப்பதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 4 பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, வெற்றிக்கான வியூகங்களை பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். #AmitShah #bjp #parliamentelection

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்து வருகிறோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection

    ஈரோடு:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஈ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.

    பிரதமரை தொடர்ந்து தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு வர உள்ளார். தொடர்ந்து மத்திய மந்திரிகள் மூத்த தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ மந்திரியும் நானும் அங்கேயே 3 நாட்கள் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தோம்.


    வைகோ தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார். அவர் பிரதமர் வரும்போது கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவது வெற்று போராட்டம் ஆகும். அந்த போராட்டம் ஊர்ந்து போகும் யானையின் பலத்தை சுண்டெலியால் தடுத்து விட முடியாது.

    முதல்வர் ஏழை குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் அறிவித்தது நல்ல திட்டம் அதை வரவேற்கிறேன். தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    கூட்டணி பற்றி பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும். எங்களுக்கு பொதுவான எதிரி தி.மு.க.வும் காங்கிரசும் தான் தமிழகத்தை பொருத்தவரை பலமான பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து வருகிறோம். தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    பாரதீய ஜனதாவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. ஒரு எதிர்கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் மோடியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு தமிழிசை கூறினார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா பேரம் பேசிய 2-வது ஆடியோவை குமாரசாமி வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவுடன் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பா.ஜனதாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார்.

    பா.ஜனதாவில் இணைய உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகருடன் பா.ஜனதா பேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.


    இந்த நிலையில் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிவனகவுடாநாயக், பிரிதம் கவுடா ஆகியோர் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவிடம் பேரம் பேசி உள்ள ஆடியோவை குமாரசாமி நேற்று வெளியிட்டார்.

    இதனால் மீண்டும் ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவின் இமேஜை குலைக்கும் முயற்சியில் அந்த கட்சி தொடர்பான ஆடியோக்களை குமாரசாமி வெளியிட்டு வருவது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa

    பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா-பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார். #vaithilingammp #admk #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.

    இதேபோல் டி.டி.வி. தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்க்க ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே:- அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தை எந்த அளவில் உள்ளது. பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதா?

    ப:- கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அறிவிப்பு வரும்.

    கே:- அ.தி.மு.க. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறது?

    ப:- நீங்கள் சொன்ன கட்சிகளுடன் (பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.) பேசி வருகிறோம்.

    கே:- குறிப்பாக பாரதீய ஜனதா, கூட்டணி பேச்சு வார்த்தையில் வலுவாக உள்ளதா? அ.தி.மு.க. இதில் மவுனமாக உள்ளதே? மவுனத்துக்கான காரணம் என்ன?


    ப:- கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே இது குறித்து கூட்டணி பேச்சு வார்த்தை ரகசியமாக நடப்பதாக சொல்லி உள்ளார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள்.

    கே:- இதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    ப:-இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. கட்சிகளுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் இடம் பெறும் என தெரிகிறது. #vaithilingammp #admk #parliamentelection

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சென்னை:

    சினிமா, அரசியல் இரண்டிலும் தடம் பதித்தவர் நடிகை விஜயசாந்தி.

    ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதற்கு முன்னர் பாரதிய ஜனதாவில் இருந்தார்.

    ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படம் விஜயசாந்தியை பட்டி தொட்டியெல்லாம் தெரிய வைத்தது. ரஜினி, கமலுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு பாராட்டிய விஜயசாந்தி, சென்னை வரும்போது போயஸ்கார்டன் சென்று அவரை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த அதிரடி பேட்டி வருமாறு:-



    எனது திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை என்னை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 2 காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.

    அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

    அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

    அப்போது ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர் பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன்.

    இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

    சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. மோடியின் சூழ்ச்சி.

    ரஜினி சீக்கிரம் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக மக்களின் சார்பில் நானும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். கமலை பொறுத்த வரையில் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally
    அகமதாபாத்:

    16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை பிடித்துவிட காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்க சில மாநிலங்களில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெறுவது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளிலும் பரபரப்பு தொற்றியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நாளை பிற்பகல் அவர் உரையாற்றுகிறார். 

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலின்போது பிரசாரம் செய்வதற்காக இங்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறை குஜராத்துக்கு மீண்டும் வருவதால் சிறப்பான முறையில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

    2017-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டசபையில் உள்ள 182 இடங்களில் 99 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் 60 எம்.எல்.ஏ.க்களாக இருந்த காங்கிரசின் பலம் 77 ஆக உயர்ந்தது.

    ஆனால், 2009-பாராளுன்ற தேர்தலில் 11 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ்,  2014-பாராளுன்ற தேர்தலில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியாமல் இங்கு படுதோல்வி அடைந்தது. அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 26 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் என்பது நினைவிருக்கலாம். #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally
    பாராளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முலாயம் சிங் தெரிவித்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.பி. பதில் அளித்துள்ளார். #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark
    புதுடெல்லி:

    16-வது பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவுநாளான இன்று மக்களவையில் பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். 

    உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த நரேந்திர மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார்.  அப்போது முலாயம் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அமர்ந்திருந்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாயாவதியுடன் கைகோர்த்து முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது தேசிய அரசியல் அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று மாலை கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘முலாயம் சிங் யாதவ் எனது பெருமதிப்புக்குரிய தலைவர், தேசிய அளவில் அவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனினும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    இதேபோல் பல்வேறு தரப்பினரும் முலாயமின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில், பாராளுமன்ற வாசலில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. சுப்ரியா சுலே, ‘கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவுநாளன்று மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மதிப்பிற்குரிய முலாயம் சிங் யாதவ் முன்னர் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி நடக்கவில்லையே..’ என குறிப்பிட்டுள்ளார்.

    #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark #ModiPMagain #ManmohanSinghiPMagain
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் முகுல் ராய்க்கு கொல்கத்தா ஐகோர்ட் இன்று முன்ஜாமின் வழங்கியது. #SatyajitBiswas #MukulRoy #MukulRoyAnticipatorybail
    கொல்கத்தா:
        
    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
     
    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் 9-2-2019 அன்று நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்றார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த

    டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் முகுல் ராய் மனு தாக்கல் செய்திருந்தார்.



    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மார்ச் 7-ம் தேதிவரை முகுல் ராயை கைது செய்ய தடை விதித்து முன்ஜாமின் அளிக்கப்பட்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #MukulRoyAnticipatorybail #SatyajitBiswasmurder
    மோடியின் தமிழகம் வருகையால் அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #tamilisai #modi #parliamentelection

    மதுரை:

    பாரதீய ஜனதாவின் மகளிர் அணி சார்பில் மதுரையில் இன்று இரு சக்கர வாகன யாத்திரை நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் நேர்மறை அரசியல் செய்து வருகிறோம். எதிர்வினை ஆற்றுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    அரசியல் ரீதியாக மோடியின் தமிழகம் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் பலம், வளர்ச்சி இதன்மூலம் கூடியுள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோடு வருகிறார். ரவிசங்கர் பிரசாத் நாளை மதுரை வருகிறார். தலைவர்களின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் தருகின்றது.

    தமிழகத்தில் அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். இந்த வெற்றிக்கு கூட்டணியும் அமைப்போம். தேர்தலில் நிச்சயமாக நல்ல சூழல் நிலவும். பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள், மக்களை சென்றடைந்துள்ளன. இந்த திட்டங்கள் மூலம் வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறும்.

    அனைத்து கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நாங்களும் போட்டியிட தயார்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #modi #parliamentelection

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
    லக்னோ:

    உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

    அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.



    கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித  நீராடினர். அத்துடன், கங்கை நதிக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டனர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
    ×