என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி இன்று கடலூர் வந்தார். அவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மதம், ஜாதி போன்ற வேற்றுமைகளை மையப்படுத்தி பாரதிய ஜனதா இந்த தேசத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து வருகிறது.
மகாத்மா காந்தி மதச்சார்பற்ற கொள்கையை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்திய மக்கள் துணை போக கூடாது என்பதற்காகத்தான் இந்தியா முழுவதும் மதசார்பற்ற அணிகளை ஒன்று திரட்டி கடுமையாக போராடி வருகிறோம்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற அணிகள் செயல்பட்டு வருகிறது. எங்கள் அணி கொள்கை ரீதியான அணி. தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க ஒரு அமைப்பு வேண்டும். தமிழகத்தில் உள்ள பல திட்டங்களை முன்வைத்து தான் எங்கள் மதசார்பற்ற கூட்டணி அமைந்து உள்ளது.
தமிழ்நாட்டின் அரசியலே தேர்தல் வருவதற்கு முன்பு மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கொள்கை. அதுதான் அவர்களின் நடைமுறையாகும். இதனை எல்லாம் மீறி தான் மக்கள் வாக்களிப்பார்கள். தற்போது தமிழக அரசு வழங்க கூடிய 2000 ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி தற்போது மூன்று மாநிலங்களில் தேர்தலில் வெற்றிபெற்று 48 மணி நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் கூட்டத்தில் விவசாயிகளின் கடனை ரத்து செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படாது என்று கூறுகிறார்.
அதற்கு மாற்று திட்டமாவது கூற வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பொருளாதார நிலையும், சமூக துறைகளிலும், விவசாய துறைகளிலும், தொழில் துறைகளிலும் பிரதமர் மோடிக்கு தெளிவான சிந்தனை கிடையாது. இதனால்தான் பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தற்போது பல்வேறு சலுகைகள் மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. தமிழக மக்களின் மனநிலை இந்த 2 அரசையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இருந்து வருகிறது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தினால் செலவும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #KSAlagiri
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோடு அடுத்த சித்தோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு நாளை காலை 10 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து 12 மணி அளவில் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற பூத் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த 10-ந்தேதி திருப்பூரில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இதனால் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பெரும் தலைவராக இருந்த வைகோ தற்போது சின்ன சின்ன குழுக்களின் தலைவராக இருப்பது வேதனை அளிக்கிறது. இதே வைகோதான் 5 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று ஆதரவளித்தார்.
இலங்கை பிரச்சனை இருக்கட்டும் மீனவர் பிரச்சனையையும் பிரதமர் மோடி தீர்த்து வைத்துள்ளார். அதனால் வேறு வழியில்லாமல் வைகோ கருப்பு கொடி காட்டி வருகிறார்.
கஜா புயலின்போது மத்திய அரசு உதவிக்கு வரவில்லை என்பது தவறான செய்தி. புயல் பாதித்த சமயத்தில் மத்திய அமைச்சர் அங்கு 48 மணி நேரம் முகாமிட்டு தங்கியிருந்து தேவையான உதவிகள் செய்து வந்தார்.
மேலும் ராணுவ மந்திரி அங்கு சென்று அனைத்து உதவியும் செய்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தனது முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக பலமான வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.
இவர் அவர் கூறினார். #BJP #VanathiSrinivasan #Vaiko
ஆலந்தூர்:
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை வருகிறார். நிதின் கட்காரி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.
மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொண்டர்களை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் வருகை பாராளுமன்ற தேர்தலை நாங்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவியாக இருக்கும்.
ரபேல் விவகாரத்தை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி மற்றும் காங்கிரசார் அரசியல் செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி நம்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தை அமைத்திருக்கிறது. அதனால்தான் ரபேல் தவிர எதிர்க்கட்சிகள் வேறு எந்த திட்டத்தை பற்றியும் பேச முடியவில்லை.
ரபேல் விவகாரம் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டனர். ஆனாலும் 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அப்படிப்பட்ட காங்கிரசார் இன்று பொய்யான ரபேல் விவகாரத்தை தூக்கி வைத்து பேசுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியிருந்தார். அவர் கூறியது சரியாகத்தான் இருக்கும். பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் சேரலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #RafaleDeal
பிரமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை கடுமையாக சாடி பேசினார்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா ஈரோடு அடுத்த சித்தோடுக்கு வருகிறார்.
முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அமித்ஷா பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு அடுத்த சித்தோட்டுக்கு காலை 10 மணிக்கு வருகிறார்.
கங்காபுரம் டெக்ஸ்வேலியில் ஹெலிகாப்டர் இறங்குகிறது. 10.20 மணிக்கு அங்கு நெசவாளர்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமித்ஷா பேசுகிறார்.
இதை தொடர்ந்து கொங்கு மண்டலங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு 3 மணி அளவில் கோவை செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை அரசியல் வானில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் அமித்ஷா பாரதிய ஜனதா- அ.தி.மு.க. இடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. #BJP #Amitshah
பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை இப்போதே வகுத்து செயல்பட தொடங்கிவிட்டன.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி கடந்த 27-ந்தேதி நரேந்திர மோடி தமிழகம் வந்தார். மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அவர் அடிக்கல் நாட்டி பேசினார்.
அதன்பிறகு 2-வது கட்டமாக கடந்த 10-ந்தேதி திருப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார்.
3-வது கட்டமாக வருகிற 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கான இடம் தேர்வு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியது.
இந்த மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அதே மைதானத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் அந்த மைதானத்தில் 2 விழாக்களுக்கும் தனித்தனியாக மேடை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது.
ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மைதானம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு சென்று பணிகளை துரிதப்படுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் அவர் குமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு பிரதமர் குமரி மாவட்டம் வருகை தந்தால் இங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளதால் பிரதமரின் குமரி வருகை தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #PMModi
தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி உள்ளது. #DMDK #BJP #Vijayakanth
பெங்களூரு:
பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார்.
கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-
நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் எனக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி மனிதனாக குரல் கொடுத்த எனக்கு ஆதரவு அளிப்பதோடு, மோடிக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
அந்தந்த மாநில பிரதிநிதிகள்தான் எம்.பி.யாகி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய கருத்து. இதனால்தான் நான் பெங்களூருவில் போட்டியிடுகிறேன்.
ரஜினிகாந்த் ஒருநேரம் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகிறார். இன்னொரு நேரம் அதற்கு எதிரான கருத்தை கூறுகிறார். அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Prakashraj #pmmodi #parliamentelection #rajinikanth
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.
மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?
புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.
பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்