search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94589"

    இந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தும். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் ‘ஆசனம்’ என்றால் குறிப்பிட்ட நிலையில் அசையாமல் இருப்பது என்றும் பொருள். இந்த ஆசனத்தில் வணங்கும் நிலையில் இருப்பதால் நமஸ்காராசனம் என்று பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : நேராக நிமர்ந்து நிற்கவும். பாதம் இரண்டும் சேர்ந்திருக்கட்டும். இப்போது நிதானமாக முழங்கால்களை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து மார்பின் நடுப்பகுதியில் ஒட்டியபடி கை கட்டை விரல்களை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.
    இந்நிலையில் சாதாரண மூச்சுடன் இருக்கவும். அல்லது மூச்சை வெளியே விடவும் சூரியனை நினைத்து இந்த ஆசன நிலைக்கு உரிய மந்திரத்தைக் கூறி இந்த ஆசன நிலைக்கு உரிய சக்கரத்தை மனதால் நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடலை தளர்த்துவதின் மீதும் அறைவுத் சக்கத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : கதிர்களற்ற உதயகால சூரியனை மட்டும் கண்களால் பார்த்தபடி இந்த ஆசன நிலையை செய்யலாம். கைகளின் மணிக்கட்டுகளுக்கு நேராக முழங்கைகள் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

    தடைகுறிப்பு : உதயமாகி சூரிய கதிர்கள் அதிகமாக இருக்கும்போது கண்களால் சூரியனை பார்த்தபடி செய்யக்கூடாது. இதனால் கண்கள் பாதிப்படையும்.

    பயன்கள் : இந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தவும், இனிவரும் ஆசனங்களை செய்வதற்கும் நம்மை தயார்படுத்தவும் உதவுகிற தோள்பட்டை, முழங்கைகள், மணிக்கட்டுகள், வலுவடையும், நடக்கும் போது கோணலாக உடலை வைத்துக் கொண்டு நடப்பவர்கள். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும்.
    ‘பர்வதா’ என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.
    பெயர் விளக்கம்: ‘பர்வதா’ என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.

    செய்முறை: சூரியநமஸ்காரத்தின் ஏழாம் நிலையிலிருந்து பிருஷ்டத்தை (புட்டத்தை) உயர்த்தி (படத்தில் உள்ளது போல்) மார்பையும், தலையையும் உள்நோக்கி கொண்டு வந்து தலை, மார்பு கீழ்நோக்கியபடி வைக்கவும். முழங்கால் முழங்கை மூட்டுகளை மடக்காமல் வைக்கவும். உள்ளங்கை, உள்ளங்கால்களை தரையில் பதிக்கவும். மூச்சை வெளியே விடவும்.
    மந்திரத்தைக்கூறி சக்கரத்தை மனதால் நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: உடலை தளர்வாக வைத்து கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: இந்த ஆசன நிலை ‘க்ஷி’ என்ற ஆங்கில எழுத்தின் தலைகீழ் நிலை போல் வர வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் பாதங்களை தரையில் ஊன்றி வைப்பது சிலருக்கு கடினமாக தோன்றலாம். அத்தகையவர்கள் முடிந்தவரை செய்து வந்தால் தொடர்ந்து பயிற்சியில் கால் நரம்புகளில் வளையும் தன்மை அதிகரித்து சரியான தோற்றம் வந்து விடும்.

    பயன்கள்: கை, கால் விரல்கள் மற்றும் தசைகள், மணிக்கட்டுகள், கணுக்கால் மற்றும் குதிகால் நரம்புகள், கழுத்து வலிமை பெறும்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: ‘புஜங்க்’ என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: கால்விரல்களையும், உள்ளங்கைகளையும், முழங்கால்களையும் ஆறாம் நிலையில் உள்ளபடியே வைத்துக் கொண்டு கைகளை நிமிர்த்தி மார்பை மேலே உயர்த்தவும். அதே சமயம் மூச்சை உள்ளுக்குள் இழுத்தபடி முதுகை வளைத்து தலையையும் முடிந்த அளவு பின்நோக்கி வளைக்கவும். கண்களால் புருவ நடுவை பார்க்கவும்.

    மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடி வயிறு மற்றும் தண்டுவடத்தின் மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்..

    பயிற்சிக்குறிப்பு: ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்து வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்தக் குறைபாடுகள் நீங்கிவிடும்.

    தடை குறிப்புகள்: வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள்: கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.
    பெயர் விளக்கம் : ‘அஷ்டாங்க’ என்றால் எட்டு அங்கம் என்றும் ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி  வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : ஐந்தாம் நிலையிலிருந்து முழங்கால்களை தரையில் ஊன்றி மார்பு, தாடை அல்லது நெற்றி தரையில் தொடும்படி வைக்கவும். மூச்சை வெளியே விடவும்.

    மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் :  எட்டு அங்கங்களை தரையில் தொடும்படி செய்வதன் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு :
    இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் வயிற்றை தரையில் படாதவாறு வைத்து இடுப்பை மேலே தூக்கி உடலின் எட்டு அங்கங்களையும், தரையில் தொட இயலாதவர்கள் முழு உடலையும் தரையில் படும்படி படுத்த நிலையில் வைத்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம்.

    பயன்கள் :
    கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.

    செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” நிறுவப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்தார். #TNAssembly #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நடப்பாண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய அறிவிப்புகள் வருமாறு:-

    இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகின்ற தொற்றா நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
    50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    இங்கு பட்டப் படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இங்கே இயற்கையான சூழ்நிலையில், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபங்க்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #EdappadiPalaniswami

    கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘த்வி’என்றால் இரண்டு என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இரண்டு கால் பாதங்களையும் நீட்டி வைத்திருப்பதால் இந்த ஆசனத்திற்கு ‘தவி பாத ப்ரசரணாசனம் என்று பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : நான்காம் நிலையில் உள்ளுக்குள் இழுத்த மூச்சை வெளியேவிடாமல் அடக்கி மற்றொரு காலையும் பின்நோக்கி நீட்டி வைத்திருந்த, காலோடு சேர்த்து வைத்து இரண்டு முழங்கால்களையும் மேலே தூக்கவும். கைகள் நேராக இருக்கட்டும். உடலின் பாரத்தை கைகளாலும், கால் விரல்களாலும் தாங்கிக் கொள்ளவும் மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடல் எடையை சமநிலைப்படுத்துவதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : தலையில் இருந்து குதிகால் வரை உள்ள உடல் பகுதி சற்று சாய்ந்த நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மார்பு மற்றும் பிருஷ்டத்தை மேலே உயர்த்தவோ கீழே இறக்கவோ கூடாது.

    பயன்கள் : கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை அடையும். 
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘ஏக’ என்றால் ஒன்று என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இந்த ஆசன நிலையில் ஒரு கால் பாதத்தை நீட்டி  வைத்து செய்வதால் ஏக பாத ப்ரசரணாசனம் என்று பெயர் பெற்றுள்ளது.

    செய்முறை : மூன்றாம் நிலையிலிருந்தபடியே கைகளை வளைக்காமல், வலது காலை பின் நோக்கி நீட்டி கால்விரல்களை தரையில் ஊன்றி வைக்கவும். அதே சமயம் தலையை மேலே உயர்த்தவும்.

    மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மடக்கிய இடது காலின் முழங்கால் நேராகவும், கைகளுக்கு முன் வரும்படியும் வைத்துக் கொள்ளவும். பார்வை மேல் நோக்கி இருக்கட்டும். மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி வைப்பதின் மீதும், மார்பு, கழுத்தை மேல் நோக்கி உயர்த்துவதின் மீதும், ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு : இப்பயிற்சியில் முன்னால் வைத்திருக்கும் காலின் பாதமும், உள்ளங்கைகளும் முழுமையாக தரையில் படிந்திருக்க வேண்டும். மார்பை நன்றாக உயர்த்தி தலையை முடிந்த அளவு பின்னால் வளைக்கவும்.

    பயன்கள் : தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும்.

    சர்வதேச யோகா தினமான நேற்று கர்ப்பிணிக்குரிய யோகாசனம் செய்த சானியா மிஸ்ராவுக்கு மேனகா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #SaniaMirza
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் தனது முதல் குழந்தையை பிரசவிப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச யோகா தினமான நேற்று சானியா மிஸ்ரா தான் கர்ப்பகால யோகாசனம் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

    ‘சர்வதேச யோகா தினமோ அல்லது வேறு எந்த நாளோ, இந்த யோகாசனம் தான் கர்ப்பகாலத்தில் என்னை உடல்தகுதியுடன் வைத்துள்ளது... நீங்கள் எப்படி?’ என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இதனை பார்த்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி, “அருமை சானியா, உடலை தகுதியாக வைத்துக்கொள்ள கர்ப்பகால யோகாசனம் செய்யும் உங்கள் வழி மகிழ்ச்சி அளிக்கிறது” என்று டுவிட்டரிலேயே பதில் தெரிவித்துள்ளார். #SaniaMirza
    இந்த ஆசனம் செய்து வந்தால் உடலிலுள்ள அனைத்து நரம்புகள், முதுகு, வயிறு மற்றும் கை, கால்களில் தசைகள், வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை அடையும்.
    பெயர் விளக்கம் : ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ஹஸ்த’ என்றால் உள்ளங்கைகள் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் பாதங்களின் இரண்டு பக்கத்திலும் உள்ளங்கைகளை வைத்திருப்பதால் பாத ஹஸ்தாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : சூரிய நமஸ்காரத்தின் இரண்டாம் நிலையிலிருந்து முன் வளைந்தபடி மூச்சை வெளியே விட்டு உள்ளங்கைகளை பாதங்களின் பக்கவாட்டில் தரைவிரிப்பின் மேல் வைக்கவும். முழங்கால்களை வளைக்கக் கூடாது. இப்போது தலையை வளைத்து முழங்கால்களை நெற்றியால் தொடவும்


    கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகுத் தசை முழங்கால் பகுதி மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : இந்த ஆசன நிலையில் முழங்கால்களை மடக்கக் கூடாது. ஆரம்பப் பயிற்சியில் முழுமையாக உள்ளங்கைகளை தரையில் பதிய வைத்து முழங்கால்களை நெற்றியால் தொட இயலவில்லை என்றாலும் முழங்கால்களை மடக்காமல் முன் வளைந்து முடிந்த அளவு குனிந்து செய்யவும். சூரிய நமஸ்கார இரண்டாம் மற்றும் பதினொன்றாம் நிலைகளில் பின்நோக்கி வளைவதால் இடுப்பு வலி குறையும்.

    ஆனால் மூன்று மற்றும் பத்தாம் நிலையில் முன்நோக்கி வளைவதால் இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வலியை அதிகப்படுத்தும் என்பதனால் இடுப்புவலி, இடுப்பு சந்துவாத தொந்தரவு  உள்ளவர்கள் மூன்று மற்றும் பத்தாம் நிலைகளில் முழுமையாக முன்னால் குனிந்து செய்யாமல் சிறிதளவு குனிந்து இந்த ஆசன நிலையை செய்து அடுத்த ஆசன நிலைக்கு செல்லவும். அல்லது இடுப்பு வலி குணமான பிறகு சூரிய அல்லது சந்திர நமஸ்காரத்தை செய்யவும்.

    தடைகுறிப்பு : இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம், குடல் இறக்கம் மற்றும் முதுகில் மிக அதிக அளவு தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள் : உடலிலுள்ள அனைத்து நரம்புகள், முதுகு, வயிறு மற்றும் கை, கால்களில் தசைகள், வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை அடையும். 
    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் இன்று 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. கடற்கரை சாலையில் இன்று காலை 7 மணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 500 கல்லூரி மாணவர்கள், 500 யோகா ஆர்வலர்கள் பங்கேற்ற யோகா செயல்விளக்கம் நடந்தது.

    ஈஷா யோகா மையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் மேடையிலிருந்து யோகா செயல்விளக்கம் அளிக்க அதனை மாணவர்கள் பின்பற்றி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பாலன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையாளர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலர் கந்தவேலு, சுற்றுலாத்துறை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    யோகா தினத்தையொட்டி ஆயுஷ் மருத்துவ கண்காட்சி கடற்கரை சாலை கைவினை அங்காடியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

    யோகா தினத்தை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது.

    காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு யோகா செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதை பின்பற்றி கைதிகள் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டார்.

    இதேபோல ஜிப்மர் கலையரங்கில் யோகா தேசிய கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. இந்த பயிற்சியை மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி தொடங்கி வைத்தார். கவர்னர் கிரண்பேடி, ஜிப்மர் இயக்குனர் டாக்டர் விவேகானந்தன், திட்ட இயக்குனர் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #InternationalYogaDay2018
    சென்னை:

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் அறிவியல் பூர்வ கலையாகும்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதட்டம் போன்றவற்றை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.


    தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மூலம் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன.

    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #InternationalYogaDay2018
    உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்#InternationalYogaDay2018
    ஜெய்ப்பூர்:

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



    மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையில் வழங்கப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இன்று யோகா பயிற்சியும், யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. #InternationalYogaDay2018
    ×