search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்ப்பு"

    அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.

    19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.

    இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.

    இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

    இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார். 
    தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #18MLAsCase #ThangaTamilSelvan
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்க உள்ள இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர். ஒரு சிலர் மட்டும் வரவில்லை.

    இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதமைச்சருக்கு எதிராக செயல்பட்டதால் எங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இன்றைய தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சட்டமன்றம் சென்று ஜனநாயக கடமையாற்றுவோம். அதேசமயம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்.

    எங்கள் மீதான தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இடைத்தேர்தலில் ஒரு எம்எல்ஏ தோற்றாலும் நாங்கள் 18 பேரும் ராஜினாமா செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCase #MLAsDisqualification #MadrasHighCourt #ThangaTamilSelvan
    தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். #18MLACase #Tamilisai
    கோவை:

    மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று திருப்பூரில் நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமே பரபரப்பாக எதிர்பார்ப்பது இன்று மதியம் 1 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பை தான். தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம்.

    அது அரசியலில் அணுகுண்டாக மாற போகிறதா? புஷ்வாணமாக இருக்க போகிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

    சபாநாயகர் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    கோவையில் மழை பெய்து வருகிறது. ஆறுகள், குளங்கள் நிறைந்து வரும் நிலையில் நீரை சேமிக்கும் அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய கால கட்டத்தில் செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. 1 மணி நேரத்தில் எவ்வளவு நகை பறிக்கப்படும் என்பது திருடர்களிடம் போட்டியாகவே நடத்தப்படுகிறது. எனவே பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர்.

    தற்போது போலீசார் ரோந்து படையை இறக்கி உள்ளனர். இதன் மூலம் நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை ஆகும்.



    ராகுல்காந்தி மத்திய அரசை எவ்வளவோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் இன்று மத்தியில் நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கட்சி கொடுத்து வருகிறது.

    கார்த்திக் சிதம்பரம் மீதான 4500 பக்க குற்றப்பத்திரிகையில், ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கார்த்திக் சிதம்பரத்துக்கு உதவி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

    இன்று ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் பா.ஜனதா கட்சி தலைநிமிர்ந்து நிற்கிறது. ராகுல் காந்தி நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணமாக குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLACase #Tamilisai

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #18MLAs #MadrasHighCourt
    சென்னை:

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இத்துடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.

    இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.



    இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

    பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து தற்போது அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர டி.டி.வி.தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

    தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தற்போதைய சூழ்நிலையில் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    இதுபோன்று ஒரு சூழ்நிலை வந்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கவில்லை. அவர்கள், அவ்வப்போது எதிர்மறையான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளனர். எனவே, தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் தற்போது இருந்து வருகிறது.

    அதே வேளையில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை அளித்தால் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால் அவர்களது விளக்கத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

    எனவே, இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAs #MadrasHighCourt
    அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் சஞ்சய் திரிபாதி (வயது 48). இந்தியரான இவர் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிர்வாகியாக இருந்து பின்னர் தொழில் அதிபர் ஆனவர் ஆவார்.

    இவர் அங்கு இளம்பெண்களை நாடுகிற பெரியவர்களுக்கான ‘டேட்டிங்’ இணையதளம் மூலம் 38 வயதான ஒரு பெண்ணுடன் பழகினார். தன்னை பெரும்பணக்காரர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், குறித்த நாள் அன்று அந்தப் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்தார். ஓட்டலுக்கு வந்தால் நிச்சயம் பரிசு தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அதன் பேரிலேயே அந்தப் பெண் அந்த ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தினர்.

    அதன்பின்னர் அவர்கள் இருவரும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டனர். அப்போது அவர், அந்தப் பெண்ணுடன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதுடன், மிருகவெறியுடன் தாக்கியதாகவும், அதில் அந்தப் பெண் அடையாளம் காண முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சஞ்சய் திரிபாதி மீது மேன்ஹட்டன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அந்தப் பெண் ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்து உருக்கமுடன் விவரித்தார்.

    விசாரணை முடிவில், சஞ்சய் திரிபாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.  #Tamilnews 
    பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். #Driving #Cellphone #KeralaHighCourt
    கொச்சி:

    போக்குவரத்து விதிமீறல்களால் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் செல்போனில் பேசியவாறே வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளும் அதிகம். எனவே செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.



    கேரள மாநிலத்திலும், ‘கேரள போலீஸ் சட்டம்’ 118 (இ) பிரிவின்படி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதில் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.அங்குள்ள காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அமர்வு, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.

    இதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோரை கொண்ட அமர்வு, செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல எனக்கூறி ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

    பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வராது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  #Driving #Cellphone #KeralaHighCourt
    ×