search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம்"

    விமானத்தில் வந்து சென்னை நட்சத்திர ஓட்டலில் விபசார தொழில் செய்த வெளிநாட்டு அழகிகள் 2 பேரை போலீசார் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து வந்து விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஓட்டலில் உள்ள சொகுசு அறை ஒன்றில் 2 அழகிகள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

    அவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் உக்ரைன், உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை உல்லாசம் அனுபவிக்க அழைத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக தரகர்கள் மதியழகன், பாண்டியன், ஓட்டல் ஊழியர்கள் முரளி, முகமது அசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள தரகர் ஒருவர் இதில் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் பெங்களூருவில் தங்கி இருந்துகொண்டு, வெளிநாடுகளில் இருந்து அழகிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.

    மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அழகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேரள விபசார தரகரை போலீசார் தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட வெளிநாட்டு விபசார அழகிகள் இருவரும் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். #tamilnews
    கே.கே.நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 இளம்பெண்களை மீட்டனர். விபசாரம் நடத்தி வந்த தலைவியை தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியில் விபசாரம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 24) என்பவர் கே.கே.நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஒருவர், தினேஷ்குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்ததோடு, கே.கே.நகர் பாத்திமா தெருவில் உள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருக்கிறார்கள். உல்லாசத்திற்கு வருகிறீர்களா? என்று அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் , உடனடியாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் கே.கே.நகர் பாத்திமாதெரு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாடகை வீட்டில் 2 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார் , அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபசாரம் நடத்தி வந்த ராணி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூதாட்டத்தைப் போல் விபசாரத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே யோசனை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்ட பந்தயங்களை சட்டபூர்வமாக்கலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான என்.சந்தோஷ் ஹெக்டேவிடம் நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது:-

    அது நல்ல சிபாரிசு. சட்டவிரோத சூதாட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. எனவே, அதை சட்டபூர்வமாக்கும்போது, 75 சதவீத சட்டவிரோத சூதாட்டங்கள் நின்று விடும்.

    சில தீய பழக்கங்களை சட்டத்தால் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைப்பவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதாக அர்த்தம். அப்படி கட்டுப்படுத்த நினைத்தால், அது சட்டவிரோதமாக நடப்பது பெருகும். மதுவிலக்கு விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம்.

    விபசாரத்தையும் சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால், ‘ஆம்’ என்றே சொல்வேன். விபசாரம் எல்லா இடத்திலும் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கி, அத்தொழிலில் உள்ளவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்தால், விபசாரம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாகர்கோவிலில் தனது மகள் விபசார கும்பலிடம் சிக்கியதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாயார் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் எனது மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடத்தினோம். ஆனால் எனது மகள் திடீரென திருமணம் வேண்டாம் என கூறி விட்டு எங்கள் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாள். தற்போது அவள் விபசார கும்பலின் பிடியில் சிக்கி உள்ளார். அவரை மீட்டு என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேலும் அவரது மகள் சில வாலிபர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் மனுவுடன் சேர்த்து கொடுத்திருந்தார். அந்த மனுவில் கல்லூரி மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், அந்த கும்பலிடம் தான் தனது மகள் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதனால் இந்த புகார் குறித்து விரைந்து விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி அதிரடி விசாரணையில் இறங்கினார்.

    மாணவி தங்கியிருக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவி, தாயார் அளித்த புகாரை மறுத்ததோடு, தாயார் பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

    எனது தாயாருக்கும், எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு உள்ளது. அவர்கள் சந்தோ‌ஷமாக இருக்க என்னை பகடை காயாக்க முயல்கிறார்கள். எனது தாயாரும், ஆட்டோ டிரைவரும் உல்லாசமாக இருப்பதை நானே பல தடவை நேரில் பார்த்துள்ளேன்.

    எனவே தான் திருமணம் வேண்டாம் என்று கூறினேன். அவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கவே எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். ஆனால் என் தாயாரும், அவரது கள்ளக்காதலன் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வர அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்.

    எனது தாயார் கூறும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது வேண்டுமென்றே கூறப்பட்ட பொய் புகார். நான் என் தாயாருடன் செல்லமாட்டேன்.

    நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தேன். அவருடன் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அந்த புகைப்படங்கள் என் செல்போனில் இருந்தது. அந்த படங்களைதான் என் தாயார் ஆபாச படங்கள் என்று கூறி கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவி அவரது தாயார் பற்றி இதே புகாரை தெரிவித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், மாணவியை தாயாரிடம் இருந்து பிரித்து உறவுப்பெண்ணுடன் அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் மாணவி விபசார கும்பலிடம் சிக்கி இருப்பதாக அவரது தாயார் தெரிவித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவியின் தாயார் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண் ஆகியோரிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது மாணவியுடன் வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.#tamilnews
    செங்கோட்டை அருகே பணத்துக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை தாயே விபசாரத்தில் தள்ளிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீமூலப்பேரி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகில் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சைகால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை புளியரையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த தோட்டத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அஜித் (38) என்ற நபருடன் வசித்து வந்தார். இவர்கள் அந்த தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். அந்த பெண், தனது 13 வயது மகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்க வைத்து 8-ம் வகுப்பு படிக்க வைத்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவி, ஆரியங்காவு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு தனது தாயுடன் வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் மகளை திடீரென்று காணவில்லை என்றும், தன்னுடன் வசித்து வந்த அஜித் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக அந்த பெண் புளியரை, தென்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக தென்மலை போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் புகார் கொடுத்த மறுநாளே அஜித், அந்த மாணவியுடன் புளியரையில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து மாணவியின் தாய், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதற்காக தென்மலை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், தனது மகளும், அஜித்தும் திரும்ப வந்து விட்டதாகவும், புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். அந்த பெண்ணின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியின் தாய்க்கும், அங்கு வேலை செய்த அஜித்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. உடனே இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அப்போது அந்த பெண், தனது மகளையும் அழைத்துக்கொண்டு அஜித்துடன் வந்து விட்டார்.

    அதன்பிறகு புளியரை பகுதியில் உள்ள தோட்டத்தில் இருவரும் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு வேலைக்கு சேர்ந்த‌னர். தங்களது கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பாள் என்று கருதி மகளை திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுதியில் தங்க வைத்துள்ளார் அந்த பெண். இதற்கிடையே பணத்துக்கு ஆசைப்பட்டு விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி தோட்டத்து வீட்டில் வைத்து பலருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவர்களது கட்டாயத்தின் பேரில் மாணவி விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விடுதிகளிலும், வீடுகளிலும் தங்க வைத்தும் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்கு மாணவியின் சித்தப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியின் சித்தப்பாவே மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    தனது மகளை, தனக்கு தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடுத்த மாணவியின் சித்தப்பா முடிவு செய்தது தனக்கு பிடிக்காததால் போலீசில் புகார் செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் தாயையும், அதற்கு உடந்தையாக இருந்த சஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலன் அஜித் மாணவியின் சித்தப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புளியரை பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
    கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் ஆயுர்வேத வெல் சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் இந்த மசாஜ் சென்டர் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த நவீன் (30) இதனை நடத்தி வந்தார். இங்கு ஊழியர்களாக கோட்டயத்தை சேர்ந்த சம்பத், திருச்சூர் ஜினேஷ், எர்ணாகுளம் ‌ஷனு ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் இங்கு விபசாரம் நடப்பதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசுக்கு புகார் வந்தது.

    இதை தொடர்ந்து டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் நவீன், ஊழியர்கள் சம்பத், ஜினேஷ், ‌ஷனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மற்றும் பெங்களூரை சேர்ந்த 2 இளம்பெண்கள் அங்கு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவை சங்கனூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×