search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
    • இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    கடந்த 22-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில். தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.

    • வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
    • கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார். 

    • தி.மு.க. அரசாங்கம் வந்தாலே மின்தடை வந்துவிடும்
    • அ.தி.மு.க.வில் என்னை போல் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள்.

    தஞ்சாவூர் :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 24 மணிநேரம் மும்முனை மின்சாரத்தை நான் வழங்கினேன். எந்த நேரத்தில் சென்றாலும் பம்ப்செட்டை இயக்கலாம்.

    ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் நேர கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது. காலை முதல் மாலை வரை 5 மணிநேரம் மும்முனை மின்சாரம், இரவில் மும்முனை மின்சாரம் கொடுக்கிறார்கள். ஆனால் மின்தட்டுப்பாடு இல்லை என்று சொல்கிறார்கள். மின்தட்டுப்பாடு இல்லை என்றால் எதற்காக நேர கட்டுப்பாடு கொண்டு வருகிறீர்கள்.

    தி.மு.க. அரசாங்கம் வந்தாலே மின்தடை வந்துவிடும். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இரவில் 12 மணிக்கு போய் மின்மோட்டாரை இயக்கி நீர் பாய்ச்ச முடியும். இது கொடுமையான விஷயம்.

    இது ஆட்சியாளர்களுக்கு தெரியுமோ, தெரியாதோ என்று தெரியவில்லை. தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு வரும். இப்போது மின்வெட்டு வந்துவிட்டது. அ.தி.மு.க. எப்போதும் விவசாயிகளுக்காக பாடுபடுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலும் சரி எப்போதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கும் உற்ற துணையாக இருக்கக்கூடியது அ.தி.மு.க. தான்.

    நெற்பயிர் சிறப்பாக விளைச்சல் கொடுக்க வேண்டும். விளைச்சல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட காலத்தில் களை எடுப்பார்கள். அப்படி அ.தி.மு.க.வில் களை எடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அ.தி.மு.க. என்ற பயிர் செழித்து வளர்ந்து விளைச்சலை கொடுக்கும். அது எப்படி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சிலர் அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். சொந்த நலனுக்காக இருக்கிறார்கள். ஆனால் இங்கே கூடி இருக்கிற அத்தனை பேரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் இருக்கின்றனர். இங்கே தனிமனித ஆதிக்கம் கிடையாது.

    இப்போதும் நான் தொண்டன் என்றுதான் என்னை சொல்கிறேன். தலைவன் என்ற வார்த்தையை எப்போதும் சொன்னது கிடையாது. தொண்டனோடு தொண்டனாக இருந்துதான் உங்களது ஆதரவோடு இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

    அ.தி.மு.க.வில் என்னை போல் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். எவனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி இல்லை என்றால் எவனாது வளர்ந்து வந்து இந்த கட்சியை ஆளுவான். அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை எவராலும் தொட்டு பார்க்க முடியாது. எவராலும் உரிமை கொண்டாட முடியாது.

    இது தொண்டனால் ஆளக்கூடிய கட்சி. தொண்டனுக்கு தான் முக்கியத்தும் உண்டு. தொண்டன் தான் இந்த கட்சிக்காக உழைக்கின்றான். தொண்டனின் உழைப்பில் தான் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.
    • படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம்.

    மதுரை:

    மத்திய மந்திரி எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்ககளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு மாத காலமாக கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் காசிக்கும், ராமேசுவரத்துக்கு உள்ள தொடர்பு, காசிக்கும் சிவகாசிக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் தென்காசிக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் காசியுடன் தொடர்புடையவை.

    தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர்களின் உடைகளான பட்டு ஆடைகள், தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எடுத்து கூறுகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நம்முடைய சவுராஷ்டிரா தமிழ் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு குஜராத்தில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. சவுராஷ்டிரா மக்கள் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் பல பகுதிகளில் வசிக்கின்றனர்.

    இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் அப்போது தலையிட்டு நமது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறார்.

    படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம். மேலும் உள்ள விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக படகுகளை விடுவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டம் இருக்கிறது. சேதமடைந்த படகுகளுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ராகுல் காந்தி பிரச்சினையை பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி இல்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    பா.ஜனதா-அ.தி.மு.க.வில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களே, எம்.எல்.ஏ.ரவியை மிரட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
    • மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே நேற்று மோதல் வெடித்தது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தொடர்பாக சட்டசபையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் ஆதரிப்பதாக கூறியதை தொடர்ந்தே இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

    ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியனுக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கும் இடையே நேருக்கு நேர் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது கைகளை காட்டி காட்டி பேசி இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலானது.

    ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியனும் அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரவிக்கும் இடையே நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்றைய சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்னர் எம்.எல்.ஏ.ரவி, திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது அவரது செல்போனில் பேசிய சிலர் மிரட்டும் தொனியில் கொலை மிரட்டல் விடுத்தனர். சட்டசபையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களே, எம்.எல்.ஏ.ரவியை மிரட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதையடுத்து ரவி எம்.எல்.ஏ. திருவல்லிக்கேணி போலீசில் கொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தார். அதில் எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் வந்துள்ளது என்பது பற்றிய தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பாக உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது.
    • துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.மூர்த்தியின் மகள் பூஜாவுக்கும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகள் கார்த்திக்குக்கும் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. ஒரு சில சுயநலவாதிகளால் தமிழகம் பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால் தான், தீய சக்தியான தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    அம்மாவினுடைய கட்சி, அம்மாவின் தொண்டர்கள் பலர் தவறான பதவி வெறியால், நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அம்மாவினுடைய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும். துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். துரோகிகள் தான் என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    குறிப்பிட்ட சில நபர்களை வைத்து வைத்துக்கொண்டு கட்சியை விட்டு யாரையும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் சேர்ந்து கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் காலத்தில் விதி இருந்தது. அந்த விதியை பழனிசாமி மாற்றி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை மாற்றி 20 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் என்று தலைவரின் விதியையே மாற்றி அமைத்துவிட்டார்கள்.

    துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு தருவார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலை இருந்தும் தி.மு.க.விற்கு 20 மாதங்களில் 5 ஆண்டுகளில் வரவேண்டிய கெட்ட பெயர் இருந்தும், ஏதோ 20,000 ஓட்டில் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நினைத்தோம்.

    ஆனால் 67,000 வாக்கு வித்யாசத்தில் ஜெயிப்பது என்பது எதிர்க்கட்சியாக போட்டியிட்ட அ.தி.மு.க. எங்கள் கோட்டை என்கிற இடத்தை கோட்டை விட்டுவிட்டது. செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று சொன்னார் என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம்.
    • மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சசிகலா நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தார். அப்போது நாகை மாவட்ட ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த தீர்மானம், எது வந்தாலும் அதை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது.

    நான் இவ்வாறு கூறுவதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. அதே வேளையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க.விற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது. அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அ.தி.மு.க.வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும்.

    அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.
    • ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும், திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என ஈபிஎஸ் வழக்கறிஞர் வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் இன்று மாலையில் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
    • ஓபிஎஸ் தரப்பு மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும்

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது: முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.

    தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், அவர்கள் மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரை எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

    திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறை கூற முடியாது. கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது.

    இவ்வாறு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    • அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது.
    • 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனுதாக்கல் செய்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி பெயரில் 224 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 19-ந்தேதி நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை வருகிற 24-ந்தேதி வரை அறிவிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் இந்த வழக்கும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் 22-ந்தேதி (இன்று) விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் இன்று ஐகோர்ட்டில் நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை நீதிபதி குமரேஷ்பாபு நிராகரித்தார். அவரை முறைப்படி மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    பின்னர் இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் தொடங்கியது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதாடுகையில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது. 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமற்றது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என எடுத்துள்ள முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் உள்ளிட்டவை விதிக்கப்பட்டன. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்து விட்டு அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தி உள்ளனர்.

    அ.தி.மு.க. கட்சி விதிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு திருத்த முடியாது.

    ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஜூன் 23-ந்தேதி பொது குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தது தவறு. ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அழைப்பு விடுத்தனர்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால்தான் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்குகள் தொடரப்பட்டன. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

    இது தொடர்பான முடிவை விசாரணை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எந்த கோர்ட்டும் அறிவிக்கவில்லை. எனவே ஜூன் 11-ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் ஜூன் 23-ந்தேதி பொதுக்குழுவில் முன் வைக்கப்படாத நிலையில் அப்பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்? இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டும் கூறவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள் தான். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர். அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர் போட்டியிட முடியாது என்பதும், கட்சியில் 10 ஆண்டுகளும், தலைமை கழக நிர்வாகிகளாக 5 ஆண்டுகளும் இருப்பவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதும் புதுமையான விதி.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடியும் என அறிவித்துள்ளதன் மூலம் 20 மாவட்ட செயலாளர்களை எப்படி சந்தித்து முன்மொழியவும், வழி மொழியவும் கோர முடியும்.

    ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து சிறப்பு தீர்மானத்தை யார் கொண்டு வந்தது என்று கூறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கவில்லை. இந்த தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என அஜண்டா எதுவும் இல்லை.

    தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீசு தரவில்லை. முன் கூட்டியே அறிவிக்கவில்லை. பொதுக்குழுவுக்கு இது போல ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. 3-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வந்தாலும் முதலில் விளக்கம் கேட்க வேண்டும்.

    தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்ததாக ஒரு காரணத்தை எளிதாக கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நீக்கியது முழுமையாக தன்னிச்சையானது. பொதுக்குழுவுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது.

    ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுத்த முறை கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு விரோதமானது.

    அரசியல் என்பது ஜனநாயகம் தொடர்புடையது. உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூற முடியாது. கட்சி ஒன்றும் கிளப் அல்லது சங்கம் இல்லை. இது ஜனநாயக கொள்கை தொடர்பானது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் ஏதேச்சை அதிகாரமானது.

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். பொதுக்குழுவின் அதிகாரம் கட்சியின் விதிகளின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒற்றை தலைமையை மக்கள் விரும்புகின்றனர், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எம்.ஜி.ஆரின் விருப்பம் தொண்டர்களின் முடிவின்படி செயல்பட வேண்டும் என்பதுதான். பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமை பதவியை ஒழிக்க முடியாது.

    6.12.21 அன்று முதல் 5 ஆண்டு பதவி காலம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் இருக்கும் போது அதற்கு இணையாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி உள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து விட்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் செல்வாக்கு உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

    அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கையும் வாபஸ் பெற தயார்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    தொடர்ந்து வக்கீல்கள் வாதம் நடந்தது.

    • சமீபத்தில் பா.ஜனதாவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது பதவி வழங்குவதில் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
    • அதிருப்தியில் இருந்தவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்றவர்களாக இருந்தாலும் சரி, மற்ற கட்சிகளுக்கு சென்றவர்களாக இருந்தாலும் சரி. அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க முயற்சிக்கும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பா.ஜனதா நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தது இரு கட்சிகளுக்குள்ளும் உரசலை ஏற்படுத்தி இருக்கிறது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. தலைமைக்கு இணையாக தன்னை முன்னிலைப்படுத்துவதை அ.தி.மு.க. விரும்பவில்லை. அண்ணாமலை தமிழக பா.ஜனதாவுக்குத்தான் தலைவர். டெல்லி தலைமைக்கு அல்ல என்று ஏற்கனவே விமர்சித்து இருந்தது.

    இந்த நிலையில் தான் பா.ஜனதா தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று பா.ஜனதாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த செங்கல்பட்டு மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் கங்கா தேவி ஏற்கனவே அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்தவர்.

    அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததும் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜனதாவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது பதவி வழங்குவதில் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தியில் இருந்தவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பா.ஜனதா மாநில தலைவராக மத்திய மந்திரி எல்.முருகன் பொறுப்பேற்ற காலகட்டத்தில் இருந்தே மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருந்தவர்களை பா.ஜனதாவுக்கு இழுக்கும் முயற்சிகள் தொடங்கியது.

    இதனால் பா.ஜனதாவுக்கு பல புதுமுகங்கள் வந்தது. இந்த இணைப்புகளின்போது கட்சி பதவி உள்பட பல உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது போல் அனைவரையும் திருப்தி படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதும் இந்த விலகல்களுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    அந்த வரிசையில் தான் ஆயிரம் விளக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க. செல்வம் பா.ஜனதாவில் இணைந்து போன வேகத்திலேயே திரும்பி வந்து மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

    இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களிடம் கேட்ட போது, 'மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜனதா மாறுபட்டது. இதன் சித்தாந்தம், கொள்கைகள், செயல்பாடுகள் மாறுபட்டது.

    எனவே புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது முக்கியம். எந்த பொறுப்பும் இல்லாமல், பல ஆண்டுகளாக கட்சியில் பலர் இருப்பதற்கு அதுவே காரணம்' என்றனர்.

    • கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.
    • பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்குடன் சேர்த்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன.

    வழக்கு தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார்.

    கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்துள்ளார்.

    ×