search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
    • கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    கம்பம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார். தொண்டர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன் தனது போடி தொகுதிக்குட்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

    இந்நிலையில் கம்பத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது உறவினர் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

    இதனைதொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது.
    • அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.

    சென்னை :

    அதிமுக 4ஆக உடைந்திருக்கு. தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய கட்சி நாங்க தான் என புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * அதிமுகவால் தான் பாமகவிற்கு சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் இடம் கிடைத்தது.

    * பாமகவுக்கு அடையாளம் குடுத்ததே நாங்கதான்; நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால?

    * பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது.

    * அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.

    * சிறுமையான கருத்தை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையில் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம்.

    * சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார். 

    கரூர்:

    கரூர் மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சம பலத்துடன் இருந்தன.

    மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைத்தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்தது.

    இந்த பதவிக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் 6 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் திருவிகாவும், தி.மு.க. சார்பில் தேன்மொழியும் போட்டியிட திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் 9-வது வார்டு கவுன்சிலர் திருவிகா சென்ற கார் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி, கவுன்சிலரை கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்த பின் அவர் விடுவிக்கப்பட்டார். தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா கூறினார்.

    இதற்கு மறுநாள் (20-ந்தேதி) கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சிவராஜ் (45) என்பவரை கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்றது. பின்னர் அவர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தி.மு.க.,வினரின் அராஜக செயல்களை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். 

    அதன்படி இன்று கண்டன பொதுக்கூட்டம் கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார். 

    இதில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, சின்னசாமி, கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் திரளானோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று அனுப்பி உள்ளார்.
    • இப்போது அனுப்பப்பட்ட கடிதமும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

    இதுதொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி அம்மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க இந்திய ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் அனுப்பினார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு அவர் கடிதம் அனுப்பினார். அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அ.தி.மு.க.வில் அப்படி ஒரு பதவியே இல்லை என்று கூறி அந்த கடிதத்தை ஏற்க அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அத்துடன் அந்த கடிதத்தை தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் கமிஷனருக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அ.தி.மு.க. முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்றார்.

    இந்த நிலையில் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று அனுப்பி உள்ளார். இப்போது அனுப்பப்பட்ட கடிதமும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது.

    ஆவணங்களின் அடிப்படையிலேயே அ.தி.மு.க. தலைமை கழக முகவரியிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது.
    • சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுகளில் ஒரு முறை ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், இன்னொரு முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வெளியான நிலையில் தான் ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) மீண்டும் நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த விசாரணை அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அவரது கையெழுத்திட்ட வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது.

    இதேபோன்று மத்திய அரசு சார்பிலும் 2 முறை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அங்கீகாரமாகவே எடப்பாடி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் 4-ந்தேதி நடைபெற உள்ள விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்பதால் யாருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்? யாருடைய கை ஓங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இருவருமே சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள்.

    இருப்பினும் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்பதே இப்போது எழுந்துள்ள மிகபெரிய கேள்வியாக உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம்.
    • ‘மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் 'மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எந்திரம் தொடர்பாக அதன் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்கும் வகையில் ஆலோசனை கூட்டம் ஒன்றை வருகிற 16-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ''ஆவணங்கள் படி தமிழக தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அப்படி திருப்பி அனுப்பினால் அவர்கள்(எடப்பாடி பழனிசாமி) அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம். அ.தி.மு.க.வில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வசதியாக மார்க்-3 என்கிற மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டம் ஜனவரி 16-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகம் ஏற்க மறுத்துள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் அதனை வாங்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.

    • ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கடிதம் அனுப்பி வருகிறார்.

    சென்னை:

    உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் மார்க் 3 எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷனுக்காக ஒரு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி உள்ளது.

    இதற்கு 'ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கடிதம் அனுப்பி வருகிறார்.

    இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு சத்யபிரத சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அ.தி.மு.க. இரட்டை தலைமையை குறிப்பிடும் வகையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வரவு செலவு கணக்கு இந்திய தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்தது.

    அதே போல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துக்களை கேட்கும் வகையில் தேசிய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இரட்டை தலைமையை குறிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
    • வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாளான வருகிற 3-ந்தேதி அவரது திருஉருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாளான வருகிற 3-ந்தேதி காலை 10.30 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருஉருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் சி.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்டி-சேலை நெய்யும் பணி தி.மு.க. ஆட்சியில் முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளைச் சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
    • வரும் தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தைப் பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு இந்த தி.மு.க. அரசு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்தது.

    இன்றைய முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவுபடுத்தி, 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு, பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசும், ஒரு முழு செங்கரும்பும் வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    மேலும், தைப் பொங்கலையொட்டி, தமிழக மக்களுக்கு செங்கரும்பு வழங்காமல் கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து, கழக விவசாயப் பிரிவின் சார்பில் 2-ந்தேதி திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன்.

    கரும்பு விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு கழகம் வடிகால் அமைப்பதை உணர்ந்த இந்த அரசு, கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், இன்றைய முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை வைத்த பொங்கல் பரிசுத் தொகையான ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க. ஆட்சியில், கடந்த தைப் பொங்கல் திருநாளுக்கு, கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

    ஒரு கரும்புக்கு சுமார் 32 முதல் 40 ரூபாய் வரை அரசு விலை நிர்ணயம் செய்து இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கியும், விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது 12 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே. இதையும் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    எனவே, வருகின்ற தைப் பொங்கலுக்கு இடைத்தரகர்களிடம் இருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும், கமிஷனுக்காக கரும்பை வாங்காமல், நேரடியாக செங்கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக, கரும்பு பிரச்சினை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்சனை பூதாகரமாக வடிவெடுத்து உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

    2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலை நெய்யும் பணி இந்த ஆட்சியில் முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளைச் சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.

    ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம்தான் வழங்கப்பட்டு உள்ளதாவும், ஆகஸ்டு மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.

    மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும் போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர். இதனால், 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    இதன் காரணமாக, வரும் தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

    2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

    இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில், 'பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, அரசியல் அமைப்பின் ஜனநாயக அடிப்படை கட்டமைப்பையோ அல்லது நாட்டின் கூட்டாட்சி அரசியலையோ எந்த வகையிலும் கெடுக்குமா?

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் அந்த வரைவு அறிக்கை அரசியல் அமைப்பு திட்டங்களை மீறுவதாக உள்ளதா? ஆம் என்றால், எந்த அளவுக்கு? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

    இதுதொடர்பான கருத்துகளை ஜனவரி 16-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அ.தி. மு.க. என்று கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதுதொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த சூழ்நிலையில், சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மத்திய அரசிடம் பேசி பசுமைவழி சாலை பெற்றோம். அதிக இழப்பீடு தொகை அறிவித்தோம்.
    • மத்திய அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது மதிப்பை குறைத்து தந்தனர். இன்று மக்கள் நலனை பற்றி உணராத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    2023-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கு இதுவே சான்று.

    அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. அ.தி.மு.க.வின் 10 ஆண்டு பொற்கால ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் என்னென்ன திட்டங்கள் தந்தோம் என்று எண்ணி பார்க்கவேண்டும்.

    சேலம் மாவட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி தந்தோம். மாவட்டத்தை பற்றி முழுமையாக அறிந்தவன் என்பதால் பல திட்டங்கள் மூலம் தமிழகத்திலேயே முதன்மையான மாவட்டமாக மாற்றினோம்.

    போக்குவரத்து நெரிசல் இல்லாத, குடிநீர் தட்டுபாடு இல்லாத மாவட்டம் சேலம் மாவட்டம். சட்டக்கல்லூரி நாம் கொண்டுவந்து அடிக்கல் நாட்டினோம். அதனை தி.மு.க.வினர் திறந்து வைக்கின்றனர்.

    8 வழிச்சாலை அமைக்கக்கூடாது என வேண்டும் என்றே விவசாயிகளை தி.மு.க. தூண்டி விட்டது. மொத்தம் 8 சதவீத விவசாயிகள் தான் எங்களது நிலம் பாதிக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    92 சதவீதம் பேர் நிலம் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், திருவண்ணாமலை, திருவள்ளுவர், காஞ்சிபுரத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் ரூ.50 லட்சம் கேட்டார்கள். மார்க்கெட் மதிப்பு ரூ.90 லட்சம். ஆனால் அரசு 4 மடங்கு உயர்த்தி ரூ.2 கோடி கொடுத்தார்கள். இதனால் அங்கு சாலைக்கு நிலம் கொடுக்கின்ற விவசாயிகள் ஒன்று கூடி பாராட்டு விழா நடத்தினார்கள்.

    எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு திட்டத்தை கொண்டு வருகின்றபோது வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. எதிர்ப்பது, அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் நல்ல திட்டம் என கூறி அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. இதனால் மக்கள் தான் பாதிக்கிறார்கள். இது தான் தி.மு.க. ஆட்சி. இதுதான் திராவிட மாடல்.

    நம்முடைய இரும்பாலை அருகில் ராணுவத்துக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என குரல் கொடுத்தேன்.

    இன்றைக்கு ஸ்டாலின், மத்திய அரசிடம் இருந்து நிறைய திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்கிறோம் என பேசுகிறார்.

    ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகி விட்டது. ஜனவரி 7-ந்தேதியுடன் 20 மாத ஆட்சி முடிவடைகிறது. 3-ல் ஒரு பாக ஆட்சி முடித்து விட்டார்கள். இந்த 20 மாத கால ஆட்சியில் என்ன செய்தீர்கள்.

    எம்.பி.க்கள் கொண்டு வந்த திட்டம் என்ன?

    தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 38 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த திட்டம் என்ன?

    ஆனால், நான் ராணுவ தொழிற்சாலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என திட்டத்தை கொண்டு வந்தேன். அப்போது பிரமரிடம் சொல்லி இந்த திட்டத்தை கொண்டு வந்தோம். அதுபோல் சேலத்தில் பஸ்போர்ட் திட்டத்தை கொண்டு வந்தேன். அந்த திட்டமும் முடக்கி வைத்துள்ளார்கள். அம்மா மினி கிளினிக் மூடப்பட்டு விட்டது.

    மத்திய அரசிடம் பேசி பசுமைவழி சாலை பெற்றோம். அதிக இழப்பீடு தொகை அறிவித்தோம். மத்திய அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது மதிப்பை குறைத்து தந்தனர். இன்று மக்கள் நலனை பற்றி உணராத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. பொம்மை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    அவர்களுக்கு குடும்பம்தான் முக்கியம். தனது மகன் உதயநிதிக்கு முடிசூட்டு விழா நடத்தியுள்ளார். எனவே இதை மக்கள் உணரவேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×