search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.
    • சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர்.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் களஞ்சேரி பகுதியில் பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கோழி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.

    இதில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உடனடியாக மின்தடை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் நாளை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
    • பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    கடலூர்:

    பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதனால்பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார். 

    • பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பல்லடம் :

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி
    • காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    வெள்ளமடம்-இறச்சகுளம் பகுதிகளில் நாளை மின்தடை

    நாகர்கோவில்:

    தோவாளை மின் விநியோகப்பிரிவிற்குட் பட்ட வெள்ளமடம் உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கி ளைகளை அகற்றும் பணி நாளை (16-ந் தேதி) நடை பெற உள்ளது. இதேபோல் இறச்சகுளம் பீடரிலும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.

    எனவே நாளை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பீமநகரி, மகாத்மா நகர், திருப்பதிசாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இறச்சகுளம், சன் காலேஜ் ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல தோவாளை உயர் மின் அழுத்தப் பாதையில் 17-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை எல்.எச்.எல். நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், விசுவாசபுரம், திருமலைபுரம், குமரன் புதூர், கிறிஸ்து நகர், ஈஸ்வர் காலனி, மணியா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 18-ந் தேதி நாகர்கோவில் உப மின்நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வல்லன் குமாரன்விளை, தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், நாகர்கோவில், பெருவிளை, சுங்கான் கடை, கிருஷ்ணன் கோவில்,எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

    மின் கம்பங்களில் உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

    திருப்பூர்:

    ஆடை உற்பத்தி, கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறி, கட்டுமானம், எண்ணெய் ஆலை, கொப்பரை, அரிசி ஆலை என பல்வேறு தொழில்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் மின் தேவை என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தடையற்ற மின் சப்ளை என்பது, அவசியமாகிறது.இருப்பினும் பல இடங்களில், சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள தெருவிளக்கு மற்றும் மின் வினியோக பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் வயர்கள் மற்றும் மின் கம்பிகள் என சில பிரச்சினைகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த குடியிருப்பு பகுதிகள் உள்ள, நகர கிராமப்புறங்களில் இத்தகைய பிரச்சினைகள் மீது மின்வாரியத்தினர் கவனம் செலுத்தினாலும், ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலங்கள், அங்குள்ள மின் கம்பங்களில் உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

    இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர், அவிநாசி என இரு கோட்டங்கள் உள்ளன. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின் சார்ந்த புகார்களை தெரிவிக்க 94987 94987 என்ற எண் வழங்கப்பட்டு, மின்னகம் என்ற பெயரில் 24 மணி நேரம் அந்த எண் செயல்பாட்டில் இருக்கும்.அந்த எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் கூறும் புகார்கள், 'வாய்ஸ் ரெக்கார்டு' முறையில் தானாகவே பதிவாகி விடும். குறையை சரி செய்ய அப்பகுதி சார்ந்த மின் ஊழியருக்கு அறிவுறுத்தப்படும். அந்த குறை சரி செய்த பின் சம்மந்தப்பட்ட புகார்தாரரை அழைத்து, அந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு விட்டதா என உறுதி செய்யப்பட்ட பின்னரே அந்த புகார் முடிவுற்றதாக கருதப்படும்.

    அதேபோல் 94421-11912 என்ற வாட்ஸ் ஆப்எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் குறைபாடு தொடர்பாக போட்டோவுடன் அந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பினால் அவை சரி செய்யப்படும். கடந்த இரு நாளில் மட்டும் 110க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்துள்ளன.இதன் மூலம், ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலங்கள், அங்குள்ள மின்கம்பங்களில் உள்ள பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • இந்த தகவலை மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பெரியார் பீடர் மற்றும் அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (14-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, ரெயில்வே சந்திப்பு பகுதி, டவுன்ஹால்ரோடு, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, காக்கா தோப்பு, தாய்நகர், மாருதி நகர், கங்கா நகர், சோனையாநகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்தை வரை, கண்மாய்க்கரை, ராஜமான் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று மதுரை அரசரடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கூடல் பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காளவாசல் பைபாஸ், குருதியேட்டர், மூக்கையா தெரு, காளியம்மன் கோவில் தெரு, சின்னச்சாமி தெரு, செங்கோல் நகர், மேட்டுத்தெரு, நாகு நகர், பெத்தானியாபுரம், ெகான்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில், டவர்லைன் தெரு, களத்துப்பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்வி நகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அன்பு வீதி, கண்மாய்க்கரை ஆகிய பகுதிகளில் நாளை (14-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வினியோகம் இல்லை

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட கிராமப்புற மக்களின் நலன் கருதி அழகிய பாண்டியபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். குறைந்த மின் அழுத்தம் காரணமாக குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது .

    மேலும் அருமநல்லூர் பகுதியில் மின் குறைபாடு காரணமாக அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும், துன்பத்தையும் அளித்து வருகிறது.

    ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், இன்று அந்த பொலிவை இழந்து காணப்படுகிறது. மின் அழுத்த குறை பாடு காரணமாக இப்பகுதி களில் தண்ணீர் வினியோகம் நடைபெறாத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பிரச்சி னையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக தலையிட்டு குடிதண்ணீர் வினியோகம் நடைபெறாத அனைத்து பகுதிகளிலும், குடிதண்ணீர் வினியோகம் சீராக நடைபெற தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .

    இதற்கு காரணமாக இருக்கும் மின் அழுத்த குறைபாட்டை சரிசெய்ய சம்மந்தப்பட்ட மின்துறை அலுவலர்களிடம் பேசி இதனை சரிசெய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் குடி தண்ணீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை என்ற புகார் பொது மக்களிடமிருந்து வராத வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்

    • பராமரிப்பு பணி காரணமாக மாதந்தோறும் ஒரு நாள் மின்தடை அமலில் உள்ளது
    • திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் புறநகர் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை

    திண்டுக்கல், ஜூன்.12-

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, வாழைக்காய்பட்டி, ரெட்டியபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி.காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி,

    நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்தார்.

    • செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • க்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தாராபுரம்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை 10-ந் தேதி நடக்கிறது. எனவேநாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
    • திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்–பூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட், அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

     இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
    • காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    திருப்பூர்:

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    யானைக்கல் மற்றும் அனுப்பானடி பீடர்களில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகரம் மெயின் 1-வது, 2-வது தெருக்கள், ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர்திடல் சந்தை, புது ராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு, மேட்டுத்தெரு, அடைக்கலம் காலனி, ஞானவேல் காலனி, மீனாட்சி நகர், மாணிக்கம் நகர், லட்சுமி தெரு, மாரியம்மன் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். 

    ×