search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் வங்காளதேச அணிக்கு எதிராக கடைசியாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றுள்ளார். #DineshKarthik

    தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனாக இருக்கும் இவர் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கடந்த 2004-ம் ஆண்டு மும்மையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 19 வயதில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார்.

    அதன்பின்னர், தோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும் அவரது சிறப்பான செயல்பாட்டால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக தோனி இருக்கும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பவில்லை.

    கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான போட்டி தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி டெஸ்ட்  ஆகும். அதன் பின்னர், இம்மாதம் 14-ம் தேதி பெங்களூரில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாட உள்ளார். முதலில் விருத்திமான் சாஹா தேர்வாகியிருந்தார்.

    காயம் காரணமாக அவர் விலகவே தினேஷ் கார்த்திக்கு அந்த வாய்ப்பு வந்துள்ளது. மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில், 16 போட்டிகள் விக்கெட் கீப்பராகவும், மீதமுள்ள போட்டிகளில் பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார்.

    23 டெஸ்ட்டில் ஆயிரம் ரன்களை எடுத்துள்ள அவர் ஒரு சதம் மற்றும் 7 அரைச்சதம் எடுத்துள்ளார். 51 கேட்ச் மற்றும் 5 ஸ்டெம்பிட் எடுத்துள்ளார். 2004-ம் ஆண்டில் தினேஷ் கார்த்திக் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான அதே சமயத்தில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 117 போட்டிகளிலும், இலங்கையின் ஹெராத் 89 போட்டிகளிலும், ஸ்டெய்ன் 86 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 

    கடந்த இரண்டாண்டுகளில் நடந்த 17 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 3 சதங்களுடன், 8 அரைச்சதங்கள் எடுத்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 
    சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், வங்காள தேசத்திற்கு எதிரான டி20 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். #RashidKhan

    கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 2017 சீசனில் அவருக்கு பெரிதாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. நடந்து முடிந்த சீசனில் அனைவரும் வியந்து பாராட்டும் வண்ணம் அவரது ஆட்டம் இருந்தது.

    சுழற்பந்து வீச்சாளரான அவர் 17 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்டுகளை அள்ளினார். ரன்கள் குறைவாக கொடுப்பது டி20 போட்டிகளில் முக்கியம் என்பதால், அவர் இந்த விஷயத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். 19 வயதான அவருக்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக பல ஜாம்பவான்கள் வாழ்த்தியுள்ளனர்.

    இந்நிலையில், நேற்று டேராடூனில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டியிலும் ரஷித்கான் தனது வித்தையை காண்பித்தார். 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமானது.

    போட்டி நிலவரம்:-

    டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். கனி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷசாத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நஜிபுல்லா சத்ரான் 2 ரன்னிலும், மொகமது நபி டக் அவுட்டும் ஆகினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

    அதன்பின் ஸ்டானிக்சாய் உடன் சமியுல்லா ஷென்வாரி ஜோடி சேர்ந்தார். ஷென்வாரி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபிகுல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டானிக்சாய் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் அபுல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். தமிம் முஜீப் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதன்பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 20 ரன்னிலும், மஹ்மதுல்லா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷபூர் சத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். #INDvAFG #DineshKarthick
    மும்பை:

    வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்று வரும் சகா, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சகா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
    ஆப்கானிஸ்தான், கந்தஹார் பகுதியில் இந்தியாவுக்கு சமையல் எரிவாயு கொண்டுவரும் குழாய் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். #AfghanTalibanAttack
    காபுல்:

    துருக்மேனிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வருவதற்காக, சுமார் 1800 கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கண்ட நாடுகளின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டப்பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பாதையை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பகுதியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் 5 தொழிலாளர்களை துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர்.

    ஒரு தொழிலாளியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    ×