search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94747"

    சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.04-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.

    இதற்கிடையே, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 

    இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.



    சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.04-க்கும், டீசல் ரூ.77.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும்  (திங்கட்கிழமை) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 22 காசுகள் உயர்ந்து, 85.26 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPriceHike #PetrolDieselPriceHike

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கண் துடைப்பு நாடகம் என்று என்.ஆர்.தனபாலன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Petrol #Diesel

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 90 ரூபாயை எட்டிய நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசக்கு எதிரான நிலைப்பாடு உருவானதை கண்டு ரூ.2.50 குறைப்பதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் வரியையும் ரூ.2.50 குறைக்க சொல்லி வலியுறுத்துகிறது.

    இது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம். இந்த விலை குறைப்பினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

    ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் குமரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration

    குழித்துறை:

    ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரியும் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    களியக்காவிளை சந்திப்பில் ஏராளமான காங் கிரஸ் கட்சியினர் குவிந்தனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், வசந்தகுமார், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    போராட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ்மாநில தலைவர் ஹசன் ஆரூண், இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஜெபி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக பிரிவு செயலாளரும், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவருமான டாக்டர் அனிதா, இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திவாகர், கிழக்கு மாவட்ட தலைவர் தேவ், லாரன்ஸ், கிறிஸ்டல் ராஜ், ரமணி, பாடகர் முருகானந்தம் உள்பட கலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக ஊரம்பில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீனிவாசுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக பிரிவு செயலாளரும், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவருமான டாக்டர் அனிதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீனி வாசுக்கு ஆளுயர மாலை அணிவித்து மலர் கிரீடம் கொடுத்து டாக்டர் அனிதா வரவேற்றார். மேலும் சிலம்பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #congressdemonstration

    ஆண்டிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து முனை பிரச்சார இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ஆம்தேதி முதல் 23-ம்தேதி வரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருகை வந்த பிரச்சார இயக்கத்தினருக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையேற்றத்தை குறைக்க வேண்டும். 

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கருக்கை கிராமத்தில் 33 விவசாயிகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும், ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், அப்பகுதி விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தின் நிர்வாகிகள் பேசினர். 

    பிரசார இயக்கத்திற்கு அசோக்ராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் லாரன்ஸ், பிரபு கிளைச் செயலாளர்கள் ஞான சேகரன், கவர்னர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயற்குழு உறுப் பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, திருத் துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. உலக நாதன், மாநில செய லாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஆனந்தன், சின்னதுரை, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    பிரச்சாரமானது ஆண்டிமடத்தில் துவங்கி ஜெயங்கொண்டத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாதர் சங்க நிர்வாகி தமயந்தி வரவேற்றார். முடிவில்  ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் நன்றி கூறினார்.
    42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர். #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    கடந்த மாதத்தில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வந்து சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 41 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுகளுக்கும் விற்பனை ஆனது.

    இதில் திடீர் திருப்பமாக நேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நாள் விலையிலேயே நேற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை ஆனது. கடைசியாக கடந்த மாதம் 8-ந் தேதி பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்தது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.  #PetrolDiesel #PetrolPriceHike
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    சென்னை மாநகர மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ‘ஷேர்’ ஆட்டோ பயணம். பொது போக்குவரத்து வசதி பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருப்பதால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதேசமயம் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் இருமடங்காக உள்ளதே... என்று வேதனைப்பட்டு வந்த பயணிகளுக்கு, இந்த ‘திடீர்’ கட்டண உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து ‘ஷேர்’ ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வருமானம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையில், தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை கவலையடையச் செய்துள்ளது. முன்பு தினசரி ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.400 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

    இதற்கிடையில் ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி கட்டணமும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில டிரைவர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர். 
    நான் ஒரு மந்திரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்தார். #FuelPriceHike #RamdasAthawale
    மும்பை:

    நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல். டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.  #RamdasAthawale #UnionMinister
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்தார். #Petrol #Diesel #AmitShah
    ஐதராபாத்:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.



    இதற்கிடையே தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் பேட்டி அளித்த பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக போரின் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பிரச்சினைகள் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.

    மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், பா.ஜனதாவும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

    மேலும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறப்படுவது குறித்து அமித்ஷா பதில் அளிக்கையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும்போது மராட்டியத்திலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபங்களை பெற இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு இல்லை’ என்று தெரிவித்தார்.   #Petrol #Diesel #AmitShah
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் உயர்த்தியோ, குறைத்தோ வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து உள்ளது.



    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துவதால், நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) விசாரணை நடக்கிறது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ராமநாதபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அரண்மனை முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், தி.மு.க. பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி முன்னிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று பெட்ரோல், டீசல் விலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.

    பின்னர் ராமநாதபுரம் அரண்மணை பகுதியில் இருந்த கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் தி.மு.க.-காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அங்கு வந்த போலீசார் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம்,மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட வக்கில் பிரிவு தலைவர் அன்பு செழியன், மண்டபம் வட்டார காங்கிரஸ் தலைவர் மேகநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (வாட்) வசூலித்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

    நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும். அதுவரை, பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயைத்தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

    மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு மேல், நிவாரணம் வழங்க முடியாது. மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

    பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. அதனால் ரூ.83.91-க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.76.98 ஆனது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறியுள்ளன.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைந்து விட்டது. இதற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காததால், போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்காக வேறு வழிகளை கையாண்டனர். பாரத் பந்த் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், அராஜக சம்பவங்களும் வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து மோடி அரசுக்கும் நன்கு தெரியும். இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து முயன்று வருகிறோம். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    வெனிசூலாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது போன்ற காரணிகளால், எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த நாடுகள் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அமெரிக்காவின் ஷேல் கியாஸ் உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை.

    எண்ணெய் இறக்குமதியை சார்ந்து வாழும் நாடு இந்தியா. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் சொந்த பிரச்சினைகளால் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் வளக்குறைவு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் உற்பத்தி சரிந்துள்ளது.

    இத்தகைய சர்வதேச பிரச்சினைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட 2008-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அப்படி இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால் இதற்கான தீர்வு எங்கள் கைகளில் இல்லை.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதற்கிடையே பாரத் பந்த் மூலம் நாட்டில் குழப்பத்தையும், வதந்தியையும் பரப்ப முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா புகார் கூறியுள்ளது. காங்கிரஸ் ஒரு ஊழல் நிறைந்த கப்பல் எனவும், அதனுடன் இணையும் கட்சிகளும் காங்கிரசுடன் சேர்ந்து மூழ்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.  #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    ×