search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94747"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, 45 ஆண்டுகால பிரச்சினை என மத்திய வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபு கூறினார். #Petrol #Diesel #Suresh Praphu
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.

    இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நாளை (திங்கட்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.



    ஆனால் இந்த பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல எனவும், நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினை என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறியுள்ளார். டெல்லியில் நடந்த பசுமை எரிபொருள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    எண்ணெய் விலை உயர்வு விவகாரம் 45 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக உருவெடுத்தது. அந்தவகையில் இது 45 ஆண்டுகால பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையை சமாளிக்க எரிபொருள் ஆதாரத்தை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா சிந்தித்து இருக்க வேண்டும்.

    போக்குவரத்து நடைமுறையில் மாற்று எரிபொருள் ஆதாரத்தை பயன்படுத்த வேண்டும். இதற்காக அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த போக்குவரத்து நடைமுறையையும் மாற்றுவதற்கு முன், இடைக்கால தீர்வாக எரிபொருளை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து எது? என்பது குறித்து மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதே தற்போதைய தேவை. தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பது பாராட்டுக்குரியது. உயிரி எரிபொருளை முன்னிலைப்படுத்துவதில் இந்திய பசுமை எரிபொருள் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

    எண்ணெய் மற்றும் கியாஸ் வணிகமானது நீண்ட காலத்துக்கு முன்னே கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யும் தொழிலாக மாறிவிட்டது. எனவே மாற்று எரிபொருள் குறித்து நாம் சிந்தித்தால் இந்த பணம் வீணாகிவிடும். ஆனால் இத்தகைய எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து நமக்கு தெரியும். எனவே மாற்று எரிபொருள் குறித்து சிந்திப்பதை தவிர வேறு வழியில்லை.

    பசுமைக்கூட வாயுக்கள் உற்பத்தியை குறைப்பதில் தூய்மையான உயிரி எரிபொருள் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இத்தகைய தூய மற்றும் பசுமை எரிபொருளை நோக்கி மக்களை திருப்புவதில் பசுமை எரிபொருள் கூட்டமைப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.  #Petrol #Diesel #Suresh Praphu
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
     
    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை தாண்டியுள்ளதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் தரும் ஆதரவால் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #DMK #Stalin
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.



    அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு  திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #DMK #Stalin
    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62-க்கு விற்பனை செய்யப்படுவதையொட்டி பெட்ரோல் விலை 83 ரூபாயை நெருங்குகிறது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது. #PetrolDiesel
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்தபடியே உள்ளது.

    கடந்த 3-ந்தேதி பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 17 காசு அதிகரித்து 82.41 ஆக உயர்ந்தது. நேற்றும் அதே விலையில் நீடித்தது.



    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசு அதிகரித்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை 83 ரூபாயை நெருங்குகிறது.

    இதே போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 20 காசு அதிகரித்து ரூ.75.39 ஆக உயர்ந்தது. நேற்றும் அதே விலையில் நீடித்தது.

    இன்று டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது. இன்று 1 லிட்டர் டீசல் ரூ.75.61-க்கு விற்கப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். #PetrolDiesel

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. #pertolprice #petrolexport #Congress

    புதுடெல்லி:

    பெட்ரோல்- டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன.

    விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கச்சா எண்ணை விலையில் பெரிய மாற்றம் இல்லாத போதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு இந்திய பண மதிப்பு வீழ்ச்சிதான் காரணம் என கூறப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இது சம்பந்தமாக நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தை காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல், பொறுப்பாளர் அசோக் கெலாட் ஆகியோர் நடத்துகிறார்கள். இதில் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

    மேலும் அனைத்து மாநில காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கும் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதில், எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    மேலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்தும் திட்டம் காங்கிரசிடம் உள்ளது.

    இதற்காக தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து போராட்டத்தை நடத்தலாம் என ஆலோசித்து வருகிறார்கள். நாளை இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் கூறும் போது, தற்போதைய கச்சா எண்ணெய் விலையை வைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 39 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.35.50-க்கும் விற்க முடியும். ஆனால், 80 ரூபாயை தாண்டி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் லாப தொகை இருப்பு உள்ளது. ஆனாலும், விலையை உயர்த்துகிறார்கள் என்றனர்.


    காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ்திவாரி கூறும் போது, 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 138 டாலராக உயர்ந்து இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த நாங்கள் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் உயர்த்தினோம்.

    ஆனால், அதை பொருளாதார பயங்கரவாதம் என்று பாரதய ஜனதா கட்சி விமர்சித்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலை யிலும் 80 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயித்து இருக்கிறார்கள்.

    அப்படியானால் பாரதிய ஜனதா கட்சிதான் மக்கள் மீது பொருளாதார பயங்கரவாதத்தை ஏவி விட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி பெட்ரோல்- டீசல் விலையை 2 மடங்கு உயர்த்தி விற்பனை செய்கிறது. இந்த விலையை குறைக்காவிட்டால் நாங்கள் பெரும் போராட்டத்தை நடத்துவோம். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடுவதற்கு இன்னும் 16 ரூபாய்தான் பாக்கி உள்ளது. இன்னும் 7 மாதம் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்க போகிறது. அதற்குள் 100 ரூபாயை எட்டி விடுவார்கள்.

    இந்த விலை உயர்வால் விவசாயிகள், சிறு வணிகர்கள், நகர மக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார். #pertolprice #petrolexport #Congress

    பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் இதன் விலைகள் அமைகின்றன.

    அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்பனை ஆனது. நேற்று இது மேலும் 17 காசு உயர்ந்து ரூ.82.41 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

    இதே போன்று டீசலும் சென்னையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று இது மேலும் 20 காசு உயர்ந்து ரூ.75.39 ஆக புதிய உச்சம் தொட்டது.



    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் “பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்” என குறிப்பிட்டார்.

    ஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.

    இதுபற்றி மத்திய அரசின் நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்து உள்ளோம். நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறபோது, நாங்கள் நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க முடியாது. அதுவும் உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் பிரச்சினை ஏற்படுத்த முடியாது” என கூறினார்.

    (அன்னியச்செலாவணி வரவை விட, அதன் செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நடப்பு கணக்கு பற்றாக்குறை; வருமானத்தை விட செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நிதிப்பற்றாக்குறை,)

    நிதி அமைச்சக அதிகாரி மேலும் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளதால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே நிர்ணயித்து உள்ள இலக்கை விட நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க இயலாது” என்று குறிப்பிட்டார்.

    ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற மதிப்பு கூட்டு வரி மாறுபடுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #Petrol #Diesel 
    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82-ஐ எட்டுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.75-ஐ நெருங்குகிறது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். #Petrol #Diesel
    சென்னை:

    தற்போது தங்கத்தைப் போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தின.

    இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.



    ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடு செய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

    அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது. அதேபோன்று டீசலும் லிட்டருக்கு விலை ரூ.72-ஐ கடந்தது.

    இந்த விலை உயர்வு பின்னர் சற்று தணிந்தது.

    ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

    கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.

    சென்னையில் பெட்ரோல் விலை தேதி வாரியாக வருமாறு:-

    ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.80.69, 25-ந் தேதி ரூ.80.70, 26-ந் தேதி ரூ.80.80, 27-ந் தேதி 80.94, 28-ந் தேதி ரூ.81.09, 29-ந் தேதி ரூ.81.22, 30-ந் தேதி ரூ.81.35, 31-ந் தேதி ரூ.81.58, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.81.77 2-ந் தேதி ரூ.81.92

    10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 உயர்ந்து உள்ளது.

    சென்னையில் கடந்த 10 நாட்களாக டீசல் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வந்து உள்ளது. இதன் நிலவரம் வருமாறு:-

    ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.73.08, 25-ந் தேதி ரூ.73.09, 26-ந் தேதி ரூ.73.23, 27-ந் தேதி 73.38, 28-ந் தேதி ரூ.73.54, 29-ந் தேதி ரூ.73.69, 30-ந் தேதி ரூ.73.88, 31-ந் தேதி ரூ.74.18, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.74.42, 2-ந் தேதி ரூ.74.77.

    10 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.69 அதிகரித்து உள்ளது.

    பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், இந்த விலை உயர்வு அவற்றுடன் நின்று விடுவது இல்லை. சங்கிலித்தொடர்போல இவற்றின் விலை உயர்வு பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது.

    டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்கள், காய்கனிகள் விலை உயர்கிறது. இவற்றின் விலை உயர்கிறபோது ஓட்டல் உணவுப்பண்டங்களின் விலையை ஓட்டல் உரிமையாளர்கள் உயர்த்தி விடுகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் ஒருமுறை உயர்ந்தால் அது அப்படியே நிலைத்து விடுகிறது. திரும்ப அத்தியாவசியப்பொருட்கள், காய்கறிகள் விலை குறைகிறபோது பெரும்பாலான ஓட்டல்கள் விலை குறைப்பு செய்வது இல்லை.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம், கால்டாக்சி கட்டணம் உயர்ந்து விடுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட சிரமங்களை சந்திக்கிறார்கள்.

    இதனால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிற சாமானிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48, டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 உற்பத்தி வரியாக மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. இதே போன்று தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது.

    தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.  #Petrol #Diesel
    வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி காரணமாக கரூரில் 2,600 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் ஜவுளி, கொசுவலை உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    கரூர்:

    டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றால் லாரித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைத்து ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைத்து ஆண்டுக்கு ஒரு முறை செலுத்துவது போல் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஜூலை 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் லாரிகள் ஓடாததால் வர்த்தகம் பாதிப்படைந்தது.

    இந்த போராட்டத்திற்கு கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்து இருந்ததால் கரூரில் நேற்று 2,000 லாரிகள், 600 மினி லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தொழில் நகரம் என பெயர் பெற்ற கரூரில் ஜவுளிகள், கைத்தறி துணிகள், கொசுவலை, பஸ்பாடி, சிமெண்டு, சர்க்கரை ஆலையிலிருந்து அனுப்பப்படும் சர்க்கரை மூட்டைகள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் பெருமளவில் தேக்கம் அடைந்தன. இதனால் கோடிக்கணக்கிலான வர்த்தகம் முடங்கியதால் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர். மேலும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் சில நிறுவனங்களில் பணி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

    எனினும் சிலர் கரூர் ரெயில் நிலைய பார்சல் சேவை, பஸ் உள்ளிட்டவை மூலம் உற்பத்தி பொருட்களை அனுப்பி வைத்ததையும் காண முடிந்தது. லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் வாழைத்தார் உள்ளிட்டவற்றை வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். இது போல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடையும் சூழல் ஏற்படுவதால் அதன் விலைவாசி உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது. கரூரில் பொதுமக்களுக்கு காய்கறி, பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு லாரி வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி பொருளாதார ரீதியிலான சரிவை ஏற்படுத்தும் நோக்கில் பதுக்கல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வக்கீல் ராஜூவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-

    மத்திய- மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு நிறைவேற்றி தரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதில் மாற்றம் இல்லை. கரூரில் வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறோம். எனினும் வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி டிரைவர்கள், கிளனர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் பாதிப்பு இருக்க தான் செய்கிறது என்று கூறினார்.

    லாரி ஓடாததன் காரணத்தால் ஏற்பட்டள்ள ஜவுளி தேக்கம் குறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் தயாராகும் போர்வை, திரைசீலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. அந்த வகையில் ஜவுளி உற்பத்தி பொருட்களை லாரி மூலம் சென்னை, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று தான் ஏற்றுமதி செய்கிறோம். அந்த வகையில் கரூரில் லாரிகள் இயக்கப்படாததால் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான ஜவுளி தேக்கம் அடைந்திருக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதனை டெலிவரி செய்ய முடியாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஜவுளி தயாரிப்புக்கு தேவையான உதிரி பொருட்களை வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே லாரி வேலை நிறுத்தத்தில் மத்திய-மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 
    கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது.

    அதன்படி பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசலுக்கு 95 காசுகளும் உயர்ந்தது. இந்த புதிய விலைப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.79.87 ஆக இருந்தது. இதைப்போல டீசல் விலை ரூ.72.43-ஐ எட்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-ஐ நெருங்கி இருக்கும் நிலையில் மும்பையில் ரூ.84.33-க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Petrol #Diesel #Tamilnews 
    பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி நேற்று விளக்கம் அளித்தார். #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மிகப்பெரும் வரி சீர்திருத்த நடவடிக்கையாக, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி.யை மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது. இதன் மூலம் உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட சுமார் 17 மறைமுக வரிகளும், மேலும் சில வரிகளும் ஜி.எஸ்.டி. என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

    நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை அமல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த வரி முறையில், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிகள் விதிக்கப்பட்டன. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் என அனைத்தும் இந்த வரி அடுக்குகளின் கீழ் கொண்டு வரப்பட்டன.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மைல்கல் திட்டங்களில் ஒன்றான இந்த ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லியில் நேற்று சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. நிதி இலாகாவை கூடுதலாக கவனித்து வரும் ரெயில்வே மந்திரி பியூஷல் கோயல் தலைமையில் நடந்த விழாவில், நிதி மந்திரி அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் பேசினார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அருண் ஜெட்லி, முதல் முறையாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகும். விழாவில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

    பல நாடுகளில் ஜி.எஸ்.டி. அமல்படுத்திய போது மிகப்பெரும் சீர்குலைவை சந்தித்ததை காண முடிந்தது. அதன்படி இந்திய பொருளாதாரத்திலும் ஜி.எஸ்.டி.யால் சீர்குலைவு ஏற்படும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால் இந்த ஓராண்டு அனுபவத்துக்குப்பின், சீர்குலைவு என்ற வார்த்தையை கூட ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தில் பயன்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    ஜி.எஸ்.டி.யால் இந்த ஓராண்டில் நாம் பெற்றிருக்கும் பயன்கள் வெறும் குறுகிய கால அல்லது சிறப்பான நடுத்தர கால விளைவுகள்தான். ஏனெனில் ஜி.எஸ்.டி.யின் சிறந்த பலன்கள் இன்னும் வரவில்லை. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, எளிமையான வியாபாரம், தொழில் மற்றும் வர்த்தக துறை விரிவாக்கம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்கள் மற்றும் நேர்மையான வர்த்தக நடைமுறைகளில் ஜி.எஸ்.டி. நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

    கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதற்கு பிந்தைய 9 மாதங்களில் ரூ.8.2 லட்சம் கோடி வரிவசூல் செய்யப்பட்டு உள்ளது. இது ஓராண்டுக்கு என்றால் ரூ.11 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது மறைமுக வரிவசூலில் 11.9 சதவீதம் அதிகமாகும்.

    தற்போதைய ஜி.எஸ்.டி. அடுக்குகளை குறைப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்ந்து உழைத்து வருகிறது. ஜி.எஸ்.டி. செயலாக்கம் சீராகி, வரி ஏய்ப்புகளை குறைப்பதன் மூலம் வரி வசூல் அதிகமானதும் விரும்புகிற குறைப்பு நடைமுறைக்கு வரும்.

    எனது கணிப்புப்படி, எண்ணெய் சாரா துறையில் மறைமுக வரிவசூலில் 1.5 சதவீதம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே வரி அடுக்குகளை உடனடியாக குறைக்கும். எனவே வரி வசூல் நிலவரம் சீரானவுடன் ஜி.எஸ்.டி.யின் வரி அடுக்கு களை இன்னும் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    நேரடி வரி வசூல் அதிகரிப்புக்கு ஜி.எஸ்.டி. பெரிதும் உதவி இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. ஏராளமான மக்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் வேகமாக தங்கள் வருவாயை வெளியிடுகின்றனர். இதன் மூலம் வரி வருவாயும் கணிசமாக அதிகரிக்கும்.

    பல்வேறு நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே அடுக்கு ஜி.எஸ்.டி. வரியே விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறுவது, தவறான யோசனை. ஒட்டுமொத்த மக்களும் ஒரே சீரான மற்றும் அதிக வரி செலுத்தும் திறன் கொண்டவர்களாக இருக்கும் நாடுகளில் மட்டுமே இது சாத்தியமானது. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளுக்கு இந்த யோசனை பலனளிக்காது. எனவே இதை ஏற்க முடியாது.

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என ராகுல் காந்தியும், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி மந்திரிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    எனவே இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பெட்ரோலிய பொருட்களும் ஜி.எஸ்.டி.க்கு கீழே கொண்டுவரப்படும். இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து நான் மேற்கொள்வேன். மாநிலங்கள் தங்கள் வருவாய் நிலையில் வலுவான நிலையை எட்டியதும், பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்குப்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி.யால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றம் தணிந்து விட்டது. ஜி.எஸ்.டி. மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட மேலாக அதாவது ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. மிகப்பெரும் வெற்றியடைந்து இருப்பதுடன், பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய வழியில் உதவி புரியும்’ என்றார்.

    வருமான வரி போன்ற நேரடி வரி வசூலை அதிகரிக்க ஜி.எஸ்.டி. உதவுவதாக கூறிய பியூஷ் கோயல், கடந்த சில மாதங்களில் இது 44 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். வரி நடைமுறை எளிமையாக்கப்பட்டு இருப்பதாகவும், ஏராளமான மக்கள் இந்த வரித்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.  #ArunJaitley #GST #Tamilnews 
    டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனாலும் நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின.
    சென்னை:

    தினசரி டீசல் விலை உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்வு போன்றவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என பிரதமர் மற்றும் போக்குவரத்து-பெட்ரோலியத்துறை மத்திய மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ‘நோட்டீசு’ வழங்கியது.

    அதன்படி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து நகரில் ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் இயங்காத காரணத்தால் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் தினசரி மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக 2 லட்சம் லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 5 லட்சத்தை தாண்டிவிடும். இதுதவிர வெளிமாநில லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இதனால் மத்திய அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், தமிழகத்தில் ரூ.50 கோடியும் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்படும்.

    இது முறையாக, முன்கூட்டியே நோட்டீசு வழங்கி நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்த போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக வேறு போராட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரச்சினை. எனவே இதில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகளும் எங்கள் போராட்டத்தில் கைகோர்க்க உள்ளன. எனவே மக்கள் பாதிப்பை கருத்தில்கொண்டு நியாயமான எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டாலும், நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின. சென்னையில் நேற்று லாரிகள் செல்வதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் வழக்கம்போலவே இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தை முதலில் அறிவித்ததே அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்டு காங்கிரஸ் அமைப்பு தான். அதன் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் தான் குமாரசாமி, சண்முகப்பா, கோபால் நாயுடு போன்றவர்கள். இந்த கூட்டமைப்பில் 129 சங்கங்களும், 6 மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் அங்கம் வகிக்கிறது. எனவே திட்டமிட்டப்படி ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் களமிறங்குவோம். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசுக்கு உரிய கால அவகாசமும் அளித்திருக்கிறோம். போராட்டத்தை திசை திருப்புவது எங்கள் நோக்கமல்ல, சிக்கலான சூழ்நிலையை அரசுக்கு அளித்திட கூடாது என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். #ArunJaitley #PetrolDiesel
    புதுடெல்லி:

    தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்து உள்ளார்.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்கவேண்டி இருக்காது.



    சம்பளதாரர்கள் வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும். எனவே அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எண்ணெய் அல்லாத மற்ற வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும்.

    நேர்மையாக வரி செலுத்துவோரின் கவலை வரிகளில் தங்களுடைய பங்கை செலுத்துவதுடன், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சேர்த்து இழப்பீடு தருவதுதான்.

    எனவே, குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

    கடந்த 4 ஆண்டுகளில் வரியில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதில் பெட்ரோலிய பொருட்களின் வரி பங்களிப்பு மட்டும் 0.72 சதவீதம் ஆகும்.

    எண்ணெய் அல்லாத வரிகள் மீதான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2017-18-ல் 9.8 சதவீதமாக இருந்தது. இது 2007-2008-ம் ஆண்டுக்கு இடையேயான கால கட்டத்தை ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மோடி அரசு நிதி விஷயத்தில் முன்ஜாக்கிரதை அல்லது விவேகத்தை வலுவாக வளர்த்து இருக்கிறது. நிதியளவில் ஒழுக்கம் இல்லாமல் போனால் கடன்பெறுவதுதான் அதிகரிக்கும். எனவே நிதியளவை புத்திசாலித்தமான, வலுவான கையாளும் மத்திய அரசால்தான் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க இயலும்.

    அரசின் உத்தேசத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் மீது உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்கச் செய்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மறைமுகமாக விமர்சித்த அருண்ஜெட்லி, “இது பொறியில் சிக்கவைக்கும் யோசனை. எனக்கு முன்னோடியே(ப.சிதம்பரம்) இதைச் செய்ய முன்வரவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ArunJaitley #PetrolDiesel #Tamilnews 
    ×