என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94793
நீங்கள் தேடியது "slug 94793"
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தினாராம். சில தெலுங்கு படங்களில், கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறாராம்.
சமீபத்தில் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலரிடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறாராம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.!
குறைவான ஆடைகளை உடுத்தி கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு மத்தியில், நிர்வாணமாக நடித்து கவர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நடிகை ஒருவர் சென்றிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த வேலையில்லாத நடிகை, தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இதுவரை நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கவனம் செலுத்துகிறாராம்.
சமீபத்தில் நாயகி நடிக்கும் டிரஸ் சம்பந்தப்பட்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானதாம். அந்த போஸ்டரை பார்த்து பலரும் நாயகியை பாராட்டினார்களாம். அதேநேரத்தில் ஒருசிலர் நாயகியின் கவர்ச்சி பற்றி விமர்சித்தார்களாம்.
இப்படி இருக்க இந்த படத்தில் நாயகியை ஒரு கும்பல் காட்டு பங்களா ஒன்றில் நிர்வாணமாக அடைத்து விடுவதாகவும், அந்த அறைக்குள் கிடைத்த பழைய துணிகளை சேகரித்து, நடிகை தனது உடலை மறைத்துக் கொள்வது போலவும் படமாக்குகிறார்களாம்.
இந்த பழைய உடையுடன் தான் நடிகை சமீபத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தாராம். அந்த காட்டு பங்களாவில் இருந்து நடிகை எப்படி தப்புகிறார் என்பதே படத்தின் முக்கிய காட்சியாக உருவாகுகிறதாம். குறைவான ஆடைகளை உடுத்தி நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வரும் நிலையில், நடிகை கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, சரித்திரமான படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, சரித்திரமான படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானாராம். இவர் ஒரு பாடலுக்கும் ஆடுவதை தவிர்த்து கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று குறிக்கோளாக இருந்து வந்தாராம்.
தற்போது அந்த கொள்கையை மாற்றி இருக்கிறாராம். தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்திருக்கிறாராம். நடிகைக்கு பட வாய்ப்பு குறைப்பதால் கொள்கையை மாற்றி இருப்பதாக பலரும் கூறி வருகிறார்களாம்.
பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம்.
பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம். அங்கு போராட்டத்தில் கலந்துக் கொண்டு பெற்ற நல்ல பெயரை கெடுத்துக் கொண்டாராம். அப்போது அவரை கிண்டல் செய்து பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்களாம்.
வெளிவந்த அவர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடிகையாக மாறியிருக்கிறாராம். இந்த நிலையில், அவரை மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்களாம். ஆனால், அவரோ மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றால், மீண்டும் அவரை கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமாம்.
இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம்.
இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம். அவர் நடித்த ஒரு படம் மட்டும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறதாம்.
சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம். சமீபத்தில் நடந்த விழாவில் ஒன்றில் நடிகை கவர்ச்சி உடையில் வந்தாராம்.
இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. வயதான காலத்தில் இப்படி கவர்ச்சியில் உடையிலா வருவது என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.
சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம். தன்னை வைத்து ஏற்கனவே வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களின் படங்களில் மட்டும் நடிப்பது என்று முதல் கட்டமாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம். இதனால் அறிமுக இயக்குனர்கள் பலரும் வருத்தமடைந்திருக்கிறார்களாம்.
அதுபோக, ஏற்கனவே அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் விரைவாக நடித்துக் கொடுப்பது என்றும் புதிய கொள்கை முடிவுக்கு வந்து இருக்கிறாராம் நடிகர்!
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இதனால், பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். அந்த தூதுக்கு பலனாக கலகலப்பான இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டதாம்.
அந்த இயக்குனர் ஒரு சரித்திர படம் எடுக்க திட்டமிட்டாராம். அதில் நடிக்க நடிகை அப்போவே தூது அனுப்பினாராம். ஆனால், பலனளிக்க வில்லையாம். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறதாம்.
இயக்குனரும் நிறைய தடவை வாய்ப்பு கேட்டுவிட்டாரார். இந்த முறை கொடுத்து விடலாம் என்று நடிகையின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்ட அந்த நாயகிக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. #Gossip
கால்பந்தாட்டம் சம்பந்தப்பட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது நாயகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து ஆம்பள் ஆம்பள் என ஆட்டம் போட்ட அந்த நடிகைக்கு கைவசம் படம் ஏதும் இல்லையாம்.
ரிலீசுக்கு மட்டும் ஒரு படம் தயாராக இருக்கிறதாம். சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம்.
மேலும் தனக்கு நெருக்கமான நடிகர்களின் பட வாய்ப்பையும் கேட்டு வந்த நடிகை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வெறுப்புக் கனலை கக்குகிறாராம். இதனால் அவரும் வெறுப்பாகி, மற்றவர்களையும் வெறுப்புக்குள்ளாக்குகிறாராம். இது நடிகையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துமே என்று கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம்.
தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம். பல முன்னணி நடிகர்கள் நடிகைக்கு வலியவந்து தங்கள் படங்களில் சான்ஸ் கொடுத்தார்களாம்.
இப்படி உச்சத்தில் இருந்த நடிகையின் மார்க்கெட் புதுவரவுகளால் டல்லடிக்க தொடங்கியதாம். இதையடுத்து, தெலுங்கு, கன்னடம் என வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகைக்கு தமிழில் ரீஎண்ட்ரியாகும் வாய்ப்பே இல்லாம் போனதாம். அங்கும் போதிய சான்ஸ் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலாகலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
தனது காதலரான வெளிநாட்டுக்காரரை கரமும் பிடித்தாராம். ஆனால் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், பழையபடி கவர்ச்சி மழை பொழிய தயார் என இயக்குனர்களுக்கு தூதுவிட ஆரம்பித்திருக்கிறாராம். தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் அனுப்பி இதை வெளிப்படையாக தெரிவித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்களாம்.
வாரிசு நடிகை படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறாராம்.
வாரிசு நடிகை படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறாராம். இனிமேல் பிரபல கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்று அவர் புதிய கொள்கை முடிவு எடுத்து இருக்கிறாராம்.
பிரபல கதாநாயகர்களின் ஜோடியாகி விட்டால், பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்று அவர் கணித்து இருக்கிறாராம். இதற்கு வசதியாக எல்லா பெரிய கதாநாயகர்களிடமும், “நான் உங்க ரசிகை” என்று ‘ஐஸ்’ வைக்கிறாராம்!
தளபதி, தல ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த இனிப்புக்கடை நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளில் மேற்கொண்டிருக்கிறாராம்.
தளபதி, தல ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த இனிப்புக்கடை நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளில் மேற்கொண்டிருக்கிறாராம். இதற்காக பல தூதுக்கள், சிபாரிசு என பல முயற்சிகளும் அடங்கியதாம்.
மேலும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயார் என்கிறாராம். அவருடைய ஆசை அநேகமாக நிறைவேறி விடுமாம். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவர இருக்கிறதாம்.
மும்பையில் இருந்து இறக்குமதியான வனமகளான நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
மும்பையில் இருந்து இறக்குமதியான வனமகளான நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். சக நாயகிகள் அனைவரும் அவருடைய அதிர்ஷ்டத்தை பார்த்து பொறாமைப்படுகிறார்களாம்.
இந்த நிலையில், “தமிழ் பட உலகில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் 2 நடிகைகளையும் விரட்டி காட்டுகிறேன், பார்” என்று தனது மானேஜர் முன்னிலையில் சபதம் எடுத்து இருக்கிறாராம், அந்த நடிகை.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X