search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறதாம்.
    பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறதாம். தனக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி கூறுகிறாராம், பரபரப்பு நாயகன்.

    அதைத்தொடர்ந்து ‘வாரிசு’ நடிகையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். பரபரப்பு நாயகனுடன் ஜோடி சேர ‘வாரிசு’ நடிகை தயங்குகிறாராம். அவருடைய தயக்கத்தை போக்கி, படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம். 

    முன்னணி நடிகையாக உயர்ந்த வீரமான நடிகைக்கு, சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம்.
    முன்னணி நடிகையாக உயர்ந்த வீரமான நடிகைக்கு, சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். இவருக்கு வர வேண்டிய பட வாய்ப்பை பல நடிகைகள் கெடுத்து விடுகிறார்களாம். இதனால், தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் அடிக்கடி போனில் பேசியும், தூது அனுப்பியும் வருகிறாராம். 

    எப்படியாவது தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விடா முயற்சியில் இருக்கிறாராம்.
    யோகா டீச்சராக இருந்த நடிகைக்கும், பிரபல தெலுங்கு நடிகருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகம் வந்ததாம்.
    யோகா டீச்சராக இருந்த நடிகைக்கும், பிரபல தெலுங்கு நடிகருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகம் வந்ததாம். ஆனால், நடிகை இதைப்பற்றி கண்டுக்கொள்ள வில்லையாம். ஆனாலும், இவர்களுக்குள் காதல் இருப்பதாகவும் பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாகவும் கூறினார்களாம்.

    மாறாக நடிகையின் திருமணத்திற்கு பல தோஷங்கள் இருப்பதாகவும் அதற்கு கோவில்களில் பூஜை செய்தால் சரியாகி விடும் என்று ஜோசியர் சொல்ல, நடிகையும் அனைத்தையும் செய்தாராம். ஆனால், பலன் இல்லையாம். தற்போது புதியதாக கோவிலுக்கு சென்று பூஜை போட்டிருக்கிறாராம் நடிகை.

    இதையறிந்த ரசிகர்கள் நடிகைக்கு வேற வேலை இல்லை. எப்போ பார்த்தாலும், கோவில், பூஜை என்று சுற்றிக் கிட்டே இருக்கிறார். எதற்கு சுற்றுகிறார் என்று சொல்ல மாட்டுகிறார் என்று சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்து பேசியிருக்கிறார்களாம்.
    பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகைக்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
    பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகைக்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். நடிகையும் பல கதைகளை கேட்டு வருகிறாராம். 

    நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெற்று வருவதால் சந்தோஷத்தில் இருக்கும் நடிகைக்கு, ஒரு வருத்தம் இருந்துக் கொண்டே இருக்கிறதாம். காரணம், தன்னுடைய காதலரை ஹீரோவாக்க வேண்டும் என்ற கனவு நடக்காமல் இருக்கிறதாம். நீண்ட நாட்களாக கதை கேட்டாலும், அவருக்கு ஏற்ற கதை இன்னும் அமையவில்லையாம்.
    இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம்
    இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம். அவர் தற்போது தனது சம்பளத்தை திடீரென ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டாராம். 

    இந்த திடீர் சம்பள உயர்வு பற்றி நடிகையிடம் தயாரிப்பாளர் ஒருவர் கேட்டதற்கு, “நான் இந்தி பட நாயகி ஆகிவிட்டேன். அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு சிரிக்கிறாராம். இந்தி படத்தில் நடிக்க சென்றால் அவ்வளவு பணம் கேட்பாரா? என்று தயாரிப்பாளர் புலம்பிக் கொண்டே சென்றாராம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம். ஆனால், அந்த படத்தை மொத்தமாக வாங்கிய நடிகர், திருப்தி அடையவில்லையாம்.

    தயாரிப்பாளரான நடிகரிடம், பணத்தை திருப்பி கேட்கிறாராம். “பணத்தை கொடு...அல்லது புதுசாக ஒரு படத்தை நடித்துக் கொடு” என்று நெருக்குகிறாராம். இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடக்கிறதாம்.
    திரையுலகிற்கு வந்த புதிதில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, ரசிகர்களை கவர்ந்த மச்சான் நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்துக் கொண்டாராம்.
    திரையுலகிற்கு வந்த புதிதில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, ரசிகர்களை கவர்ந்த மச்சான் நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்துக் கொண்டாராம். தற்போது நடிகைக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்து விட்டதாம். இதனால், தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து தனது உடலை குறைத்து வருகிறாராம்.

    மேலும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறாராம். சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டாராம். இதற்கு பலனாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இதனால் மனம் தளறாத நடிகை, கடின முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையறிந்த மற்ற நடிகைகள், எதற்கு தேவையில்லாத வேலை என்று கூறிவருகிறார்களாம்.
    வனமகளான நடிகையை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசுக்கள் வருகிறதாம். குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம்.
    வனமகளான நடிகையை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசுக்கள் வருகிறதாம். குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம். மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரவும் இருக்கிறாராம்.

    சமீபத்தில் நடிகை தனது பிறந்தநாளுக்கு கொடுத்த பார்ட்டியால் முன்னணி நடிகரின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினாராம். பார்ட்டியில் நடன இயக்குனருடன் நெருக்கமாக இருந்ததை அடுத்து இருவருக்குள்ளும் காதல் என்று செய்தி கிளம்பியதாம். இந்நிலையில் தனது சம்பளத்தையும் அதிரடியாக ஏற்றிவிட்டாராம். 2 கோடி கேட்பதாக தகவல் கசிந்துள்ளதாம்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஓவராக சீன் போடுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ் நடிகையின் கைவசம் சிலபல படங்கள் உள்ளதாம். சிறிய கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம். அவரது நடிப்பில் இந்த ஆண்டு படங்கள் ஏதும் வெளியாகவில்லை. விரைவில் நடன நாயகனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள நடனத்தை மையப்படுத்திய படம் ஒன்று ரிலீசாக இருக்கிறதாம்.

    அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நாயகி ஓவராக சீன் போடுகிறாராம். நான் தான் என்ற ஒரு பந்தா நாயகியிடம் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

    சினிமாவில் பல நடிகர், நடிகைகள் அமைதியாக மற்றவர்களை நல்லமுறையில் நடத்தும் நிலையில், நாயகியின் இந்த போக்கு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். #Gossip
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலருடன் நடித்த அந்த நடிகை திருமணத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தேடி வரவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் முதல் பிரபலமான நாயகர்கள் வரை பலருடன் நடித்த அந்த நடிகை கடைசியாக வம்பு நடிகருக்கு ஜோடியாக நடித்த ஏ படம் தோல்வியடைந்ததாம்.

    அதன்பிறகு வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்த சாமி நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம். இதற்கிடையே நடிகை தான் காதலித்த வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு நடிகை திரும்பவும் நடிக்க வந்திருக்கிறார்.

    தன்னை தேடி நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அந்த நடிகைக்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு பட அதிபர் கூட தன்னை தேடி வரவில்லை என்று மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறாராம் நடிகை.  #Gossip
    முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம்.
    முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம். ஆனால், நடிகை கதை தேர்வில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம்.

    ஆனால், நடிகை திருப்தியடைய வில்லையாம். எந்த கதையை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதாம். பல கதைகள் கேட்டு நடிகை வெறுத்து போய் இருக்கிறாராம். ஆனால், அவரிடம் கதை சொல்லப்போன இயக்குனர்கள் விட்டால் போதும் என்று தப்பி ஓடுகிறார்களாம்!
    வனமகளாக வந்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகை, அடுத்தடுத்து சில மாதங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டாராம்.
    வனமகளாக வந்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகை, அடுத்தடுத்து சில மாதங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டாராம். ஒரு வருடத்திற்குள்ளே மூன்று பெரிய கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளதால் பெரிய நடிகைக்கான அந்தஸ்தை பெற்றிருக்கிறாராம்.

    இந்த நிலையில், நடிகை பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறாராம். இதில் சில நடிகர்கள் கலந்துக் கொண்டார்களாம். இந்த சமயம் இளம் நடிகர் விபத்து ஏற்படுத்தி விட்டாராம். இதற்கு காரணம் இளம் நடிகர் அந்த நடிகை வைத்த பார்ட்டியில் கலந்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் போது நடந்து என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    ×