search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    பிரபல பாடகர் ஒருவர் டி.வி. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
    தமிழில் முன்னணி கானா பாடகராக வலம் வந்தவர், தற்போது பட வாய்ப்பு அதிகம் இல்லாமல் இருக்கிறாராம். ஒரு சில படங்கள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில், பாடகரை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பாடகர் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிக பணம் தர வேண்டும் என்று கேட்டாராம். 

    இதை கேட்ட பலரும் அதிர்ந்து போய், மார்க்கெட் இல்லாத நேரத்தில் இவ்வளவு பணம் கேட்கிறாரா? என்று முணுமுணுக்கிறார்களாம். 
    தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டாராம்.
    விரல் வித்தை நடிகர் அறிமுகமான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை சமீபகாலமாக நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.

    நடிப்பதை விட படங்களை தயாரிப்பதை தான் விரும்புவதாக கூறுகிறாராம். நாயகியின் திருமணம் பற்றி பலரும் கேள்வி கேட்க, திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும், திருமணமே தான் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நடிகை கூறிவிட்டாராம்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகை இனி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்கவே விரும்புகிறாராம்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகைக்கு, சமீபத்தில் எந்த தமிழ் படமும் ரிலீசாகவில்லையாம். நாயகி தெலுங்கில் நடித்த படங்கள் வெளியாகுவதால் நாயகி மகிழ்ச்சியில் இருக்கிறாராம். எனினும் தமிழ் சினிமாவையும் விடவும் நாயகிக்கு மனமில்லையாம்.

    நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் அவர் நடித்திருக்கும் படமும், கோமாளியான நடிகருடன் அவர் நடித்துள்ள படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால், சமீபத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டாராம்.

    நாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமில்லாமல், மற்ற நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே நாயகியின் எதிர்பார்ப்பாக உள்ளதாம். தாமதமானாலும் அதுமாதிரி படங்களில் நடிக்கவே அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

    குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை ஒருவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குகிறாராம்.
    மாயமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று பெரிய அளவில் கைகொடுத்ததாம். அந்த படத்திற்கு பிறகு நடிகையின் பெயரும், மார்க்கெட்டும் விரிந்ததாம். 

    எனினும், அவரது அடுத்தடுத்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லையாம். அதன்பிறகு சிறு இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகை தற்போது வட இந்தியா பக்கம் சென்றுவிட்டாரம். இந்த நிலையில், பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாம்.

    இந்த நிலையில், மற்ற முன்னணி நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க விரும்புகிறாராம். அதேநேரத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தயக்கம் காட்டுவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

    காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

    அவருடைய வேண்டுகோளை அந்த நாயகன் ஏற்றுக்கொண்டு, “நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம்!
    முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் நடிகை, இயக்குனர்களிடம் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
    முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, தமிழில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் நடிகை, நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு அவருடையே மார்க்கெட்டே மாறிவிட்டதாம். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து பல ஊர்களை சுற்றி விட்டு தற்போது கதை கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.

    கதை சொல்லும் இயக்குனர்களிடம் நடிகர்கள் இல்லாமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக சொல்லுங்கள். நடிகர்களுடன் நடிக்க தயக்கமாக இருக்கிறது என்கிறாராம். அப்படி ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள கதை சொன்னால், நடிகை நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லுகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, தற்போது ஒரு நடிகருடன் நடிக்க படக்குழுவினரிடம் அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
    முன்னணி நடிகையாக வலம் வந்த யாம்பல் நடிகை, நட்சத்திர நடிகருடன் நடித்த பிறகு அதிக சம்பளம் கேட்ட பிரச்சனையால் மார்க்கெட்டை இழந்தாராம். இதனால் பல படங்கள் இவர் கையை விட்டு சென்றதாம். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம்.

    இவரை இயக்குனர் ஒருவர் அணுகி படத்தில் நடிக்க கேட்டாராம். நடிகையும் கதையை கேட்டு ஓகே சொன்னாராம். ஆனால், பசங்க நடிகர்தான் கதாநாயகன் என்று சொன்னவுடன் அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். படக்குழுவினரும் பரவாயில்லை என்று நடிகை சம்பளம் அதிகம் தர சம்மதித்திருக்கிறார்களாம்.
    தமிழில் முக்கிய நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், தனது வேதனையை பதிவு செய்திருக்கிறாராம்.
    ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானாராம் காதல் கொண்ட நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தாராம். தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்களாம்.

    பின்னர் நாயகி நடிப்பில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தாராம். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். நாயகியாக மட்டுமில்லாமல், முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம். சமீபத்தில் நாயகி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லையாம்.

    இந்த நிலையில், தான் அம்மாவாக நடிக்க தயார், ஆனால், தனது வயதுடைய நடிகர்களுக்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வது தான் என்னை எரிச்சலாக்குகிறது என்று நாயகி வேதனையுடன் புழம்பியிருக்கிறாராம்.

    காதலியை முதல்முறையாக விட்டு தனியாக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் இயக்குனர், காதலி நினைவால் அதிகமாக வாடி வருகிறாராம்.
    முன்னணி நடிகையும், பிரபல இயக்குனரும் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்களாம். தற்போது இயக்குனர் நடிகையை விட்டு வெளிநாட்டில் நடக்கும் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.

    காதலுக்கு பிறகு முதல்முறையாக நடிகையை விட்டு தனியாக சென்றிருக்கும் இயக்குனர், தான் தனியாக செல்கிறேன். வருத்தமாக இருக்கிறது. அவள் நினைவாகவே இருக்கிறது என்று தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறாராம்.
    இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் உச்ச நடிகர் ஒருவருக்கும், அவரது படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாம். #Gossip
    இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் உயர்ந்த நடிகர், முதல்முறையாக தமிழில், குஷியான இயக்குநருடன் இணைந்து நடிக்கிறாராம். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், உச்ச நடிகர் படத்தில் இருந்த விலகியதாக சிலர் வதந்திகளை கிளப்பி விட்டார்களாம்.

    இதையடுத்து, உச்ச நடிகர் படத்தில் இருந்து விலகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சனை, அதனை விரைவில் சரி செய்து படப்பிடிப்பு விரைவில் தொடங்குவோம் என்றும் குஷியான இயக்குநர் நடிகர் கூறியுள்ளாராம். #Gossip
    வாரிசு நடிகர் தற்போது பல வம்புகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம்.
    வாரிசு நடிகர் தற்போது பல வம்புகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். இவர் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பு செலவுக்கு ரூ.2 கோடியை இவர் கையில் கொடுத்து விட வேண்டுமாம். அந்த பணத்தில், முதல் காப்பி வரை எடுத்து கொடுத்து விடுவாராம். “இனிமேல் இதுதான் என் பாலிசி” என்கிறார், அந்த நடிகர்!
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல தயாரிப்பாளர்களை புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். சில தயாரிப்பாளர்களை இது, வருத்தம் அடைய செய்திருக்கிறதாம். 

    படத்துக்கு படம் இப்படி சம்பளத்தை உயர்த்தினால், தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது? என்று பலரும் கூடிப்பேசி வருகிறார்களாம்!
    ×