என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94793
நீங்கள் தேடியது "slug 94793"
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை, தனக்கு விபரீத ஆசை இருப்பதாக கூறியிருக்கிறாராம்.
தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் ராசியான நடிகை, சிங்கமான நடிகர் தான் பிடிக்கும். அவரை திருமணம் ஆகவில்லை என்றால், அவரை திருமணம் செய்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை அடுத்ததாக அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கத்தான் இப்படி ஆசை இருப்பதாக கூறுவதாக பலரும் பேசி வருகிறார்களாம். மேலும் பல புகைப்படங்களை எடுத்து அவரை வைத்து படம் இயக்கும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முயற்சித்து வரும் மூன்றெழுத்து நடிகர் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் மாறியிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு பிரியாணி கொடுத்த நடிகர் என்று பிரபலமான மூன்றெழுத்து நடிகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாம். அவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகையையே திருமணம் செய்து கொண்டாராம்.
அவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம். எனினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் இனி புது படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். நல்ல கதையம்சம், ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே, படங்களில் நடிக்க சம்மதிக்கிறாராம். #Gossip
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைக்கு அவரது காதலர் புதியதாக தடை ஒன்றை போட்டு இருக்கிறாராம்.
நம்பர் ஒன் நடிகையும் இயக்குனரும் தீவிரமாக காதலித்து வருகிறார்களாம். விரைவில் நிச்சயதார்த்தம், திருமணம் என்று எல்லாம் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறதாம். இந்நிலையில் நடிகைக்கு காதலர் ஒரு தடை ஒன்றை விதித்திருக்கிறாராம்.
அதாவது எந்த நடிகர் கூட வேண்டுமானாலும் நடி, ஆனால், வம்பான நடிகருடன் மட்டும் நடிக்க கூடாது என்று தடை போட்டிருக்கிறாராம். இதை நடிகை ஏற்றுக் கொண்டு தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கண்டிப்பாக சொல்லிவிடுகிறாராம்.
சமீபத்தில் கிரிக்கெட் விளையாடிய நடிகை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். #Gossip
சமீபத்தில் கிரிக்கெட் விளையாடிய நடிகை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். நடிகைக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். இந்நிலையில், நடிகை காதல் வலையில் விழுந்திருக்கிறாராம்.
பிரபல நடிகருக்கு தம்பியாக நடித்த ஜூனியர் நடிகர்தான் நடிகையின் காதலர் என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்களாம். விரைவில் யார் அந்த நபர் என்று அனைவருக்கு காட்ட இருக்கிறாராம் நடிகை.
நடிகர் நடிக்க ஒப்பந்தமான படத்தில், நடிகை நுழைந்ததால் அந்த படத்தில் இருந்து நடிகர் விலகி இருக்கிறாராம். #Gossip
வம்பு நடிகருக்கு சில காலமாக பல சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். அதன்பின் மணியான இயக்குனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம். இந்த நிலையில், மணியான இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம்.
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்களாம். பல பேர் நடிக்க ஒப்பந்தம் ஆகும் நிலையில், நம்பர் ஒன் நடிகையிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.
இதற்கு நடிகை, வம்பு நடிகர் நடித்தால் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். இந்த விஷயம் நடிகருக்கு தெரிந்து அவரே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.
ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். #Actor #ComedyActor
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறாராம்.
ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என கூறிவந்த நடிகருக்கும், தற்போது டூயட் பாடும் ஆசை வந்துவிட்டதாம். இதனால் தன்னை தேடி வரும் புதிய இயக்குனர்களிடம், படத்தில் தனக்கு ஒரு ஜோடி வேண்டும், டூயட் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கிறாராம். இதனால் புதுமுக நடிகைகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.
அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர்.
அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, “ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள்” என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், “சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு” என்று நடிகையின் பின்னால் இருந்து சொன்னவரும் நடிகர்தானாம்.
தமிழ் சினிமாவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகரும், நடிகையும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். #Gossip
ஒரு இயக்குநரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக வைத்திருக்கும் நாயகன் சத்தமில்லாமல் சினிமாவில் வலம் வருகிறாராம். அவரது நடிப்பில் வரும் படங்களும் சத்தமில்லாமல் வந்து செல்கிறதாம்.
அவருக்கும் அவரது நீண்ட நாள் தோழியுமான பிரியமான நடிகையும் காதலித்து வந்தார்களாம். தொடர்ந்து படங்களிலும் இணைந்து நடித்தார்களாம்.
இருவருக்குமே பட வாய்ப்புகள் குறைந்ததற்கு அவர்களின் காதலும் ஒரு காரணம் என்று கூறினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவலும் வெளியானதாம்.
ஆனால் இருவரும் நட்புடன் தான் இருக்கிறார்களாம். ஆனால் வெளியே இருவரும் பிரிந்து இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்களாம். இரண்டு பேரும் நடித்து சம்பாதித்தபின், தகுந்த நேரம் பார்த்து தங்களின் காதலையும், திருமண தகவலையும் அறிவிப்பார்களாம். #Gossip
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம்.
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். கல்யாணமும் ரத்தாகி விட்டதாம். அதன் பிறகு அந்த நடிகை இன்னொரு டைரக்டருடன் காதல் வளர்த்தாராம்.
அவரைப்போல் தற்போது நடன நடிகரும் வேறு ஒரு நடிகையுடன் காதல் வளர்த்து வருகிறாராம். அவருடைய காதல் வலையில் சிக்கியிருக்கும் அந்த வீரமான நடிகை, வலையில் இருந்து வெளியே வருவாரா அல்லது வலைக்குள் மாட்டிக் கொண்டு நடன நடிகர் பின்னால் ஒதுங்கி விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம்.
பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம் இயக்குகிறார்கள், ஆனால், தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் என்னுடைய அருமை தெரியவில்லை என்று பேசியிருந்தாராம்.
தமிழ் நாட்டில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நாயகியை தொடர்பு கொண்டு பேசினால், சம்பளம் இவ்வளவு தந்தால்தான் நடிப்பேன், அங்குதான் ஷூட்டிங் எடுக்கணும் என்று கட்டளை எல்லாம் போடுகிறாராம்.
முன்னணி நடிகை ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நான்கெழுத்து வெள்ளை நடிகை தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தாராம். தற்போது தமிழ் படங்களுக்கே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் அவர் தயாராகி இருக்கிறாராம்.
இந்த நிலையில், பெற்றோர் அவருக்கு திருமண பேச்சுவார்த்தை நடத்த, பட வாய்ப்புகள் வந்தால் சினிமா, இல்லையென்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம். #Gossip
பொதுவாக நடிகைகள் படவாய்ப்பு இல்லாமல் கவர்ச்சிக்கு மாறும் நிலையில், கவர்ச்சி இருந்தால் நடிக்க தயார் என்று கூறும் நாயகியை பார்த்திருக்கிறீர்களா என்று இயக்குநர் ஒருவர் ஆச்சரியப்பட்டுள்ளாராம். #Gossip
தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களை கவர்ந்த மூன்றெழுத்து நடிகை, பெண் இயக்குநர் படத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததாம். படத்தில் நாயகி படு கவர்ச்சியாக நடித்திருந்தாராம்.
இந்த நாயகியா இப்படி என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும் அவரே கூறினாராம்.
நாயகியை சந்தித்து கதை சொல்லப் போகும் இயக்குநர்களிடம் நாயகி படத்தில் கவர்ச்சியான சீன்கள் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா? என்றுதான் முதலில் விசாரிக்கிறாராம். இருக்கிறது என்றால், உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம். இல்லையென்றால், சில கவர்ச்சியான காட்சிகளை படத்தில் சேர்த்துக் கொள்ள சொல்கிறாராம். இப்படி ஒரு நாயகியா என்று இயக்குநர் ஆச்சரியப்படுகிறாராம்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X