search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி ஒருவர் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, இப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். மாப்பிள்ளை பற்றி அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையாம். அம்மாவுக்கு பிடித்து இருந்தால் போதும். அவங்க சொல்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறிவிட்டாராம். 

    அதனால், நடிகையின் தாயார், மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறாராம். இப்போதாவது சம்மதம் சொன்னாரே, விரைவில் கெட்டிமேளம் ஒலிக்கட்டும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம். #Gossip

    சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம்.
    சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம். அதில் நடிகை பேசும்போது, "பலர் வெற்றி பெறாத படங்களுக்குக்கூட வெற்றி விழா நடத்துகின்றனர். இது தான் உண்மையான வெற்றி விழா" எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

    இதனால், சமூக வலைத்தளத்தில் பெரிய பிரச்சனை நடைபெற்றதாம். சமீபத்தில் வெளியான பெரிய நட்சத்திரங்களின் படங்களைத்தான் நடிகை குறிப்பிட்டு சொல்லியதாக சண்டை எற்பட்டதாம். இதையறிந்த நடிகை, நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதன் பிறகுதான் ரசிகர்கள் அமைதியானார்களாம்.
    முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம்.
    முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் நடிகருடன் நடிக்க சம்மதித்தாராம். 

    இதையடுத்து தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம். நடிகையும் நடிக்க சம்மதித்தாராம். ஆனால், சில நிபந்தனைகள் போட்டிருக்கிறாராம் நடிகை. அதிக பட்சமாக சம்பளம். குறைந்த நாட்கள் தான் கால்ஷீட் என படக்குழுவினருக்கு நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
    சினிமா, காதல் என பல்வேறு விஷயங்களால் அடிக்கடி கிசுகிசுக்கப்படும் நடிகர் ஒருவர், தற்போது புதிய வகை வம்பில் சிக்கிக் கொண்டுள்ளாராம். #Gossip
    சர்ச்சைக்கு பெயர்போன நடிகர், அறிமுகமான காலத்தில் நடித்த ஒரு படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறதாம். அந்த நடிகரின் தந்தையும், இயக்குநருமானவர் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க வந்த பிறகு தான் இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியிருக்கிறதாம்.

    அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், நடிகரும், நடிகரின் தந்தையும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் படத்தை இயக்கிய இயக்குநர் சொல்லி வருகிறாராம். மேலும் பத்திரிகையாளர்களை அழைத்து அவர் இதுகுறித்து விளக்க இருந்தாராம்.

    இவ்வாறாக பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகர்வதால், பேச்சுவார்த்தை நடத்த அந்த இயக்குநரை அழைத்துள்ளார்களாம். இதையடுத்து அந்த இயக்குநர் தற்போது அமைதி காத்து வருகிறாராம். தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றி கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் இது புது வகையாக இருக்கிறதே என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip

    சமீப காலமாக வாரிசு நடிகைக்கும், திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் நடிகைக்கும் போட்டி நடந்து வருகிறதாம்.
    சமீப காலமாக வாரிசு நடிகைக்கும், திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் நடிகைக்கும் போட்டி நடந்து வருகிறதாம். சமீபத்தில் ஒரு இயக்குனரின் புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக, 2 கதாநாயகிகளுக்குள் போட்டி இருந்து வருகிறதாம்.

    இந்த படத்தை பிடிப்பதற்காக இரண்டு பேருமே தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்களாம். இந்த நிலையில், வாரிசு நடிகை மேலும் சம்பளம் குறைக்க இறங்கி வந்திருக்கிறாராம். 
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்...
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டாராம். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி எங்கள் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம்.

    ஆனால், நடிகை ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த பாடலுக்கு ஆடியதால் தன்னுடைய இமேஜ் போய் விட்டது என்று நினைத்து, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம். 
    பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம்.
    பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம். அதனால் அவர் அடிக்கடி வானத்தில் பறந்து கொண்டே இருக்கிறாராம். படங்களில் நடிப்பதுடன், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறாராம்.

    சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவரிடம் கதை சொல்வதற்கு டைரக்டர்கள் வரிசையில் நிற்கிறார்களாம். இந்த நிலையில், படுகவர்ச்சியான புகைப்படங்களையும், சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவது, ஒரு பெரிய நடிகைக்கு அழகு அல்ல என்று நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களாம்.
    கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம்.
    கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம். ஆனால், தற்போது நட்சத்திர நடிகர், ஹெட் நடிகர் என அவர்களுடைய படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வரும் நடிகையுடன் பார்ட்டி, நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறாராம். 

    நடிகையும் இசையமைப்பாளருடன் நெருக்கம் காண்பித்து வருகிறாராம். இந்த பழக்கம் இவர்களுக்குள் நட்பா, அல்லது காதலா என பலரும் பேசி வருகிறார்களாம்.
    போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம்.
    போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். அப்போது இருந்தே அம்மணியை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம். சமீபத்தில் அம்மணி சாமி படத்திலும், டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தாராம்.

    இதற்கு நடிகையை சாமி வேடமா, டாக்டர் வேடமா என்று மீண்டும் கலாய்க்க தொடங்கினார்களாம். நீண்ட காலமாக சமூக வலைதளத்தில் எந்த புகைப்படத்தையும் போட நடிகை, இரு தினங்களுக்கு முன்பு புது படத்தில் நடிப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டாராம்.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், முதலில் நடித்த படமே வரல... அதுகுள்ள அடுத்த படமா என்று மீண்டும் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்களாம்.
    சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம்.
    சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம். முதல் படத்திலேயே பலருடைய பாராட்டை பெற்றதால் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பமானதாம். 

    பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைக்கு போன் செய்து கதை சொல்லட்டுமா என்று கேட்கிறார்களாம். ஆனால், நடிகையோ, ஓவராக பில்டப் கொடுக்கிறாராம். நிறைய கதை கேட்டுட்டேன். அப்புறம் கேட்கிறேன். நேரம் இல்லை. அப்புறம் போன் செய்யுங்கள் என்று பெரிய நடிகை போல் பில்டப் கொடுக்கிறாராம்.

    இவரிடம் பேசிய பலரும் இப்பவே இப்படி பேசுகிறாரே... இன்னும் இரண்டு மூன்று படங்கள் வெற்றி பெற்றால் நடிகை எப்படி பேசுவாரோ என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.

    பாடகி, நடிகை என பன்முகம் கொண்டவர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம்.
    பாடகி, நடிகை என பன்முகம் கொண்டவர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இவரை ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தரகர் அணுகி இருக்கிறாராம். நடிகையோ எங்கே எப்போது என்று கேட்டு விட்டு ரூ.8 லட்சம் தந்தால் வரேன் என்று கூறிவிட்டாராம்.

    இதைக்கேட்டு நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்ய சென்ற தரகர் அதிர்ச்சி அடைந்தாராம். பெரிய நாயகிகளே இவ்வளவு பெரிய தொகை கேட்டதில்லை. இவர் இப்படி கேட்கிறாரே...” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினாராம், அந்த ‘தரகர்!’
    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நடிகை கதை தேர்வில் தனது காதலரின் சம்மதத்தை வைத்தே படத்தை தேர்வு செய்கிறாராம். #Gossip
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் நடிகை கதை தேர்வுகளில் கவனமாக செயல்பட்டு வருகிறாராம். அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாம். 

    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறாராம். நாயகியின் சம்பளமும் ரூ.5 கோடிக்கு உயர்ந்திருக்கிறதாம்.

    சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்நை வாங்கிய நடிகை, அந்த காரில் இயக்குநரான தனது காதலருடன் சென்னையை சுற்றி வந்தாராம். நடிகையின் கதை தேர்வு தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்களாம். அப்படி இருக்க நடிகை ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு நடிகையின் காதலர் தான் கதை கேட்கிறாராம். காதலருக்கு பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க நாயகி ஒப்புக்கொள்கிறாராம். #Gossip

    ×