search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    விரைவில் திரைக்கு வரவிருக்கும் புதிய படத்தில் நாயகிகள் இருவர் போட்டி போட்டிக் கொண்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்களாம். #Gossip
    சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் வாகை சூடிய நடிகர் அடுத்ததாக மச்சம் இருக்குற படத்தில் நடித்துள்ளாராம். கவர்ச்சியுடன் கூடிய காமெடி கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வல்லவனுக்கு நடிகை படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

    இந்த படத்தின் மூலம் ஆங்கில நடிகை ஒருவரும் தமிழில் அறிமுகமாகிறாராம். இந்த நடிகையும், வல்லவனுக்கு நாயகியும் கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்களாம்.

    படத்தின் முன்னோட்டத்தை வைத்து அடல்ட் படமாக இருக்குமோ என்று பலரும் கேட்க, படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்களாம். 

    இரண்டு நாயகிகள் போட்டி போட்டுக் கொண்டு படுகவர்ச்சி காட்டியிருப்பதால், படத்தில் கவர்ச்சியும், நகைச்சுவையும் அதிகம் எதிர்பார்க்கலாம் என்கிறார்களாம். #Gossip

    சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம்.
    சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம். அவர் நடனம் ஆடும் அழகை பார்த்தே பல ஹீரோக்கள் அசந்து தங்கள் படங்களுக்கு பரிந்துரை செய்தார்களாம்.

    அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த குவிந்த நிலையில் லைட்டா தலைக்கனமும் ஏறியதாம். சர்ச்சை நடிகையை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சவால்விட்டாராம். இதை கேட்டு சர்ச்சை நடிகை ஒன்றுமே சொல்லவில்லையாம். இதற்கிடையே சீனியர் நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டாராம் நடிகை.

    அம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். அதற்கு காரணம் நடிகையின் தலைக்கனம் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம்.
    தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம். சமீபத்தில் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும், விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடப்போகிறார் என்றும் செய்திகள் பரவியதாம். இதனால் நடிகை கடும் ஆத்திரம் அடைந்துள்ளாராம்.

    இந்த வதந்திகள் ஆதாரமற்றவை. எதிலும் உண்மை இல்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை. என்னை அடையாளம் காட்டிய சினிமாவை விட்டு நான் எப்படி போவேன்? 20 வயதில் நடிக்க வந்தேன், இப்போது எனக்கு 32 வயதாகிறது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

    இதுபோன்ற தொடர் புரளிகள் எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றது என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகரான மூன்றெழுத்து நடிகர் தனக்கு திருமணமே வேண்டாம், நான் இப்படியே இருந்து விடுகிறேன் என்று விரக்தியுடன் கூறி வருகிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மூன்றெழுத்து நடிகர், அவருடன் நடிக்கும் நடிகைகள் அனைவருடனும் கிசுகிசுக்கப்படுவாராம். பிரியாணி கொடுத்தே நடிகைகளை கரெக்ட் பண்ணிவிடுவாராம் அந்த நடிகர்.

    இப்படியே விட்டால் செல்லாது என்று, அவருக்கு திருமணம் செய்து வைக்க நாயகனின் வீட்டார் கடந்த சில வருடங்களாக மணப்பெண் வேட்டை நடத்தி வந்தார்களாம். ஜாதகங்கள் பொருந்தாததால், அவருடைய திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதாம். ஜாதகம் செட்டானால் அந்த பெண்ணை நடிகருக்கு பிடிக்கவில்லையாம்.

    அதற்கு அப்புறமும் பெற்றோர் வற்புறுத்துகிறார்களாம். ஆனால் நடிகரோ, தனக்கு திருமணமே வேண்டாம் என்கிறாராம். தான் திருமணம் செய்துகொள்ளாமல் இப்படியே இருந்து விடுகிறேன், என்னை விட்டு விடுங்கள் என்று விரக்தியுடன் கூறுகிறாராம். நாயகன் திருமணம் செய்து கொண்டாலும் அவரைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் நிற்காது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip

    யுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
    யுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிகையாக பெரிய நம்பர் நடிகையிடம் பேசியிருக்கிறாரார்களாம். நடிகையும் சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

    இந்நிலையில், அந்த படத்தில் வம்பு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். இதையறிந்த நடிகை, படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். 
    ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து,
    ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து, அதை சில ஆண்டுகளாக காப்பாற்றியும் வந்தாராம். ஆனால், நடிகருக்கு புது பட வாய்ப்புகள் வரவே இல்லையாம். அதனால், அந்த கொள்கையை வாபஸ் பெற்று ஒரு புதிய படத்தில், இசை நடிகருடன் இணைந்து நடிக்க அவர் சம்மதித்திருக்கிறாராம்.

    அடுத்து மூன்று கதாநாயகர்கள் என்றாலும் பரவாயில்லை. இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி வாய்ப்பு கேட்டு வருகிறாராம் நடிகர்.
    மொக்க கத்தி நடிகர் அதிக படங்களில் நடிப்பதில்லையாம். அவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் ஆசையும் இல்லையாம்.
    மொக்க கத்தி நடிகர் அதிக படங்களில் நடிப்பதில்லையாம். அவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் ஆசையும் இல்லையாம். கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்றும், அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன என்றும் இரண்டு விதமாக பேசப்படுகிறதாம்.

    அவர் இதுவரை ரூ.90 லட்சம் சம்பளம் வாங்கி வந்தாராம். அதற்கு குறைந்து அவர் நடிப்பதில்லையாம். இந்த நிலையில் அவர் நடித்து சமீபத்தில் ஒரு படம் திரைக்கு வந்தது. அந்த படம் வெற்றிகரமாக ஓடுவதாக கூறி, சம்பளத்தை மேலும் ரூ.10 லட்சம் உயர்த்தி விட்டாராம். இப்போது அவர் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்கிறாராம்!
    மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம்.
    மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து அந்த நாயகிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்களாம்.

    தன்னை தேடி வருகிற அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து, நடிக்க சம்மதிக்கிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகை!
    வில்லனில் இருந்து நாயகனாக அவதாரம் எடுத்துள்ள நாயகன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நாயகியுடனான முத்தக்காட்சியில் நடிக்க தயங்கினாராம். #Gossip
    இதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சமீபத்தில் உச்ச நடிகரின் ரசிகராக ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்த படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாயகன் தற்போது தனது அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.

    வேட்டை சம்பந்தப்பட்ட தலைப்புடன் உருவாகும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுபிக்‌ஷமான நடிகை நடித்து வருகிறாராம். இந்த படத்தில் கதாநாயகனும், கதாநாயகியும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம்.

    அந்த காட்சியில் நடிக்க நாயகனும், நாயகியும் முதலில் தயங்கினார்களாம். பின்னர் காட்சியின் அவசியத்தை உணர்ந்து உதட்டு முத்தக் காட்சியில் நடித்தார்களாம். #Gossip

    தமிழில் சாக்லெட் பாயாக இருந்து டாப்பான ஸ்டாராக இருந்த நடிகருக்கு தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம்.
    தமிழில் சாக்லெட் பாயாக இருந்து டாப்பான ஸ்டாராக இருந்த நடிகருக்கு தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். மற்ற தயாரிப்பாளர் யாரும் இவரை வைத்து படம் எடுக்காததால், சொந்த தயாரிப்பு மூலம் அப்பப்போ ஒரு படம் நடித்து வருகிறாராம். 

    சமீபத்தில் இவரை சந்தித்த சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நீங்கள் காதல் நாயகனாக நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று அறிவுரை கூறினார்களாம். ஆனால், நடிகரோ நான் கதாநாயகியை காதலிக்கும் படங்களில் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.

    இதைக்கேட்ட பலர் வாய்ப்பு இல்லையென்றாலும் கொள்கையை விடமாட்டுறாரே என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.
    நம்பர்-1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தது,
    நம்பர்-1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தது, பட அதிபர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறதாம். இந்த வயதிலேயே ஓய்வு எடுப்பதா? என்று தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்களாம்.

    வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன உழைத்து விட்டார்?” என்று சில புது டைரக்டர்கள் கேள்வி எழுப்பு கிறார்களாம்.
    முத்தக்காட்சியில் நடிக்க முன்னணி நாயகிகள் பயந்த நிலையில், வளரும் நடிகை துணிந்து நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Gossip
    சமீபத்தில் திரைக்கு வந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். சென்னையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டுவது போல அந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்.

    படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியதாம். அத்துடன் ஒருசில வசனங்கள் அந்த பகுதி மக்களையும் வேதனையடைய செய்ததாம். இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டதாம்.

    இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், சமத்தான நடிகையாம். படத்தில் முத்த காட்சியும், கெட்ட வார்த்தை வசனமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும், அவர் நடிக்க மறுத்து விட்டாராம். இதே காரணத்துக்காக தான், பால் நடிகையும் அந்த படத்தில் நடிக்க மறுத்தாராம். 

    அதன் பிறகே குளிர்ச்சியான நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். குளிர்ச்சியான நடிகை துணிச்சலுடன் அப்படிப்பட்ட வசனங்களை பேசி நடித்து இருக்கிறாராம். நடிகையின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகிறதாம். #Gossip

    ×