search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.
    நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு செய்தாராம். அது அவருக்கு பெயர் தரவே பல படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினாராம். ஆனால், தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆட நடிகையை அணுகி இருக்கிறாராம்.

    ஆனால், அவர் நேரடியாக மறுக்காமல் அதிக சம்பளம் கேட்டாராம். இதைகேட்ட படக்குழுவினர் நடிகை வேண்டும் என்றே ஆட மறுக்கிறார் என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.
    தமிழில் வனமகளாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
    தமிழில் வனமகளாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த படங்கள் எல்லாம் வெற்றி பெறவே, நடிகைக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கிறதாம். நடிகையும் தற்போது முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

    இருந்தாலும், தன்னுடைய முதல் பட இயக்குனரால்தான் எனக்கு இந்த பெரிய நடிகர்கள் பட வாய்ப்பு என அவரை மறக்காமல் அவருடன் பழகி வருகிறாராம். மேலும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறாராம். 

    இதை பார்த்த பலர் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தையே வெளியிடுகிறாரா? இயக்குனரின் அடுத்த படத்திற்கு அடித்தளம் போடுகிறாரா? இல்லை வேறு எதாவதா? என்று பேசி வருகிறார்களாம்.
    சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வந்த வம்பு நடிகருக்கு தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறதாம்.
    சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வந்த வம்பு நடிகருக்கு தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறதாம். பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவர் கதவை தட்டி வருகிறார்களாம். நடிகரும் பல கதைகளை கேட்டு வருகிறாராம்.

    ஆனால், தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை விட எனக்கு தனியாக வீட்டுக்கு தெரியாமல் பணம் கேட்கிறாராம். நடிகரின் சம்பளம் அனைத்தையும் அவரின் தாய் தான் கவனித்து வருகிறாராம். இதனால்தான் வீட்டிற்கு தெரியாமல் பணம் கேட்கிறாராம்.
    தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் தனது அடுத்த படத்திற்கான கதை எழுத வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட நிலையில், இயக்குநரின் ஆசையை தயாரிப்பாளர் நிறைவேற்றவில்லையாம். #Gossip
    பிரம்மாண்ட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, இரண்டு முறை பிரபல நாயகனை வைத்து படம் இயக்கிவிட்ட அந்த இயக்குநர் மீண்டும் அதே நாயகனை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம்.

    அந்த இயக்குநர் இயக்கிய கடைசி படம் அரசியல் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளாகி வெற்றி பெற்ற நிலையில், சில விமர்சனங்களும் எழுந்ததாம்.

    பழைய படங்களில் இருந்து காட்சிகளை சுடுவதில் இயக்குநர் கெட்டிக்காரர் என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தார்களாம். என்னதான் பழைய படங்களின் காட்சிகளை சுட்டாலும், ஹிட் கொடுத்துவிடுகிறாரே என்று ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவர் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறதாம்.

    இந்த நிலையில், இயக்குநர் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுத வெளிநாடு செல்ல வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டாராம். ஆனால் தயாரிப்பாளரோ, வெளிநாடு வேண்டாம், தனக்கு சொந்தமான கடற்கரை வீட்டில் தங்கி கதை எழுதும்படி கூறிவிட்டாராம். இதனால் இயக்குநருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். #Gossip

    நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம்.
    நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம். இதனால், தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் படத்தில் நடிக்க முடிவு செய்தாராம். இதற்காக நடிகையின் தேடல் விறுவிறுப்பாக நடைபெற்றதாம். இதில் முதல் சாய்ஸாக வாரிசு நடிகை பெயர் இடம்பிடித்ததாம். ஆனால், நடிகை அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம்.

    இதனால், இயக்குனர் வேறு நடிகையை தேர்வு செய்ய, அவரும் அதிக சம்பளம் கேட்க, கடைசியாக நடிகர், பிரேமமான நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம். நடிகையும் வாய்ப்பு இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு...
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

    சண்டை போடும் கோழி நடிகருடன் அவர் நடித்த புதிய படம் திரைக்கு வரட்டும். அதுவரை பொறுத்திருக்கலாம். படம் திரைக்கு வந்ததும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம்.

    ஏறக்குறைய அவர் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். வீரமான நடிகருடன்தான் இன்னும் இணையவில்லையாம். அதனால் அந்த வாரிசு நடிகையின் கவனம், நடிகரின் பக்கம் திரும்பியிருக்கிறதாம்!
    வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.
    வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம். மேலும், தமிழில் இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கிறாராம். இந்நிலையில், தெலுங்கில் பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

    ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம். கால்ஷீட் காரணமாக தயங்குகிறாரா? இல்லை அவரது கதாபாத்திரம் பற்றிய சந்தேகமா? என்று பரபரப்பாக செய்தி பரவுகிறதாம். மேலும் நடிகை வேண்டும் என்றே இப்படி செய்கிறார் என்றும் பேசி வருகிறார்களாம்.
    தனது கனவு நிறைவேறிவிட்ட ஆசையில், அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருக்கும் முன்னணி நடிகை சம்பள விஷயத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளாராம். #Gossip
    தமிழ் திரையுலகில் பிரபலமான நாயகிகளில் ஒருவரான மூன்றெழுத்து நடிகை நடித்த காதல் படம், சமீபத்தில் ரிலீசாகியதாம். அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். இதனால் குஷியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

    சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், உச்ச நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற நடிகையின் கனவு நிறைவேறிவிட்டது, அடுத்து என்ன பிளான் என்று நிருபர்கள் கேள்வி கேட்க, இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைப்பதாக நடிகை கூறினாராம்.



    அந்த ஆசையில், தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். மேலும் முன்னணி நாயகர்களுக்கு போன் செய்தும் இதுபற்றி கூறி வருகிறாராம். சம்பள விஷயத்தில் நடிகையின் இந்த அந்தர் பல்டி மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். #Gossip

    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம். வாரிசு நடிகர் உத்தரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை கொடுத்தாராம். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லையாம். கடனாக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி இருக்கிறாராம்.

    இப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க மறுக்கிறாராம். தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம், வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறார்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் ஒரு புதுமுக நடிகரிடம் உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி, பல கோடிகளை முன்பணமாக வாங்கி இருக்கிறாராம். அந்த பணத்தை செலவு செய்துவிட்டு, படம் விரைவில் ஆரம்பிக்கிறேன் என்று நடிகரிடம் கூறி வேறு படத்தை தயாரிக்க சென்று விட்டாராம்.

    அந்த எதிர்பார்த்தளவிற்கு லாபம் பெறவில்லையாம். இதையடுத்து, சங்க தலைவரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட புதுமுக நடிகர், அடுத்தது என்னை வைத்து தான் படம் இயக்குவார் என்று காத்துக் கொண்டிருந்தாராம்.

    ஆனால், இயக்குனரோ, மீண்டும் வேற நடிகரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். அந்த கதை, புதுமுக நடிகருக்கு உருவாக்கப்பட்ட கதையாம். இதையறிந்த நடிகர் இயக்குனர் மீது கோபப்பட்டு கேட்க, அதற்கு இயக்குனர் உன்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் இன்னும் அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
    தங்கையாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான மான் பட நடிகை, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.
    தங்கையாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான மான் பட நடிகை, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம். நடிகை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறாராம். ஆனால், நடிகையை பற்றி பல கிசுகிசுக்கள் வருகிறதாம். 

    இதையறிந்த நடிகை, நான் எங்கேயும் செல்வது இல்லை, யாரைப் பற்றியும் சொல்வதும் இல்லை. ஆனால், என்னைப் பற்றி கிசுகிசுக்கள் மற்றும் பொய்யான செய்திகள் வருகிறது என்று கவலைப் படுகிறாராம். 
    தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஒருவர் நம்பர் 1 நடிகையின் இடத்தை பிடித்தே தீருவேன் என்று சபதம் செய்திருக்கிறராம். #Gossip
    தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு சமமாக வலம் வருகிறாராம் கோலமாவு நடிகை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை, அதில் வெற்றியும் பெற்று வருகிறாராம்.

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை நடிகை தக்கவைத்துக் கொண்டிருக்கிறாராம். இந்த நடிகைக்கும், மோகினியான மூன்றெழுத்து நடிகைக்கும் ஆரம்பத்தில் இருந்தே தொழில் போட்டி இருக்கிறதாம். இந்த நிலையில், இருவரும் ஒரு ‘பார்ட்டி’யில் சந்தித்துக் கொண்டார்களாம். அதில் இருவரும் மனம் விட்டு பேசி தோழிகளாக மாறிவிட்டார்களாம்.

    என்றாலும், 2 பேரிடையேயும் சத்தமே இல்லாமல் தொழில் போட்டி இருந்து வருகிறதாம். நம்பர் 1 நடிகையின் நட்சத்திர அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவது, மூன்றெழுத்து நடிகைக்கு பிடிக்கவில்லையாம்.



    நம்பர் 1 இடத்தை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று மூன்றெழுத்து நடிகை சபதம் எடுத்து இருக்கிறாராம். நடிகையின் சபதம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip

    ×