search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94842"

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களின் திருமண வீடியோ டீசர் நேற்று முன்தினம் வெளியானது.

    நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

     

    முழு திருமண நிகழ்ச்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் ஓ.டி.டி.யில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

     

    இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து இருப்பதாக கூறப்படுகிறது. தன் உழைப்பால் எப்படி இந்த இடத்துக்கு உயர்ந்தேன் என்று விளக்கும் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் ஆவணப்படத்தில் இடம் பெறுகிறதாக தெரிகிறது.

     

    மேலும் நயன்தாரா குறித்து அவரை சார்ந்தவர்கள், பிரபலங்கள் என மற்றவர்கள் பேசும் பேட்டிகளும் அதில் இடம்பெறுவுள்ளது. அதோடு திருமண புகைப்படம் மற்றும் வீடியோவையும் ஆவணப்படத்தில் இணைத்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
    • நயன்தாரா வாழ்க்கை பயணம் குறித்த புரோமோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    அண்மையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோவின் புரோமோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவின் வாழ்க்கை பயணம் குறித்த புரோமோவை தற்போது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • இவரின் பிறந்தநாளில் அவருக்கு நயன்தாரா உலகின் உயரமான கட்டிடம் முன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

    விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் துபாய் சென்றனர். நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா வளாகத்தில் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார். இதில் இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர்.

     

    விக்னேஷ் சிவன்-நயன்தாரா

    விக்னேஷ் சிவன்-நயன்தாரா

    அப்போது 3 பிறந்த நாள் கேக்குகள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் முதலாவது கேக்கில் 'ஹேப்பி பர்த் டே மகனே' என்றும், 2-வது கேக்கில் 'ஹேப்பி பர்த் டே விக்கி சார்' என்றும் 3-வது கேக்கில் 'ஹேப்பி பர்த் டே உலகம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது.

     

    இதில் உலகம் என குறிப்பிட்ட கேக் நயன்தாராவின் சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த விக்னேஷ் பூரிப்படைந்துள்ளார். தனது பிறந்தநாள் குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளதாவது, ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்தநாள். என் மனைவியால் அற்புதமான ஆச்சரியம், என் தங்கம். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான மக்கள் அனைவருடனும் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாள்! இதை விட சிறப்பாக பெற முடியாது.

    பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் 

    பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் 

     

    இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது புர்ஜ் கலீபா கட்டிடத்தின் கீழ் இருவரும் நெருக்கமாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
    • இவர் தற்போது இயக்கியுள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

     

    கோல்ட்

    கோல்ட்

    இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு 'கோல்டு' திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

     

    கோல்ட்

    கோல்ட்

    இந்நிலையில் 'கோல்டு' திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, எங்கள் தரப்பில் வேலை தாமதம் காரணமாக 'கோல்டு' திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. தாமதத்திற்கு எங்களை மன்னியுங்கள். 'கோல்டு' வெளியாகும் போது இந்த தாமதத்தை எங்கள் வேலையின் மூலம் ஈடுசெய்வோம் என்று நம்புகிறோம் என இயக்குனர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

    • இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா.
    • தற்போது அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

    இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் நயன்தராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படங்களை துவங்கும் நிலைமை உள்ளது. தற்போது ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார்.

     

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நயன்தாரா, கைவசம் தற்போது உள்ள படங்களை முடித்து விட்டு அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஆர்வம் குறைந்து விட்டது என்றும் இதனாலேயே சினிமா பணிகளில் இருந்து விடுபட்டு கணவருடன் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

     

    நயன்தாரா

    நயன்தாரா

    தற்போது நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பெருமளவு பணத்தை தொழில்களில் முதலீடு செய்து உள்ளார். சினிமாவில் இருந்து விலகி தொழில் அதிபராக தன்னை அடையாளப்படுத்தவும் சினிமா படங்களை தயாரிக்கவும் அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயன்தாரா சினிமாவை விட்டு விலகுவதை அவரது தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் அவர்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்கள் இருவரும் ஸ்பெனில் சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.

    இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் 2-வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வெளிநாட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர். 

    • நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • தற்போது கழுத்தில் தாலியுடன் கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.

     

    நயன்தாரா

    நயன்தாரா

    இந்நிலையில் நயன்தாரா அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுடன் 2வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். தற்போது விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அதில் டாலடிக்கும் ரத்தினமே.. மினுமினுக்கும் முத்தாரமே.. என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பரவலான கவனத்தை ஈர்த்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
    • தற்போது இவர்கள் இருவரும் சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


    நயன்தாரா - ஆர்த்தி

    நயன்தாராவின் திருமண உடை மற்றும் அணிகலன்கள் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியது. அதுமட்டுமல்லாமல், பலர் நயன்தாரா போன்று உடை அணிந்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி நயன்தாராவின் திருமண உடை போன்று ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு "என்ன கொடுமை இது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் " நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
    • தற்போது இவர்கள் இருவரும் சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

     

    இவர்களின் திருமண நிகழ்ச்சி வீடியோவின் புரோமோ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இதனிடையே நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

     

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனுடன் அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில், தொடர்ச்சியான பல வேலைகளுக்குப் பிறகு! இங்கே எங்களுக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
    • இவர் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இதுவரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது.
    • இவர்களது திருமண நிகழ்ச்சி வீடியோ புரோமோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

     

    இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

     

    சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணப் புகைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தது.

     

    இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோவின் புரோமோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இவர்களின் திருமண நிகழ்ச்சி வீடியோவின் புரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
    • நடிகை நயன்தாரா குறித்து கரண் ஜோகர் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவை பெரிய நடிகை இல்லை என்று இழிவுபடுத்தி விட்டதாக பிரபல இந்தி டைரக்டர் கரண் ஜோகருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம், கரண் ஜோகர் தென் இந்திய திரைப்பட துறையில் பிரபலமான நடிகை யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா தென் இந்திய சினிமாவில் நயன்தாராதான் பெரிய நடிகை என்றார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்றார். அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளானது. நயன்தாரா ரசிகர்கள் தற்போது கரண் ஜோகருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


    கரண் ஜோகர் யார் என்றும் இந்தியில் தயாரான குட்லக் ஜெர்ரி படம் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது உங்களுக்கு தெரியுமா என்றும், நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்ற திறமையான நடிகைகள் தென் இந்தியாவில் உள்ளனர் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தென் இந்திய திரையுலகம் மீது கரண் ஜோகருக்கு எப்போதுமே பொறாமை என்றும் பலர் கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இவரின் சர்ச்சை கருத்து தற்போது பரபரப்பாகி உள்ளது.

    ×