என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94930"
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை இழிவாக பேசி வரும் எச்.ராஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செய லாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.
மாநில முதன்மை செயலாளர் பாவரசு, மேலிட பொறுப்பாளர் சிவசெல்லபாண்டியன், தொகுதிச் செயலாளர் தம்பிராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி னார்கள்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி இருந்தார்.
இதை கண்டித்தும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை - விழுப்புரம் சாலையில் மூலகுளத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு உழவர்கரை தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பரசன், விடுதலை வளவன், ஆற்றல் அரசு, அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
15 நிமிடத்திற்கும் மேலாக மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 45 பேரை கைது செய்தனர்.
இதுபோல் தவளகுப்பம், புதுவை- கடலூர் சாலை 4 முனை சந்திப்பில் வி.சி.க. வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொகுதி செயலாளர் வெண்மணி தலைமை தாங்கினார். சுடர்வளவன், இன்பதமிழன், புரட்சி வளவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், தமிழ்வளவன், உள்ளிட்ட 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீ சார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்த வர்களுக்கும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தவளகுப்பம் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இந்த திடீர் மறியலால் கடலூர்- புதுவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டக்குப்பம் பைபாஸ் ரவுண்டானா அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தமிழ்மொழி தலைமை தாங்கினார்.
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை செயலாளர் பாவலன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அதன்பிறகு எச்.ராஜா உருவபொம்மையை எரித்தனர்.
இதன் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்ததாக மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #VCK #HRaja
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றது. இது பா.ஜனதாவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்படி செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 5 ஆண்டுகளில் பா.ஜனதா கூறிய தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு இல்லை. தேசத்திற்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்த மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் மதசார்பற்ற கொள்கையுடைய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்கள் பிரதிகள் இல்லாமல் எப்படி உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட முடியும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதை நியாயப்படுத்தும் வகையில் முதல்வர் பேசி உள்ளார்.
எச்.ராஜா ஜாதி ஆணவத்தால் பேசியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
வருகிற ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இலங்கை பாராளுமன்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை காக்கும் வகையில் உள்ளது. தீர்ப்பை வரவேற்கிறேன்.
நீர்நிலைகளில் அமைக்கப்பட்டு உள்ள வீடுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. முதலில் நீர் நிலைகளில் உள்ள கல்வி நிறுவனங்களை அகற்ற அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான பொதுத்தேர்தலின் முடிவுகள் மூலம் மக்கள் பாஜகவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
பா.ஜ.க. கைகளில் நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களையும் பாஜக பறிகொடுத்து இருக்கிறது.
தனது ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துபல முயற்சிகளை மேற்கொண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மோடியா ராகுலா என்று நடந்த இந்த பலப்பரீட்சையில் ராகுல் வெற்றி பெற்றிருக்கிறார். மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார்.
2019-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்பதற்கு பொது மக்கள் ஓரணியில் திரண்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
ஏனென்றால் பாரதிய ஜனதாவுக்கு வலுவான செல்வாக்கு உள்ள மாநிலங்களில் மக்கள் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள்.
இதையொட்டி அவர்கள் மதத்தின் பெயரால் சனா தனத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று முளைக்க தொடங்கி இருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக தான் தென்னிந்தியாவிலும் வன்முறைகளை கட்ட விழ்த்து விட அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் நம்புகின்றனர்.
தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவசேனாவும் விலகி இருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணி பலவீனமடைந்து வருகிறது .
பாரதிய ஜனதா கட்சி பலவீனமடைந்து வருகிறது. சனாதான கட்சிகளும் பலவீனமடைந்து வருகிறார்கள். இன்னும் அவர்களை முற்றிலுமாக பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அண்மையில் திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று கூறுகிறார்.
தீண்டாமை என்பது அதில் இருந்துதான் வருகிறது. ஆகவே சாதி புத்தி என்பது சனாதன புத்தி என்பது எச் ராஜாவை ஆட்டிப்படைக்கிறது என்பது வெளிப்படுத்தும் வகையில் தான் அவர் கூறியிருக்கும் கருத்து உள்ளது.
அவர் மீது தமிழக அரசு உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க பலம் உடைய கட்சியாக இருக்கிறது என ரஜினி நம்பினார். தேர்தலுக்கு பின்பு பா.ஜ.க பலம் இல்லாத கட்சி என்று ரஜினி உணர்ந்து இருக்கிறார். அதையே ரஜினி கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது.
மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #BJP #Election2018
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பா.ஜ.க.விற்கு எவ்விதத் தகுதியும் இல்லை.
தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக் கட்சியாக ஒதுக்கித்தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிற தென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத்தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது.
வடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.ராஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும். அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Seeman #HRaja #Thirumavalavan
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு கோர்ட்டு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்து மத கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளின் படி நிர்வாகம் நடக்கிறதா? என்பதை மட்டும் தான் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். அதனை விட்டு விட்டு புதிதாக சட்டம் இயற்றுவதற்கு கோர்ட்டுக்கு எந்த உரிமையையும் வழங்கப்படவில்லை.
இதனால் திருமாவளவனுக்கு அச்சம் ஏற்பட்டதால், அந்த பழியை பா.ஜ.க. மீது சுமத்தி வருகிறார். பா.ஜ.க. வை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலிலும் மோடி தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வேண்டுமென்றே பா.ஜ.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆணவ படுகொலைகளும் அதிகரிக்க தொடங்கியது. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் அஸ்தமனத்தில் தான் புதிய தமிழகம் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Thirumavalavan #MKStalin
தமிழகத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வையும் சேர்த்துக் கொண்டால் அது கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பா.ம.க.வும் தி.மு.க. கூட்டணியில் சேருமா? என்கிற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி களம் கண்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் பா.ம.க. இடம் பெற வேண்டும் என்றே விரும்புகின்றன. பா.ம.க.வில் உள்ள பலரும், தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவே கூறப்படுகிறது.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதை திருமாவளவன் மட்டும் விரும்பவில்லை. பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று அவர் திரும்ப திரும்ப கூறி வருகிறார். இதுவே தி.மு.க. அணியில் பா.ம.க. சேருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
இது தொடர்பாக திருமாவளவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. நெருடலும் இல்லை. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத்தெல்லாம் பேச மாட்டார்கள்.
என்னை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை.
விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால் தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பா.ம.க. கருதுகிறது. அதனால் தான் விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.
திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ம.க. இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #PMK DMK
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த அணியில் பா.ம. க.வை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் இரு கட்சிகளும் ஒரே அணியில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. நெருடலும் இல்லை. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத் தெல்லாம் பேச மாட்டார்கள்.
என்னை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை.
விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால் தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பா.ம.க. கருதுகிறது. அதனால்தான் விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.
திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ம.க. இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #dmk #pmk
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்