என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபராதம்"
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் பொதுமக்கள் அத்துமீறி செல்லவும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் அத்து மீறி நுழைபவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரேனும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்குகிறார்களா? வனப்பகுதியில் சமையல் செய்கிறார்களா? வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக முதுமலையை சுற்றி பார்க்க கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் மசின குடியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி சுற்றிப்பார்த்து சென்றனர்.
முதுமலையை சுற்றி பார்க்க வந்த பெங்களுருவை சேர்ந்த அனிஸ் சதாநந்தன் (வயது 39) என்பவர் வாழைத்தோட்டத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். அவர் தன்னிடம் இருந்த குட்டி விமானத்தை பறக்கவிட்டு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனபகுதியை படம் பிடித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற சிங்காரா வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், விமானத்தை பறக்கவிட்ட அனிஸ் சதாநந்தனை மடக்கி பிடித்து குட்டி விமானத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து அவரை மசினகுடியில் உள்ள சிங்காரா வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு வனப்பகுதியை படம் பிடித்ததற்காக அனிஸ் சதாநந்தனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் புஷ்பாகரன் உத்தரவிட்டார். அந்த அபராத தொகையை அனிஸ் சதாநந்தன் செலுத்திய பின்னர் அவரை எச்சரித்து வனத்துறையினர் விடுவித்தனர். #MudumalaiForest
திருவள்ளூர்:
திருவள்ளூரில் சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மிதமான வேகத்தில் செல்லு மாறு வாகன ஓட்டிகளுக்கு அவ்வப்போது போக்கு வரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்துக் கழக பறக்கும் படை போக்குவரத்து அலுவலர் மோகன், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகே வேகக் கட்டுப்பாட்டு கருவி மூலம் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, தகுதி சான்று, அனுமதி சான்று இல்லாமல், அதிவேகமாகவும், ஆவணங்கள் இல்லாமலும் விதிமுறை மீறி வந்த 60 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவி குமார், பெருமாள் உடன் இருந்தனர்.
கேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அத்துமீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஷோபா சுரேந்திரனை நீதிபதி கண்டித்தார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட்டு விதித்த அபராதத்தை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஷோபா சுரேந்திரன் கோர்ட்டில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். #BJP #ShobhaSurendran
கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.
அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.
இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.
தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது.
இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.
டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt
பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது 52). இவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி செல்வராசு வழக்கம்போல் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு போலீஸ்காரர், காரில் அமர்ந்திருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களை கூப்பிடுகிறார் என அழைத்துள்ளார்.
இதையடுத்து செல்வராசு அங்கு சென்றபோது, காருக்குள் அமர்ந்திருந்த அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வலுக்கட்டாயமாக செல்வராசை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்சென்று திருட்டு நகையை வாங்கியதாக கூறி, அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு விடுவித்தார்கள்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராசு, தன்னிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன், மனுதாரர் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட செல்வராசுக்கு அரசு இழப்பீடாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
அந்த தொகையை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து வழங்க வேண்டும் என்றும், மேலும் 3 பேர் மீதும் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதில் மன்னர்மன்னன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டராகவும், சிவராஜ் நாகப்பட்டினம் மாவட்டம் கீழவேளூர் இன்ஸ்பெக்டராகவும், ராஜவேலு அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
அன்னூர்:
சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் அன்னூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து அன்னூரில் உள்ள ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த 15 கடைகளில் இங்கு புகை பிடிக்கக் கூடாது என்ற விளம்பர பலகை இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 15 கடைகளிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 3 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.
செங்கோட்டை அருகே தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியில் கடந்த 20-ந் தேதி இரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 12 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை தீவிரமாக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கொட்டுவதற்காக ஏற்றி வந்த பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த 27 வாகனங்கள் அனைத்தும் சோதனைச்சாவடியின் அருகில் உள்ள தனியார் நிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கழிவுகளுடன் இருந்த 27 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செங்கோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு, நெல்லை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இலத்தூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, செங்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செல்வமுருகன், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சமும், 18 வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும், 5 மினிலாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செங்கோட்டை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்ற பின்னர் லாரிகள் மற்றும் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும், கழிவுகளை ஏற்றிய இடத்துக்கே கொண்டு சென்று இறக்கிவிட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகன உரிமையாளர்கள் இன்று அதற்கான அபராத தொகையை கட்டினார்கள். இதன்பின்னர் லாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி சென்றன. #tamilnews
ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பூக்கடை வீதிகளில் உள்ள மளிகை கடை, ஜவுளிக்கடை, பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? பயன்படுத்தப்படுகிறதா? என்பதை நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நகராட்சி துப்பரவு அலுவலர் பாலகுமார்ராஜூ துப்பரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், சையத்காதர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சோதனையிட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக் உள்பட 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது கடைக்காரர்களை அறிவுறுத்தினர்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததாக 15 கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் அபராத தொகையை உடனடியாக கட்டிவிட்டனர். #tamilnews
சென்னையில் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக 605 இடங்களுக்கு மாநகராட்சி ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், காலி இடங்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 605 இடங்கள் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. காலி இடங்களில் கழிவு நீர் தேக்கம், கொசு உற்பத்தி, டெங்கு காய்ச்சல் நோய் பரப்ப காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது.
கொசு, நோய் பரப்ப காரணமாக இருந்த 605 இடங்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.24.45 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள வார்டுகளில் 45 வாகனங்களில் கொசுமருந்து, புகையடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அக்டோபர் மாதம் மட்டும் 325 இடங்கள் கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.12.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அம்பத்தூர் பகுதியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை அபராதம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்களில் பழைய டயர்கள், குப்பைகள், கழிவுகள் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation #MosquitoDisease
டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க தவறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் செந்திரகுமார நாடார் கல்லூரி வளாகங்களில் கலெக்டர் சிவஞானம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்லூரி வளாகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அரசு அலுவலர்கள், அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வீடுகள், கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 1,921 இடங்களில் லார்வா புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்