என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94937
நீங்கள் தேடியது "அபராதம்"
அரூர் பகுதியில் விதிமுறையை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 283 பேரின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் ரத்து செய்தனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 328 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் அதிக பாரம், ஆட்களை ஏற்றி வந்த வாகன டிரைவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 283 பேருக்கு 3 மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி:
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி சிங்கம்புணரி பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். சுகாதார துறை துணை இயக்குனர் அருள்மணி தலைமையிலும், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு முன்னிலையிலும் இந்த ஆய்வு நடைபெற்றது. சிங்கம்புணரியில் உள்ள பல்பொருள் அங்காடி கடைகளில் சோதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான, முத்திரை இல்லாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன. ஆய்வின்போது டாக்டர் பரணிதரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் செயல்தரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று எஸ்.புதூரிலும் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி உத்தரவின் பேரில் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் அருள்மணி தலைமையில் சுகாதார ஆய்வாளர் கேசவராமன் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரியில் உள்ள கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
கோத்தகிரி:
குன்னூர் தொழிலாளர் இணை ஆணையர் தங்கவேலு உத்தரவின்படி உதவி ஆணையர் கிரிராஜன் அறிவுரையின் பேரில் குன்னூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் மல்லீஸ்வரன், கோத்தகிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தராசு மற்றும் எடைகற்களுக்கு உரிய முறையில் முத்தரையிடப்பட்டுள்ளதா? குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்களா? எனவும் சோதனை செய்தனர். மேலும் முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடைகற்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தராசு மற்றும் எடைகற்களுக்கு ஏ.பி.சி.டி என நான்கு காலாண்டுகளில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து தொழிலாளர் துறை அதிகாரிகளால் முத்திரையிடப்படுகிறது. முத்திரையிட தவறியவர்கள் குன்னூர் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று முத்திரையிடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடைகற்களை பயன்படுத்துவதும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் சட்டப்படி குற்றம். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். கோத்தகிரி நகரில் உள்ள சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சவுமியாசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பொதுமக்கள் எந்த ஒரு வணிக நிறுவனத்திற்கு சென்றாலும் உணவுப்பொருட்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப்பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய உணவுப்பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அந்த பொருளை உடனடியாக மாற்றி வாங்கி தரப்படும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பி.ஐ.எஸ். உள்ளிட்ட எண்கள் இல்லை என்றால் அது போலியானது.
கடந்த 6 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வகத்தில் இருந்து வரப்பெற்ற முடிவினை தொடர்ந்து தரமில்லாத 30 உணவு பொருட்களை விற்பனை செய்த உணவு வணிக நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழக்கு தொடரப்பட்டது. அவரின் துரித விசாரணையின் முடிவில் அபராத தொகையாக அந்த நிறுவனத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் கலப்படம் பற்றிய புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சவுமியாசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பொதுமக்கள் எந்த ஒரு வணிக நிறுவனத்திற்கு சென்றாலும் உணவுப்பொருட்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப்பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய உணவுப்பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அந்த பொருளை உடனடியாக மாற்றி வாங்கி தரப்படும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பி.ஐ.எஸ். உள்ளிட்ட எண்கள் இல்லை என்றால் அது போலியானது.
கடந்த 6 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வகத்தில் இருந்து வரப்பெற்ற முடிவினை தொடர்ந்து தரமில்லாத 30 உணவு பொருட்களை விற்பனை செய்த உணவு வணிக நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழக்கு தொடரப்பட்டது. அவரின் துரித விசாரணையின் முடிவில் அபராத தொகையாக அந்த நிறுவனத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் கலப்படம் பற்றிய புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யாகூ, முகநூல் வலைத்தளங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Google #Facebook #Fine
புதுடெல்லி:
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். #Google #Facebook #Fine
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். #Google #Facebook #Fine
ஈரோட்டில் மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு:
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஜவுளி வியாபாரியை தாக்கியது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அலி அக்பர். ஜவுளி வியாபாரி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு என் மீது மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நான், கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், என்னிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இல்லாதபட்சத்தில் என் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க மறுத்த என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டி தாக்கினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சரவணன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அலி அக்பர். ஜவுளி வியாபாரி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு என் மீது மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நான், கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், என்னிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இல்லாதபட்சத்தில் என் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க மறுத்த என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டி தாக்கினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சரவணன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
விசாரணை என்ற பெயரில் சாப்ட்வேர் என்ஜினீயரை அவதூறாக பேசிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
சென்னை:
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாபு என்ற சேஷாத்திரி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு, என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் எனது மனைவி அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி விசாரணைக்காக என்னையும், என் குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். நாங்களும் விசாரணைக்கு சென்றோம். அப்போது இன்ஸ்பெக்டர், எனது மனைவியை நாற்காலியில் அமர வைத்து பேசினார். என்னையும், எனது குடும்பத்தினரையும் நீண்ட நேரமாக நிற்க வைத்து எனது மனைவி முன்னிலையில் என்னை அவதூறாக பேசினார். எனது காலில் காயம் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவது குறித்து இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தபோதும் அவர் என்னை நாற்காலியில் அமர வைக்காமல் வேண்டுமென்றே அவமானப்படுத்தினார். எனவே, இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாபு என்ற சேஷாத்திரி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு, என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் எனது மனைவி அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி விசாரணைக்காக என்னையும், என் குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். நாங்களும் விசாரணைக்கு சென்றோம். அப்போது இன்ஸ்பெக்டர், எனது மனைவியை நாற்காலியில் அமர வைத்து பேசினார். என்னையும், எனது குடும்பத்தினரையும் நீண்ட நேரமாக நிற்க வைத்து எனது மனைவி முன்னிலையில் என்னை அவதூறாக பேசினார். எனது காலில் காயம் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவது குறித்து இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தபோதும் அவர் என்னை நாற்காலியில் அமர வைக்காமல் வேண்டுமென்றே அவமானப்படுத்தினார். எனவே, இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கும் முறையில் சென்னை போலீசார் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
சென்னை:
வாகனங்களில் வேகமாக செல்வது, போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக ‘ஸ்பாட் பைன்’ முறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக அமலில் உள்ளது.
இதற்காக வாகன ஓட்டி களிடமிருந்து போக்குவரத்து போலீசார் ரொக்கமாக பணவசூல் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு முடிவு கட்டும் வகையில் ரொக்கமில்லா அபராதம் வசூலிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி போலீசார் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்க முடியாது.
ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய முறையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப் மிஷின்களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் மனைவியும் மாநில குற்ற ஆவணகாப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர்கள் சேசசாயி, ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தின் கீழ் 6 வழிகளில் அபராத தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் அபராதத்தை செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வங்கி பணபரிவர்த்தனை வழியாகவும் அபராதத்தை செலுத்தலாம்.
சென்னையில் உள்ள 132 தமிழ்நாடு இ-சேவை மையங்கள் வழியாகவும் வாகன ஓட்டிகள் பணத்தை செலுத்தலாம். அஞ்சல் நிலையம் வழியாகவும் கோர்ட்டிலும் அபராதத்தை செலுத்தலாம்.
ஸ்வைப் மிஷின் மூலம் அல்லது மற்ற 5 வழிகளிலும் பணம் செலுத்துபவர்கள் இ-செலான் ரசீதை காட்டி வாகன எண்ணை குறிப்பிட்டு அபராதம் செலுத்த வேண்டும். பின்னர் அபராத ரசீதை அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பித்தவுடன் அபராத நடவடிக்கை நிறைவு பெறும். இந்த அபராதத்தை வாகன ஓட்டிகள் 48 மணி நேரத்துக்குள் கட்ட வேண்டும்.
இந்த புதிய முறை குறித்து கூடுதல் கமிஷனர் அருண் கூறியதாவது:-
ரொக்கமாக போலீசார் அபராத தொகையை பெறும்முறை 25 ஆண்டாக நடைமுறையில் இருந்தது. அது இன்று முதல் முடிவுக்கு வருகிறது. 1992-ல் இருந்து ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலில் உள்ளது. இதன்படி போலீசார் அபராதம் விதித்தபின்னர் அந்த தொகையை கோர்ட்டில் போய் கட்டுவதற்கு 3 நாட்கள் வரையில் அலைய வேண்டி இருக்கும்.
புதிய முறை அமலுக்கு வந்துள்ளதால் இனி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடமிருந்து எக்காரணத்தை கொண்டும் ரொக்கமாக பணம் வாங்கக் கூடாது. அதுபோன்று வாங்கினால் அது லஞ்சம் பெற்றதாக கருதப்படும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
வாகனங்களில் வேகமாக செல்வது, போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக ‘ஸ்பாட் பைன்’ முறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக அமலில் உள்ளது.
இதற்காக வாகன ஓட்டி களிடமிருந்து போக்குவரத்து போலீசார் ரொக்கமாக பணவசூல் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு முடிவு கட்டும் வகையில் ரொக்கமில்லா அபராதம் வசூலிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி போலீசார் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்க முடியாது.
ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய முறையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப் மிஷின்களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் மனைவியும் மாநில குற்ற ஆவணகாப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர்கள் சேசசாயி, ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தின் கீழ் 6 வழிகளில் அபராத தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் அபராதத்தை செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வங்கி பணபரிவர்த்தனை வழியாகவும் அபராதத்தை செலுத்தலாம்.
சென்னையில் உள்ள 132 தமிழ்நாடு இ-சேவை மையங்கள் வழியாகவும் வாகன ஓட்டிகள் பணத்தை செலுத்தலாம். அஞ்சல் நிலையம் வழியாகவும் கோர்ட்டிலும் அபராதத்தை செலுத்தலாம்.
ஸ்வைப் மிஷின் மூலம் அல்லது மற்ற 5 வழிகளிலும் பணம் செலுத்துபவர்கள் இ-செலான் ரசீதை காட்டி வாகன எண்ணை குறிப்பிட்டு அபராதம் செலுத்த வேண்டும். பின்னர் அபராத ரசீதை அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பித்தவுடன் அபராத நடவடிக்கை நிறைவு பெறும். இந்த அபராதத்தை வாகன ஓட்டிகள் 48 மணி நேரத்துக்குள் கட்ட வேண்டும்.
இந்த புதிய முறை குறித்து கூடுதல் கமிஷனர் அருண் கூறியதாவது:-
ரொக்கமாக போலீசார் அபராத தொகையை பெறும்முறை 25 ஆண்டாக நடைமுறையில் இருந்தது. அது இன்று முதல் முடிவுக்கு வருகிறது. 1992-ல் இருந்து ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலில் உள்ளது. இதன்படி போலீசார் அபராதம் விதித்தபின்னர் அந்த தொகையை கோர்ட்டில் போய் கட்டுவதற்கு 3 நாட்கள் வரையில் அலைய வேண்டி இருக்கும்.
புதிய முறை அமலுக்கு வந்துள்ளதால் இனி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடமிருந்து எக்காரணத்தை கொண்டும் ரொக்கமாக பணம் வாங்கக் கூடாது. அதுபோன்று வாங்கினால் அது லஞ்சம் பெற்றதாக கருதப்படும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X