search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94945"

    பெரம்பலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலை ஒடச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 56). கட்டிட மேஸ்திரியான இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப். இவரது மகன் விமல் (வயது 19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஓபசமுத்திரம் படகு துறை அருகே சென்ற மாணவர் விமல், அங்கு கொக்கு மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.

    தகவலறிந்து அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் விமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    ஓசூரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தொரப்பள்ளி அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், பெற்றோருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நவீன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (53). இவர், பேன்சி ஸ்டோர் வைத்து இருந்தார். இவர் கடன் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் மேலவீதியை சேர்ந்தவர் சந்தனசாமி. இவருடைய மகன் இன்பராஜ் (வயது 22). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ், ஏபினேஷ் ஆகியோர் கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்கள். இதனால் துக்கத்தில் இருந்து வந்த இன்பராஜ் நேற்று முன்தினம் இரவு குளிர்பானத்தில் தலைக்கு பூசும் சாயத்தை(டையை) கலந்து குடித்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே எஸ்.கொல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 18). பெங்களூருவில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ரொட்டியில் விஷ மருந்தை தடவி சாப்பிட்டுள்ளார். இதி்ல் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா செம்படமுத்தூர் அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் சென்னம்மாள் (வயது 87). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
    மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). வடபழனியில் உள்ள சினிமா கம்பெனியில் படத்தொகுப்பு உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வர்ஷா தனது கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மேல் அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது பாலாஜி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார்ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா கிட்டம்பட்டி பக்கமுள்ள மட்டமந்தையை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி பிரியா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த பிரியா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியா இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தர்மபுரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி எம்.ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். (வயது 55). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தற்கொலை குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் இருதய லியோ (வயது21). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆளுநர் மாளிகை ஓட்டுனர் குடியிருப்பில், வாட்ஸ்-அப்பில் தற்கொலை செய்து கொள்வதாக செய்தி வெளியிட்டு டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் தேஜஸ் (48). கேரள ஆளுநர் செல்லும் காருடன் செல்லும் பாதுகாப்பு வாகன ஓட்டுனராக பணிப்புரிந்த இவர், கேரள ராஜ்பவன் வளாகத்திற்கு அருகே உள்ள ஓட்டுனர் குடியிருப்பில் தங்கி வந்தார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தனது அறையில் தேஜஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தேஜஸ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேஜஸ் தனது சொந்த பிரச்சினையால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தேஜஸின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை நடவடிக்கைகளுக்கு பிறகு, சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது
    அருப்புக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 33). இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனது அண்ணன் பெரியசாமி என்பவருடன் வசித்து வந்தார். பெற்றோரை இழந்ததால் மனவேதனையுடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பழனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×