search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார்"

    காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #jayakumar #cauveryissue
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆலையை மூடியதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் அந்த ஆலையை திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக மக்களை குழப்பவே முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் நீர் திறக்கும் முழு உரிமை அந்த ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கமலஹாசன் கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என பதிலளித்துள்ளார். #jayakumar #cauveryissue
    எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.#ADMK #EdappadiPalanisamy #Opanneerselvam #Jayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- ‘கட்சி தொடங்காவிட்டாலும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்புகளை பலப்படுத்தி வருவதாகவும், பெண்கள் தான் கட்சிக்கு முழு ஆதாரம்’ என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?

    பதில்:- ரஜினிகாந்துக்கு காலம் கடந்த ஞானோதயம் ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்லமுடியும். ஆட்சியிலும், கட்சியிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும், அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை தருவதில்லை என்றும், புதிய உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள் சரிவர இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?



    பதில்:- எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. இதுபோல தவறான கருத்துகள் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. வெளியில் இருந்து கொண்டே சிலர் நாரதர் போல சிண்டு முடிகிற வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். என்ன செய்தாலும் அ.தி.மு.க.வின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. உறுப்பினர் சேர்க்கை என்பது ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். எப்படி அ.தி.மு.க.வை ஒரு வலிமைமிக்க இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினாரோ, அதேபோல 1.5 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட ஒரு வலிமையான இயக்கமாக அ.தி.மு.க. இயங்கும்.

    கேள்வி:- நடிகர் எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார்? என்ற தகவல் கிடைத்திருக்கிறதா?

    பதில்:- இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகளை ஏற்று, அதன்படி உரிய நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.#ADMK #EdappadiPalanisamy #Opanneerselvam #Jayakumar
    எஸ்.வி. சேகரை கைது செய்ய அமைச்சர் ஜெயக்குமார் நடுங்குவதாகவும், வரும் தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை பார்க்கும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.

    கமலின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

    நான் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர்தான் தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டல் விடும் தொனியில் பேசி வருகிறார்.

    விவேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். முதலில் எஸ்.வி. சேகரை கைது செய்ய சொல்லுங்கள். அவரை கைது செய்ய பயந்து நடுங்குகிறார்கள்.

    வரும் தேர்தலுக்கு பிறகு ஜெயக்குமார் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்.

    சசிகலா நோட்டீஸ் மூலம் திவாகரனுக்கு உரிய பதில் தெரிவித்து விட்டார். நான் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது வெற்றிவேல் உடன் இருந்தார்.
    ×