என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95081"
திண்டிவனம்:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி திண்டிவனம் காந்தி சிலை அருகே காலை 9 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுடன் வேட்பாளரும் அங்கிருந்தார்.
பகல் 11 மணிக்கு கமல் ஹாசன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். நண்பகல் 12.15 மணிக்கு கமல்ஹாசன் அங்கு வந்து திறந்த வேனில் நின்றபடி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார்.
நல்ல கட்சிக்கு ஓட்டுப் போட்டு, மாற்று சரித்திரத்தை உருவாக்க வேண்டும். எங்கள் கட்சியில் பணப்பட்டுவாடா இருக்காது. மற்ற கட்சியினர் உங்களின் ஏழ்மை- வறுமையை பயன்படுத்தி கொண்டு உங்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்று விடுகிறார்கள்.
மக்களும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஓட்டுகளை போட்டு விட்டு அதன் பின்னர் 5 ஆண்டுகள் முச்சந்தியில் நிற்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை 5 வருடத்துக்கு கணக்கு போட்டு பார்த்தால் 0.01 சதவீதம் கூட இருக்காது. உங்கள் பணத்தையே ஓட்டுக்காக உங்களுக்கு கொடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தை கட்சிக்காரர்கள் சேமிப்பாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் 100 மீட்டர் தூரம் நடக்கும்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்ல கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். அப்போதுதான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் கமல்ஹாசன் புதுவை மாநில வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அங்கிருந்து புறப்பட்டு புதுவை சென்றார். #kamalhaasan #makkalneedhimaiam
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
பின்னர் படப்பை வந்தார். அங்கு கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடத்தில் பிரசாரம் செய்ய வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கும் நிர்வாகிகள் சிலரே இருந்தனர். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று காலை 8 மணிக்கு பல்லாவரத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
அதன்பிறகு அவர் தாம்பரம், படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
மதியம் 3 மணிக்கு தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு பூந்தமல்லி பஸ் நிலையம், திருமங்கலம், நாதமுனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இரவு 7.30 மணிக்கு வில்லிவாக்கம் பஸ் நிலையம் பகுதியில் பேசும் அவர் தொடர்ந்து அயனாவரம் இணை அலுவலகம், புரசைவாக்கம் தாணா தெரு, சூளை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 10 மணிக்கு யானை கவுனியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். #LokSabhaElections2019 #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தென் சென்னை பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்த அவர் இன்று மத்திய சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது 2 நாட்களாக கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்த கமல் விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு இருந்து துடியலூர் சென்ற கமல், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக் கூடிய சூழல் இல்லாவிடில் நல்ல தமிழகமாக இருக்காது. சிறுமி வழக்கில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என நம்புகிறேன்’ என்றார். #KamalHaasan #GirlHarassment
ஆலந்தூர:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல விஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.
நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan
மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 39 பாராளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அவரது கட்சியின் பலத்தை தெரிந்துகொள்ள மற்ற அரசியல் கட்சிகளும் ஆர்வமாக இருந்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான கடந்த மார்ச் 26-ந்தேதி பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. திடீர் என்று வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் களம் காண முடியாமல் போனது.
வேட்பு மனு பரிசீலனையின்போது காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது.
2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்காக இதுவரை செய்த பணிகள் அத்தனையும் வீணாகியதால் அந்த பகுதிகளின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்திலும் உள்ளனர். #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அவரது கட்சி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் நாளை தென் சென்னை தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 29-ந்தேதி மத்திய சென்னை, வட சென்னை பாராளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
30-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், மத்திய சென்னை மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி, 31-ந் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி,
ஏப்ரல் 1-ந்தேதி புதுச்சேரி, கடலூர், 2-ந்தேதி நாகை, திருச்சி, மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 3-ந்தேதி திண்டுக்கல், பொள்ளாச்சி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, 4-ந்தேதி பொள்ளாச்சி, திருப்பூர், 5-ந்தேதி கோவை, 7-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, 8-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் சாத்தூர், விளாத்திக்குளம், சட்டமன்ற தொகுதி,
9-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, மற்றும் மானாமதுரை, பரமக்குடி, சட்டசபை தொகுதி, 10-ந்தேதி தேனி, கரூர், திருச்சி மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி.
11-ந்தேதி பெரம்பலூர், நாகை, 12-ந்தேதி சேலம், நாமக்கல், 13-ந்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அரூர், பாப்பிரெட்டிபட்டி, ஓசூர், 14-ந்தேதி வேலூர், ஆரணி, திருவண்ணாமலை மற்றும் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, 15-ந்தேதி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், 16-ந்தேதி, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். கமல்ஹாசன் 19 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கமல்ஹாசன் பெயர் பட்டியலில் இல்லாதது பொது மக்களுக்கு ஆச்சர்யத்தையும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கமல் தென்சென்னை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராமநாதபுரத்தில் கமலுக்காக பிரசாரமே தொடங்கப்பட்டது.
ஆனால் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘எங்களை பொறுத்தவரை அவர் முதல் அமைச்சர் வேட்பாளர். எனவே சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவார்.
அவர் போட்டியிடுவேன் என்றுதான் கூறினார். ஆனால் நாங்கள் தான் வேண்டாம் என்று மறுத்தோம். இந்த தேர்தலில் அவர் எல்லா தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் கட்சி பதிவதுதான் அவசியம்’ என்றனர்.
கமல் கட்சியில் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரனுக்கு கோயம்புத்தூரில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கோவை மக்களுக்கு பரிச்சயமானவர். டாக்டரான மகேந்திரன் விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டவர். கோவை பகுதியில் பிரபலமானவர். எனவேதான் அவரை நிறுத்தி இருக்கிறார்.
கவிஞர் சினேகன் சிவகங்கையில் நிற்கிறார். சினேகனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள கரியாபட்டி. ஆனால் சிவகங்கை தொகுதிக்கும் சினேகன் பரிச்சயமானவர். ஒரு அமைப்பு தொடங்கி நடத்திய போது அந்த பகுதிகளில் தான் பிரபலமானார். எனவே சிவகங்கை தொகுதியை கேட்டு வாங்கியுள்ளார்.
பைக் ரேசரான இவர் பொள்ளாச்சி பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர். கடந்த 8-ந்தேதி தான் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் செயலியில் இவர் அளித்த புகார் தான் செய்தியானது. அதன் பிறகே இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டதாக உங்கள் மீது வரும் விமர்சனங்கள்?
பதில்:- நான் பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். இதுவே என் வேலை. நான் பின்வாங்கி விட்டதாக வரும் விமர்சனங்கள் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன்.
ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால் தொகுதி நலன் கருதி சுயநலத்துடன் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கேள்வி-: திடீர் மம்தா சந்திப்பு பயணம் ஏன்?
பதில்:- நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள்.
பதில்:- மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.
தேர்தல் பிரசாரம் செய்வதற்கு முன் சாத்தியமா என்பதை வல்லுநர்களுடன் பேசி நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன் வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #DMK #KamalHaasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்