search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் உரிய அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது தொடர்பாக பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர்கள் இன்று நோட்டீசு அனுப்ப உள்ளனர். #LSPolls #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    முன்னதாக சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மதியம் டாக்டர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சென்றனர்.

    உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கலந்துரையாடல் கூட்டம் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    இந்நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ராஜாமணி, சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர்கள் இன்று நோட்டீசு அனுப்ப உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று நோட்டீசு அனுப்பப்படும். அதன் பேரில் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். விளக்கம் திருப்திகரமாக இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #LSPolls #KamalHaasan
    என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும் என்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #makkalneedhimaiam
    சென்னை:

    கோவையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல் பேசியதாவது:- 

    நடிகர் தானே என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார், நான் நேர்மையான நடிகன், வருமான வரியை பாக்கி இல்லாமல் கட்டுபவன்.  என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும். 5 ஆயிரம் மதுக்கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது?   கஜா, ஒகி புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக 4 முறை தமிழகம் வருகிறார். 

    மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியிலும், தண்ணீர் பிரச்சனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படும், மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமை தொகுதியாக மாற்றப்படும்.

    ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும், குறைந்த அளவு தண்ணீரில் விவசாயம் செய்யும் ஜப்பான் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும். 

    ஏழைகளை உள்ளே வராமல் தடுத்து பணக்காரர்களை காக்கும் காவலாளிதான் மோடி. நம்மை தெருவுக்கு கொண்டு வந்ததுதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்களின் சாதனை. 

    மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைத்து செய்ய முடியாத வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும்; எம்பிக்கள் தவறு செய்தால் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜினாமா கடிதம் வரும்.

    பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தாண்டி மக்கள் நீதி மய்யம் வெல்லப் போகிறது. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு விலைக்கு வாங்கப்படுகிறது தடுக்கப்படும். குடிசைகள் இல்லா தமிழகம் காண்போம்; விவசாயம், தொழில்துறைக்கு திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம்.  மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும் நீர் மேலாண்மையில் முக்கியத்துவம் பெறும். தண்ணீர் பிரச்னை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

    சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.  காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ், தி.மலை - அருள், ஆரணி - வி.ஷாஜி, கள்ளக்குறிச்சி - கணேஷ், தென்சென்னை - ரங்கராஜன், மதுரை - அழகர், தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ், கடலூர் - அண்ணாமலை, தென்காசி - முனீஸ்வரன், திருப்பூர் - சந்திரகுமார், பெரம்பலூர் - அருள்பிரகாசம்,  நாமக்கல் - ஆர்.தங்கவேலு, ஈரோடு - சரவணக்குமார், ராமநாதபுரம் - விஜயபாஸ்கர், கரூர் - ஹரிஹரன் போட்டியிடுகின்றனர். 

    மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. #KamalHaasan #makkalneedhimaiam 
    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
    புதுச்சேரி:

    நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இதில் புதுச்சேரி தொகுதியில் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து, கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை இணைத்தல் ஆகியவை தான் முக்கிய பிரச்சனையாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறி வருகின்றனர். ஆனால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவது கூட இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பளித்தால், நிச்சயம் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.



    மேலும் எனது தேர்தல் பிரச்சாரத்தினை மார்ச் 27 அன்று கலாபேட்டிலிருந்து துவங்க உள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ஏஎப்டி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வார்.

    இவ்வாறு அவர் பேசினார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:
     
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர்காணல்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.

    நேர்காணலுக்கு பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடைபெற்றது. கமல்ஹாசன் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முழுக்க தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முன்பே கூறி இருந்தார். அதன்படி வேட்பாளர் தேர்வில் கல்வித்தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ந்தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.

    நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    குறிப்பாக, கமல்ஹாசன்  தனது சொந்த ஊரான ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற போகும் அம்சங்கள் குறித்தும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் நாளை கோவை பொதுக்கூட்டத்தில்  விடை கிடைக்கும் என்பதால்  தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று மாலை கோவை வருகிறார்.


    கமல்ஹாசன் போட்டியிட இருப்பது தென் சென்னையிலா அல்லது ராமநாதபுரத்திலா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். நாளை நடக்கும் இந்த கூட்டத்தில் தான் கமல், ஸ்ரீபிரியா, சினேகன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் தெரியவரும். கமல் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்கிறார்கள்.

    நாளை வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார்.

    புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன.

    கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த பேச்சாளர்கள் மூலம் இவர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மேடைகளில் நாகரிகமாக பேசுவது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், திட்டங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திண்டுக்கல்லில் அனுமதி பெறாமல் நடத்த முயன்ற மக்கள் நீதி மய்ய கூட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். #LSPolls #MakkalNeedhiMaiam
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டாக்டர் சுதாகர் போட்டியிடுகிறார். இதனையொட்டி அக்கட்சி சார்பில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு நிர்வாகிகள் ஒன்று கூடினர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெற வேண்டும் எனவும், கொடி கம்பங்கள் ஊன்றுதல், மைக் செட் போடுதல் என அனைத்துக்கும் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து அந்த கூட்டத்துக்கு எவ்விதமான அனுமதியும் வாங்கவில்லை என தெரிய வரவே அதனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #LSPolls #MakkalNeedhiMaiam
    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 பேரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். #LSPolls #MNM
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டார்.

    மத்திய சென்னையில், கமீலா நாசர், வடசென்னையில் முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முதல் வேட்பாளர் பட்டியலில் 3 மருத்துவர்கள், 5 வக்கீல்கள், முன்னாள் ஐஜி, முன்னாள் நீதிபதி ஆகியோரும் 8 தொழில் அதிபர்களும் வேட்பாளர்களாகி உள்ளனர்.

    21 பேரில், 15க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழானவர்கள். அனைவருமே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதில் 3 பேர் எம்.பில். பட்டதாரிகள்.

    2-வது கட்ட பட்டியல் விரைவில் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென்சென்னையிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    ‘கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார். இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். ஒரு பூத்துக்கு 9 பேர் வீதம், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 4500 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மார்ச் 24-ந்தேதி வெளியிடப் போகும் தேர்தல் வாக்குறுதிகளோடு, தொகுதியின் முக்கியமான பிரச்சினைகளையும் மையமாக வைத்து பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாத கடைசியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    ரசிகர் மன்றத்தை சார்ந்த ஒருவர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அடுத்த வேட்பாளர் பட்டியலில் சிநேகன் பெயரும் இடம்பெற உள்ளது.

    முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் கமல் கூறியதாவது:-

    எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கவனம் செலுத்தியுள்ளோம். குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    என் சின்ன வயதில் இருந்தே ஈர்த்த வாக்குறுதிகளைதான் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அளித்துள்ளன. அதை செயல்படுத்ததான் அவர்களால் முடியவில்லை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் களமிறங்கி உள்ளோம்.

    நமது தமிழ் நாட்டை ஆங்கிலத்தில், ‘லேன்ட் ஆப் ரைசிங் சன்’ என்பார்கள். அந்த சன், சூரியனல்ல, வாரிசுகள் என்பது இப்போதுதான் புரிகிறது

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை 2 கட்டமாக பார்க்க வேண்டும். சட்டம், கருணை. இப்போது கருணை தேவை என்று நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட பயப்படவில்லை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LSPolls #MNM
    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். #makkalneedhimaiamparty #kamalannouncescandidates
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வந்தார்.



    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடவிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் இன்று வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் பெயர் வருமாறு:-

    அரக்கோணம்-என். நாகேந்திரன், வேலூர்-ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி- காருண்யா, தர்மபுரி-வழக்கறிஞர் ராஜசேகரன், விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் -என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர்  ராஜேந்திரன், திண்டுக்கல்- டாக்டர் சுதாகர், திருச்சி- வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை- கமிலா நாசர், சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபைதின், நாகை- குருவையா, தேனி- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி- வெண்ணிமலை, கன்னியாகுமரி-எபிநேசன், புதுச்சேரி-எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வடசென்னை- ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர்- என் சிவக்குமார்.

    முதற்கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வேட்பாளர்கள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #makkalneedhimaiamparty #kamal

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #makkalneedhimaiamparty #kamal
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல், பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் என தகவல் வெளியாகியது. இப்போது குமரவேல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. வேட்பாளர்கள் நேர்காணல் முடியும் முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கட்சியில் இருந்து விலகிய குமரவேல், செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன் என்றார். 

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #makkalneedhimaiamparty #kamal
    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சி.கே.குமரவேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #CKKumaravel #MNM #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார்.



    எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

    தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. #CKKumaravel #MNM #KamalHaasan
    ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் பாரதிய ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் வியூகம் அமைத்து வருகிறார். #MakkalNeedhiMaiam #KamalHassan #Election2019
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    கமல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்கள் பற்றி பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் தென் சென்னையிலோ ராமநாதபுரத்திலோ களம் இறங்கலாம் என்றும் கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

    மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. வேட்பாளர் தேர்வு பற்றி தலைமை நிர்வாகிகள் கூறும்போது:-

    வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பா.ஜனதாவுக்கு கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பது. இதற்காக அந்த கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.

    பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனவே இந்த 5 தொகுதிகளிலும் கட்சியில் உள்ள பிரபலங்களை களம் இறக்க இருக்கிறோம்.

    ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி. கோயம்புத்தூரில் துணைத்தலைவர் மகேந்திரன் களம் காண்பார். மற்ற தொகுதிகளில் ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சினேகன், சுகா, கு.ஞானசம்பந்தம், கோவை சரளா இவர்களில் 3 பேர் களம் இறங்குவார்கள்.



    கமல் கட்சியில் இணையாத அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எனவே நாளை மறுநாள் வெளியாகும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் பா,ஜனதாவை இங்கே நோட்டாவுக்கு அடுத்த இடத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்.

    பா.ஜனதா மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கமல் கட்சி தொடங்கியதே அ.தி.மு.க அமைச்சர்களை எதிர்த்து தான். ஆனால் சமீப காலமாக பா.ஜனதா தலைவர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். பதிலுக்கு கமலும் நோட்டாவால் தொலைந்து போன பா.ஜனதாவை டார்ச் லைட் வைத்து தேடப்போகிறேன் என்றார்.

    இது தொடர்பாக எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பா.ஜனதாவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்“ என பதிவிட்டார். இதுபோன்ற மோதல்களால் கமல் பா.ஜனதாவை வீழ்த்தியே தீருவேன் என்று தீவிரம் காட்டுகிறார்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் கமல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    எப்போதுமே தமிழ் நாட்டின் தண்ணியில்லாக்காடு என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம்தான். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை. கட்சி ஆரம்பிக்கும்போதே, ‘உங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன, ஒரு பட்டியல் கொடுங்கள், அதை சரி செய்ய முயலுங்கள்” என்று கமல் சொன்னார். அதன்படி நாங்கள் இந்த 6 மாதமாக இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறோம்.

    பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம்.

    இந்த 6 மாதத்தில் மாவட்டம் முழுவதும் இந்த பணி விரிவடைந்துள்ளது. இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். கமல் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHassan #Election2019
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் 20-ந்தேதி வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-



    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வில் கமல்ஹாசன் தீவிரமாக இருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் யார் என்று சொந்த தொகுதியிலேயே கேட்கும் அளவுக்கு பிரபலம் இல்லாதவராக கூட இருக்கட்டும். ஆனால் தகுதியும் நேர்மையும் தான் முக்கியம் என்று உறுதியாக இருக்கிறார். அதனால் தான் நேர்காணலில் அவரே நேரடியாக பங்கேற்றார். அதுவும் காலையில் இருந்து நள்ளிரவு வரை நேர்காணல் செய்தார்.

    மற்ற கட்சிகளில் நேர்காணல் செய்பவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் முக்கிய பொறுப்பாளர்கள்தான் நேர்காணல் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் கமல் கட்சியில் ஒரு பக்கம் கட்சிக்காரர்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் இருந்தனர்.

    பொதுவாக ஒரு கட்சியின் நேர்காணலில் முதல் கேள்வியே “எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க?” என்பதுதான் இருக்கும். ஆனால் கமல் கட்சியில் அப்படி இல்லை. “மக்களுக்கான நற்பணிகள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள், உங்கள் தொகுதி பிரச்சனைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா?” இதுதான் முதல் கேள்வியே. இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது.

    வேட்பாளர்கள் பதில்கள் சொல்ல சொல்ல, அதை அங்கு இருக்கும் குழுவினர் உடனடியாக குறித்து வைத்து கொண்டார்கள். கமலும் கையில் ஒரு பேனா வைத்து கொண்டு அதை குறிப்பெடுத்தார்.

    இது நேர்காணல் போலவே இல்லை. ஏதோ ஒன்றாக உட்கார்ந்து கலந்துரையாடுவதை போல இருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் இது புதுமை.’

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan #tngovt #edappadipalanisamy
    சென்னை:

    பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் , “தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் மிக அலட்சியமாக வெளியிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

    இதனை அடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

    அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?, வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது?. பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்கு பதறவில்லையா?, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமின்றி காப்பாற்ற துடிப்போருக்கும் தண்டனை உண்டு. இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதி காக்கிறது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்?” என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan #tngovt #edappadipalanisamy
    ×