search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் 16-ந்தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் 16-ந்தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    கட்சி தலைமை அலுவலகத்திலும், பொள்ளாச்சி கட்சி அலுவலகத்திலும், மொபைல் செயலி, இணையதளம் மூலமாகவும் விருப்பமனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam
    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா கோவையில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மூன்றாவது நாளாக நேர்காணல் நடந்தது.

    இரவும், பகலுமாக நடக்கும் வேட்பாளர் தேர்வில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு நேர்காணல் நடக்க இருக்கிறது.

    மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக விழா, கோவையில் வரும், 24-ந்தேதி நடக்க இருக்கிறது. இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவை கொடிசியா வளாகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணி அளவில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது.

    தேர்தலில் தமிழர்களின் ஒலியாய் தமிழகத்தின் ஒளியாய் வருங்காலத்தின் வழியாய் நமக்கான ஆட்சி அமைய உங்கள் வேட்பாளர்களின் அறிமுக விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். #PollachiAbuseCase
    சென்னை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று மதியம் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் டிகே.ராஜேந்திரனிடம் மனு அளித்தார். அதில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். #PollachiAbuseCase
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் `இந்தியன் 2' படம் பணப் பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் - ‌ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக தன் மகனையே கொல்லும் சுதந்திர போராட்ட வீரராக நடித்து இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இதன் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர்.

    இந்தியன் 2 என தலைப்பிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பட பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே இல்லாமல் நிற்கிறது.

    படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப்போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக பொருந்தவில்லை என்கிறார்கள். அவருக்கு மேக்கப்பினால் அலர்ஜியாகி உள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

    மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு, தயாரிப்பு நிறுவனம் பணத்தை தயார் செய்துவருகிறது. அந்த நிறுவனம் சீனாவில் வெளியிடும் 2.0 படம் வெளியானால் நல்ல பலன் தரும் என்று காத்திருக்கிறார்கள்.



    மீண்டும் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களிடம் தேதிகள் வாங்க வேண்டும். தற்போதைக்கு தேர்தல் முடியும் வரை கமல், தன் அரசியல் பயணத்தில் பிசியாகி உள்ளார். இதனால், தேர்தல் முடிந்து கமல் மீண்டும் நடிக்க திரும்ப வேண்டும். அதற்குள் அவரும், தன் உடலை ‘இந்தியன்2’ படத்துக்காக மாற்ற வேண்டும்.

    இந்த தகவல்களை எல்லாம் வைத்து படக்குழுவிடம் விசாரித்தால், “எவ்வித பிரச்சினையுமே இல்லையே. மீண்டும் விரைவில் தொடங்குவோம்“ என்கிறார்கள்.

    படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட வி‌ஷயங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை. #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் இதுவரை 1137 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கமல்ஹாசன் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. #Parliamentelection #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

    கமல் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை கட்சி தலைமை அலுவலகம், பொள்ளாச்சி கட்சி அலுவலகம் மற்றும் இணையதளம், மொபைல் செயலி மூலமாகவும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.

    இலவசமாக வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க மட்டும் விண்ணப்ப கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் நிகழ்வு நேற்றும் நேற்று முன் தினமும் நடந்தது. கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனே நேரடியாக விண்ணப்பங்களை வாங்கினார்.

    நேற்று மாலையுடன் விருப்ப மனு பெறும் பணிகள் நிறைவடைந்தன. இதுவரை 1137 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கமல்ஹாசன் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. அதிகமாக ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் வந்துள்ளது. ராமநாதபுரம் கமல்ஹாசன் பிறந்த ஊர் ஆகும். தென்சென்னை கமலின் தற்போதைய வீடு, அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையை உள்ளடக்கிய தொகுதி.

    விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் நாளையும் நடக்க இருக்கிறது. இதற்காக கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. #Parliamentelection #KamalHaasan

    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் குடும்பத்துக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #Abhinandan #KamalHaasan
    சென்னை:

    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அபினந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொது மக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அபினந்தனின் தந்தை வர்த்தமானை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். வர்த்தமானும் முன்னாள் ராணுவ வீரர் தான். அவரிடம் கமல் கூறியதாவது:-

    ‘ஏற்கனவே மனோபலம் உள்ள உங்களை போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் இந்த பணி உன்னதமானது. உங்களைப்போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அபினந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்.

    இது குறித்து நான் டுவிட்டரில் எதுவும் வெளியிடவில்லை. ஏனெனில் இது விவாதப் பொருளோ அதற்கான நேரமோ இல்லை. இது விவேகத்திற்கான நேரம். எனவே தான் நான் உங்களிடம் நேரடியாக பேசுவது முக்கியம் என்று நினைத்து உங்களை அழைத்தேன். எனது அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் நிம்மதியாக தூங்குவதற்கு காரணமே நீங்கள் தான்.

    ஆனால் இன்று இரவு நீங்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்பது வருந்தத்தக்க செய்தி. அபினந்தன் மீண்டும் பாதுகாப்பாகவும் நலமுடனும் நாடு திரும்பி வருவார் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.’

    இவ்வாறு கமல் ஆறுதல் கூறினார்.

    தனக்கு ஆறுதல் கூறியதற்காக கமல்ஹாசனுக்கு வர்த்தமான் நன்றி தெரிவித்துள்ளார்.  #Abhinandan #KamalHaasan
    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் என்று கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 தினங்களில் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தமிழக பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது அதே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் படேல் சிலையை திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.300 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கமாட்டார்.


    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதற்கு தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ளதால், தங்களுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பில்லை. நட்புடன் இருப்போம் என்று எங்களது கட்சித்தலைவர்கள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தொகுதிப் பங்கீடு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ParliamentElection
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார்.



    ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்தார். சுமார் அரைமணி நேர சந்திப்பிற்கு பின் கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ‘மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதல் எங்களுக்கு ஆதரவு அளித்து வருபவர் கெஜ்ரிவால். இதை அவரிடம் தேர்தல் சமயத்தில் நினைவூட்ட வந்தேன். இந்தமுறை ஆம் ஆத்மி தமிழகத்தில் போட்டியிடவில்லை. இதனால், அவர்கள் சார்பில் போட்டியிடும் எங்களுக்கு அந்த கட்சி ஆதரவு அளிக்கும்.

    இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்றும் நட்பு மட்டுமே என்றும் கூற முடியாது. காரணம் எங்களுக்கு இடையில் வளர்ந்த நட்பே அரசியலினால் தான். எங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு முதல் குரல்கொடுத்து ஆரம்பித்தவரே அவர் தான். அவருக்கு நேரம் கிடைக்கும் போது தமிழகத்திற்கு வந்து எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தோம்.’

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையில் கூட்டணிகள் அமைந்தது போல கமலின் கட்சியும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இதுகுறித்து கமல் கூறும்போது, ‘தேவைப்பட்டால் தனித்து போட்டியிடுவோம். கூட்டணிக்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. எல்லோருடனும் கைகுலுக்கி விட முடியாது என்பதில் திண்ணமாக இருக்கிறோம். மக்களுக்கு உணவு பரிமாறும்போது எங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பேராசை தான் காரணம். எங்கள் அழுத்தமான முடிவை டெல்லி முதல்வர் பாராட்டினார்.’ என்றார்.

    நேற்று பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக எழுந்துள்ள புகார் மீதும் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார். ‘அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு துணையாக, எங்கள் நாட்டைப் பாதுகாக்கும் படையினர் வரமாட்டார்கள் என நம்புகிறேன்.

    எனவே, அவர்கள் நாட்டை காப்பதற்கான கடமையை செய்துள்ளார்கள். ஒரு பெரிய நாடு தன்னைக் காத்துக்கொள்ள என்ன செய்யுமோ, அதையெல்லாம் அவர்கள் செய்து இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்.

    பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்து பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் டெல்லி தலைமையை சந்தித்து பேசிவிட்டு வந்ததாக செய்திகள் வெளியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார். அப்போது தமிழக தேர்தல் குறித்து கமல் பேசியுள்ளார்.

    அதற்கு பிரகாஷ் காரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். தமிழகத்தில் தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம்.

    இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்து விட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #ParliamentElection


    கமல்ஹாசனுக்கு நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.50.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவாலயம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நினைவு நாள் வருவதற்குள் இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு நினைவாலயமாக உருவாக்கப்படும். அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.20 கோடி செலவில் நினைவு இல்லமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட உடன், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

    ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதை சொன்னாலும் பொத்தாம் பொதுவாக படத்தில் வேண்டுமென்றால் வசனம் பேசலாம். எந்த மாண்பு குறைந்து விட்டது, யாருடைய மாண்பு குறைந்து விட்டது என்று அவர் சொன்னால் பதில் அளிக்கலாம். ஆனால், அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை. அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

    மாண்பு போய் விட்டது என்று சொன்னால், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்க தயார். அவர் தயாரா?. அவரது மாண்பு, மரியாதை, மானம் வேண்டுமானால் போகலாம். இன்று அரசியலுக்கு வந்த பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை. இதுவரை பேசிய எதையும் நிரூபிக்க தவறிய கமல்ஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல் போவார்.



    எங்கள் கூட்டணியை பற்றி தி.மு.க.வுக்கு என்ன கவலை. கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தை சாப்பிட்டவர் ஒருவர், அதனை பார்த்துக் கொண்டிருந்தவர் மீது வழக்கா என அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாக சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும் சேர்த்ததற்காக கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் தெரிவித்தார்.

    எங்கள் கூட்டணியை பார்த்து நாங்கள் கூறவில்லை. 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரசை சொன்னார். அந்த காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

    இது கொச்சைப்படுத்துகின்ற வார்த்தை. தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி வைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிட பாரம்பரியம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார்.

    கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதே போல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணி செயலாளராகவும் உள்ளார். ஆனால் தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #KamalHaasan
    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக தே.மு.தி.க.வுடன் பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #DMDK
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி.

    ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும், மனதும் உண்டு.



    தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம். தேவைப்பட்டால் தான் தனித்து போட்டி. அதுக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் கருத்து வேறுபாடு உடையவர்களுடன் கூட்டணி கிடையாது.

    21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். ரஜினி எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பாரா? அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு அளிப்பாரா? என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஆதரவு குறித்து பேசுவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 28-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை விருப்ப மனு படிவம் வழங்கப்படும்.

    இதில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மட்டும் இல்லாது உறுப்பினர் அல்லாதவர்கள், சிறந்த எம்.பி. ஆக வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுவை ரூ.10 ஆயிரம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

    அரசியலில் விமர்சனம் இயல்பு. கூட்டணி வைப்பது இயல்பு. ஆனால் கருத்து ஒத்துப்போவது என்பது மிக முக்கியம்.

    ‘பி டீம்’ என்பதற்கு சரியான பதிலடியாக மீண்டும் கெட்ட வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். செயலின் மூலம் பதிலடி இருக்கும்.

    அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பணத்திற்காகத்தான் என்று எழும் விமர்சனத்திற்கு மக்களின் எண்ணம் எதுவோ அதுவே எனது எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #DMDK

    மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனு விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவினை கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் வருகிற 28-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

    புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விழைவோர் இவ்விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்.


    மாற்றத்தை விரும்புவோர் விருப்ப மனுவில், ‘தான் தகுதியானவர் என்று நினைப்பவரை பரிந்துரைக்கலாம் அல்லது தமக்கே அத்தகுதிகள் இருப்பதாய் நம்புபவர் இம்மனுவை சமர்ப்பிக்கலாம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்ப மனுவைப் பெற விண்ணப்பத்தொகை ரூ.10 ஆயிரம் செலுத்துதல் அவசியம்.

    விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், மக்கள் நீதி மய்யத்தின் சென்னை தலைமையகத்தில் வருகிற 7-ந்தேதிக்கு பிறகு கட்சியின் “தேர்தல் குழு” அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும்.

    சாதனை என்பது சொல் அல்ல, செயல். நாளை நிகழப்போகும் மாற்றத்தை நமதாக்கிக் கொள்ள விரைந்து விண்ணப்பிக்கவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ‘தாதா 87’ படத்தில் கமல் பாடலுக்கு அவரது அண்ணன் சாருஹாசன் ரொமன்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. #DhaDha87 #CharuHaasan #Kamal
    கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, ஜனகராஜ், மனோஜ்குமார், ஆனந்த்பாண்டி, ஜெனி பல்லவி, அனுலாவண்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விஜய் ஸ்ரீஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 2 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.



    அதில் கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெறும் ‘இஞ்சி இடுப்பழகி...’ என்ற பாடலுக்கு சாருஹாசனும், சரோஜாவும் ரொமன்ஸ் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    ×