என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 95081
நீங்கள் தேடியது "slug 95081"
தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று மலேசிய கலைத்திருவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan
சென்னை:
தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழர் என்பது தகுதி அல்ல, விலாசம். நான் தமிழன் என்பதை மட்டுமே தகுதியாக நினைத்துவிடக்கூடாது. தகுதிக்கு வேண்டிய எல்லா பயிற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.
எத்தனையோ ஏழைகள் கலைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒற்றையடி பாதையாவது போட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலம் வரும். நாளை நமதாகும் என்ற நம்பிக்கையில் இன்று பொங்குவது போன்று என்றும் பொங்கட்டும் தமிழ்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ‘ஆஸ்ட்ரோ’ நிறுவனத்தின் இந்திய மொழிகள் திட்டத் தலைவர் என்.சி.ராஜாமணி, மலேசிய நாட்டு துணை சபாநாயகர் ரவி, மலேசிய தூதர் சரவணன் கார்த்திகேயன், துணை இயக்குனர் லோகிதாசன் தனராஜ், எம்.எல்.ஏ. காமாட்சி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #KamalHaasan
மலேசிய நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ‘ஆஸ்ட்ரோ’ சார்பில் 6-வது ஆண்டு பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று தொடங்கியது. விழாவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்து பேசியதாவது:-
தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழர் என்பது தகுதி அல்ல, விலாசம். நான் தமிழன் என்பதை மட்டுமே தகுதியாக நினைத்துவிடக்கூடாது. தகுதிக்கு வேண்டிய எல்லா பயிற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.
எத்தனையோ ஏழைகள் கலைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒற்றையடி பாதையாவது போட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலம் வரும். நாளை நமதாகும் என்ற நம்பிக்கையில் இன்று பொங்குவது போன்று என்றும் பொங்கட்டும் தமிழ்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ‘ஆஸ்ட்ரோ’ நிறுவனத்தின் இந்திய மொழிகள் திட்டத் தலைவர் என்.சி.ராஜாமணி, மலேசிய நாட்டு துணை சபாநாயகர் ரவி, மலேசிய தூதர் சரவணன் கார்த்திகேயன், துணை இயக்குனர் லோகிதாசன் தனராஜ், எம்.எல்.ஏ. காமாட்சி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக இந்தப் படம் உருவாகியிருந்தது.
22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் - ஷங்கர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
தனது அரசியல் பணிகளுக்கு இடையே படத்துக்காக உடல் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் கமல் தீவிரம் காட்டி வருகிறார்.
திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிவடைந்து, படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தள்ளிப்போனது. இதற்கிடையே இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனை மறுத்த படக்குழுவினர், இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 18-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளனர்.
படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றவேண்டாம் என்றும், கதைக்கு என்ன தேவையோ அது இருந்தால் போதும் என்றும் அவர் பெருந்தன்மையுடன் சொன்னதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.
இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர்.
அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் வருகிறார். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Rajinikanth #kamalhassan
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு மோடி கூறியதாவது:-
எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.
2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன்மூலம், மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
பா.ஜனதாவுக்கு எதிராக சில கட்சிகள் மெகா கூட்டணி சேர்ந்துள்ளன. இவை, ஊழலை பரவலாக்கிய கட்சிகள். மத்தியிலும், மாநிலங்களிலும் கொள்ளை அடித்தன. இந்த ஊழல் சக்திகளை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
இந்த கட்சிகளிடம் ஒற்றுமையே கிடையாது. கடந்த 5 ஆண்டு கால செய்திகளை அலசி பார்த்தால், இக்கட்சிகள் ஒற்றுமையாக எதுவும் செய்தது இல்லை. வெவ்வேறு குரலில் பேசி வருகிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒருவருக்கொருவர் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே அடுத்தவரின் கையை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு விளையாட்டு.
இவர்களின் ஒரே செயல் திட்டம், மோடியை ஒழிப்பதுதான். நாட்டுக்கு செய்யப் போவது என்ன என்ற செயல் திட்டமே அவர்களிடம் இல்லை. இவர்களின் மெகா கூட்டணி முயற்சி, ஏற்கனவே தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டது.
கே.சந்திரசேகர ராவ் 3-வது அணி அமைக்க முயற்சி செய்கிறாரா என்று எனக்கு தெரியாது. சிவசேனா கட்சியின் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாதபோது, பா.ஜனதா மீது நிர்ப்பந்தம் செலுத்தி, அதை பெற முயற்சிப்பதே ஆகும். மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம். கூட்டணி கட்சிகளை பலி கொடுத்து நாங்கள் வளர வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.
வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்காக அறிவியல்ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டதா? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட பா.ஜனதாவுக்கு 180 தொகுதிக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று இதே நபர்கள் கூறினார்கள். அதே அணுகுமுறை தொடருகிறது. மக்களை கவருவதற்காக இப்படி சொல்கிறார்கள். மக்களின் அறிவுக்கூர்மை மீது நம்பிக்கை வைப்போம் என்பதுதான் எல்லா அரசியல் கணிப்பாளர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் விஷயம்.
சட்டசபை தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்காது என்பது முன்பே தெரிந்ததுதான். சத்தீஷ்காரில் தெளிவான தீர்ப்பு தரப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ஊழலில் சிக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்கள். நிதிமுறைகேட்டில் சிக்கிய காங்கிரசின் முதல் குடும்பமே (சோனியா) ஜாமீனில்தான் இருக்கிறது.
ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது சிறிய விஷயம் அல்ல. அரசியல் பழிவாங்குதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தாமதம் கூடாது.
காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பது பற்றி நான் விரிவாக பேசி இருக்கிறேன். சாதியம், குடும்ப அரசியல், ஜனநாயக விரோதம், ஊழல் ஆகியவைதான் காங்கிரசின் அரசியல் கலாசாரம். இந்த கலாசாரத்தில் இருந்து விடுபடுவதுதான், காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பதன் நோக்கம். ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அதிலும் காங்கிரஸ் தோற்று விட்டது.
அரசியல் வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். பா.ஜனதா தொண்டர்கள் பலர், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தொண்டர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதுபற்றி ஓராண்டுக்கு முன்பிருந்தே எச்சரித்து வந்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை அரசிடம் கொடுத்து, அபராதம் செலுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.
ஆனால், மோடியும் மற்றவர்களை போல்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மிகச்சிலர் மட்டுமே கருப்பு பணத்தை ஒப்படைத்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இன்றோ, நாளையோ இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள், ஒவ்வொரு ரூபாய்க்கும் இழப்பீடு அளித்தே தீர வேண்டும்.
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூறுவது, என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என் அரசின் மீதானது. தனிப்பட்ட குற்றச்சாட்டு என்றால், நான் எங்கே, எப்போது, யாரிடம் பணம் வாங்கினேன் என்று தோண்டி பார்க்கட்டும்.
இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டே நிராகரித்து விட்டது. இருந்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். அவர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
எத்தனை அவதூறுகள் என் மீது வீசப்பட்டாலும், ராணுவத்துக்கு என்ன தேவையோ அதை வாங்கி தருவேன். எல்லாமே இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நினைத்ததுதான் நான் செய்த குற்றம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே, முத்தலாக் தடைக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஆண்-பெண் சமத்துவம், சமூக நீதி சம்பந்தப்பட்டது.
சபரிமலை பிரச்சினை என்பது பாரம்பரியம் தொடர்பானது. ஆண்கள் செல்லக்கூடாத கோவில்கள் கூட உள்ளன. அங்கு ஆண்கள் செல்வது இல்லை.
சபரிமலை பற்றி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம்பெற்ற ஒரு பெண் நீதிபதி, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அவரது தீர்ப்பை கவனமாக படிக்க வேண்டும். அதுபற்றியும் விவாதம் நடத்த வேண்டும். இப்பிரச்சினையை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth #kamalhassan
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு மோடி கூறியதாவது:-
எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.
2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன்மூலம், மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
பா.ஜனதாவுக்கு எதிராக சில கட்சிகள் மெகா கூட்டணி சேர்ந்துள்ளன. இவை, ஊழலை பரவலாக்கிய கட்சிகள். மத்தியிலும், மாநிலங்களிலும் கொள்ளை அடித்தன. இந்த ஊழல் சக்திகளை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
இந்த கட்சிகளிடம் ஒற்றுமையே கிடையாது. கடந்த 5 ஆண்டு கால செய்திகளை அலசி பார்த்தால், இக்கட்சிகள் ஒற்றுமையாக எதுவும் செய்தது இல்லை. வெவ்வேறு குரலில் பேசி வருகிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒருவருக்கொருவர் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே அடுத்தவரின் கையை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு விளையாட்டு.
இவர்களின் ஒரே செயல் திட்டம், மோடியை ஒழிப்பதுதான். நாட்டுக்கு செய்யப் போவது என்ன என்ற செயல் திட்டமே அவர்களிடம் இல்லை. இவர்களின் மெகா கூட்டணி முயற்சி, ஏற்கனவே தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டது.
கே.சந்திரசேகர ராவ் 3-வது அணி அமைக்க முயற்சி செய்கிறாரா என்று எனக்கு தெரியாது. சிவசேனா கட்சியின் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாதபோது, பா.ஜனதா மீது நிர்ப்பந்தம் செலுத்தி, அதை பெற முயற்சிப்பதே ஆகும். மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம். கூட்டணி கட்சிகளை பலி கொடுத்து நாங்கள் வளர வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.
வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்காக அறிவியல்ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டதா? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட பா.ஜனதாவுக்கு 180 தொகுதிக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று இதே நபர்கள் கூறினார்கள். அதே அணுகுமுறை தொடருகிறது. மக்களை கவருவதற்காக இப்படி சொல்கிறார்கள். மக்களின் அறிவுக்கூர்மை மீது நம்பிக்கை வைப்போம் என்பதுதான் எல்லா அரசியல் கணிப்பாளர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் விஷயம்.
சட்டசபை தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்காது என்பது முன்பே தெரிந்ததுதான். சத்தீஷ்காரில் தெளிவான தீர்ப்பு தரப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ஊழலில் சிக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்கள். நிதிமுறைகேட்டில் சிக்கிய காங்கிரசின் முதல் குடும்பமே (சோனியா) ஜாமீனில்தான் இருக்கிறது.
ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது சிறிய விஷயம் அல்ல. அரசியல் பழிவாங்குதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தாமதம் கூடாது.
காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பது பற்றி நான் விரிவாக பேசி இருக்கிறேன். சாதியம், குடும்ப அரசியல், ஜனநாயக விரோதம், ஊழல் ஆகியவைதான் காங்கிரசின் அரசியல் கலாசாரம். இந்த கலாசாரத்தில் இருந்து விடுபடுவதுதான், காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பதன் நோக்கம். ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அதிலும் காங்கிரஸ் தோற்று விட்டது.
அரசியல் வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். பா.ஜனதா தொண்டர்கள் பலர், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தொண்டர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதுபற்றி ஓராண்டுக்கு முன்பிருந்தே எச்சரித்து வந்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை அரசிடம் கொடுத்து, அபராதம் செலுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.
ஆனால், மோடியும் மற்றவர்களை போல்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மிகச்சிலர் மட்டுமே கருப்பு பணத்தை ஒப்படைத்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இன்றோ, நாளையோ இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள், ஒவ்வொரு ரூபாய்க்கும் இழப்பீடு அளித்தே தீர வேண்டும்.
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூறுவது, என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என் அரசின் மீதானது. தனிப்பட்ட குற்றச்சாட்டு என்றால், நான் எங்கே, எப்போது, யாரிடம் பணம் வாங்கினேன் என்று தோண்டி பார்க்கட்டும்.
இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டே நிராகரித்து விட்டது. இருந்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். அவர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
எத்தனை அவதூறுகள் என் மீது வீசப்பட்டாலும், ராணுவத்துக்கு என்ன தேவையோ அதை வாங்கி தருவேன். எல்லாமே இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நினைத்ததுதான் நான் செய்த குற்றம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே, முத்தலாக் தடைக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஆண்-பெண் சமத்துவம், சமூக நீதி சம்பந்தப்பட்டது.
சபரிமலை பிரச்சினை என்பது பாரம்பரியம் தொடர்பானது. ஆண்கள் செல்லக்கூடாத கோவில்கள் கூட உள்ளன. அங்கு ஆண்கள் செல்வது இல்லை.
சபரிமலை பற்றி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம்பெற்ற ஒரு பெண் நீதிபதி, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அவரது தீர்ப்பை கவனமாக படிக்க வேண்டும். அதுபற்றியும் விவாதம் நடத்த வேண்டும். இப்பிரச்சினையை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth #kamalhassan
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றை புத்தாண்டில் வெளியிடுகின்றனர். #KadaramKondan #ChiyaanVikram
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஜனவரிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கடாரம் கொண்டான் படத்தின் இரண்டாவது போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாக இருப்பதாகவும், அத்துடன் மற்றொரு சிறப்பு அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Merry Christmas to all.! Second look poster & a special announcement with it, will be out on the New Year day.!Thanks to all Chiyaan’s for the patience & support..! #KadaramKondan@RKFI@tridentartsoffl#ChiyaanVikram@GhibranOfficial@aksharahaasan1@kunal_rajan@GSrinivasReddy2
— RMS (@RajeshMSelva) December 25, 2018
விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KadaramKondan #ChiyaanVikram
மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். #kamalHassan
சென்னை:
கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்கின்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.
புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி, தெளிவாகவும் நேர்மையாகவும், தொலைநோக்குப்பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்று நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனத்தினை அறிவித்திருக்கின்றோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவருக்கும் பலமுறை பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கின்றேன். அதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன். எனவே அதை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றவேண்டும்.
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் இந்த பொறுப்பினை, உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #kamalHassan
கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்கின்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.
புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி, தெளிவாகவும் நேர்மையாகவும், தொலைநோக்குப்பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்று நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனத்தினை அறிவித்திருக்கின்றோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவருக்கும் பலமுறை பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கின்றேன். அதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன். எனவே அதை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றவேண்டும்.
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் இந்த பொறுப்பினை, உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #kamalHassan
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KadaramKondan #ChiyaanVikram
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பை ஜனவரிக்குள் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.
மலேசியாவில் முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர், சென்னை திரும்பி படக்குழு பூந்தமல்லி சாலையில் பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. `கடாரம் கொண்டான்' படப்பிடிப்பை முடித்த பின்னர் விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
அந்த படத்தை தொடர்ந்து, பிரம்மாண்டமாக உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
சென்னை:
இக்கூட்டத்திற்கு பின்னர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர்.
40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக அமீர் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்திற்கு பின்னர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர்.
40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது என்று சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேல் அதை மறுத்துள்ளார். யார் சொல்வது நியாயம் என்பதை புரிவதற்கு எனக்கு நேரம் தேவைப்படுகிறது.
நேர்மை, நியாயம் எந்த பக்கம் உள்ளது என்று ஆராய்ந்து விட்டுதான் சொல்ல வேண்டும். ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்று நாமும் குற்றம் சாட்ட முடியாது. தடைகளை கடந்து பணியாற்றுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறி இருக்கிறார். வேறு வழியல்ல.
விஷால் மீது புகார் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு தரப்பினர் பூட்டு போட்டுள்ளனர். அவர் மீது கூறப்படும் புகார்கள் உண்மையா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை. அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை ஆராய வேண்டும். ஆராய்வதற்கு விஷாலுக்கு மனம் இருக்க வேண்டும்.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உண்டு.
சீதக்காதி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். படங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஆரம்ப விழாவாக இருந்தது எனது படங்களாகத்தான் இருக்கும்.
ஒரு படத்தை பார்த்து விட்டுதான் ஏதாவது தவறு இருக்குமானால் கருத்து சொல்ல வேண்டும். அதை விட்டு எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேல் அதை மறுத்துள்ளார். யார் சொல்வது நியாயம் என்பதை புரிவதற்கு எனக்கு நேரம் தேவைப்படுகிறது.
நேர்மை, நியாயம் எந்த பக்கம் உள்ளது என்று ஆராய்ந்து விட்டுதான் சொல்ல வேண்டும். ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்று நாமும் குற்றம் சாட்ட முடியாது. தடைகளை கடந்து பணியாற்றுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறி இருக்கிறார். வேறு வழியல்ல.
அவர் அப்படித்தான் பணியாற்ற வேண்டும். ஏனென்றால் அரசியல் அழுத்தம் என்பது நேர்மையான எல்லோருக்கும் உண்டு. அவருக்கும் அழுத்தம் இருக்கும் என்றால் நாம் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உண்டு.
சீதக்காதி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். படங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஆரம்ப விழாவாக இருந்தது எனது படங்களாகத்தான் இருக்கும்.
ஒரு படத்தை பார்த்து விட்டுதான் ஏதாவது தவறு இருக்குமானால் கருத்து சொல்ல வேண்டும். அதை விட்டு எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா? என்று அரசு அதிகாரியை கமல்ஹாசன் கண்டித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan
திண்டுக்கல்:
தமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், வெள்ளைப்பூண்டு, உருளை கிழங்கு செடிகளை நாசம் செய்தது.
மீட்பு பணிகள் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பெரும்பாறை, மலையக்காடு, கோரங்கொம்பு, கே.சி.பட்டி, குரவனாச்சி ஓடை, பாச்சலூர், குரங்கணிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளையும், ஆதிவாசி மக்களையும் சந்தித்து குறைகள் கேட்டார்.
அப்போது மலை கிராம மக்களிடம் அரசின் நிவாரண உதவிகள் கிடைத்துள்ளதா? என கேட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலரின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் குறித்த விவரங்களை கேட்டார்.
அந்த எண்ணுக்கு தானே போன் செய்து பேசினார். அப்போது அரசு திட்டத்தில் வீடு கட்ட ரூ.1.80 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா? என கேட்டார். அதற்கு அந்த அதிகாரி அப்படி யாருக்கும் பணம் தரத்தேவையில்லை என்றார். பிறகு எதற்காக அப்பாவி மக்களிடம் பணம் கேட்கிறீர்கள்?
யாரும் பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்களும் கண்காணித்து வருகிறோம் என்றார். இதனையடுத்து கிராம மக்களிடம் வீடு கட்ட நீங்கள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. யாரேனும் பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கூறுங்கள் என்றார்.
இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு கம்பளி, ஸ்வெட்டர், தார்ப்பாய், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண உதவியை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. முதலில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முயற்சியில் நாங்கள் இறங்கி உள்ளோம். புயல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.
இனிமேலாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.
பின்னர் திண்டுக்கல்லில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும். மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்களது வாழ்க்கை இன்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக இடங்கள் சேதம் அடைந்துள்ளன.
நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை. இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் 2-வது மாநிலமாக உள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வியாபாரத் தளமாக மட்டுமே பார்க்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை கஜாபுயல் பாதிப்பில் காட்ட தவறி வருகின்றனர்.
எனவே தமிழகத்திற்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்.
டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் அல்ல. அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHaasan
தமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், வெள்ளைப்பூண்டு, உருளை கிழங்கு செடிகளை நாசம் செய்தது.
மீட்பு பணிகள் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பெரும்பாறை, மலையக்காடு, கோரங்கொம்பு, கே.சி.பட்டி, குரவனாச்சி ஓடை, பாச்சலூர், குரங்கணிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளையும், ஆதிவாசி மக்களையும் சந்தித்து குறைகள் கேட்டார்.
அப்போது மலை கிராம மக்களிடம் அரசின் நிவாரண உதவிகள் கிடைத்துள்ளதா? என கேட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலரின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் குறித்த விவரங்களை கேட்டார்.
அந்த எண்ணுக்கு தானே போன் செய்து பேசினார். அப்போது அரசு திட்டத்தில் வீடு கட்ட ரூ.1.80 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா? என கேட்டார். அதற்கு அந்த அதிகாரி அப்படி யாருக்கும் பணம் தரத்தேவையில்லை என்றார். பிறகு எதற்காக அப்பாவி மக்களிடம் பணம் கேட்கிறீர்கள்?
யாரும் பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்களும் கண்காணித்து வருகிறோம் என்றார். இதனையடுத்து கிராம மக்களிடம் வீடு கட்ட நீங்கள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. யாரேனும் பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கூறுங்கள் என்றார்.
இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு கம்பளி, ஸ்வெட்டர், தார்ப்பாய், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண உதவியை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. முதலில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முயற்சியில் நாங்கள் இறங்கி உள்ளோம். புயல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.
பின்னர் திண்டுக்கல்லில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும். மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்களது வாழ்க்கை இன்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக இடங்கள் சேதம் அடைந்துள்ளன.
நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை. இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் 2-வது மாநிலமாக உள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வியாபாரத் தளமாக மட்டுமே பார்க்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை கஜாபுயல் பாதிப்பில் காட்ட தவறி வருகின்றனர்.
எனவே தமிழகத்திற்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்.
டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் அல்ல. அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHaasan
கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் கலைப் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.
22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். கமல் தற்போது தனது அரசியல் பணிகளுக்கு இடையே படத்துக்காக உடல் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலும், களரி, வர்மக்கலையை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பணிகள் முடிந்து, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க, அரங்கு அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. இதனை கலை இயக்குநர் முத்துராஜ் கவனித்து வந்தார். இந்த பணிகள் முடிவு பெறாத காரணத்தால் 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்துவிட்டார்கள்.
மார்கழி மாதம் என்பதால் இப்போது தொடங்க வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2019-ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
கொடைக்கானலில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
கொடைக்கானல்:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக நான் ஏற்கனவே பயணதிட்டம் தயார் செய்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருந்தேன். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடைக்கானல் கீழ் மலை கிராமங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பழங்குடியின மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை. ஒரு சில தன்னார்வலர்கள் மட்டுமே உதவி செய்து உள்ளனர். நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால், அந்த படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை எடுக்க இருக்கிறார். #Indian2 #KajalAggarwal
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக சென்னையில் நடைபெற்று வருகின்றன.
இதில், காஜல் அகர்வால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவரும் ஐதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இத்தகவலை உறுதிப்படுத்தினார். ‘இந்தியன்’ படத்தில் வர்மக்கலை தெரிந்தவராக கமல் நடித்திருந்தார். அப்படம் வெளியான போது பலரும் ஸ்டைலாக அதனைப் பின்பற்றி வந்தார்கள்.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் கதாபாத்திரத்துக்கு வர்மக்கலை தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக, தற்போது வர்மக்கலைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்று வருகிறார் காஜல் அகர்வால். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X