search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், நாம் தனித்தே நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல, நாளை நமதே என பதிவிட்டுள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #HBDSuperStarRajinikanth
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

    ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.


    அதேபோல், நடிகர் அமிதாப் பச்சன் அவரது ட்விட்டரில், நண்பர், சக ஊழியர், உணர்ச்சிப்பூர்வமானவர், பிறந்தநாள் வாழத்துக்கள் ரஜினி என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த சனிக்கிழமை நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் இந்த ஆண்டும் நான் சென்னையில் இருக்க மாட்டேன், எனவே ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ரஜினி நேற்று சென்னையில் இருந்து புறப்படார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth #KamalHaasan #HBDSuperStarRajinikanth #HappyBirthdayThalaiva #HappyBirthdaySuperstar 

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என தெரிவித்துள்ளார். #2018electionresults #Kamalhassan
    சென்னை:

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார். #2018electionresults #Kamalhassan
    கேரளாவில் மழையால் சிதிலமடைந்த வீடுகளை புனரமைத்து கட்டித் தந்தது போன்ற நல்ல திட்டங்களை காப்பியடிப்பதில் வெட்கம் இல்லை கமல்ஹாசன் தெரிவித்தார். #Kamalhassan #KeralaRain
    கொச்சி:

    கேரளாவைச் சேர்ந்த டுவென்டி20 என்ற அமைப்பு ‘கடவுள் இல்லம்’ என்ற திட்டத்தின் கீழ் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிழக்கம்பள்ளம் என்ற பகுதியில் உள்ள ஒரு காலனியில் சிதிலமடைந்த வீடுகளைப் புனரமைத்து கட்டித்தந்துள்ளது.



    அந்தத் திட்டத்தின் மூலம் 37 பயனாளர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு வீடு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டுக்கான சாவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூறியதாவது:-

    அரசியல் என்பது ஓர் அர்ப்பணிப்பு. அது தொழில் அல்ல. நானும் டுவென்டி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் சாபு ஜேக்கப்பும் இணைந்து அரசியலில் ஒரு புது மாற்றத்தைக் கொண்டு வருவோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

    என் அரசியல் பயணம் பணத்துக்கானது அல்ல. அது மக்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும். ‘கடவுள் இல்லம்’ மிகச் சிறந்த ஒரு திட்டம். நான் இங்கு வந்தது ஒரு விருந்தினராக மட்டும் அல்ல. இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொண்டு இதேபோல தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் சிதிலமடைந்த வீடுகளை சரி செய்வது பற்றி அறிந்து கொள்ளவும்தான்.

    சாபுவின் இந்த திட்டத்தை காப்பி அடிக்க போகிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை. மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தவே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Kamalhassan #KeralaRain
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. #Karunanidhistatue #KamalHaasan #Rajinikanth
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.


    விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். 9-ந் தேதி (ஞாயிறு) மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகிறார்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhistatue #KamalHaasan #Rajinikanth
    புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நெல் ஜெயராமன் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விஷால், சௌந்தர்ராஜா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Neljayaraman #RIPNelJayaraman
    திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி கூறும்போது, இயற்கை வேளாண் பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்றார்.



    நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

    நடிகர் விஷால், 

    நெல் ஜெயராமன் ஐயாவின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. விவசாயத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு இளைஞர்கள் விவசாயம் செய்ய முக்கிய காரணியாக அவர் இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    நடிகர் சசிகுமார்,

    நெல் மணி நமக்கு உயிர் கொடுக்க.. அந்த நெல் மணிக்கே புத்துயிர் கொடுத்தவர் நெல் ஜெயராமன் அவர்கள். இயற்கையைப் போற்றிய அவரை நாம் என்றென்றும் போற்றுவோம்,பாரம்பரிய  விதைகளைக் காப்போம்.

    நடிகர் செளந்தர்ராஜா,

    விவசாயிகளும், விவசாயமும் அழிந்து கொண்டுக்கிருக்கும் இந்த மோசமான நிலையில், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற தெய்வங்களின் மறைவு மிக பெரிய சோகம். இளையஞர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்களின் அறிவுரைகளை பரப்ப வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். முடிந்தால் அனைவரும் விவசாயம் பண்ண வேண்டும். இவரது ஆத்மா சாந்தி அடைய விவசாயத்தை காப்போம். மண்ணை நேசிப்போம். மக்களை நேசிப்போம்.

    இவ்வாறு கூறியுள்ளனர். #Neljayaraman #RIPNeljayaraman

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமிதாப்பச்சனுக்கு கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan #AmitabhBachchan
    சென்னை:

    தமிழ்நாட்டில் நாகை- வேதாரண்யம் இடையே கடந்த மாதம் 15-ந்தேதி கஜா புயல் கரையைக் கடந்தது.

    இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை கண்டன. மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    நடிகர் அமிதாப்பச்சன் கஜா புயல் சேதங்கள் குறித்து பேசிய வீடியோவை கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ‘இந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி கஜா புயல் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. அந்த பகுதிகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் தங்களின் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 3.4 லட்சம் வீடுகள் கஜா புயலால் சூறையாடப்பட்டுள்ளன.

    இந்தப்பகுதிகளில் இருந்த தென்னைமரங்கள் 60 சதவிகிதம் புயலால் சாய்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    மத்திய மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. ஒரு தேசம் ஒரு மக்கள் என்பதை நிரூபிப்பதற்கு இதுதான் சரியான தருணம். சகோதரர்களே முன்னால் வாருங்கள்; வந்து உதவி புரியுங்கள். நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களைக் களத்தில் சந்தித்து வருகிறார். உங்களுடைய உதவியும் இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்.

    இவ்வாறு அமிதாப் பச்சன் கூறி இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘நன்றி அமித் ஜி. கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நம் நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் உங்களைப் போன்ற மக்கள் அதை இணைக்கும் நூலாக இருக்கின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.  #GajaCyclone #KamalHaasan #AmitabhBachchan
    ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்திற்காக தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #KajalAggarwal
    2.0 படத்தை அடுத்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் ‌ஷங்கர். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

    இந்த படத்தில் மீண்டும் வயதான இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலுக்கு புதிய உடல்மொழி மற்றும் தலைமுடி ஸ்டைலை மாற்றி சமீபத்தில் அதற்கான டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். அந்தவகையில் இந்தியன் படத்தில் நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்தியன் 2 வில் கமல் நடிக்கிறார்.



    நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பாரிஸ் நகருக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். அந்த மேக்கப் டெஸ்ட் இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal

    ‘இந்தியன்-2’ படம் தான் எனது திரையுலகப் பயணத்தின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiam
    தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கமல்ஹாசன் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்தை நிரப்பும் வகையில், தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாக கமல்ஹாசன் கடந்த ஆண்டு அறிவித்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் அவர் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அன்றே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். 6 தென் மாநிலங்களைக் குறிக்கும் வகையில் 6 கைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த காட்சியுடன் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அவர் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டார். மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதையும் அவர் வழக்கத்தில் வைத்துள்ளார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்ட போது தனது கட்சியினருடன் கமல்ஹாசன் அங்கு சென்று செய்த நிவாரண பணிகள் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது.



    இதற்கிடையே கமல்ஹாசன் ஏராளமான மக்கள் நல அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளார். கேரளாவில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் “டூவண்டி 20 கிழக்கம்பாலம்” எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை - எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஏழைகளிடம் வீடுகளை ஒப்படைத்தார்.

    அந்த கிராமத்து வீடுகளை அவர் சுற்றிப்பார்த்தார். “கடவுளின் கிராமம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஊரில் உள்ள வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தனது எதிர்கால அரசியல் திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேரளா மாநிலம் எனக்கு வீடு போன்றது. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த அருமையான திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த நான் விரும்புகிறேன்.

    அதற்கு உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் அதிகாரம் இல்லாமல் கனவு கண்டால், அந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். எனவே மாற்றம் வேண்டும்.



    மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக மக்களுக்கு உண்மையான தேவைகள் தரப்படும். இதற்காகவே நான் மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன். அவர்கள் ஆளும் மாநிலத்தில், அவர்கள் செய்துள்ள நல்ல திட்டங்களைக் கேட்டு அறிந்து வருகிறேன்.

    கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்துப் பேசியுள்ளேன். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசி உள்ளேன். அவர்களிடம் இருந்து சில நல்ல யோசனைகளை பெற்றுள்ளேன். அவற்றை அப்படியே தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.

    தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.

    நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.

    இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

    எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தி மாசு ஏற்படுத்த முயற்சி செய்யும் அரசியல் கட்சிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்.



    அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் பணம் சாம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆட்சி, அதிகாரம் என்பது மாநில மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்பவர்கள் இல்லை. நாட்டில் நடத்த முடியாததையே அரசியல்வாதிகள் சொல்லி வருகிறார்கள். நடக்கும் காரியங்களை கூறி, அவற்றை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும்.

    அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும். எந்த ஒரு வி‌ஷயத்தையும் செய்ய முடியுமோ, முடியாதோ என்று முதலில் எண்ணத் தோன்றும். ஆனால் நம்மால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும்.

    ஒரு கட்சியின் இலக்கு என்பது நிச்சயமாக அரசியலில் முதன்மைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான். தோல்வியை இலக்காக நினைக்கமாட்டார்கள். தீ என்றும் தீ-தான். அதில் பெரிய தீ, சிறிய தீ என்று ஒன்றும் இல்லை.

    அது பரந்து, பற்றத்தான் செய்யும். எதுவும் முதலில் சிறியதாக இருக்கும். முடிவில் அது பெரிதாக அமைந்துவிடும். அந்த வகையில் மாநில மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் மதச்சார்பற்ற கட்சி ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டும்.



    சபரிமலை விவகாரத்தைப் பொருத்தவரை சாதாரண மக்களிடம் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை உருவாக்க வேண்டும். இதற்கு படை பலத்தை பயன்படுத்தக் கூடாது என்பது எனது கருத்தாகும். மீடூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தப்பட கூடாது.

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

    மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட பிறகு இப்போதுதான் கமல்ஹாசன் முதன் முதலாக தனது எதிர்கால திட்டங்களை வெளியிட்டுள்ளார். சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்ற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. #KamalHaasan #MakkalNeethiMaiam

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யாமல் அரசை மிரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று அரசு ஊழியர்களுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். #JactoGeo #HRaja
    நாமக்கல்:

    நாமக்கல்லில் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் பிரதமருக்கு ஆளுமை இருக்கிறதாக சொல்லி இருக்கிறார், இது அவருடைய கருத்து.

    தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஏற்புடைய வி‌ஷயம் அல்ல. இதற்கு முன்பாக எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும் 20 நாட்கள், ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய ஆய்வுக்குழு வந்ததில்லை.

    இந்த தடவை 3-வது நாளிலேயே வந்து இங்கு ஒரு வாரம் இருந்து எல்லா இடமும் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கஜா புயலில் சிக்கிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறுமை கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட உடனடியாக பணியை தொடங்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

    இதைத்தவிர வறுமை கோட்டிற்கு மேலே இருக்கிறவர்கள் வீடு இழந்தவர்களுக்கு தனி ஆர்டர் போட வேண்டும். ஓரிரு நாட்களில் மத்திய அரசாங்கம் அதற்கான உத்தரவை பிறப்பிக்கும்.

    6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் 3 லட்சம் இருக்குமானால் கூட ரூ.6 ஆயிரத்து 300 கோடி ரூபாய்.

    இப்போது கொடுத்திருக்கிற 350 கோடி ரூபாய் என்பது தமிழக அரசின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒதுக்கப்பட்ட தொகை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தென்னை மரக்கன்றுகளை நான் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விவசாயிகளுக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இப்படி மத்திய அரசு தொடர்ந்து நல்லது செய்து வருகின்றன.

    புயலில் 1 லட்சத்து 20 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்வாரிய ஊழியர்கள் கொட்டுகிற மழையிலும் துரிதமாக மின்கம்பங்களை கொண்டு வந்து நட்டு வருகின்றனர். மின் வாரிய ஊழியர்களை நான் பாராட்டுகிறேன்.

    ஆனால் வாழ்நாள் முழுக்க 67 ஆண்டுகள் காசு சம்பாதிக்கிறதிலும், சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதிலும் செலவு செய்த கமல்ஹாசன் ஏதோ சினிமா சூட்டிங் எடுக்கிற மாதிரி கீழே விழுந்து கிடக்கின்ற மரத்தின் மீது காலை வைத்துக் கொண்டு மத்திய அரசாங்கம் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பேசினால் என்ன அர்த்தம்?


    வாழ் நாள் முழுவதும் மக்களை வஞ்சித்து மோகத்தை காட்டி சுரண்டி வாழ்க்கை நடத்திய ஒரு நடிகர் மத்திய அரசை பற்றி பேசுகிறார். ஆகவே இந்த மாதிரியாக எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று இருக்கக் கூடாது.

    ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு எனது வேண்டுகோள், 6, 7 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்திருக்கும் போது மக்களுக்கு சேவை செய்யாமல் வேலை நிறுத்தம் என்று அரசாங்கத்தை மிரட்டினால் இது மனிதாபிமானமுள்ள செயலா? என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

    உங்களது கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் கூட வேலை நிறுத்தம் செய்வதற்கு இது நேரமில்லை.

    மின் இலகாவை சேர்ந்த ஊழியர்கள் மேற்கு வங்காளம், ஆந்திராவில் இருந்து வந்து புயல் பாதித்த பகுதிகளில் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். ஆகவே இங்கிருக்கும் அரசு ஊழியர்கள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும்.

    ஆனால் இங்கிருக்கின்ற தமிழக ஊழியர்களை தி.மு.க., தி.மு.க.வோடு இருக்கின்ற சில கட்சிகளும் தூண்டி விட்டதற்கு இவர்கள் ஆளாகி போய் வேலை நிறுத்தம் அறிவித்து இருப்பது சரியில்லை.

    எந்த கோரிக்கையாக இருந்தாலும் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம். அரசாங்கம் எங்கேயேயும் ஓடி போறதில்லை. ஆகவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஜாக்டோ- ஜியோ தீர்மானத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலை பற்றி எதற்கு தீர்மானத்தில் போடுகிறீர்கள். உங்களது சம்பளமோ, கிராஜூட்டியோ, பென்சனோ அதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா?. இதற்கு என்ன அர்த்தம்?

    ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இவாலிஞ்சஸ் லிஸ்ட்டும், அர்பன் நக்சல்களும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுகின்ற அனைத்து அரசு ஊழியர்களும் வெளியே வாருங்கள். இந்து விரோத தீய சக்திகளின் தலைமையில் இருக்கமாட்டோம் என்று வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #HRaja
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் `இந்தியன்-2' படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
    22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

    முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

    இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.



    வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.

    அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். 2.0 படத்தைபோல் இந்தியன்-2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படமாக தயார் செய்கின்றனர். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
     
    30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று எச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். #BJP #HRaja #KamalHaasan
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை 41-வது வார்டில் பா.ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘கஜா’ புயல் தாக்கி 6 மணி நேரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று மக்களோடு நின்றார். அதுபோல மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் உள்பட மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் நின்று இன்று வரையிலும் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.

    மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் புயல் பாதித்த மாவட்டத்தில் தங்கி இருந்து மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு அடிப்படை தேவையான மண்எண்ணை முதல் அனைத்து நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்தார்.

    கஜா புயலில் 6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உடனடியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இது போன்ற எண்ணற்ற பணிகளை மத்திய அரசு துரிதமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை 17-வது நாளில் பார்வையிட்ட கமல் மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.



    30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.

    இதே போல மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அவர் மத்திய அரசையும், மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வந்தால் தி.மு.க.வை தோலுரித்து காட்டுவோம்.

    2010-ம் ஆண்டு ‘தானே’ புயல் தாக்கிய போது அப்போதைய முதல்வர் கருணாநிதி புயல் பாதித்த இடங்களை நேரில் பார்த்தாரா? அதே போல் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தாரா? இதோடு ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வைகோ குழப்பத்தில் உள்ளார். எல்லாம் தெரிந்த மாதிரி பேசி வருகிறார். நாகரீகமற்ற முறையில் மோடியின் உடையை விமர்சிக்கிறார்.

    வைகோவை துரைமுருகனே கண்டு கொள்ளவில்லை. அவர்தான் தி.மு.க. வாசலில் போய் உட்கார்ந்து கொண்டு உள்ளார்.

    அரசியல் லாபத்துக்காக சில அரசியல் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன. மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

    நடைபெறும் 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கனவு காண்கிறார். கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.

    காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலை உள்ளது. இந்த நிலையில் இளங்கோவன் கூறி இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் நடராஜன், சக்திவேல் மற்றும் பாஸ்கோ மாணிக்கம் உடன் இருந்தனர். #BJP #HRaja #KamalHaasan
    ×