search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #Cauvery #KamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்ககோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன். எங்கள் விவசாயிகளுக்காக வெட்கம் பார்க்காமல் சென்று கேட்டேன். அதை அரசியலில் காவிரி ஆணையம் வேண்டாம் என்று கேட்கச் சென்றதாக திரித்து விட்டனர்.

    காவிரி ஆணையம் வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர்விடும் கணக்குகளை பார்க்கத்தான் ஆணையம் வேண்டும் என்று கோரப்பட்டது. ஆணையம் கிடைத்தது பெரிய வெற்றிதான். 2 மாநிலங்களும் அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பஸ்களை உடைப்பதுதான் வேலையாக இருக்கும்.

    ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பற்றி விசாரணை நடப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. இதுபற்றி நான் ஒரு வருடத்துக்கு முன் சொன்னேன்.

    இதுபோன்ற நிலவரங்கள் அதிகரித்து வந்ததால்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழக அரசு நீங்க வேண்டும் என்று நான் சொல்லி நீண்ட நாளாகிவிட்டது. தனி நபருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய சம்பவம் அரசியல் மாண்பு சிரழிந்து வருவதாக நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். உயிருக்காக போராடியபோது தனியார் விமானத்தில்தான் போனார். சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை பற்றி எந்த ஒரு ஏழையும் பேசலாம். 8 வழி சாலை வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதுபற்றி பேசக்கூடாது என்று எச்.ராஜா எப்படி சொல்லலாம்.

    கருத்து சுதந்திரம் மெதுவாக பறிக்கப்பட்டு வருகிறது. யாரும் தங்களுடைய கருத்துகளை வெளியிடக்கூடாது என்ற பதட்டமான சூழல்தான் உள்ளது. அது மாறவேண்டும் என்பது இந்தியாவின் தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #KamalHaasan

    ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன், அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக தெரிவித்துள்ளார். #KamalHassan
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு விடையளித்த மக்கள் நீதிமய்ய தலைவர்  கமல்ஹாசன், காவிரி நதிநீர் ஆணையத்தை இரு மாநிலங்களும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், பசுமை வழிச்சாலை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், திட்டங்கள் தேவையா இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ விமானத்தை வழங்கியது குறித்து இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #KamalHassan
    ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணியை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்டு 10-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    விஸ்வரூபம்-2 படம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. இந்த படத்தின் கதை உருவாக காரணம் அந்த வருத்தம்தான். 2007-ம் ஆண்டுக்கு முன்பு விஸ்வரூபம்-2 கதை எழுதப்பட்டது. அப்போது தசாவதாரம், மன்மதன் அம்பு என்ற கோணத்தில் பயணித்ததால் அப்போது எடுக்க முடியவில்லை.

    எனவே இப்போது அதை சொந்தமாக தயாரித்துள்ளேன். விஸ்வரூபம்-1 படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய போதே தடைகளை தாண்டி விஸ்வரூபம்-2 படத்தை தொடங்கி விட்டோம். படத்தில் அரசியல் தொடர்பான வசனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் படம் எடுக்கவில்லை.

    அமெரிக்கா தரப்பிலும், தீவிரவாதிகள் தரப்பிலும் தவறு இருக்கிறது என்ற ரீதியில்தான் படத்தை எடுத்துள்ளேன். படத்தில் அரசியல் கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதற்கு வேறு மேடைகள் உள்ளன.



    எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த காலத்தில் தொழில் நுட்பம் கிடையாது. அதனால் அவர் தனது படங்களில் கட்சி கொடி, சின்னத்தை காட்டினார்.

    விஸ்வரூபம்-2 படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் விஸ்வரூபம்-3 படத்தை எடுப்பது பற்றி யோசிப்பேன். விஸ்வரூபம்-2 படத்திற்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். அப்போது வந்த எதிர்ப்பு அரசியல் ரீதியானது. இப்போது படத்தை எதிர்க்கும் கெட்டிக்காரத்தனம் யாருக்கும் இல்லை.

    விஸ்வரூபம்-1 படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தேன். ஆனால் தடைகள் ஏற்பட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். அதனால் டி.டி.எச்.சில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக புதிய தொழில் நுட்பத்தை தடுக்கக்கூடாது.

    இது எனது கடைசி படம் அல்ல. கட்சி பணியில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணியை செய்வேன் என்று சொன்னதெல்லாம் பொய். எனது தொழில் சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் நடித்தார்.

    தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலில் அங்கு உணவு பொருள் கட்டணத்தை குறைக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் `விஸ்வரூபம்-2' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான `இந்தியன்-2' துவங்குவது பற்றி கமல் மனம்திறந்துள்ளார். #KamalHaasan #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில் `விஸ்வரூபம்-2' ஆகஸ்ட் 10-ல் ரிலீசாக இருக்கிறது. `விஸ்வரூபம்-2' படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    கமல் தற்போது, அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகி இருக்கிறார். இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், `இந்தியன்-2' படம் குறித்து மனம்திறந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, தான் ஷங்கர் இயக்கும் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் இறுதியில் முடிவடைவதால், அக்டோபரில் கமல் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷங்கர் தற்போது `2.0' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் பிசியாகி இருக்கிறார். `2.0' படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. எனவே அக்டோபரில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்வது உறுதியாகி இருக்கிறது.



    படப்பிடிப்பை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தில் வர்ம கலையால் ஊழல்வாதிகளை வீழ்த்தும், இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. அதே கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் வருவதுபோல் இயக்குனர் ‌ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    முழுமையான அரசியல் படமாக இது இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    அதேநேரத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள `சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பிலும் கமல் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #KamalHaasan #Indian2

    தமிழக அரசியல் களத்தில் ரஜினி, கமல் இருவருக்கும் எந்த அளவுக்கு ஆதரவு இருப்பதாக மக்களிடம் தந்தி டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம், தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி, ஓய்வு பெற்று வருவது, அந்த வெற்றிடத்தின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த நிலையில் பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் தமிழக அரசியலில் ஈடுபட போவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டமாக உள்ளது. ஆனால் அதை நோக்கிய அனைத்து செயல்பாடுகளிலும் இருவரும் மாறுபட்டு காணப்படுகிறார்கள்.

    கட்சி தொடக்கம், கொடி, கொள்கை, உள் கட்டமைப்பு என அனைத்து வி‌ஷயங்களிலும் ரஜினி, கமல் இருவரும் வேறு, வேறு பாதையில் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன் மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” கட்சி தொடக்க விழாவை நடத்தினார். பிறகு மாநிலம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் இதுவரை அவரால் அந்த பயணத்தைத் தொடங்க முடியவில்லை.


    சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை மாற்றி சீரமைத்த கமல்ஹாசன், உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்பது தங்கமலை ரகசியம் போல் உள்ளது.

    கமல்ஹாசனாவது அரசியலுக்கு வந்த வேகத்தில் கட்சியைத் தொடங்கி காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். ரஜினியோ அரசியலில் குதிக்கப் போவதாக 6 மாதத்துக்கு முன்பு சொல்லி விட்டு, இன்னமும் குதிக்காமலே உள்ளார். 1 கோடி பேரை உறுப்பினராக சேர்த்து விட்டுத்தான் கட்சித் தொடங்க வேண்டும் என்ற திட்டத்துடன் ரஜினி இருக்கிறார்.

    இதற்காக தனது ரசிகர் மன்றத்தை அவர் “மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றினார். ஆனால் ரஜினி எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் அலை, அலையாக வந்து தங்களை உறுப்பினராக பதிவு செய்யவில்லை. இதனால் ரஜினி இப்போதைக்கு தனது படப்பிடிப்புகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்துள்ள போதிலும், அந்த நிர்வாகிகளை நெறிப்படுத்தி, வழி நடத்த சரியான வலதுகரம் ரஜினிக்கு இல்லை. இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் “ரஜினி மக்கள் மன்றம்“ செயல்பட முடியாமல் உள்ளது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.


    ஆடி மாதம் முடிந்த பிறகு ஆவணியில் கட்சி ஆரம்பிப்பார், ஐப்பசியில் கட்சி ஆரம்பிப்பார்...... என்று வெளியாகும் தொடர் தகவல்கள் ரஜினி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து, சலிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

    ரஜினி, கமல் இருவரும் அரசியல் கடல் அலையில் இப்படி அல்லாடி கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் உண்மையிலேயே எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மக்களிடம் ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளது. ரஜினி, கமல் இருவருக்கும் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிர்ணயிக்கப் போவது தேர்தல்தான். அவர்கள் இருவரும் முதலில் சட்டசபை தேர்தல் களத்தை சந்திக்காமல், பாராளுமன்ற தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர்.

    இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்டு விடும். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்பட தமிழக கட்சிகள் தங்களை தயார்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ரஜினி, கமல் தேறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


    இந்த எதிர்பார்ப்புகளுக்கு விடை தரும் வகையில் ‘தந்தி’ டி.வி. கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த தேர்தலில் ‘தந்தி’ டி.வி. வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் துல்லியமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று துல்லியமான முடிவுகளை தருவதற்காக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 8,250 பேரிடம் தனித்தனியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 4,125 பேர் ஆண்கள்; 4,125 பேர் பெண்கள்.

    ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்த கருத்து கணிப்பில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது என்ற பரபரப்பான முடிவு தெரியவந்து உள்ளது.

    அரசியலில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வெற்றி பெறுவார்களா? என்று மக்களிடம் கருத்து கேட்டதில், 51 சதவீதம் பேர் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறி இருக்கிறார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினிக்கும், கமல்ஹாசனுக்கும் தமிழக மக்களிடம் 10 சதவீதம் கூட ஆதரவு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதில் கமலுக்கு அதிக ஆதரவு உள்ளதா? ரஜினிக்கு அதிக ஆதரவு உள்ளதா? என்பதை ‘தந்தி’ டி.வி. துல்லியமாக கணித்துள்ளது. விஜயகாந்த், சீமானுக்கும் நட்சத்திர அந்தஸ்து வரவேற்பு இல்லை.

    சினிமா நடிகர்கள் மீதான மோகம் தமிழ்நாட்டு மக்களிடம் குறைந்து விட்டதை கருத்து கணிப்பு காட்டுகிறது. இந்த நிலையில் மக்கள் மனதில் நிலை பெற்றிருப்பது அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்ளகு ‘தந்தி’ டி.வி. கருத்து கணிப்பு விடை தருகிறது.

    அதிரடியான முடிவுகளைக் கொண்ட ‘தந்தி டி.வி.’ கருத்து கணிப்பு இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மக்கள் யார் பக்கம்’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது. #Rajinikanth #KamalHaasan
    ரஜினி, கமல் ஆகிய இருவருக்கு ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார். #Charuhasan #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசனின் பேட்டி ஒலிபரப்பாகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி, கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆர்., கர்நாடகாவில் இருந்து வந்த ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளதால் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து பேசியபோது, ‘இவர்கள் இருவரும் தங்களது சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள். இருவருமே மக்களுக்கு என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பிய அவர் அதேவேளையில் கமலை விட ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதாகவும், தமிழர்கள் அவரை கடவுளாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


    ரஜினி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், கமல் தமிழர் கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறிய சாருஹாசன் ஆனால் இருவருக்கும் ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும், கடந்த கால நினைவுகள், அவரது வாரிசுகளில் அரசியலுக்கு வரப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் உள்பட பல்வேறு தகவல்களை தொகுப்பாளர் ராஜசேகருடன் அவர் பகிர்ந்துள்ளார்.  #Charuhasan #Rajinikanth #KamalHaasan #EdappadiPalaniswami
    நடிகர் ரஜினிகாந்தின் 8 வழிச்சாலை குறித்த ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #ChennaiSalemExpressWay
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை கமல் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினியோ புதிய கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காமலேயே உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சியின் பெயரை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவை போல அரசியல் பயணத்திலும் இருவருக்கும் தனித்தனி பாதைகளில் பயணித்து வருகிறார்கள். 2 பேரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் நேர் எதிராகவே உள்ளன.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கமல் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை கூறிவரும் நிலையில் ரஜினியோ அந்த வி‌ஷயத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடங்கி சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் வரையில் ரஜினி-கமல் இருவரும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிக் கொள்கிறார்கள்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடிப்பதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று ரஜினி குற்றம் சாட்டியது பற்றி கருத்து தெரிவித்த கமல், போராடுபவர்கல் எல்லாம் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்று ஆவேசப்பட்டார்.

    தமிழக அரசின் மீது கமல் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியோ அதுபற்றி வாய்திறப்பதே இல்லை. அதற்கு மாறாக பாராட்டுக்களையே தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு கூட ரஜினி பதில் அளிக்கவில்லை.

    ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று வெளிப்படையாக பாராட்டினார். சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.

    விவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ரஜினி, 8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

    மத்திய அரசின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘‘சினிமா நடிகரான ரஜினிக்கு என்ன தெரியும்’’ என்று அவர் கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை குறித்த ரஜினியின் கருத்துக்கு கமலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த சாலையை ரஜினி வரவேற்பது பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது ரஜினியின் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.

    இதுதொடர்பாக கமல் அளித்த பேட்டியில், 8 வழிச்சாலையால் எங்கள் வாழ்க்கை தரம் தாமதப்பட்டு இருப்பதாக கூறி புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு வழிதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கிறன. இதைவிட குறைந்த செலவில் அந்த சாலைகளை விரைந்து முடிக்கவும் வழிகள் உள்ளன. 8 வழிச்சாலை பற்றி அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் கேட்பதில்லை என்றும் கூறினார்.

    எந்த வி‌ஷயமாக இருந்தாலும் இப்படித்தான், இதுதான் என்று மக்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கமல் கூறி இருக்கிறார். ரஜினிக்கு எதிரான கமலின் இந்த கருத்துக்கு 2 பேருக்கும் இடையேயான மோதலை மேலும் வலுவாக்கி உள்ளது. #ChennaiSalemExpressWay #KamalHaasan #Rajinikanth #MakkalNeedhiMaiam
    தமிழில் பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கியிருக்கும் கமல்ஹாசனின் சிஷ்யரும், இயக்குநருமான அம்ஜத் மீரான் அடுத்ததாக ஹாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். #AmjathMeeran
    கமல்ஹாசனின் சிஷ்யரான அம்ஜத் மீரான் ஹாலிவுட் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்ஜத் மீரான் ஏராளமான குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இயக்கியவர். அனிமே‌ஷன் கலைஞர்.

    இவர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், ‌ஷங்கர், கவுதம் மேனன், சசி, பரத்பாலா உள்ளிட்ட பலரிடம் பணிபுரிந்தவர். இவர் பிரேசில் என்னும் ஆங்கில படத்தை இயக்கி வருகிறார். சென்னை மற்றும் உலகின் பல பகுதிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஆங்கில நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு உலக அளவில் முன்னணியில் இருக்கும் 3 கிராபிக்ஸ் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

    தெருவில் இருந்து மைதானத்திற்கு செல்லும் கதையாக கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. #AmjathMeeran

    ஆட்சி நடத்த தகுதி இருக்கிறதா என்பதை அன்புமணியுடன் மேடையில் விவாதித்து ஜெயித்து காட்டவேண்டும் என்று ரஜினி, கமலுக்கு ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க.வின் 30-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை அடையாறில் நடந்தது. கூட்டத்துக்கு வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அடையாறு வே.வடிவேல் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஜி.வி.சுப்பிரமணியன், சகாதேவன், சிவக்குமார், ஜெனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியப்பன் வரவேற்றார்.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    மக்களின் உரிமைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. ஊடகங்கள் மூலம் தான் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தொடர்ந்து அரசின் ஊழல்களை, தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

    இப்போது இரண்டு நடிகர்கள் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர் கட்சி ஆரம்பித்து பெயரும் சூட்டி விட்டார் (கமல்). இன்னொருவர் எப்போது கட்சியை தொடங்குவார் என்பது அவருக்கே தெரியாது (ரஜினி).

    அரசியலுக்கு எல்லோரும் வரலாம். ஆனால் ஆளத்தகுதி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.


    இரண்டு நடிகர்களும் ஒரே மேடையில் அன்புமணியுடன் விவாதத்துக்கு வரட்டும். அன்புமணி கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லட்டும். அல்லது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அன்புமணி பதில் சொல்லட்டும்.

    நிச்சயமாக நான் சொல்வேன். அவர்கள் இருவரும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டு எங்களுக்கு நடிக்கும் திறமை உண்டு. ஆனால் ஆளும் திறமை அன்புமணியிடம்தான் உள்ளது. அவரே ஆட்சிக்கு வரட்டும் என்று சொல்லி விடுவார்கள்.

    ஆளத் தகுதியானவர்கள் யார் என்று பொதுமேடையில் விவாதிக்க வேண்டும். இது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரே கட்சி பா.ம.க. இந்தியாவில் 2 ஆயிரத்து 44 கட்சிகளும் தமிழகத்தில் 230 கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக உள்ளன. இவைகளில் இருந்து மாறுபட்ட ஒரே கட்சி பா.ம.க.

    ஆண்ட கட்சிகளை ஒதுக்குங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

    சென்னை-சேலம் 8 வழி சாலைக்கு ரஜினி ஆதரவு என்கிறார். அதைப்பற்றி அவருக்கு என்ன தெரியும். சேலத்துக்கு ஏற்கனவே 3 வழிகள் உள்ளன. அந்த சாலைகளை விரிவுபடுத்தினால் போதும். விவசாய நிலங்களை அழித்து இந்த சாலை அமைக்க வேண்டும் என்று யார் கேட்டது? நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையை கன்னியாகுமரி வரை 8 வழி சாலையாக விரிவுபடுத்துங்கள். யாரும் எதிர்க்கப் போவதில்லை. இதன்மூலம் தென் மாவட் டங்களும் வளர்ச்சி பெறும்.

    3 சாலைகள் இருக்கும் ஊருக்கு புதிதாக ஒரு சாலை எதற்கு? அதுவும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் சில இடங்களில் இந்த சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

    இந்த சாலையை அமைப்பதில் அப்படி என்ன எடப்பாடி ரகசியமோ தெரியவில்லை. திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.

    8 வழி சாலைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம். இந்த சாலை வரப் போவதில்லை

    தற்போது தமிழ்நாடு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. டாக்டர்களால்தான் காப்பாற்ற முடியும். ஆக்டர்களால் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, திலகபாமா, வடிவேல் ராவணன், ராமமுத்துக்குமார், வக்கீல் பாலு, மு.ஜெயராமன், வி.ஜெ.பாண்டியன், ஜமுனா கேசவன், ஈகை தயாளன், ரா.செ.வெங்கடேசன், வி.எஸ்.கோபு, டி.எஸ்.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #PMK #Ramadoss
    ஆழ்வாபேட்டை ஆண்டவரே என்று அழைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மதுரை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி :- அமாவாசை அன்று கொடியேற்றியதால் தமிழிசை உங்களை போலி பகுத்தறிவுவாதி என்று விமர்சித்துள்ளாரே?

    பதில் :- பல்வேறு தரப்பினரும் பல்வேறு மதத்தினரும் நம்பிக்கை உடையவர்களும் என் கட்சியில் உள்ளனர். என் மகள் சுருதியைப் பகுத்தறிவு வாதி என்று கூற முடியாது. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு மட்டும் நான் கட்சி ஆரம்பித்திருந்தால் தவறாகக் கூறலாம். ஆனால், ஏழ்மையையும் ஊழலையும் ஒழிப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லோர் உதவியும் தேவைப்படுகிறது.

    கே :- கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று கோ‌ஷம் எழுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

    ப :- ஆம், சர்ச்சைதான். இது பழையக் கூக்குரல், தவிர்க்கத்தான் வேண்டும். அது தொடர்பாக வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. இதைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். இனி இதுபோன்று நிகழாது என்று வாக்குறுதி அளிக்கிறேன். மற்றபடி அந்த நிகழ்வுக்கு நான் பொறுப்பல்ல. என்னுடைய கட்சியில் இருப்பவர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவர்களைக் கண்டிக்கிறேன்

    கே :- நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை குறித்து பேசப்படுகிறதே?

    ப :- சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஒரே குவியலாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து.

    கே :- முட்டை முறைகேடு பெரிய விவகாரமாகி வருகிறதே?

    ப :- முட்டை முறைகேடு விவகாரத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பாகவே எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது, இது பொய்க் குற்றச்சாட்டு என்று கூறியவர்கள்தான் தற்போது மாட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதையெல்லாம் ஒழிப்பதுதான் முக்கிய வேலையாக எங்களுக்குத் தோன்றுகிறது

    கே :- கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் நிகழ்ந்த மாணவி மரணம்?

    ப:- மாணவியின் மரணம் கண்டிக்கத்தக்க ஒன்று கல்வி நிறுவனங்களின் உயரம் வளர்ந்தால் மட்டும் போதாது, கல்வியின் தரமும் உயர வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார். #Kamal #Kamalhaasan
    பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பிக்கிறார். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார். ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘ஒரே நேரத்தில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது. லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது. 

    என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன். ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார் பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.

    விவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்‌‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vikram #AksharaHaasan #AbiMehedhi
    கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.



    அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Vikram #AksharaHaasan #AbiMehedhi

    ×