என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95081"
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசுவேன் என்று அறிவித்தார்.
கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
சோனியா, ராகுல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார். முதல்-மந்திரி குமாரசாமியையும் தனியாக சந்தித்து பேசினார்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கமல்ஹாசனை வரவேற்று அவர் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு சகஜமாக பழகினார். கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தமிழர்-கன்னடர் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை மீண்டும் சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்தார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதினார். அதை ஏற்று குமாரசாமி இன்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதில் அனுப்பினார்.
இதை ஏற்று கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இரவு ஓட்டலில் தங்கினார்.
இன்று அவர் பெங்களூரில் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வமான கிருஷ்ணா இல்லம் சென்றார். அவரை குமாரசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார்.
குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து இருப்பதை கர்நாடகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. #Kamalhaasan #Kumaraswamy
கடந்த ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த கமல்ஹாசன் அரசியலில் வேகம் எடுத்து வருகிறார். தொடர்ந்து போராட்டங்கள், தலைவர்கள் சந்திப்பு, நிர்வாகிகள் நியமனம் என்று வேகம் காட்டும் கமல் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட தயாராகி வருகிறார்.
கடந்த நவம்பரில் மக்கள் நீதி மய்யம் என்னும் அமைப்பை தொடங்கிய கமல் அதை கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந்த பெயருக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் மே 31 வரை கெடு கொடுத்து இருந்தது. ஆனால் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காததால் கமல் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயர் உறுதியானது.
கமல் கட்சியின் பெயர் உறுதியனாதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவரது கட்சி பதிவு தொடர்பாக ஜூன் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜூன் 20-ந் தேதி கமல்ஹாசன் தனது கட்சிக்கான சின்னத்தை கேட்பார் என்று தெரிகிறது.
சின்னத்தின் அடிப்படையில் தேர்தல் நடந்து வருவதால் மக்களுக்கு பரிட்சயமான நெருக்கமான சின்னத்தில் போட்டியிடவே கட்சிகள் ஆர்வம் காட்டும். அதனால் கமல் விசில் சின்னத்தை கேட்கவே வாய்ப்பு அதிகம் என்று கமலுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறும்போது ‘கட்சியின் பெயரிலேயே ஆறு கைகள் இணைவது போல ஒரு சின்னம் இருக்கிறது. ஆனால் அதை வாங்கினால் காங்கிரசுக்கு ஓட்டு கேட்பது போல் ஆகிவிடும். சின்னத்தை சொல்லி ஓட்டு கேட்பதும் சிரமம்.
ஆனால் விசில் அப்படி இல்லை. மிக எளிதில் மக்கள் மனதில் பதியும். கமல் ஏற்கனவே விசில் என்ற ஆப் மூலம்தான் தொண்டர்களுடன் இணைந்து வருகிறார். எனவே விசில் சின்னத்தை கேட்கவே வாய்ப்பு அதிகம்’ என்றார்கள்.
கமல் சின்னம் கேட்டாலும் அந்த சின்னத்தை அவர் நிரந்தரமாக அவர் பயன்படுத்த ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டே ஆக வேண்டும். நிரந்தரமாக சின்னத்தை பெற சில விதிமுறைகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட கட்சி ஒரு தேர்தலில் பத்து சதவீத தொகுதிகளில் குறைந்தது போட்டியிட வேண்டும். அப்போது தான் அந்த கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்படும். #MakkalNeedhiMaiam #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி புதுக்கட்சியை தொடங்கிய கமல் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை தனது ரசிகர்கள் மூலமாக அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொண்டார்.
கமல் புதிய கட்சியை தொடங்கி 100 நாட்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் மகளிர் அணியினருக்கான மாநாட்டை நடத்தியதுடன், திருவள்ளூர் மாவட்டம் அதுகத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
கட்சியில் இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ள கமல், கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.
கட்சியின் பல்வேறு அமைப்புகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.
நற்பணி இயக்கம் என்ற பெயரில் கமல் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் மூலமாக ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இப்படி நற்பணிகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் ரசிகர்களுக்கே மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை கமல் வழங்க உள்ளார். இதற்காக அவர்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளார். அப்போது நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கூடுதலாக பெண் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இது போன்று பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.
தென் மாவட்டங்களில் ரஜினி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த போது மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இதனை பயன்படுத்தி அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்கவும் மாநில நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். பொது மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக கமல் தொடங்கிய மய்யம் விசில் செயல் மூலமாக மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த செயலியில் தினமும் 500 புகார்கள் குவிகிறது. இந்த புகார்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கமல் அறிவித்துள்ளார். இப்போது அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த 2 மாதங்களில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் கமல் முடிவு செய்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.
அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த வாரம் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் நடந்தது.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் 3-ம் கட்ட விரிவாக்க நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்க உள்ளது. கடற்கரைக்கு முன்னால் உள்ள சதுப்பு நிலத்தை தொழிற்சாலை நிலமாக மாற்றி நிலக்கரி சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு சட்டவிரோதமாக பரிசீலித்து வருகிறீர்கள். இது பேராபத்தை ஏற்படுத்துவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை நீரோட்டத்தை தடுக்காத வகையில் இன்னொரு இடத்தில் செயல்படுத்தலாம்.
எண்ணூர் கழிமுகப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் வெள்ளப்பெருக்கு சமயத்தில் சென்னைவாசிகளுக்கு மேலும் தீங்கு ஏற்படும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். எனவே நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுக விரிவாக்க பணிகள் குறித்து பரிசீலிக்கக்கூடாது. முதலில் 2 நபர் துணைக்குழு கடந்த ஜனவரி மாதம் ஆய்வு நடத்தியது தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும். அதன் பின்னர் அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு அனுமதிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துப்பாக்கி சூட்டை கண்டித்த தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.
இதற்கிடையே தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களில் 65 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பலியானவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பலியானவர்களின் உடல்களை வாங்க போவதில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு கூடியுள்ளனர். காயம் அடைந்தவர்களை இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சாதாரண கூலி வேலை செய்தவர்கள், ஆர்ப்பாட்டத்தை பார்க்க வந்தவர்கள் தான் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். இந்த உயிர்களுக்கு என்ன விலை வைத்தாலும் சரியாகாது. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டவர் யார்? இந்த பிரச்சனைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் தீர்வு.
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பலியானவர்களின் உடல்களை நடுநிலையான டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை இதோடு விட்டு விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட பொதுமக்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவு கிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Thoothukudi #SterliteProtest #KamalHaasan
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று கேரளாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றார். அப்போது கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்தார்.
இன்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருக்கிறது. இதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி வெளி நாடுகள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்கக்கூடாது.
குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை அரசு முறையாக கவனிக்க வில்லை. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தேவை என்ன என்பதை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடினால் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
அரசு ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்ற வேண்டும்.
தற்போது குடிநீர் பிரச்சனை எழுவதாக கூறினீர்கள். கிராமசபை சிறப்பாக செயல்பட்டால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிது. வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம்.
அடுத்த மாதம் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறேன். அவர் தான் தேதி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Petrol #Diesel
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்