search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வரும் நிலையில், படம் மீண்டும் துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 

    கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ‌ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.



    தற்போது ‌ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனதே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல்ஹாசன் பேச்சு குறித்து கருத்து கூற முடியாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    மதுரை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இன்றைய தினம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டிருக்கின்றார், அவருக்கு என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- ஸ்டாலின் மற்றும் தினகரன் எல்லோருடைய கடுமையான தேர்தல் பரப்புரையை கடந்து, வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது,.

    பதில்: என்னுடைய பரப்புரை, துணை முதல்-அமைச்சரின் பரப்புரை, எங்களுடைய கூட்டணி கட்சித் தலைவர்களின் பரப்புரைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.




    கேள்வி: கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறாரே?

    பதில்: நேற்றைய தினம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதுகுறித்து யாரும் ஊடகத்திலோ, பத்திரிகையிலோ, அரசியல் கட்சித் தலைவர்களோ பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன்.

    கேள்வி: தேனியில் ரவீந்திரநாத் எம்.பி. என்று போட்டு, கல்வெட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

    பதில்: என்னுடைய கவனத்திற்கு இதுவரை வரவில்லை.

    கேள்வி: குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது.

    பதில்: பருவமழை சரியாக பொழியாத காரணத்தினாலே கடுமையான வறட்சியின் காரணமாக இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைப்போக்க, ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கின்றேன். எந்தெந்த பகுதிகளில் வறட்சியால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றதோ, அந்தப் பகுதிகளுக்கெல்லாம் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலையிட்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டுமென்ற உத்தரவை வழங்கி அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியையும் முன்கூட்டியே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    கேள்வி: அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா குற்றம் சாட்டியிருக்கின்றாரே?

    பதில்: அது தவறான குற்றச்சாட்டு.

    கேள்வி: மத உணர்வுகளை தூண்டக்கூடிய விதமாக பேச்சுக்கள் இருப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

    பதில்: தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய பரப்புரை என்பதால் தேர்தல் கமி‌ஷன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இவைகளெல்லாம் வருகின்றது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழாது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்யும்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. இவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார். காந்தியின் மானசீக கொள்ளு பேரன் என்ற முறையில் நியாயம் கேட்க வந்துள்ளேன்” என்று கூறினார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது தமிழ்நாடு முழுவதும் 74 போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்றாலும் கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதனால் நேற்று அவரை நோக்கி செருப்பு, முட்டை, சாணம் போன்றவை வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் சூலூர் தொகுதியில் இன்று பிரசாரம் செய்ய இருந்ததை போலீசார் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தடுத்து உள்ளனர்.

    கமல்ஹாசன் கோவை பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் அரவக்குறிச்சியில் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறீர்களே?

    பதில்:- ஆமாம். நான் சொன்னதில் தவறான கருத்து எதுவும் கிடையாது. அது பல வருடங்களாக சொல்லப்பட்டது. இப்போது அதை திடீரென்று கவனிப்பது அவர்களின் சவுகரியத்துக்காக கவனிப்பதுபோல் தோன்றுகிறது.

    இதே பரப்புரையை நான் மெரினாவில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு சொல்லி இருக்கிறேன். பாராளுமன்ற தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தின்போது மெரினா கடற்கரையில் இதே கருத்துகளை இதே வி‌ஷயங்களை நான் சொல்லி இருக்கிறேன்.

    அப்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் எது கிடைக்கிறதோ அதை பிடித்துக் கொண்டு விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மெரினாவில் நான் பேசியபோது எல்லா மதத்தினரும் இருந்தனர்.

    கேள்வி:- உங்கள் கருத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதானே அவர்களின் கருத்து?

    பதில்:- உருவாக்கினார்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. உருவாகவில்லை. 3 நாட்கள் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் இவர்கள் உருவாக்கி விட்டதுதானே தவிர வேறொன்றும் இல்லை.



    பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் மோடி அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு பதில் சொல்வதற்கு சரித்திரமும், சரித்திர ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

    கேள்வி:- இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்:- தாக்குதல் அவர்கள் மீது நடக்கவில்லையே. அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கேள்வி:- உங்கள் பேட்டியில் நீங்கள் ஊடகங்களை குறை சொல்லி இருக்கிறீர்களே?

    பதில்:- என்னை குறை சொல்லும்போது நானும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டி இருக்கிறது. வாலையும், தலையையும் கத்தரித்து போட்டீர்களேயானால் யாரும் யாரையும் திட்டுவது மாதிரி நாம் சித்தரித்து விட முடியும்.

    அதன் பிறகு அதை முழுதாக போட்டார்கள். அதை பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம். பார்க்க முடியாதவர்கள், பார்க்க சகியாதவர்கள் அவர்கள் கூற்றை தொடர்ந்து பேசுவார்கள்.

    கட்சித் தலைவர்களோ, பிரசாரம் செய்பவர்களோ இனி இந்த வி‌ஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அதில் மடம் தலைவர்களுக்கு விதிவிலக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் மடத்தின் தலைவர்கள் சிலர் பேசி இருக்கிறார்கள்.

    அதை தூண்டி விடுபவர்கள் என்று சொன்னால் எங்கள் கட்சியில் இருந்து யாரும் அதைச் செய்யவில்லை. நாங்கள் அமைதியை காப்பதற்கான எல்லா வேலையையும் செய்கிறோம்.

    கேள்வி:- மத நல்லிணக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடிய தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் யாருமே உங்கள் கருத்தை ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அப்படியா? அவர்களுக்கு அஜெண்டா இருக்கிறது. அதனால் ஆதரிக்காமல் இருந்து இருக்கலாம்.

    கேள்வி:- ஓராண்டுக்கு மேல் தீவிர அரசியலில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை பேசிய பிறகுதான் தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறீர்களே?

    பதில்:- நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லிக் கொள்கிறீர்கள். நாங்கள் தீவிர அரசியலுக்கு வந்து விட்டோம் என்று சொன்னேன். அதை போன வருடத்தில் இருந்து என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    கேள்வி:- பா.ஜனதா சார்பில் காவல் நிலையங்களில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் கைதுக்கு பயப்படுகிறீர்களா?

    பதில்:- கைதுக்கு பயப்படவில்லை. எனக்கு பிரசாரம் இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆவல்தான். கைது பண்ணட்டும். எனக்கு ஒன்றும் இல்லை. கைது செய்தால் இன்னும் பதட்டம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை. அறிவுரை. அதை செய்யாமல் இருப்பது நல்லது.

    கேள்வி:- உங்கள் கருத்தை உங்கள் நண்பர்களும் திரையுலக சகாக்களும் ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஜனநாயக நாடு.

    கேள்வி:- கோட்சே பற்றி பேச வேண்டிய தேவை இப்போது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- கண்டிப்பாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள். மறுபடியும் காந்தியைப் பற்றி நல்ல நல்ல வி‌ஷயங்கள் வெளியே வருகிறது. அதை வெளிக்கொண்டு வரவும் சரித்திரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் சரித்திரத்தை நாம் நினைவு கொள்வது நல்லது.

    கேள்வி:- பிரசாரம் செய்யவிடாமல் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி இருக்கிறாரே?

    பதில்:- அரசியல் குறுக்கீடு எனக்கே இருக்கிறது. சூலூரில் எங்களுக்கு கடைசி நாள் பிரசாரம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான பிரசார நாள். அதை இவர்கள் காரணம் காட்டி தடை செய்து இருக்கிறார்கள். பதட்ட சூழல் அங்கே நிலவும் பட்சத்தில் ஏன் சூலூரில் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்பது எங்களுடைய பரிந்துரை.

    கேள்வி:- உங்கள் நாக்கு அறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?

    பதில்:- அது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    கேள்வி:- சோனியாகாந்தி வருகிற 23-ந்தேதி பா.ஜனதா அணியில் இல்லாத கட்சிகளை அழைத்துள்ளார். உங்களுக்கு அழைப்பு வந்ததா?

    பதில்:- எனக்கு அழைப்பு வரவில்லை. நான் இப்போது தான் ஊருக்கு வந்தேன்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படுகிறதே?

    பதில்:- இது முதல் முறை இல்லை. வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு கால கட்டங்களில் எனக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் தெளிவான போராட்டங்கள் இல்லை என்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.

    கேள்வி:- கட்சிகளை தாண்டி இந்துக்களின் மனது புண்பட்டிருந்தால்?

    பதில்:- இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். மொத்தமாக நீங்கள் சொல்லக் கூடாது.

    அரசியலில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் புண்பட்டிருப்பார்கள். அரசியலில் இல்லாத மதம் சார்ந்தவர்கள் என்ன இப்படி சொல்லி விட்டார் என்று கொஞ்ச நேரம் யோசிப்பார்கள். புண்படுவது, கோபப்படுவது, தாக்கப்படுவது இதெல்லாம் தனிப்பட்ட அரசியல். சாதனங்களை கையில் எடுத்து விளையாடுகிறார்கள்.

    கேள்வி:- உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறீர்களா?

    பதில்:- இல்லை. நல்ல பாதுகாப்பு எனக்கு இருந்தது. இங்கு கூட பாதுகாப்பை மீறி எதுவும் செய்ய வேண்டும் என்றால் யாரும் செய்யலாம். இதை செய்வது பெரிய கூட்டம் என்றால் பதட்டப்பட வாய்ப்பு உண்டு. இதில் 2 பேர், 4 பேர் ஏவப்பட்டவர்கள்.

    கேள்வி:- உங்களை நோக்கி செருப்பு வீசப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அரசியலின் தரம் குறைந்து விட்டது. நாதுராம் கோட்சே பற்றி நான் சொன்ன கருத்துக்காக என்னை நோக்கி செருப்பு வீசியுள்ளனர். செருப்பு வீசுவதாலோ, கல் வீசுவதாலோ என்னை அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது.

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது. மத நல்லிணக்கத்துக்காகவே நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து மதத்தையும் நான் சமமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    4 தொகுதிகளிலும் நினைத்ததை விட அதிகமாகவே கமல்ஹாசன் ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கமல் 30 வினாடிகள் பேசியதை 3 நாளாக பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவர்கள் இப்போது கமல் பேசியதை நாடு முழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள்.



    இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா? இந்த 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே அவர் ஓட்டு வாங்குவார் பாருங்கள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    மதுரை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகு ராஜின் மகன் திருமணம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று நடந்தது.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    கமல் கூறிய கருத்து தொடர்பாக பேச வேண்டாம் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக எனது கருத்தை கூற இயலாது.

    தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் கலெக்டர்கள் தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக கூறும் துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது.

    தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவோர் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.

    தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது .தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தொடர வேண்டும். 23-ந்தேதி தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மத்தியில் தாமரை மீண்டும் மலரும். தமிழ்நாட்டில் தி.மு.க. பல முறை ஆண்டு இருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் தமிழகத்திற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது அவற்றை எல்லாம் செய்து இருக்கலாம். குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொலைநோக்கு எண்ணத்தில் செயல்படாததால் இப்போது பிரச்சனை இருக்கிறது.

    காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது மோடி ஆட்சிதான். காங்கிரஸ், தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்த போதும் இதில் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாத கருத்துக்களை கூறுகிறார். சினிமாவில் பேசினாலே எதிர்ப்புகள் ஏற்படும். இந்நிலையில் யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும். நாம் பிரபலமாக இருப்பதால் பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார். இப்படி பேசினால் சிறுபான்மை ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார். நம்முடைய பேச்சுக்கு எதிர் விளைவுகள் வரும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

    அரசியலில் கமலுக்கு இன்னும் பக்குவம் தேவை. இப்படி பேசினால் இந்துக்கள் மனம் புண்படும் என்று இவர் உணரவில்லை. கமல் பிரசாரத்தில் ஏற்பட்ட சலசலப்பை நாங்கள் வரவேற்கவில்லை . யார் தாக்கப்படுவதையும் நாங்கள் ஆதரிப்பது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பல தரப்பட்ட மக்கள் கூடுவார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்தது போல இங்கு நடைபெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது. தி.மு.க. உறவுதான் ரகசியமானது. தி.மு.க., தினகரனும் ரகசிய உறவு வைத்து உள்ளனர். கோட்சேவை தேசப்பக்தர் என்று எங்கள் கட்சிக்காரர் கூறியதற்கு அவரை கட்சி கண்டித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
    திருவொற்றியூர்:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலை கண்டிக்கும் வகையில் அளித்த பேட்டியில் அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



    இதனையடுத்து கமல் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனில் நேற்று புகார் அளித்தனர். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 13-ந் தேதி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இச்செயல் ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய அமைச்சரே சட்டத்தை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால் இந்திய தண்டனை சட்டம் 503, 504-ன்படி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார். அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.

    பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பாஜக-வின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.

    இந்நிலையில் அவர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானம் படுத்துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
    போபால்:

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

    மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

    மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.

    விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது. 

    மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
    தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்  மனு தாக்கல் செய்திருந்தார்.


    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் தேர்தல் முடியும் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். 
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.  டெல்லி நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார்.


    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் முன்பு, இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

    இதற்கிடையே குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

    தான் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன் என்று மனுதாரர் விஷ்ணு குப்தா தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்களை ஆய்வு செய்த பின் கமலுக்கு சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

    இந்நிலையில் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை ஆக.2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    ×