search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருவதாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சமீபத்தில் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் ஆற்றிய உரையினை பிரிவினையை தூண்டுகின்ற சில அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக திரித்தும், திசை மாற்றியும் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.



    கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து அதன் மூலமாக தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருகின்றனர்.

    கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசும்போது தீவிரவாதம் எந்த மதத்தினாலும் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்திருந்தார்.

    அவரது உரையில் அவர் ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்தும் ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சமூகமாக இருந்திட வேண்டும் என்கிற தன்னுடைய எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தி பேசி உள்ளார்.

    அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இந்தியர் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொடர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு, மக்களின் பேராதரவோடு நடைபோட்டு கொண்டிருக்கின்ற மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கருத்தினை வலியுறுத்தி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து கொண்டே இருக்கும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தனது இந்த நிலைப்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை வலியுறுத்தி கொண்டே இருக்கும். மக்கள் நீதி மய்யம் நீதி மன்றங்கள் மீதும், சட்டத்தின் மீதும் பெரும் மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்த போது ஒரு பெண் தனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் கணவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார்.

    எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா? அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பல முகதோற்றத்தில் உள்ளார். அவரிடம் தோல்வி பயம் தெரிகிறது. நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். சந்திரசேகர ராவை பார்த்த பிறகு அவர்களுடைய நிலைப்பாட்டை தி.மு.க. தெரிவிக்காதது ஏன்?

    தமிழகத்தில் முதல்- அமைச்சரின் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் காப்பீடு திட்டங்களின் மூலம் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, தீவிரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். 

    கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.



    இதற்கிடையே, கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி ஐகோர்ட்டில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் கமல் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே?
    என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    கோவை, திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசினார்.

    இந்த கருத்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கோவை பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட அமைப்பாளர் குமரேசன் தலைமையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய கமல்ஹாசன் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

    குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிவசேனா அமைப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் கிட்டாமணி தலைமையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

    இதே போல திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் தலைமையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    இன்று கோவையில் பாரத் சேனா சார்பில் கமல்ஹாசனின் உருவ பொம்மை எரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் மாலை 4 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அகிலபாரத இந்து மகா சபை சார்பில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை காந்தி பார்க்கில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஜோலார்பேட்டையில் கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோட்டில் இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    நாய் கழுத்தில் கமல் உருவ படத்தை தொங்கவிட்டிருந்தனர். மேலும் கமல் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.


    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்து  பயங்கரவாதி  என்ற பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு தனிநபரையும் காயப்படுத்துவதில்லை. அதுபோல யாரையும் கொலை செய்வதையும் இந்து மதம் அனுமதித்ததில்லை.



    அந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. பயங்கரவாதியாக ஒருவர் இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது.

    இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை பயங்கரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன்.

    இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, பயங்கரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.




    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் பனையூர், சிந்தாமணி, வில்லாபுரம், ஹவுசிங்போர்டு காலனியில் பேசுவார். அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுவார் என்று சக்திவேல் கூறினார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட கமல் மீது அரவக்குறிச்சியில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார்.



    இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு இன்று கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

    இதை தொடர்ந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று இரவு இந்து முன்னணி பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கமல்ஹாசன் மீது 153A, 295A ஆகிய 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    நாகர்கோவிலில் இன்று சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமல்ஹாசனின் உருவப்பொம்மையை எரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார். அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவிலில் இன்று நடிகர் கமல்ஹாசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசேரி சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணியினர் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதாவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கமல்ஹாசனை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மேலும் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை நடுரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அருகில் உள்ள கடைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து உருவப்பொம்மை மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

    போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மிசா சோமன், குழிச்சல் செல்லம், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பாரதிய ஜனதா நிர்வாகிகள் நாகராஜன், முத்துராமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது ஹிந்து சேனா அமைப்பு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார்.

    கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

    இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு இன்று கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளது.



    தீவிரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புப்படுத்தி பேசியதன் மூலம் இந்து மக்களின் மத உணர்வுகளை கமல்ஹாசன் காயப்படுத்தி விட்டதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
    கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று கடுமையாக  விமர்சித்திருந்தார்.

    இவரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.



    இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அமைச்சர் பதவியிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்து தீவிரவாதி என்று விமர்சனம் தொடர்பாக கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    நடிகர் கமல்ஹாசன் இந்த 4 தொகுதிகளிலும் தனது மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

    அந்த ஊரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். கமல் தனது பேச்சின் போது ஆவேசமாக இதை குறிப்பிட்டார்.

    கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

    அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமலின் கருத்தை வரவேற்றுள்ளது. இதனால் கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

     


    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுக்கத்தை கடைபிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கூறுவதற்கு கமல் தகுதி இல்லாதவர். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் ஆணையம் கமல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “மக்கள் நீதிமய்யம் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டிய வி‌ஷ செடி. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களை கமல் இழிவுப்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் பற்றி டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதிக்கும், கொலைகாரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கமல் பேசியுள்ளார். இது சிறுபான்மையினரை கவரும் செயலாகும் என்று தெரிவித்தார்.

    பா.ஜனதா மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறும்போது, இந்து மக்களை இழிவுப்படுத்திய கமலின் கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் கமல் ஹாசனின் ‘இந்து தீவிரவாதி’ கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வர வேற்றுள்ளனர்.


    இதற்கிடையே கமல் மீது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாயா அளித்த மனுவில், கமல்ஹாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.

    எனவே, அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் பா.ஜனதா சட்டப்பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனுக்கள் மீது எதுபோன்று நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கமலின் பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கமல் தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார். ‘இந்து தீவிரவாதி’ கருத்தால், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கமலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் புகழ் முருகன் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக முதல்வர் வருகை, வைகோ பிரச்சாரம் போன்றவற்றால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.

    இந்து அமைப்புகள், பா.ஜ.க. எதிர்ப்பு ஆகியவற்றால் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாளை மறுநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கமல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுக்க நேற்று சென்றனர். இரவு 11 மணி வரை காத்திருந்த அவர்களிடம், இன்று காலை வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

    நாளை மறுநாள் 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை, பரமத்தி, நொய்யல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். மாலையில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு முறையான அனுமதி கிடைக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை மிக கடுமையாக கேலியும், கிண்டலும செய்து நிறைய பேர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    ×