search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
    • கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

    இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது. அதில் 2 பேர் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது29), ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி உள்ள பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.

    • பெரம்பலூரில் ஒரே கட்டிடத்தில் 2 கடைகளில் ரூ.1¾ லட்சம் திருட்டு போனது
    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.

    பெரம்பலூர்

    திருச்சி லால்குடியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ரேவதி (வயது 37). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சூப்பர் மார்க்கெட் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பியை மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.1¾ லட்சத்தை திருடி சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் ரோஸ் நகரில் வசித்துவரும் சவுந்தர்ராஜன் என்பவர் இதே கட்டிடத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் கல்லாபெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.பெரம்பலூர் நகரில் தினமும் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து ஒரு கும்பல் போலீசாருக்கு சவால்விடும் வகையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

    எனவே பெரம்பலூரில் சிறப்பு போலீசாரை நியமித்து திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் துப்புதுலக்கி, தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் மர்ம கும்பலை கைது செய்து திருட்டுப்போன பொருட்களையும் மீட்க வேண்டும் என்று வியாபாரிகள் மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்பட 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து முருகன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், மகன் மருதுபாண்டி(28), அண்ணாநகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு அம்மாசி கண்ணன் மகன் ராஜ்குமார்(28) ஆகியோரை ேபாலீசார் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (52). இவர் தனது மகளை பின்னால் அமர வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அரசரடி மகபூப்பா ளையம் பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இளம்பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பே ரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்காணிப்பு கேமிரா பழுது நீக்கும் தொழில் செய்பவர் வீட்டில் கொள்ளை
    • மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    அன்னை இந்திரா நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது மகன் கிஷோர்குமார்(வயது 32). இவர் தனது சொந்த வீட்டின் ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் யூ.பி.எஸ். உபகரணங்கள் பழுதுநீக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான குன்னம் தாலுகா வடக்கலூரில் நேற்று முன்தினம் நடந்த கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் பெரம்பலூருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றபோது முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்து. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்தபடி கிடந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தாலிச்சங்கிலி, கம்மல் மற்றும் தங்கச்சங்கிலி உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு போலீசார் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை வெள்ளைகிணறு பிரிவு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (60). இவர் நடத்தும் கடையின் வாடகையை கொடுப்பதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலில் இருந்து கீழே இறங்கிய அருணகிரி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் பணத்தை பறித்து சென்றதை அறிந்த அவர் உடனடியாக இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகையாபுரம் அருகே ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் சபரிமலை கண்ணன் என்பவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இவரது ஆட்டு கொட்டகையில் இருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது. இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் ஆடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

    • ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருட்டுபோனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது37). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக திருமங்கலம் நகர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை இந்த நிறுவ னத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக சாலை யோரங்களில் கம்பி, பிளாஸ்டிக் பைப்கள் வைக்கப்பட்டிருந்தன.

    சம்பவத்தன்று திருமங்க லம் நகர் பகுதியில் சாலை யோரத்தில் வைக்கப்பட்டி ருந்த 1,500 மீட்டர் பிளாஸ்டிக் பைப்கள், 30 இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இதுகுறித்து கட்டுமான நிறுவன மேலாளர் சந்தோஷ் திருமங்கலம் நபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது.
    • கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலையில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயிருப்பதை கோவில் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.

    நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் குணசேகரின் வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், 18 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • உண்டியலை உடைக்க உலி மற்றும் கம்பிகளை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது.
    • வடவள்ளி போலீசார் கைரேகைகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலை முள்ளை நகர் அருகே கருப்பராயன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் கோவிந்தராஜ் என்பவர் உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலில் ஏதோ? உடைப்பது போல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் கோவிந்தராஜ் கோவில் அருகே சென்று பார்த்தார். அப்போது கோவில் முன்பு உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதே சமயத்தில் கோவில் பூசாரி கோவில் நடை திறப்பதற்காக வந்து உள்ளார். அவரிடம் நடந்ததை கோவிந்தராஜ் கூறினார். இதையடுத்து இருவரும் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 ேபர் கோவில் உண்டியலை உடைத்து துணியில பணத்தை சுற்றி எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் உண்டியலை உடைக்க உலி மற்றும் கம்பிகளை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது. இதனால் கோவில் மதில் சுவர் வரையில் பணம் மற்றும் சில்லைறை காசுகள் சிதறி கிடந்தது. இதையடுத்து போலீசார் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோவை நியூ தில்லைநகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் கோவிலுக்குள் புகுந்து பித்தளை விளக்கு மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடியது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் கருப்பராயன் கோவிலில் உள்ள உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பரிதா (வயது 36). குழந்தைகளை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் சென்றார்.
    • மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசரீப். இவரது மனைவி பரிதா (வயது 36). இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீதியில், இவர்களது குழந்தைகள் டியுஷன் படித்து வருகின்றனர்.இவர்களை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் பரிதா சென்றார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வாட்டர் டேங்க் அருகே நடந்து வந்து ெகாண்டிருந்தார். அந்த இடம் இருள் சூழ்ந்த பகுதியாகும். அப்போது பரிதாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த பரிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். மர்மநபர்களால் பறித்து செல்லப்பட்ட ஹேன்ட்பேக்கில் ரூ.5 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரிதா அளித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மேலமடையை சேர்ந்தவர் ராஜேசுவரி (70). சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

    பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோசாகுளம் திருமலை நகரை சேர்ந்தவர் சலீம் (61). இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.அந்த பைக் சம்பவத்தன்று திருடு போனது.

    இதேபோன்று தபால்தந்திநகர் விரிவாக்கம் கோமதி நரை சேர்ந்த சுரேஷ்குமாரின் (42) பைக்கும் திருடு போனது. இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் ெபாருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆனையூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    ×