search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95169"

    கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார்.
    மாதங்களில் நான் மார்கழி என்பது கிருஷ்ணரின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

    கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

    அதன்படி போர்க்களத்தி லிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்து கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்‘ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், ஹூம் என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

    அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டினார். ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று அருளினார். மார்கழி மாத தேய் பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும். மார்கழி மாதம் வளர் பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்

    கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடுவதைக் கண்ட பெருமாள் காவலர்களிடம்‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டதால், மக்கள் மனதில் தர்ம சிந்தனை குறைந்து அதர்மம் தலைதூக்கும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும் சூழலில் மானிடர்கள் யாரும் வைகுண்டத்திற்கு வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

    அதற்கு பெருமாள், “கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் சிந்தனையில் பெருமானையும், மனதில் பக்தியையும் நிறுத்தி கடைப்பிடித்து பரமபத வாசலை கடக்கிறார்களோ அவர்களுக்கு வைகுண்ட வாசத்தில் கொடுத்தருளுவார் அரங்கன்.
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்பும்.
    ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள்.

    மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படுகிறது.

    இதற்கு என்ன பொருள் தெரியுமா?

    அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.

    நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.

    அதைத் தொடர்ந்து மற்ற வேதங் களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார். இதோ, ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின் றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது. பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.

    அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

    அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

    இன்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். பின்னர் அவர்காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெறும். காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை ராவணவதம் அரையர் இரண்டாம் சேவை நடைபெறும். பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும்.

    மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவை நடைபெறும். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு ஆர்யபடாள் வாசல் அடைந்து இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருடமண்டபம் சேருகிறார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி கிடையாது.

    மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் முதல் நாளான நேற்று பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் ஆண்டாள், நந்தகோபன் குமரன் அலங்காரத்தில் காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

    இதனையொட்டி நாளை அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் 5.45 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசமாகி காலை 7 மணிக்கு சாதரா மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    8 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவான் தலைமையில் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்ற விவரம் வருமாறு:-

    ஸ்ரீநம்பெருமாள் ரத்னங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பாடு- அதிகாலை 4.15 மணி
    பரமபதவாசல் திறப்பு(லக்னப்படி)-காலை 5.30 மணி
    திருக்கொட்டகை பிரவேசம்-காலை 5.45 மணி
    சாதரா மரியாதை-காலை 7 மணி
    திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்-காலை 8 மணி
    அலங்காரம் அமுது செய்ய திரை-காலை 8-8.45 மணி
    பொதுஜன சேவை-காலை 8.45 மாலை 6 மணி
    அரையர் சேவை (பொதுஜன சேவையுடன்)-மாலை 4.15-5 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)- மாலை 6-8 மணி
    திருப்பாவாடை கோஷ்டி-இரவு 8-9 மணி
    வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை-இரவு 9-10 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)-இரவு 10.30-11 மணி
    புறப்பாட்டுக்கு திரை-இரவு 11.30-12 மணி
    திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு-இரவு 12 மணி
    வீணை வாத்யத்துடன் மூலஸ்தானம் சேருதல்- 19.12.2018 அதிகாலை 1.15 மணி
    அரையர் சேவை
    உயர்வற பாசுரம், அபிநயம், வியாக்யானம் திருவாய்மொழி முதல் பத்து 110 பாசுரங்கள்.
    மூலவர் முத்தங்கி சேவை
    சேவை நேரம்-காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
    இரவு 7 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
    பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை.

    ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இதனால் அந்த 10 நாட்களும் இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி. அன்று முதல் 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த 10 நாட்களும் பரமபரவாசல் திறந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் பரமபதவாசல் வழியாக சென்று வர முடியும்.
    18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிது. அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது.

    கூட்டத்தில் திருமலை- திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 19-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கின்றன. அதையொட்டி 18-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி. பக்தர்கள் புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் அதிகாலை 3 மணிவரை தரிசனம் செய்யலாம். புரோட்டோக்கால் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வி.ஐ.பி. பக்தருக்கு 4 முதல், 6 டிக்கெட் வரை வழங்கப்படுகின்றன. அந்த டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய் ஆகும். எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு திருமலையில் ராம்ராஜு விடுதி அருகிலும், சீதா நிலையம் அருகிலும் தனியாகக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    புரோட்டோக்கால் பக்தர்கள் வி.ஐ.பி. டிக்கெட் பெற வேண்டுமென்றால், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த டிக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு ஆண்டு கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்வோர், திவ்ய தரிசனத்தில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைப்பாதைகளில் பாத யாத்திரையாக வருவோருக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 5 மணியளவில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    18, 19-ந்தேதிகளில் ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணிநேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். தேவஸ்தான ஊழியர்களுக்கு 2 நாட்களில் 24 மணிநேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இங்கு அவதரித்த ஆண்டாள் ஸ்ரீ ரங்கத்து பெருமானை நினைத்து மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல்கள் பாடி அவரையே கைத்தலம் பற்றினார். அந்த வகையில் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதில் பச்சைபரத்தல், பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் என இந்த மாதம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    பிற்பகல் 2.25 மணிக்கு ஆண்டாளுக்கு 30 திருப்பாவை பாடல்கள் இடம் பெறும் வகையில் நெய்யப்பட்ட 19 கஜ அரக்கு நிற திருப்பாவை பட்டுப்புடவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை முத்து பட்டர், கிரிபட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் ரமேஷ் ஆகியோர் நடத்தினர். மார்கழி மாத முதல் நாள் மட்டுமே ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பாவை பட்டில் ரெங்கமன்னாருடன் தரிசனம் தந்த ஆண்டாளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, தக்கார் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
    ‘மாதங்களில் நான் மார்கழி” என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. கடவுளே தம்முடையதாகப் பெருமிதப்படுகிற மாதம் இந்த மாதம்.
    ‘மாதங்களில் நான் மார்கழி” என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. கடவுளே தம்முடையதாகப் பெருமிதப்படுகிற மாதம் இந்த மாதம்.

    மிருகசீர்‌ஷ நட்சத்திரம் சந்திரனுடன் சேர்வதால் மார்கசீர்‌ஷம் என்றும் (மார்கசீர்‌ஷம் என்பதே மிருகசீர்‌ஷம் என்றழைக்கப்படுகிறது; இதுவே மார்கழி என்றும் சுருங்கிவிட்டது), சூரியன் தனுசு ராசியில் இணைவதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிற இம்மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உரித்தான ஆருத்ரா தரிசனப் பண்டிகையும் (திருவாதிரைத் திருநாள்) திருமாலுக்கு உரித்தான வைகுண்ட ஏகாதசியும் வருகின்றன. தவிரவும், குருசேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கீதோபதேசம் செய்தார். ஆகவே, இதே நாள், கீதா ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.

    மும்மூர்த்திகளின் ஒட்டுமொத்தமாகக் கருதப்படுகிற தத்தாத்ரேயர் அவதாரம் செய்த தத்தாத்ரேய ஜயந்தியும், பார்வதி தேவி அன்னபூரணியாகத் திருவதாரம் செய்த அன்னபூரணி ஜயந்தியும் இம்மாதத்திலேயே வருகின்றன. இந்த மாதத்தில்தான், ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாக வடநாட்டவர்கள் நம்புகிறார்கள். துளசிதாசர் தம்முடைய ராம சரித மானசத்திலும் இப்படியே பாடுகிறார். ஆகவே, விவாக பஞ்சமியும் மார்கழி மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது.

    இது ‘பீத மாதம்’! ‘பீத’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘மஞ்சள்’ என்று பொருள். பீதாம்பரம் (பீத + அம்பரம்) என்றால் மஞ்சள் வண்ண ஆடை என்றும் பொருள். மார்கழியில், அதுவரைக்கும் இருந்த இருளும் மழையும் விட்டுப்போய், குளிர் வந்துவிடும். இருந்தாலும், அடுத்து வரஇருக்கிற உத்தராயணத்தின் காரணமாக, செடிகொடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். குறிப்பாக, மஞ்சள் வண்ணப் பூக்களைத் தரும் தாவரங்கள் அதிகமாகப் பூக்கும். இதனால், சுற்றிலும் பார்க்கும்போது, மஞ்சள் வண்ணம் பிரதானமாகக் கண்ணில் படும். இதை வைத்துக் கொண்டு நம்முடைய முன்னோர்கள், இந்த மாதத்தைப் ‘பீத மாதம்’ என்று விவரித்தார்கள். இதுவே காலப்போக்கில் மருவி, ‘பீடை மாதம்’ என்றாகிவிட்டது.

    அது சரி, அப்படியென்றால், கல்யாணம் போன்றவை மார்கழி மாதத்தில் வேண்டாமென்று ஏன் சொன்னார்கள்? அதற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன. மழை, இருள் போன்ற அகன்று, அடுத்து வரஇருக்கும் தை மாதத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கவேண்டும்.

    எந்தப் பணியாக இருந்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வணங்குவது நம்முடைய மரபு. அதுவும் வயிற்றுக்குச் சோறிடும் அறுவடைப் பணிகளுக்கு முன்னதாக தெய்வத்தைத் தொழாதிருக்கலாமா? அது மட்டுமில்லை, அறுவடை முடிந்தால்தான் கையில் பணம் கிடைக்கும். அப்போதுதான் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றை நடத்தமுடியும். இன்னொரு சூட்சுமமும் உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை. ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், மொத்த கிராமமும் அதில் பங்கெடுக்கும்.

    கிராமம் முழுக்கத் திருமண வீட்டில் குவிந்துவிட்டால், ஊர்ப் பொதுவையும் கோயில் வேலைகளையும் யார் கவனிப்பார்கள்? இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டனர் நம்முடைய பெரியவர்கள். சூழல், வருமானம், கோயில் காரியம் என்று எல்லாவற்றுக்கும் வசதியாக மார்கழி மாதத்தைக் கடவுள் வழிபாட்டு மாதமாக மாற்றிவிட்டனர். மொத்தம் பனிரெண்டு மாதங்களில், ஒரு மாதம் முழுமையும் ஆண்டவனுக்கு என்று அமைத்தனர்; இதனால், மீதமிருக்கும் பதினொரு மாதங்களும் சரியாக இருக்கும் என்பது மட்டுமில்லை, கடவுளுக்கான மாதத்தில் தனிப்பட்ட சுயநலங்களும் அவரவர் வீட்டு விசே‌ஷங்களும் இல்லாமல், வழிபாடுஆலயம்பொது நன்மை என்று மட்டுமே கவனமும் இருக்கும்.

    மார்கழி மாதம் என்பது பிரம்ம முகூர்த்த மாதமும் ஆகும். அதென்ன பிரம்ம முகூர்த்தம்? ஒவ்வொரு நாளும், சூர்யோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்த காலமாகும். இந்த நேரத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ‘நல்ல காலம்’ பார்க்கவேண்டியதில்லை.

    மார்கழி எப்படி பிரம்ம முகூர்த்த காலமாகும்? நம்முடைய (அதாவது மனிதர்களுடைய) ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள், அவர்களுக்குப் பகல் பொழுது; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சணாயண ஆறு மாதங்கள், அவர்களுக்கு இரவுப் பொழுது. இந்தக் கணக்குப்படி, தேவ பகல் தொடங்குவதற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்தச் சுப வேளையில், தேவர்களும் முனிவர்களும்கூட, இறைவனை வழிபடுகிறார்கள்.

    ஆயர்பாடியின் பெண்கள், கிருஷ்ணனே தங்களுக்கு மணாளனாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காகக் காத்யாயனி தேவியை வழிபட்டு நோன்பு நோற்றார்கள்; இந்தக் காத்யாயனி நோன்பை மார்கழியில்தான் நோற்றார்களாம். பழந்தமிழ் நூலான பரிபாடல், மார்கழி மாதத்தில் கன்னியர்கள், அம்பா ஆடல் ஆடினர் என்கிறது. காத்யாயனி நோன்பையும் அம்பா ஆடலையும் அடிப்படையாகக் கொண்ட ஆண்டாள் நாச்சியாரும் மாணிக்கவாசகப் பெருமானும், திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் கொடுத்தனர்.

    பரிபாடல், இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. மார்கழியில், அந்தணர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள் என்பதே அந்தச் செய்தி. அறுவடைக்குப் பின்னர், வயல்வெளிகளில் வேலைகள் கூடும்; சமுதாய வாழ்க்கை முழு வேகமெடுக்கும். வேதங்களும் துதிகளும் ஓதக்கூடிய அந்தணர்கள், இப்படிப்பட்ட முழு வேகச் சமுதாய வாழ்க்கை நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், ஆண்டு முழுவதும் முறையாக அமையவேண்டும் என்பதற்காகவும் மார்கழியில் பிரார்த்தனை செய்தார்கள்.



    மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோட்சதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

    வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோயில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகு கோலாகலமாக நடைபெறும்.

    திருமால் ஆலயங்களில், உள் பிராகாரத்திலிருந்து வெளிப் பிராகாரத்திற்குத் திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கெனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளைச் சேவிப்பார்கள்.

    ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு?

    ஒருமுறை. பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவைத் தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார்.

    அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர்; அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர். இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார்.

    போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோயில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேணும்’ என்று வேண்டினர்.

    இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்டப் பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

    ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவும் மார்கழியின் சிறப்புகளில் ஒன்று. சிவபெருமானின் நட்சத்திரம் என்று பெருமை பெறுகிற திருவாதிரையில், நடராஜப் பெருமானின் நடனக் காட்சியைக் காண்பதே ஆருத்ரா தரிசனமாகும். சிவன் கோவில்களில், இந்த நாளில் ஏக கொண்டாட்டம்.

    27 நட்சத்திரங்களில், இரண்டுக்கு மட்டுமே ‘திரு’ என்னும் அடைமொழி உண்டு திருமாலின் நட்சத்திரமான திருவோணம் (திரு+ஓணம்); சிவனின் நட்சத்திரமான திருவாதிரை(திரு+ ஆதிரை). ஆருத்ரா என்றால் நீருடைய, நீர்த்தன்மை மிக்க, ஈரமான என்று பொருள் சொல்லலாம். ஆ+திரை என்றால் நீர்த்துளி என்றே பொருள்.

    கடவுள் கருணையின் ஈரம் கொண்டவர் என்பதே இதன் உட்பொருள். ஓரியன் விண்கூட்டத்தில், பெட்டல்ஜூஸ், ஆல்ஃபா ஓரியானிஸ் என்னும் விஞ்ஞானப் பெயர்களோடு காணப்படுகிற ஆதிரை நட்சத்திரம், சூரியனைப் போல் 30 மடங்கு அளவில் பெரியது; செந்நிறம் கொண்டது. உலக நாகரிகங்கள் அனைத்திலும் இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அராபியர்களுக்கு பைத்அல்ஜைஸா, சீனர்களுக்கு ஷீன் ஸியுக்ஸி, மத்திய அமெரிக்கர்களுக்குச் சக் டுலிக்ஸ் என்று இதன் பெருமைகள் அபாரம். அமெரிக்காவின் பழங்குடியினர் இதனை அனவரூ (ஆதாரத்தம்பம்) என்று அழைக்கிறார்கள். பண்டைய ரோமாரியர்களைப் பொறுத்தவரை, இறப்புக்கும் மறுபிறவிக்குமான நட்சத்திரம் இது.

    ஆதிரை நட்சத்திரம் மட்டுமல்ல, ஆதிரையானான சிவனாரும் செந்நிறத்தவர்தாம்! செம்பொற் சோதி என்றே இவர் போற்றப்படுகிறார். மார்கழி மாத முழு நிலா, மிருக சீர்‌ஷம் மற்றும் அதன் அடுத்த நட்சத்திரமான திருவாதிரை ஆகியவற்றோடு சேரும். இந்த நாளில், வியாக்ரபாத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் நடனக் காட்சி நல்கினார் சிவபெருமான். ஆகவேதான், இந்த நாளில் இறைவனுடைய நடராஜத் திருக்கோலத்தை தரிசிக்கிறோம்.

    ஏராளமான சிறப்புகளோடும் கடவுள்தன்மையோடு துலங்குகிற மாதமே, மாதங்களில் தலையாயதான மார்கழி.

    மார்கழி மாதத்தைச் சிலர், ‘பீடை மாதம்’ என்று புறந்தள்ளுகின்றனர். கல்யாணம், புதுவீடு புகுதல் போன்ற சுப நிகழ்வுகளை இம்மாதத்தில் நிகழ்த்துவதில்லை என்பதையும் சேர்த்துக்கொண்டு, பீடை மாதம் என்பதற்கு இன்னும் சிலர் ஆதரவு தேடுகின்றனர். பேச்சு வழக்கில், சொற்கள் சில சிதைந்துபோகும். பேச்சு வழக்கின் வேகம் காரணமாகப் ‘பீடை மாதம்’ என்னும் தவறான பிரயோகம் வந்துவிட்டது.

    காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    ஆண்டுக்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு 2 ஏகாதசிகள். ஆனால் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மங்கள நாளாக கருதப்படுகிறது. ஸ்ரீஆண்டாள் மார்கழி மாதம் 30 நாளும் பெருமாளையே நினைத்து நோன்பு இருந்து, அவரையே மணப்பேன் என்று தான் சூடி பிறகு ஆண்டவனுக்கு பூமாலை சூட்டி திருமணம் செய்து கொண்டார். இதுவே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் சாமியின் திருநாமத்தை சொல்லிக்கொண்டு விழித்திருந்து மறுநாள் துவாதசி அன்று விடியற்காலை குளித்து பகவானை தரிசனம் செய்து, வீட்டில் படையல் கொடுத்துவிட்டு விரதத்தை முடிப்பது தான் வைகுண்ட ஏகாதசி விரதமாகும். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து மகா விஷ்ணுவின் நாமத்தை துதிக்கும் பக்தர்களுக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், குழந்தை செல்வம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அளிப்பதோடு வைகுண்ட வாசம் (சொர்க்கம்) வழங்குவதாகவும், புராணங்களில் கூறப்படுகிறது.

    காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்ய தேசமாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் விமோசனம் ஆகிறது என்பது ஐதீகம்.

    திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிவலிங்கத்தின் மீது நின்ற கோலத்தில் வெங்டேச பெருமாள் காட்சி தருவது விசேஷமாகும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவிலாக இக்கோவில் அமைந்துள்ளது. அதோடு வைணவத்தையும், சைவத்தையும் ஒன்றிணைக்கும் திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3.30 மணிக்கு ஆஞ்சநேயர் மூலவர், உற்சவர் சாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் பரந்தாமகண்ணன், செயல் அலுவலர் திருஞானம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஏகாதசி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
    ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
    காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
    நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்

    பொருள்:

    ஏழு மதில்களால் சூழப்பட்ட பிராகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.
    ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.
    மார்கழி மாதம் வருகின்ற ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அப்போது சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலை திறந்து வைப்பர். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். ஸ்ரீரங்கம் விஷ்ணு ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்க வாசலில் நுழையக் காத்திருப்பர்.

    அன்று முழுநாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து அந்த அவலைச் சாப்பிட்டால் நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள் தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.

    அந்தத் திருநாள் மார்கழி மாதம் 3-ந் தேதி செவ்வாய்க்கிழமை (18.12.2018) அன்று வருகின்றது. மறுநாள் துவாதசியன்று அன்னம் வைத்து உணவு முறைப்படி விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
    அழகர்கோவில் கள்ளழகர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வருகிற 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது எதார்த்தம். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 18-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, அங்குள்ள சயன மண்டபத்தில் எழுந்தருளி கள்ளழகர் பெருமாள் அருள்பாலிப்பார்.

    இக்கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், அதே நாளில் அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளுவார். அப்போது ஆயிரகணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இரவு 7.15 மணி அளவில் நடைபெறும். அப்போது பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலான கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் வருகிற 18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

    இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது விசேஷத்திலும் விசேஷம். பெருமாள் கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால் திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டு முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் மலையை குடைந்து கருவறையாக அமைந்துள்ள 5 சன்னதிகளில் பவளக்கனிவாய் பெருமாள் சன்னதியும் ஒன்று. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் 18-ந்தேதி மாலை 6 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ×