search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    ஜெர்மனியில் நடைபெற்ற ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றார். #Hannover #HeenaSidhu #ISCH
    முனிச்:

    ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் வரும் 22 முதல் 29-ஆம் தேதி வரை உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற
    உள்ளன. இந்த போட்டிக்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜெர்மனியின் ஹனோவர் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடந்தது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்துவும், பிரான்ஸ் வீராங்கனை மதில்டே லமோலும் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றார். 

    ஹீனா சித்து ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீ நிவேதா வெண்கலம் வென்றார். #Hannover #HeenaSidhu #ISCH
    ஓய்வு பெற்ற முன்னாள் விமான படை வீரர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நிலமகள்நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 61). விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாக்கியலெட்சுமி (55).

    இந்தநிலையில் சரவணன் மற்றும் பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் குடும்பத்தோடு நேற்று காலை வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து சரவணன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் வீட்டை சோதனை இட்டனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஓய்வு பெற்ற விமான படை வீரர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×