search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #AsianAthleticChampionship #Gomti
    திருச்சி:

    கத்தார் நாட்டில் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    சாதனை படைத்த கோமதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் ஆகும். இவரது தந்தை மாரி முத்து, தாய் ராஜாத்தி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். லதா, திலகா என்ற இரண்டு சகோதரிகளும், சுப்பிரமணி என்ற சகோதரரும் உள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத்தில் பள்ளி படிப்பை முடித்த கோமதி பின்னர் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி படிப்பை முடித்தார். பின்னர் வருமான வரித்துறையில் வேலை கிடைத்து பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

    சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கோமதி கடந்த 2013-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். தற்போது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதனை கோமதியின் சொந்த ஊரான முடிகண்டம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி அவரது சகோதரர் சுப்பிரமணி கூறுகையில், எனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோமதியின் பயிற்சியாளரும் இறந்து விட்டார்.

    இருந்த போதிலும் மனம் தளராமல் சிறந்த பயிற்சி பெற்று தற்போது கோமதி சாதனை படைத்துள்ளார். இது அவரது தன்னம்பிக்கைக்கும், பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் ஊருக்கு சரியான பஸ் வசதி கிடையாது. ஆனாலும் கோமதி பயிற்சிக்காக தினமும் 15 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்வார். அதுவே அவரது உடற்பயிற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது.

    அவரது சாதனை இந்தியாவிற்கு மட்டுமல்ல, திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க கூடியதாகும். #AsianAthleticChampionship #Gomti
    ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக தலைமை செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். #Tirupati

    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1381 கிலோ தங்கத்தை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் வழங்கிய பின்னர் 1381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து திருப்பதிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு செல்லப்பட்டதில், தேவஸ்தானம் சரியான பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், ஆவணங்கள் இன்றி தேவஸ்தானத்தின் தங்கக்கட்டிகளை கொண்டு சென்றதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறி, இது தொடர்பாக ஆந்திர அரசு மற்றும் ஆந்திர அரசியல் கட்சிகள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

    இந்தநிலையில் 1381 கிலோ தங்கக்கட்டிகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட வி‌ஷயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆந்திர மாநில தலைமை செயலர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1,938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5,387 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது. மொத்தம் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது.

    இதில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கம் 3 ஆண்டு காலத்தில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக முதலீடு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலக்கெடு கடந்த 18-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    வட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1,381 கிலோ தங்கத்தை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரும்போது தேர்தல் அதிகாரிகள் அதனை பிடித்தனர்.

    ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். உடனடியாக சென்னை சென்று தமிழக போலீசாரிடமும், தேர்தல் அதிகாரிகளிடமும் தங்கத்தின் விவரங்கள் குறித்த ஆவணங்களை வழங்கினோம்.

    இதையடுத்து உரிய ஆவணங்களை வழங்கி திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1,381 கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளோம்.

    வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ள தங்கத்தை, டெபாசிட் காலம் முடிந்த பின்னர் திருப்பதிக்கு கொண்டு வந்து தேவஸ்தானத்தின் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டியது வங்கிகளின் கடமை ஆகும்.

    எனவே, சென்னையில் இருந்து ஆயிரத்து 381 கிலோ தங்கக்கட்டிகளை கொண்டு வந்த வி‌ஷயத்தில் தேவஸ்தானம் சரியான நடைமுறைகளை பின்பற்றியதா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆந்திர மாநில தலைமை செயலரின் விசாரணை ஆணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

    இதன்மூலம், தேவஸ்தானத்திடம் இப்போதைய மார்க்கெட் மதிப்பின்படி, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. #Tirupati

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். #AsianAthleticChampionship #Gomti
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம் இந்தியா இந்த போட்டியில் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது.   #AsianAthleticChampionship #Gomti
    திருச்சி விமான நிலையத்தில் இன்று 2 பெண் பயணிகளிடம் ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனை மட்டுமின்றி பஸ், ரெயில், விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்திய போது, ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2,203 கிராம் தங்க செயின்களை கழுத்தில் அணிந்து அதனை துணியால் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரிக்கும் போது அவர்கள் மலேசியாவை சேர்ந்த தனலட்சுமி (வயது 61) மற்றும் சசிகலா என தெரியவந்தது. அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது எப்படி? யாருக்காக கடத்தி வந்தார்கள்? குருவியாக செயல்பட்டு கடத்தி வந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கம் கடத்தலை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #TrichyAirport

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.24,114-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்தது. 24-ந் தேதி பவுன் ரூ.24 ஆயிரத்து 656-க்கு விற்றது. அதையடுத்து விலை படிப்படியாக குறைந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24 ஆயிரத்து 392 ஆக இருந்தது. இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு மேலும் ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 144 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,018-க்கு விற்கிறது.

    பங்கு சந்தை மீதான முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தை நிலவரம் போன்றவை காரணமாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும் ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது.
    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ரத்தினபுரியை சேர்ந்தவர் ராமாத்தாள்(வயது 60). இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது தனது 5 பவுன் செயினை ஒரு மணிபர்சில் வைத்திருந்தார். பஸ், அரசு ஆஸ்பத்திரி பகுதியில் வந்த போது ஒரு பெண் ராமாத்தாளிடம் இருந்த மணிபர்சை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து நைசாக இறங்க முயன்றார். இதைக்கண்ட ராமாத்தாள் சத்தம் போடவே பயணிகள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதா தேவி(33) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த ரஷீத்கான் (28) என்ற பயணியிடம் சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது சூட்கேசில் சோதனை நடத்தினார்கள். அதில் 2 கிலோ 50 கிராம் தங்கநகைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது என்ற பயணியின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் உள்ளாடையில் 150 கிராம் தங்க கட்டியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

    அதே விமானம் அதிகாலை 4.15 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யவந்த சென்னையை சேர்ந்த ஆஷிப்கான் (38) என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவரிடம் அமெரிக்க டாலர்கள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூரில் பட்டப் பகலில் காரில் சென்று வீடுகளில் கொள்ளையடித்த பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த 2 மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் படி உதவி கமி‌ஷனர் நவீன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து விசாரித்து வந்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது போலீசாருக்கு சில தடயங்கள் கிடைத்தது.

    இதன்படி விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவையை சேர்ந்த சதிஷ் குமார் (42), வேலூர் சங்கர் (36) திண்டுக்கல் வீரபாபு (21) திருப்பூர் ரமேஷ் (30), திருவாரூர் குருசக்தி (31), திருப்பூர் பலவஞ்சிபாளையம் வெங்கடேஷ் (30), அம்மாபாளையம் கீதா (29) ஆகியோர் காரில் சென்று வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் குரு சக்தி மீது தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவர் தான் கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து 80 பவுன் நகை, கார், 2 மோட்டார் சைக்கிள்கள் என 25 லட்சம் மதிப்புள் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இக்கொள்ளை கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இக்கும்பல் வீடுகளை நோட்டமிடும். பின்னர் திருப்பூர் ஆர்.வி.இ. நகர் பகுதியில் கொள்ளை கும்பல் தலைவன் குரு சக்திக்கு சொந்தமாக உள்ள ஒர்க்ஷாப்பில் கொள்ளை தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்.

    பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். தனிப்படை போலீசாரிடம் முதலில் கொள்ளை கும்பல் தலைவன் குரு சக்தி தான் சிக்கினார். அவரை வைத்து தான் மற்ற கொள்ளையர்களை பிடித்தனர்.

    கொள்ளையர்களில் வெங்கடேஷ், சதிஷ் குமார் ஆகியோர் மீது ஒரு சில கொள்ளை வழக்கு உள்ளது. மற்றவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

    கீதா மீதும் பல்வேறு கொள்ளை வழக்கு உள்ளது. இவருக்கு 4 கணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கொள்ளை அடிக்க இக்கும்பல் செல்லும் போது காரின் முன் பகுதியில் கீதாவை உட்கார வைத்து விடுவார்கள்.

    இதற்கு காரணம் காரை போலீசார் சோதனை செய்யும் போது பெண் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் தான் செல்கிறார்கள் என விட்டு விடுவார்கள் என்பதற்காக தான் அவரை அழைத்து சென்றுள்ளனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கவே கீதாவை உடன் அழைத்து சென்றுள்ளனர்.

    இக்கும்பல் திருப்பூர் மட்டுமின்றி வேறு எங்கும் கைவரிசை காட்டி உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,736-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    தங்கம் விலை பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கும் வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் விலை குறைந்தது. பிப்ரவரி 28-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 464 ஆக இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக சரிந்தது.

    நேற்று முன்தினம் பவுன் ரூ.24 ஆயிரத்து 472-ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரு.104 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 576-க்கு விற்றது. இன்றும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

    ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 736ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3092-க்கு விற்கிறது. தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 600 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.60 ஆகவும் உள்ளது. #Gold
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று  வருகிறது.

    இதில், கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    திருப்பத்தூரில் பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    ஒசூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சமியா (38). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக குமார் தனது மனைவியுடன் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் 7 பவுன் நகையை ஒரு பையில் எடுத்து கொண்டு இன்று காலை திருப்பத்தூருக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார்.

    பண பையை சமியா வைத்திருந்து உள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே வந்த போது சமியா வைத்திருந்த பண பை காணாமல் போயிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்திகூச்சலிட்டனர். பின்னர் இது குறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார். #ISSFWorldCup #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.



    இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். #ISSFWorldCup #SourabhChoudhary
    ×