search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #trichyairport #goldseized

    கே.கே.நகர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தை சேர்ந்த உம்முல் பரக்கத் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது , அவர் ரூ.12லட்சம் மதிப்புள்ள 388 கிராம் தங்க வளையல்கள் மற்றும் செயின்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உம்முல் பரக்கத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #trichyairport #goldseized

    தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற ஊத்துக்கோட்டை அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
    ஊத்துக்கோட்டை:

    பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அளவிலான தடகள போட்டிகள் புனேயில் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாந்தகுமார் கலந்து கொண்டு மும்முனை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார்.

    அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார். தலைமை ஆசிரியர் சிவராமன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். #tamilnews
    திருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

    திருப்பதி:

    மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர் திருப்பதிக்கு ரெயிலில் சென்றார். அவர் ஒரு பையில் 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார்.

    ரெயில் ரேணிகுண்டா வந்தபோது ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த நகை பையை திருடிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜி திருப்பதி ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் பாபுவிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவருடன் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இவர் நகைகள் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.184-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 953-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #Gold #GoldRate
    சென்னை :

    தங்கம் விலை கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 900-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் விலை அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 902 என்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் ஒரே நாளில் உயர்ந்தது. அதேபோல், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 930-ம், பவுன் ரூ.23 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.23-ம், பவுனுக்கு ரூ.184-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 953-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்பட்டது.



    தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் அதிகரித்து, ஒரு கிராம் 39 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி யிடம் கேட்டபோது, ‘அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு இடையேயான வர்த்தக உறவு பிரகாசமாகி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும். அதனால் தான் தங்கம் விலை அதிகரித்து இருக் கிறது.

    இனிவரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரும்’ என்றார். #Gold #GoldRate
    வளசரவாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம், ராஜாஜி அவின்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நங்க நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வங்கி பாஸ்புக் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை விருகம்பாக்கம் போலீசார் ரெட்டி தெருவில் உள்ள சாலையில் கிடந்த ரங்கராஜனின் வங்கி பாஸ்புக்கை கைப்பற்றினர். கொள்ளையர்கள் ரங்கராஜன் வீட்டில் நகைகளை எடுத்து கொண்டு பாஸ் புக்கை சாலையில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    என்னதான் தங்கநகைக் கடன் மற்ற கடன்களைவிடக் கவர்ச்சியாக இருந்தாலும், இக்கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
    தங்கநகைக் கடன், பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று. எளிதாகப் பெறக்கூடியதும் கூட.

    கடன் பெறுவோர் மட்டுமின்றி, தங்கநகைக் கடன் கொடுப்போரும் இதை மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகக் கருதுகின்றனர். தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் போல இல்லாமல் தங்கநகைக் கடன் மிகவும் உத்தரவாதம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

    கடன் தருபவர்கள் தங்கள் பணம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம். காரணம், கடன் பெற்றவரின் நகை அவர்கள் கையில் உள்ளது.

    எனவே எளிதில், உடனடியாகக் கடன் பெற விரும்புவோர், தங்களிடம் உள்ள நகை, தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளை வங்கியில் அல்லது தங்கநகைக் கடன் நிறுவனத்தில் கொடுத்து கடன் பெறலாம். பெற்ற கடன் தொகையைத் திருப்பிக் கொடுத்தவுடன் நகையை திருப்பித் தந்துவிடுவர்.

    தங்கநகைக் கடனில் உள்ள மிகப் பெரிய அனுகூலம், கடன் வாங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிது என்பதும், இது குறைந்த காலத்துக்காகப் பெறப்படும் கடன் என்பதும் ஆகும்.

    தங்கநகைக் கடன் பெற ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரிடம் தங்கம் சொந்தமாக இருக்க வேண்டும்.

    நம்மிடம் தங்கநகை இருக்கிறது, பணம் அவசர, அவசியத் தேவையாக இருக்கிறது என்றால், தங்க நகைக் கடன் விரும்பத்தக்கதது.

    காரணம், இதற்கான வட்டி விகிதம் இதற்கு இணையான கடன்களின் வட்டி விகிதத்தைவிட மிகக் குறைவு. அதுபோக கடனின் கால அளவு மிகவும் நெகிழ்வானது. அதாவது, சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை.

    தங்கநகைக் கடனுக்கு எந்த வங்கிக் கட்டணமும் கிடையாது. தவிர, இதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆவணங்கள்தான் தேவைப்படும்.

    ஆனால், என்னதான் தங்கநகைக் கடன் மற்ற கடன்களைவிடக் கவர்ச்சியாக இருந்தாலும், இக்கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    அவை பற்றி...

    ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவீதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம்.

    பெரும்பாலும் தங்கநகைக் கடன் வழங்குபவர்கள் இதற்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம்.

    மற்ற ‘செக்யூரிட்டி’ இல்லாத மற்றும் பலவகை ‘செக்யூரிட்டி’ உள்ள கடன்களைவிட தங்கநகைக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நீங்கள் கடன் பெறும் நிறுவனத்தைப் பொறுத்து அதற்கு உண்டான வட்டியை ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளலாம். இறுதியில் கடன் கால அளவு முடிவுக்கு வரும்போது அசலை திருப்பிச்செலுத்த வேண்டும். கடனுக்கு விண்ணப்பித்த உடன் மிக விரைவில் உங்களுக்குப் பணம் கிடைக்கும்.

    தங்கத்தின் மூலம் கடன் வாங்குவதற்கு முன்னால் ஒன்றுக்குப் பத்து இடத்தில் விசாரியுங்கள். நீங்கள் அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் தரத்தையும் அறிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

    தங்கநகையை வைத்துக் கடன் பெறுவோர், தவறாமல் வட்டி செலுத்தி, உரிய காலத்தில் அதை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நகை ‘மூழ்கிப் போகும்’ நிலை ஏற்படலாம். 
    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாக சென்னை திரும்பிய வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி தெரிவித்தார். #BhavaniDevi

    சென்னை:

    காமன்வெல்த் வாள் சண்டை போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் சமீபத்தில் நடந்தது.

    இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற சென்னை வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் காமன் வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவிக்கு பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்கப்பதக்கம் ஆகும். எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி.யின் எலைட் திட்டத்தில் சேர்க்கப்பட்டேன். இதனால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு பெரிதும் உதவி வருகிறது.

    தமிழக முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    காமன்வெல்த் தங்கப் பதக்கம், அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு பவானிதேவி கூறினார். #BhavaniDevi

    இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பாத்திமா (வயது 23) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் 2 தங்க சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவரிடம் இருந்த ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க சங்கிலிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த முகமது நிசாம் (44) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 10 விலை உயர்ந்த செல்போன்கள், 17 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், 6 கேமரா லென்ஸ்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் 40 கிராம் தங்க கட்டி ஆகியவை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.14½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thiruvannamalaitemple

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thiruvannamalaitemple

    மலேசிய விமானத்தில் வந்த 2 பயணிகளிடம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.45 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சென்னை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது காசிம்(30), இஸ்மாயில் (35) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    எனவே 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய சூட்கேஸ்களும் சோதனை செய்யப்பட்டன.

    அப்போது சூட்கேசில் இருந்த எமர்ஜென்சி விளக்கை திறந்து பார்த்தனர். அதில் ஒரு கிலோ 200 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது (34) என்பவரின் சூட்கேசை சந்தேகத்தில் திறந்து பார்த்தனர்.

    அதில் இருந்த ரகசிய அறையில் அமெரிக்க, யூரோப் டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.18 லட்சத்து 50 ஆயிரம். இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,176-க்கு விற்பனையாகிறது. #gold
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உச்ச கட்டமாக கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 64-க்கு விற்றது.

    அதன்பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.248 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது.

    கிராமுக்கு ரூ.31 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,022-க்கு விற்கிறது. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. அதைதொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    அதன் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு காரணமாகவும், திருமண முகூர்த்தம் மற்றும் தீபாவளி பண்டிகை போன்றவற்றாலும் தங்கத்தின் தேவை அதிகரித்தது. அதனால் விலை உயருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ. 41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கிறது. #Gold
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.#YouthOlympics2018 #JeremyLalrinnunga
    பியூனஸ் அயர்ஸ்:

    மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    நேற்று இரவு 62 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் விரர் ஜெர்மி லால்ரினுங்கா (வயது 15) மொத்தம் 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.



    இப்போட்டியில் துருக்கி வீரர் டாப்தாஸ் கானர் (263 கிலோ) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லார் எஸ்டிவன் ஜோஸ் (260 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மி லால்ரினுங்கா, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இரண்டு தேசிய சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. #YouthOlympics2018 #JeremyLalrinnunga
    ×