என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95208"
கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 320 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தது. உச்சக்கட்டமாக 5-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலைக்கு தான் தங்கம் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக ரூ.216 குறைந்தது.
ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 848 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,981-க்கு விற்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்றது.
பல மாதங்களாக பவுன் ரூ.23 ஆயிரத்துக்குள் தங்கம் விலை இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கடந்த (செப்டம்பர்) மாதம் பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக இருந்தது.
பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 4-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 792 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.112 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 904-க்கு விற்றது.
இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3008-க்கு விற்கிறது.
அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் தங்கம் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பங்கு சந்தையை விட தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்துள்து. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்கிறது. #Gold
நீலாங்கரை சந்திப்கலா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கமலேஷ். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்கம்- வைர நகைகள் கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 488 ஆக இருந்தது. மறுநாள் ரூ.56 விலை உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
நேற்று பவுனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 504 ஆக இருந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதிரடியாக பவுனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது.
ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 840 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.42 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,980-க்கு விற்கிறது.
கடந்த 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஓரிருநாளில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு கடும் விழ்ச்சி அடைந்தது. அதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ,,1900 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் 42 ரூபாய்க்கு விற்கிறது. #Gold
கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் 25-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை சரிந்தது.
நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23 ஆயிரத்து 432 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,904-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரு.40.20 ஆகவும் உள்ளது. #Gold
ராயபுரம்:
சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் கமல் (வயது 36). நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணியளவில் 300 கிராம் தங்க கட்டியை ஒரு பையில் வைத்தபடி தனது நண்பர் ஹேமந் என்பவருடன் கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கமல் அருகில் வந்து பேசிக் கொண்டிருந்தார். கமல் மது குடித்து முடித்து வீட்டுக்கு சென்று பையை பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க கட்டியை காணவில்லை.
இது குறித்து கமல் ஏழுகிணறு போலீசில் புகார் செய்தார். கொள்ளையனை பிடிக்க பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன், ஏழுகிணறு இன்ஸ்பெக்டர் தவமணி, உதவி கமிஷனர் சீனிவாசன், ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கமலுடன் அந்த மர்ம நபர் எடுத்த செல்பி படம் இருந்தது. அதை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வாகன சோதனையின்போது வால்டாக்ஸ் சாலை வழியாக வந்த அந்த மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் இடுப்பில் தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தான். கொள்ளை நடந்த 2 மணி நேரத்தில் அவன் போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில் அவனது பெயர் கர்ணன் என்பதும், கொண்டித்தோப்பு சுந்தர முதலி தெருவை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. #arrest
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு:
சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் உமா சங்கர் (வயது 30).
மேல் வீட்டில் உமாசங்கர் தனது குடும்பத்துடனும், கீழ் வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் உமா சங்கர் மற்றும் அவரது பெற்றோர் என அனைவரும் சேர்ந்து வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று விட்டனர்.
ஊருக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மேல் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவின் உள்ளே இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு ஒன்று, இந்தியாவில் பெண் சிசு கொலையையும், தங்கத்தின் விலை மாறுபாட்டையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1 லட்சம் பிறப்புக்களை ஒப்பீட்டுக்கு எடுத்தது.
1980-ம் ஆண்டுகளுக்கு பின், ஸ்கேன் வசதியால் கருவிலேயே பல பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால், திருமணத்தின்போது வரதட்சணையாக தங்கம் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. #India #BabyGirls #GoldRate
52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டபுள் டிராப்’ பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் மிட்டல், சீன வீரர் யியாங் யங், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் ஆகியோர் 150-க்கு 140 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.
மூவருக்கும் இடையே நடந்த ஷூட்-அவுட் முடிவில் அரியானாவைச் சேர்ந்த 26 வயதான அங்குர் மிட்டல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீரர் யியாங் யங் வெள்ளிப்பதக்கமும், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் அங்குர் மிட்டல், முகமது அசாப், ஷர்துல் விஹான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 409 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றது.
இத்தாலி அணி 411 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், சீனா அணி 410 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றன. இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 3-வது இடம் வகிக்கிறது. #ISSFWCH #AnkurMittalGold
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக உள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ‘கிடு கிடு’ வென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. அதைதொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
எனவே பணமதிப்பு வீழ்ச்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி 2017-2018 நடப்பு ஆண்டில் 8.46 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி இது குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 566.23 டன் தங்கம் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 557.77 டன் தங்கம் மட்டுமே இருப்பில் இருந்தது.
9 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் போது சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து 200 டன் தங்கத்தை விலைக்கு வாங்கியது. #RBI #Gold
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்