search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து, இன்று ஒரு சவரன் ரூ.23,072-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.60 குறைந்து ரூ.23 ஆயிரத்து 128 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 72 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ2,884-க்கு விற்கிறது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பும் தங்கம் விலை குறைய காரணம் என கூறப்படுகிறது.

    வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 42 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.40-க்கு விற்கிறது.
    திருச்சி அருகே பஸ்சில் கடத்தி வரப்பட்ட 17¾ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருச்சி:

    மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி செல்லப்படுவதாக கோவை மண்டல சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகில் உள்ள பூதக்குடி சுங்க சாவடியில் வாகன தணிக்கை செய்தனர். குறிப்பிட்ட தனியார் பஸ் வந்ததும் அதனை ஓரமாக நிறுத்த செய்து பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பஸ்சில் இருந்த புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரகமதுல்லா மகன் காஜா மொய்தீன் (வயது44), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்த அகமது கனி மகன் ஷாஜகான் (42) ஆகியோர் வைத்திருந்த 4 பைகளை சோதனை போட்டனர். அந்த பைகளில் ஏராளமான தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அவர்கள் இருவரும் தங்களது இடுப்பு பகுதியில் சுற்றி வைத்திருந்த துணியால் ஆன பெல்ட்டிலும் தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து மொத்தம் 77 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 கிலோ 830 கிராம் 300 மில்லி எடையுள்ள இந்த தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 324 ஆகும். இதனை தொடர்ந்து காஜா மொய்தீனையும், ஷாஜகானையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்க கட்டிகளுடன் திருச்சி சுங்க இலாகா ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். கைதான 2 பேரும் நேற்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் பி. கவுதமன் அவர்கள் இருவரையும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,328-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 328 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,916-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் ரூ.42.80 ஆகவும் உள்ளது.
    காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.

    காரைக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் வெற்றி. இவர் காரைக்குடி நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவர் தனது மகளுடன் காரைக்குடி கழனிவாசலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை உதைத்து கீழே தள்ளினர். அதில் கீழே விழுந்த ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

    இதேபோல காரைக்குடி ஆறுமுகநகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது மனைவி செல்வி (30). இருவரும் காரைக்குடி டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியார் சிலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

    காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி(25). இவர் முடியரசனார் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு கண்டனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் விக்னேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

    தொடர் சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற 3 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த 3 பேர் என்று தெரியவந்தது. சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்துள்ளது. ஒருமணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் காரைக்குடியில் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த போலீசார் பல்வேறு பிரிவிற்கு மாறுதலாகி விட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. எனவே குற்றப்பிரிவு போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு காரைக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 24 லட்ச ரூபாய் மதிப்பிலான 715 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #goldsmuggling
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம். இங்கு இன்று அதிகாலை வந்த பயணிகளின் உடமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர்.

    இந்நிலையில், அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த நபரை சோதனை செய்த அதிகாரிகள், அவர் மறைத்து வைத்திருந்த 715 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும், அவரை கைது செய்து, தங்க கடத்தலின் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 24 லட்ச ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #goldsmuggling
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,616-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 29-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. மறுநாள் (30-ந் தேதி) பவுனுக்கு அதிரடியாக ரூ.224 குறைந்து ரூ.23 ஆயிரத்து 696-க்கு விற்றது. நேற்று (31-ந் தேதி) பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 752 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,952-க்கு விற்கிறது. பங்கு சந்தை முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.80-க்கு விற்கிறது. #Gold
    கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் கோவில் பாளையம் தவைய காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரூபன்(31). தொழில் அதிபர். இவரது வீட்டில் விஷேசத்துக்காக உறவினர்கள் சிலர் வெளியூரில் இருந்து வந்திருந்தனர். நேற்று ரூபன் அவர்களை அழைத்து கொண்டு கோவைக்கு வந்து விட்டார்.

    இன்று அதிகாலை அவர் மீண்டும் ஊருக்கு திரும்பிய போது வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 40 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது. இதையடுத்து கோவில் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் துப்புறியும் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    கோவில்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 5 இடங்களில் அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் துப்பு துலங்குவதற்கு முன்பு மீண்டும் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே கோவில் பாளையம் பகுதியில் நடக்கும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஜெயக் குமார் (வயது 64). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். இன்று காலை வீடு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,664-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 24-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்த 872-க்கு விற்றது.

    இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 664 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.26 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ2,958-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கிறது. #Tamilnews
    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார். #Tejaswini #Gold #MunichWorldCup
    புதுடெல்லி:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் 621.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மயிரிழையில் பின்தங்கிய சக வீராங்கனை அஞ்ஜூம் மோட்ஜில் 621.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ்வினி சவாந்த் சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் செயின்சிங் 627.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்ற இந்தியர்கள் ககன் நரங், சஞ்ஜீவ் ராஜ்புத் ஏமாற்றம் அளித்தனர்.  #Tejaswini #Gold #MunichWorldCup
    மலேசிய முன்னாள் பிரதமர் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது வீட்டில் 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.#MalaysiaNajibRazak #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்தது. எனவே மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.

    அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோலாலம்பூரில் பெவிலியோன் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாக்குக்கு சொந்தமான 2 வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 100 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.171 கோடி ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது, இவைதவிர விலை உயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 350 பெட்டிகளில் அடைக்கப்பட்டு 5 லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டது.



    இவை தவிர ரசாக்கின் வீட்டில் ஒரு பாதுகாப்பு பெட்டகமும் உள்ளது. அதன் சாவி தொலைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும் அதை திறக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பெட்டகம் திறக்கப்பட்டால் மேலும் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்கள் சிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.#MalaysiaNajibRazak #NajibRazak
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,768-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 10-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்றத்தால் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ரூ.64 குறைந்து பவுன் ரூ.24 ஆயிரமாக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரு.232 குறைந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 768 ஆக உள்ளது.

    கிராமுக்கு ரூ.29 குறைந் துள்ளது. ஒரு கிராம் ரூ.2,971-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரமாக உளளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கப்படுகிறது.
    சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை வந்த விமானத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த உனைஷ் என்பவர் வந்தார். அவர் கொண்டு வந்த எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்பீக்கர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 988 கிராம் எடையுள்ள 52 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த உனைஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 
    ×