search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95209"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,888-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 664-க்கு விற்றது. இன்று அதிரடியாக பவுனுக்கு மேலும் ரூ.224 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 888 ஆக உள்ளது.

    கிராமுக்கு ரூ.28 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,861-க்கு விற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, திருமண சீசன் மற்றும் தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,792-க்கு விற்பனையாகிறது.

    சென்னை, ஜூலை. 18-

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பவுன் ரூ.23 ஆயிரத்தை கடந்து விற்று வந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக சரிந்து ரூ.23 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிந்து நேற்று பவுன் ரூ.23 ஆயிரஹ்து 16 ஆக இருந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.224 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 792 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,849-க்கு விற்கிறது.

    வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.500 குறைந் துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 700 ஆகவும் ஒரு கிராம் ரூ.41.70-க்கு விற்கப்படுகிறது.

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,310 ஆக உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை :

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பின் ஒரு பகுதியாக, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரித்து உத்தரவிட்டு, ஏதோ விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றி, அவர்களுடைய வாழ்வில் என்றும் மாறாத புது வசந்தத்தை உருவாக்கிவிட்டது போல், மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2014-2015-ல் 50 ரூபாயும், 2015-2016-ல் 50 ரூபாயும், 2016-2017-ல் 60 ரூபாயும், 2017-2018-ல் 80 ரூபாயும் என்று ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச விலையை ஏதோ பெயரளவுக்கு உயர்த்தி, 4 வருடங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பல வகையிலும் விபரீத விளையாட்டு நடத்திவிட்டு, இப்போது நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழலில், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, ரூ.200 குவிண்டாலுக்கு அதிகரித்து விட்டதாகவும், 2014-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், முற்றிலும் திசைதிருப்பும் வகையிலான, தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவது வேதனையளிக்கிறது.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.200 வீதம் உயர்த்தியிருந்தால் இன்றைக்கு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,750 கிடைப்பதற்கு பதில், ரூ.2,310 கிடைத்திருக்கும். இந்த 4 ஆண்டு காலம் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் தற்கொலையும், தொடர் கதையாகிவிட்ட அவர்தம் துயரங்களும் ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.



    அதேபோல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தாலும் இந்நேரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப் பாதையில் வளம்பெறத் தொடங்கியிருக்கும். ஆனால், இந்த 4 வருடங்களில் விவசாயிகளின் நலன் பற்றியோ, நெடுங்காலமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளைப் பற்றியோ, துளியும் கவலைப்படாமல், அவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட அக்கறையின்றி இருந்துவிட்டு, டெல்லிக்கே சென்று பல நாட்கள் பல்வேறு வகையிலும் போராடிய விவசாயிகளைக்கூட சந்திக்க மறுத்து, கைது செய்து சிறையில் அடைத்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இப்போது குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி விட்டோம் என்று, தம்பட்டம் அடிப்பதின் அரசியல் சுயநல அடிப்படையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் துல்லியமாகவே மத்திய அரசின் கபட நாடகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    ஆகவே, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்திடுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் அடையாளமும் இல்லாமல், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தும் ஆர்வமும் இல்லாமல், குவிண்டால் நெல்லுக்கு ரூ.200 அதிகரித்துவிட்டோம் என்ற வாய்ச்சவடால், 4 வருடங்களாக விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்துள்ள துரோகத்திற்குத் தீர்வாகாது. 4 வருடம் விவசாயிகளைப் புறக்கணித்ததற்கு உரிய விடை தேடி நியாயம் செய்ய பா.ஜ.க. அரசு உண்மையிலேயே விரும்பினால், உயர்ந்துவரும் இடுபொருள்களின் விலை செய்நேர்த்திச் சிரமங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,310 கிடைக்கும் அளவிற்காவது குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    தி.மு.க.வின் தற்போதைய இலக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 அளிக்க வேண்டும் என்றாலும், மத்திய பா.ஜ.க. அரசு 4 வருடங்களாக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்ததைச் சிறிதளவாவது ஈடுசெய்யும் வகையில், இந்த ஆண்டுக்கு ரூ.2,310 ஆக உயர்த்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,328-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 328 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,916-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் ரூ.42.80 ஆகவும் உள்ளது.
    எத்தனால் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வைத்து உள்ள பாக்கியை வழங்க உதவும். #Ethanol #PriceHike
    புதுடெல்லி:

    கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் துணைப்பொருளாக ‘மொலாசஸ்’ கிடைக்கிறது. இந்த ‘மொலாசஸ்’ எத்தனால் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.இந்த எத்தனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருளாக பயன்படுத்த ஏற்றது ஆகும்.இந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த பெட்ரோல் விலை குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கரும்பு விவசாயிகளும் நல்ல பலன் அடைய முடியும்.

    இந்த நிலையில், தற்போது சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனால் ஒரு லிட்டர் விலை ரூ.40.85 ஆகும். இந்த எத்தனால் விலையை ரூ.2.85 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் எத்தனால் விலை ரூ.43.70 ஆக உயர்ந்தது. மேலும் முதல் முறையாக பி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. இந்த வகை எத்தனால், 1 லிட்டருக்கு ரூ.47.49 என்ற விலைக்கு விற்கப்படும். இதுவரை சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கு மட்டுமே மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி மூலதன வகைக்கு வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

    மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்து உள்ள பாக்கித்தொகையை வழங்குவதற்கும், எத்தனால் தாராளமாக கிடைக்கச் செய்வதற்கும், கரும்புச்சாற்றில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.இன்று (நேற்று) எடுக்கப்பட்ட முடிவுகள், பெட்ரோலுடன் கலப்பதற்கு தேவையான அளவு எத்தனால் கிடைக்க உதவியாக இருக்கும். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு ஆகிற செலவை குறைக்கும்.

    மேலும், சரக்கு மற்றும் சேவை வரிகள், போக்குவரத்து கட்டணங்கள் வழங்கப்படும். இறக்குமதி செய்யக்கூடிய பெட்ரோலிய பொருட்களின் விலையை விட இந்த விலை மலிவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * நகர்ப்புற திட்டமிடல், வளர்ச்சித்துறையில் இந்தியா, சிங்கப்பூர் இடையே ஒத்துழைக்க செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி.

    * சுகாதார துறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவும், பஹ்ரைனும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அனுமதி.

    * சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவும், ஜெர்மனியும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி. மேற்கண்ட முடிவுகள், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப் பட்டன.  #Ethanol #PriceHike  #tamilnews 
    2017-18 கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். #TNtextbooks #schoolbooks
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.

    2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

    திருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார். #TNtextbooks #schoolbooks
    இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது.

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரி வரி விதிப்பு திட்டமான ஜி.எஸ்.டி. திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால் விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதன் பேரில் இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 21 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.48க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டர் ரூ.71.73 ஆக உள்ளது.

    பெட்ரோல், டிசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Petrol #Diesel
    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் 20 லட்சத்துக்கும் கூடுதலாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல்லில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினமும் அனுப்பப்படுகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளில் வெகுவாக குறைந்தது. டேம் மற்றும் ஏரி மீன்கள் விற்பனைக்கு வந்தன. கடல் மீன்கள் இல்லாத காரணத்தினால் டேம் மற்றும் ஏரி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த மீன்களை விரும்பாதவர்கள் கறிக்கோழிகள் வாங்கினார்கள்.

    மேலும் கோடை விடுமுறை என்பதால் கறிக்கோழிகள் விற்பனை அதிகமானது. இதனால் அதன் விலை உயர தொடங்கியது. கடந்த மாதம் 1 கிலோ கறிக்கோழி உயிருடன் 180-க்கும், தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனையானது.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் திருவிழா தொடங்கி இருப்பதாலும், முக்கியமாக 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கி இருப்பதாலும் கறிக்கோழியின் விற்பனை குறைந்ததால் விலை குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதுபோல் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-ல் இருந்து ரூ.20 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழியின் விலை குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். #Tamilnews
    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.09 ஆக இருந்தது.

    ஆனால், டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  #Petrol #Diesel
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வரும் நிலையில் நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்த்து. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81 ரூபாய் 19 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசாகவும் இருந்தது.    #Petrol #Diesel #tamilnews 
    4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மாதம் தொடர்ச்சியாக 20 நாட்கள் அதிகரித்தால் பெட்ரோல் லிட்டர் 80 ரூபாயையும், டீசல் 73 ரூபாயையும் தாண்டியது.

    இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன.

    இந்த நிலையில் 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.31 ஆகவும், டீசல் ரூ.73.14 ஆகவும் இருந்தன. அவற்றின் விலை 30-ந்தேதி முதல் இன்று வரை படிப்படியாக குறைந்து வருகிறது.

    4 நாட்களாக விலை குறைந்தாலும் விலை உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன.

    கடந்த 30-ந்தேதி பெட்ரோல் ஒரு பைசாவும் டீசல் ஒரு பைசாவும் குறைந்தன. 31-ந்தேதி பெட்ரோல் 7 பைசா, டீசல் 6 பைசாவும் குறைக்கப்பட்டன.

    பெட்ரோல் நேற்று 6 பைசாவும், இன்று 8 பைசாவும் குறைந்துள்ளன. டீசல் 4 பைசா மற்றும் 8 பைசா வீதம் குறைக்கப்பட்டன. 4 நாட்களில் பெட்ரோல் விலையில் 22 காசும், டீசல் விலையில் 19 காசும் குறைந்துள்ளது.

    ஆனால் விலை உயரும் போது 25 பைசா, 30 பைசா, 35 பைசா என அதிகரித்தது. விலை உயர்த்தப்பட்ட அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,616-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 29-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. மறுநாள் (30-ந் தேதி) பவுனுக்கு அதிரடியாக ரூ.224 குறைந்து ரூ.23 ஆயிரத்து 696-க்கு விற்றது. நேற்று (31-ந் தேதி) பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 752 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,952-க்கு விற்கிறது. பங்கு சந்தை முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.80-க்கு விற்கிறது. #Gold
    ×