search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95218"

    கணவன் மனைவி தாம்பத்தியத்தில் சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் பெண்களை வெறுப்படைய செய்யும். அந்த விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும்.

    பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.

    அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை தாம்பத்தியத்தின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.

    தாம்பத்தியத்தின் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.

    ஆக்ரோஷமாக தாம்பத்தியத்தின் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்.

    செக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.

    பெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.
    ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? என்ற சந்தேகம் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும். இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
    ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? எந்தச் சமயங்களில் உறவுகொண்டால் கருத்தரிக்கும்? இந்த மாதிரி கேள்விகள் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும்.

    ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.

    ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபாலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபாலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14-ம் நாளில் (மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14-வது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.

    இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது. இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.



    ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்துபோகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.

    உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதற்காக இதைச் சொன்னேன்.

    ஒருமுறை உடலுறவுகொண்டாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

    எந்தெந்த நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம் என்பது அது மாதவிடாய் சுழற்சியின் தொடர்ச்சியைப் பொறுத்தது. ஒரு பெண் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்படுகிறார் என வைத்துக்கொள்வோம். மாதவிடாய் ஆன நாளை, முதல் நாள் எனக் கணக்கிட வேண்டும். 9-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள் ஆகும். இதைச் சரியாகக் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களுக்கு 28 நாட்கள் என்ற சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது இல்லை. 18-ம் நாள் கருத்தரிப்பு ஏற்பட்டால், அதை குறைந்தபட்ச சுழற்சி எனவும் 10-ம் நாள் கருத்தரித்தால், அதை அதிகபட்ச சுழற்சி எனவும் சொல்வோம்.
    கணவன் - மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

    இணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

    தாம்பத்தியம் கொள்வதில் இடைவேளை ஏற்பட்டால், பாலியல் உணர்சிகளை தூண்டப்படுவதில் சிக்கலை உண்டாகும். குறிப்பாக விறைப்பு தன்மை குறையவும் வாய்ப்பு உள்ளது.

    உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து விடும். பின் தாம்பத்தியம் கொள்ளும் போது மனதளவில் உடலளவில் பல சிக்கல்கள் ஏற்படும்.

    தாம்பத்தியம் கொள்ளும் போதும் கலோரிகள் எரிக்கப்படும். அப்படி தாம்பத்தியம் கொள்ளாமல் இருக்கும் போது கலோரிகள் எரிக்கப்படுவதும் குறையும் அளவில்லாமல் சாப்பிடுவது உள்ளிட்ட காரணத்தால் உடல் எடை அதிகரிக்கும்.
    தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும்.
    எந்த ஓர் உறவும் வாழ்க்கை முழுவதும் இனித்திட அதற்கான அடிப்படை நியதிகளைப் பின்பற்ற வேண்டும். நமது வாழ்க்கைத்துணைக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு தாம்பத்யரீதியாக ஒழுக்கமாக இருப்பதுதான்.

    திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வது பல வழிகளிலும் ஆரோக்கியமானதல்ல. திருமணம் வரை காமத்துக்காகக் காத்திருப்பது கணவன் - மனைவி உறவை மேலும் தித்திக்கவே செய்யும். திருமணத்துக்கு முன்பாக லிவ்விங் டுகெதர் முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வது கண்டிப்பாக திருமண உறவை பாதிக்கும். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும் அது ஒரு குற்ற உணர்வை ஒருவருக்குள் உண்டாக்கும். எனவே, ஆண் - பெண் இருவரும் இது போன்ற உறவைத் தவிர்ப்பது நல்லது.

    இன்றைய கணவன், மனைவி திருமணமான புதிதில் தனது நட்பு வட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் திருமணத்துக்குப் பின் அந்த நட்பு வட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எதிர்பாலினத்தவருடன் நட்பு காரணத்துக்காகக் கூட நெருக்கமாக இருப்பது வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் மன வேறுபாட்டை உண்டாக்கும்.

    இதுவே பின்னாளில் கணவன்-மனைவி உறவில் சந்தேகத்துக்கான விதையாக மாறி விஸ்வரூபமெடுக்கும். இதனால் கணவன் மனைவி உறவில் அவரவர் பிரைவஸியை அனுமதிப்பதோடு சந்தேகத்துக்கு இடமின்றியும் நடந்து கொள்ள வேண்டும்.



    ஆண் - பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பாக தங்களுக்கு செக்ஸுவலாக அல்லது வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பின் கைவிட வேண்டும். குறிப்பாக பெண்கள் புகையிலைப் பழக்கம் இருப்பின் கைவிடுவது அவசியம். ஆண்கள் மது, போதைப் பழக்கங்கள் இருப்பின் திருமணத்துக்குப் பின் இது போன்ற பழக்கங்களைக் கைவிடுவது மிக மிக முக்கியம்.

    ஏனென்றால் தாம்பத்திய உறவு, குழந்தைப் பிறப்பு இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்வதும் நல்லதல்ல. இதுபோன்ற தவறான பழக்கங்களைத் திருமணத்துக்குப் பின்பும் கடைபிடித்தால் தாம்பத்ய உறவில் நீடித்த  இன்பம் மற்றும் உச்ச நிலையை அடைவது தடைபடும்.
     
    தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. அதற்கு மனமும் அன்பால் இணைந்து இன்புற வேண்டும். பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும். இதற்கு உடல் மனம் இரண்டும்
    ஃபிட்டாக இருப்பது அவசியம். உடலளவில் ஆரோக்கியமாக இருப்பது நம்பிக்கை தரும்.

    தாம்பத்ய நேரத்தில் உண்டாகும் பதற்றத்தைக் குறைக்கும். தாம்பத்ய உறவின்போது நீண்ட நேரம் விளையாட உடலால் உறவாடவும் மூச்சுப்பயிற்சி உதவும். இதனால் திருமணத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே எளிய யோகா பயிற்சிகள் செய்வது அவசியம்.
    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள்.
    இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

    தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வதில் பிரச்சனை ஏற்படும்.

    நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சனை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.



    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

    அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சனை வருவதுண்டு.

    30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
    ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.
    லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள் பயன்படுத்தினார்கள். உடலை அழகாகக் காட்டுவதற்கு... சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு... அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு!

    கவர்ச்சியான உள்ளாடைகளில் மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு  ஃபேன்டஸியும் செக்ஸுக்கான அகத்தூண்டலும் கிடைக்கிறது.

    பொதுவாக ஆணுக்கு, அழகான பெண்ணை பார்த்தவுடனேயே பாலியல் தூண்டுதல் கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல... மனம் ஓர் ஆணை விரும்பினால்தான் செக்ஸுக்கான அகத்தூண்டுதல் பெண்ணுக்குக் கிடைக்கும். ஒரே வித உடைகளில் மனைவியைப் பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த சலிப்பை விரட்ட, கவர லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.



    இது நவீன யுகம்... பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்... பல துறைகளில் பிரகாசிக்கிறார்கள்... எல்லாவற்றையும் அறிந்தும் வைத்திருக்கிறார்கள். மனைவி படுக்கையறைக்குள் லாஞ்சரி அணிந்து வருகிறாரா? கணவனிடம் உறவுக்கு ‘ஓ.கே.’ சொல்கிறார் என்று அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தாராளமாக அணியலாம்.

    அதே நேரத்தில், வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறது. பேக்கிங் அழகாக இருந்தால் போதுமா? உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண்டாமா? எனவே, பெண்கள் கணவனைக் கவரும் விதமாக உடலழகைப் பராமரிப்பது அவசியம். ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.

    ‘கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால் மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது’ என்று ஒருவர் சொல்கிறாரா? அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.
    சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.

    என்ன தான் சுய இன்பம் காண்பதால் உடலுக்கு நன்மை விளைந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அளவாக சுய இன்பத்தை அனுபவித்து, நன்மைகளைப் பெறுங்கள். இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.

    சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தான் வருமே தவிர, சுய இன்பம் கண்டால் அல்ல.

    சுய இன்பம் என்பது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய ஓர் பாலியல் செயல். சர்வே ஒன்றில், 70-94 சதவீத இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் காண்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க, சிலருக்கு இந்த உணர்வு குறையும். ஆனால் பலரும் இன்னும் வயதான காலத்திலும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.



    உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுய இன்பம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அளவாக மேற்கொண்டால் மட்டுமே. அதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகும்.

    ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள் என்று பலர் நினைக்கின்றனர். மேலும் சர்வே ஒன்றிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பம் காண்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் இதுக்குறித்து என்ன தான் சர்வே நடத்தினாலும், பெண்கள் தாம் சுய இன்பம் காண்பதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஏனெனில் நமது சமூகத்தில் சுய இன்பம் குறித்து தவறான கண்ணோட்டம் உள்ளதால், பெண்கள் அதை மறைக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் அதிகமாக சுய இன்பம் காணமாட்டார்கள்.

    தினமும் சுய இன்பம் காண்பது கெட்டதா? சொல்லப்போனால் அதிகமாக சுய இன்பம் காண்பதற்கும், சுய இன்பத்தை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் புரிந்து கொண்டால், உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். உதாரணமாக, சிலர் தினமும் எவ்வித உணர்வும் இல்லாமல் சுய இன்பம் கண்டால், அதனால் தீங்கை சந்திக்க நேரிடும். அதுவே உணர்ச்சி அதிகமாக இருந்து சுய இன்பத்தைக் கண்டால், அதனால் எவ்வித தீமையையும் சந்திக்க வாய்ப்பில்லை.

    இதுவும் மக்களிடையே உள்ள சுய இன்பம் பற்றிய ஓர் தவறான கருத்து. திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள். ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

    சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம் காண்பது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
    ×